பல்லவி
நாது3பை பலிகேரு 1நருலு
அனுபல்லவி
வேத3 ஸன்னுத 2ப4வமு வேரு ஜேஸிதினனுசு (நா)
சரணம்
சரணம் 1
3பஞ்ச ஸ1ர ஜனக ப்ரபஞ்சமுன க3ல ஸுக2மு
மஞ்சு வலெனனுசு மதி3னெஞ்சிதி கானி
பஞ்சுகொனி த4னமுலார்ஜிஞ்சுகொனி ஸரியெவ்வ-
ரஞ்சு மரி க3தியு லேத3ஞ்சு பல்கிதினா (நா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நாது3/ பை/ பலிகேரு/ நருலு/
என்/ மீது/ (குற்றம்) பகர்ந்தனர்/ மனிதர்கள்/
அனுபல்லவி
வேத3/ ஸன்னுத/ ப4வமு/ வேரு/ ஜேஸிதினி/-அனுசு/ (நா)
மறைகளில்/ போற்றப் பெற்றோனே/ குடும்பத்தினை/ வேறு/ ஆக்கினேன்/ என/ என் மீது...
சரணம்
சரணம் 1
பஞ்ச/ ஸ1ர/ ஜனக/ ப்ரபஞ்சமுன/ க3ல/ ஸுக2மு/
ஐந்து/ கணையோனை/ ஈன்றோனே/ புவியில்/ உள்ள/ சுகங்கள்/
மஞ்சு/ வலெனு/-அனுசு/ மதி3னி/-எஞ்சிதி/ கானி/
பனி/ போன்றது/ என/ மனத்தில்/ எண்ணினேனே/ யன்றி/
பஞ்சுகொனி/ த4னமுலு/-ஆர்ஜிஞ்சுகொனி/ ஸரி/-எவ்வரு/-
பங்கிட்டுக்கொண்டு/ சொத்து/ சேர்த்துக்கொண்டு/ ஈடு/ எவர்/
அஞ்சு/ மரி/ க3தியு/ லேது3/-அஞ்சு/ பல்கிதினா/ (நா)
என்று/ பின்னர்/ கதி/ இலன்/ என/ பகர்ந்தேனா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - நருலு - நருலு ஸ்ரீ ராம
4 - மனஸுன இல்லு ஒகடியனி - மனஸுன இல்லு ஒகடனி
5 - ஜேனெடு3 - ஜானெடு3 - தெலுங்கு அகராதியின்படி இரண்டு சொற்களுமே சரியாகும்
Top
மேற்கோள்கள்
3 - பஞ்ச ஸ1ர - ஐந்து மலரக்கணையோன் - மன்மதன் - ஐந்து மலர்களாவன - தாமரை, அசோக, மா, மல்லிகை, நீல தாமரை. - இம்மலர்க்கணைகளின் தன்மை யாதென அறிய
6 - அவ்யாஜமுன - நோக்கமின்றி - லலிதா ஸஹஸ்ர நாமத்தில், அம்மையின் பெயர்களிலொன்று - 'அவ்யாஜ கருணா மூர்த்தி' என்பதாகும். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிலுக்கும் எந்த விதமான நோக்கமும் கற்பிக்க இயலாது.
Top
விளக்கம்
2 - ப4வமு - புத்தகங்களில் இதற்கு 'குடும்பம்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அனுபல்லவியிலும் முதல் சரணத்திலும் கூறியவற்றினை நோக்குகையில் அந்த பொருள் பொருந்தும். ஆனால் 'ப4வம்' என்ற வடமொழிச் சொல்லுக்கும் அதன் தெலுங்கு திரிபான 'ப4வமு' என்ற சொல்லுக்கும் 'சம்சாரம்' என்றுதான் பொருள் கொள்ள முடியும்.
தியாகராஜர் தன்னுடைய குறைகளையெல்லாம் அவ்வப்போது இறைவனிடம் நேரிடையாக சொல்வது போன்று பல கீர்த்தனைகளை அமைத்துள்ளார். அவருடைய இந்த மனோபாவத்தினை சாதாரண மக்கள் அறிதல் மிகவும் கடினம். அந்த வகையில், முதல் சரணத்தில் கூறப்பட்ட சொற்களின் உண்மையான நோக்கமென்ன, அவைகளுக்கு இங்கு கூறப்பட்டுள்ள பொருள் சரியானதா என தீர்மானமாக உரைத்தல் இயலாததொன்று. இந்த சரணத்தின் பொருளை வேறு விதமாகவும் கூறலாம். எனவே இங்கு கூறிய பொருள் சரியல்லவென்று யாருக்காவது தோன்றினால் அதற்காக என்னை மன்னிக்கவும்.
இரண்டாக்க - குடும்பத்தினைப் பிரிக்க
Top