பல்லவி
ஸரஸீருஹானன ராம
ஸமயமு ப்3ரோவ 1சித்3-க4ன
அனுபல்லவி
பர பா4மலனாஸி1ஞ்சியன்னமிடி3
பக3லு 2ரேயு ஸரஸமாடு3 வாரினொல்ல (ஸ)
சரணம்
3ப்3ராஹ்மணீகமு பா3ய நீசுல
ப்3ரதுகாயெனதி3 கா3கயீ கலிலோ
4ப்3ரஹ்மமைன மாடல நேர்சுகொனி
ப3ரகே3ரய்ய த்யாக3ராஜ நுத (ஸ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸரஸீருஹ/-ஆனன/ ராம/
தாமரை/ முகத்தோனே/ இராமா/
ஸமயமு/ ப்3ரோவ/ சித்3-க4ன/
தருணம்/ (என்னைக்) காக்க/ சுத்த சித்தமே!
அனுபல்லவி
பர/ பா4மலனு/-ஆஸி1ஞ்சி/-அன்னமு/-இடி3/
பிற/ பெண்டிருக்கு/ ஆசைப்பட்டு/ அன்னம்/ இட்டு/
பக3லு/ ரேயு/ ஸரஸமாடு3 வாரினி/-ஒல்ல/ (ஸ)
பகல்/ இரவு/ சரசமாடுவோரினை (அவர் இணக்கத்தினை)/ விரும்பேன்/
சரணம்
ப்3ராஹ்மணீகமு/ பா3ய/ நீசுல/
அந்தணத்துவத்தினை/ கைவிட்டதனால்/ இழிந்தோரின்/
ப்3ரதுகு-ஆயெனு/-அதி3 கா3க/-ஈ/ கலிலோ/
பிழைப்பானது/ அன்றியும்/ இந்த/ கலியில்/
ப்3ரஹ்மமைன/ மாடல/ நேர்சுகொனி/
பிரமமெனும்/ சொற்களை/ யறிந்துகொண்டு/
ப3ரகே3ரு/-அய்ய/ த்யாக3ராஜ/ நுத/ (ஸ)
திகழலாயினர்/ அய்யா/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - ரேயு - எல்லா புத்தகங்களிலும் இவ்விதமே கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் இச்சொல்லுக்கு 'இரவு' என்று பொருளாகும். அதற்கு சரியான தெலுங்கு சொல் 'ரேயி' ஆகும். 'ரேயி'-யின் பன்மை 'ரேலு'-வாகும்.
Top
மேற்கோள்கள்
3 - ப்3ராஹ்மணீகமு - அந்தணத்துவம் - அந்தத்தையுணர்வோர் - அந்தணரின் தன்மை - மகாபாரதம், அனுசாசன பர்வம் 13-வது புத்தகம், பகுதி 141 முதலாக, நான்கு வர்ணத்தாரின் கடமைகள் என்னவென்ற மகாதேவன், உமை, நாரதர் ஆகியோரிடையேயான உரையாடலைக் காணவும்
அந்தணர்களின் கடமைகள் என்னவென்று மனு ஸ்ம்ருதி, அத்தியாயம் 4 நோக்கவும்.
Top
விளக்கம்
1 - சித்3-க4ன - இது வெறும் 'சித்ரூபமான' பரம்பொருளைக் குறிக்கும். இதனை 'சுத்த சித்தம்' என இங்கு மொழிபெயர்க்கப்பட்டது.
4 - ப்3ரஹ்மமைன மாடல - பிரமமெனும் சொற்களையறிந்து - அச்சொல்லின் பொருளுணராது என - கடவுளைத் தன்னுடைய உள்ளத்துள் கண்டுகொள்ளாது வெறும் சொற்களைப் பிதற்றித் திரிவோரை தியாகராஜர் கண்டிக்கின்றார்.
பிற பெண்டிருக்கு - பிறன் மனைக்கு என்றும் கொள்ளலாம்.
கலி - கலி யுகம்
பிரமம் - சச்சிதானந்தமாய் அண்டம் யாவும் தோன்றியொடுங்குதற்கு இடமாயுள்ள பொருளாகிய கடவுள்.
Top