பல்லவி
1வத்3த3யுண்டே3தே3 ப3ஹு மேலு வாரிஜாக்ஷ
அனுபல்லவி
அத்3த3ம்பு மோமு கல ரங்க3 அனுபம மோஹனாங்க3 (வ)
சரணம்
சரணம் 1
ப3ங்கா3ரு பூல பூஜிந்து பா3கு3க3 நின்னு ஸேவிந்து
2ஸ்1ரு2ங்கா3ரிஞ்சி கௌகி3லிந்து 3சேரி நே நின்னாராதி4ந்து (வ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வத்3த3/-உண்டே3தே3/ ப3ஹு/ மேலு/ வாரிஜ/-அக்ஷ/
அருகில்/ இருத்தலே/ சால/ சிறந்தது/ கமல/ கண்னா/
அனுபல்லவி
அத்3த3ம்பு/ மோமு/ கல/ ரங்க3/ அனுபம/ மோஹன/-அங்க3/ (வ)
கண்ணாடி போலும்/ முகம்/ உடைய/ அரங்கா/ உவமையற்ற/ எழி்ல்/ அங்கத்தோனே/
சரணம் 1
ப3ங்கா3ரு/ பூல/ பூஜிந்து/ பா3கு3க3/ நின்னு/ ஸேவிந்து/
பொன்/ மலர்களினால்/ வழிபடுவேன்/ நன்கு/ உன்னை/ சேவிப்பேன்/
ஸ்1ரு2ங்கா3ரிஞ்சி/ கௌகி3லிந்து/ சேரி/ நே/ நின்னு/-ஆராதி4ந்து/ (வ)
சிங்காரித்து/ (உன்னை) அணைப்பேன்/ கலந்து/ நான்/ உன்னை/ ஆராதிப்பேன்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - வத்3த3யுண்டே3தே3 - வத்3த3யுண்டு3னதே3.
3 - சேரி நே நின்னாராதி4ந்து - சேரி நின்னாராதி4ந்து.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
இப்பாடல் 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும். இப்பாடலில், தியாகராஜர், பிரகலாதனின் உள்ள விழைவினை வருணிக்கின்றார்.
2 - ஸ்1ரு2ங்கா3ரிஞ்சி - சிங்காரித்து - இது இறைவனைச் சிங்காரிப்பதனைக் குறிக்கும். தன்னை சிங்காரம் செய்துகொள்வதென்றால், 'ஸ்1ரு2ங்கா3ரிஞ்சுகொனி' என்றிருக்கவேண்டும். மேலும், இந்தப் பாடலுக்கு முற்பட்ட வசனத்தினில், பிரகலாதன், இறைவனை சிங்காரித்து மகிழ விரும்புவதாகக் கூறப்பட்டுள்ளது.
3 - ஆராதி4ந்து - ஆராதிப்பேன் - பொதுவாக, 'ஆராதித்தல்' என்பது இறைவனுக்குப் பணிவிடை செய்வதனைக் குறிக்கும். இவ்விடத்தில், இதற்கு முன் வரும், 'கலந்து' என்ற சொல்லினால், இஃது, 'காந்தாஸக்தி' எனப்படும், இறைவனைத் தலைவனாகவும், தொண்டன், தான் அவனுக்கு மனைவியாகவும் உணர்ந்து, இயற்றும் வழிபாட்டினைக் குறிக்கும்.
Top
ஆராதித்தல் - உள்ளம் குளிர்வித்தல்
சத்து - பரம்பொருளின் இலக்கணம் - (சச்சிதானந்தம்) 'சத்-சித்-ஆனந்தம்' - இதனில் 'சத்'தென
கேவலம் - தனித்தன்மை
எளியோன் - எளிதில் அணுகப்பெறுவோன்
Top