பல்லவி
கருணயேலாக3ண்டேனீ வித4மே
கல்யாண ஸுந்த3ர ராம
அனுபல்லவி
1பரமாத்முடு3 ஜீவாத்முடு3 ஒகடை3
பரகு3சுண்டு3 ப4க்த பராதீ4னுனி (க)
சரணம்
சரணம் 1
அன்ரு2தம்பா3ட3டு3 அல்புல வேட3டு3
ஸு-ந்ரு2புல கொலுவடு3 2ஸூர்யுனி மரவடு3 (க)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கருண/-ஏலாகு3/-அண்டே/-ஈ/ வித4மே/
கருணை/ எங்ஙனம்/ என்றால்/ இந்த/ விதமே/
கல்யாண/ ஸுந்த3ர/ ராம/
கலியாண/ சுந்தர/ ராமா/
அனுபல்லவி
பரமாத்முடு3/ ஜீவாத்முடு3/ ஒகடை3/
பரமான்மா/ சீவான்மா/ ஒருவனாகி/
பரகு3சு-உண்டு3/ ப4க்த/ பர-அதீ4னுனி/ (க)
யொளிரும்/ தொண்டரை/ பேணுவதில் ஈடுபட்டவனின்/ கருணை...
சரணம்
சரணம் 1
அன்ரு2தம்பு3/-ஆட3டு3/ அல்புல/ வேட3டு3/
மெய்யல்லாதது/ பேசான்/ அற்பர்களை/ வேண்டான்/
ஸு-ந்ரு2புல/ கொலுவடு3/ ஸூர்யுனி/ மரவடு3/ (க)
நன்மன்னரிடமும்/ சேவை செய்யான்/ சூரியனை/ மறவான்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
5 - வருலதோ - பருலதோ : 'பருலதோ' என்பது சரியென்றால், 'பிறரிடம் பொய் பேசான்' என்று மொழிபெயர்க்கப்படும். ஆனால், அத்தகைய பொருள் சரியென்று தோன்றவில்லை.
Top
மேற்கோள்கள்
3 - மூடீ3ஷணமுல - மூவாசைகள் - மனைவி, மக்கள், செல்வம்
4 - ஜீவன்-முக்துடை3 திருகு3 - சீவன் முத்தனாகித் திரியும் - சீவன் முத்தனின் நிலையென்ன என்பதனை, ஆதி சங்கரர் தனது ஜீவன்-முக்தானந்த லஹரியில் விளக்கியுள்ளார்.
Top
விளக்கம்
1 - பரமாத்முடு3 ஜீவாத்முடு3 ஒகடை3 - பரமான்மாவும், சீவான்மாவும் ஒருவனாகி யொளிரும் தொண்டர் - சீவன்முத்தரானோர் - எந்த நிலையினை, 'அஹம் ப்3ரஹ்மாஸ்மி' (நான் பிரமமே), 'ப்3ரஹ்மைவாஹம்' (பிரமமே நான்), 'ஹம்ஸ' (நான் அவனே), 'ஸோஹம்' (அவன் நானே) ஆகிய மகா வாக்கியங்கள் குறிப்பிடுகின்றவோ அந்நிலை.
2 - ஸூர்யுனி மரவடு3 - இந்த புவியின் படைப்பிற்கும், பேணுதலுக்கும் சூரியன் வெளிப்படையான காரணமானதால், மறைகளில் சூரியனை மிக்குயர்வாகக் கூறப்படும். அதனால், தியாகராஜர் 'சூரியனை மறவான்' என்று கூறியிருக்கலாம். அல்லது, அந்தணர்கள் இயற்றும், 'சந்தியா வந்தனம்' எனப்படும் அன்றாடக் கடமை, சூரியனைக் குறித்தது என்பதனாலும் இருக்கலாம்.
6 - ஸாக்ஷியனி தெலிஸி - சாட்சியெனத் தெரிந்து - இறைவன் இவ்வுலக சீவன்களுள் சாட்சியாக இருப்பதனால், இறைவனைக் குறிப்பதாக இருக்கலாம். ஆனால், அனுபல்லவியில் கூறப்படும் (பரமான்மா, சீவான்மா ஒருவனாகி ஒளிரும்) தொண்டரின் நிலையினைக் கருத்தில் கொண்டு, இது தொண்டர்களையே குறிப்பதாகக் கருதுகின்றேன். அத்தகைய தொண்டன், விருப்பு, வெறுப்பின்றி கடமைகளை இயற்றி, பயனைத் துறந்து உலகினில் இயங்குவான் என்பதனைத் தியாகராஜர் குறிப்பிடுகின்றார்.
Top
7 - அந்து3 - இச்சொல்லுக்கு இரண்டு பொருட்களுண்டு - 'அதனில்' என்றும், 'எட்டவேண்டிய' என்றும். 'அதனில்' என்பது இவ்விடத்தில் பொருந்தாது. எனவே, அடுத்துவரும், 'லக்ஷ்யமு' (இலக்கு) என்று சொல்லினைக் கருத்தில் கொண்டு, 'எட்டவேண்டிய' (இலக்கு) என்று மொழிபெயர்க்கப்பட்டது.
தொண்டரைப் பேணுவதில் ஈடுபட்டவன் - இறைவன்
சுகத்தினை வீடான் - சீவன்முத்தனாகித் திரியும் சுகத்தினை
எட்டவேண்டிய இலக்கு - மோக்கம் எனப்படும் வீடு.
Top