பல்லவி
ஏலாவதாரமெத்துகொண்டிவி
ஏமி காரணமு ராமுடை3
அனுபல்லவி
ஆலமு ஸேயுடகா அயோத்4ய
பாலன ஸேயுடகா ஓ ராக4வ (ஏ)
சரணம்
1யோகு3லு 2ஜூசுடந்து3கா ப4வ
ரோகு3ல 3ப்3ரோசுடந்து3கா ஸ1த
ராக3 ரத்ன மாலிகலு ரசிஞ்சின த்யாக3-
ராஜுகு 4வரமொஸகு3டந்து3கா (ஏ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏல/-அவதாரமு-எத்துகொண்டிவி/
ஏன்/ அவதரித்தாயோ/
ஏமி/ காரணமு/ ராமுடை3/
என்ன/ காரணமோ/ இராமனாக/
அனுபல்லவி
ஆலமு/ ஸேயுடகா/ அயோத்4ய/
போர்/ புரிவதற்கோ/ அயோத்தியை/
பாலன ஸேயுடகா/ ஓ ராக4வ/ (ஏ)
ஆள்வதற்கோ/ ஓ இராகவா/
சரணம்
யோகு3லு/ ஜூசுடந்து3கா/ ப4வ/
யோகியர்/ (உன்னைக்) காண்பதற்கென்றோ/ பிறவி/
ரோகு3ல/ ப்3ரோசுடந்து3கா/ ஸ1த/
பிணியாளிகளை/ காப்பதற்கென்றோ/ நூற்றுக் கணக்கான/
ராக3/ ரத்ன/ மாலிகலு/ ரசிஞ்சின/
ராக/ இரத்தின/ மாலைகளை/ புனைந்த/
த்யாக3ராஜுகு/ வரமு/-ஒஸகு3டந்து3கா/ (ஏ)
தியாகராசனுக்கு/ வரம்/ அருள்வதற்கென்றோ/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் மாற்று ராகத்தின் பெயர் 'சாலக பை4ரவி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.
1 - யோகு3லு ஜூசுடந்து3கா - யோகு3லனு ஜூசுடந்து3கா : 'யோகு3லு ஜூசுடந்து3கா' என்றால் 'யோகியர் உன்னைக் காண்பதெற்கென்றோ' என்று பொருள். 'யோகு3லனு ஜூசுடந்து3கா' என்றால் 'யோகியரை நீ காண்பதற்கென்றோ' என்று பொருள்.
ராமாயாணத்தின்படி, காட்டில் வாழும் முனிவர்களும், யோகியரும் அரக்கர்களின் தொல்லைகளைத் தாளவியலாது, அவர்களை அடக்குவதற்காக, ராமனுடை வரவை எதிர்நோக்கியிருந்தனர். யோகியரை அரக்கரிடமிருந்து காத்தல்தான் ராமனின் அவதாரத்திற்குக் காரணம். எனவே, 'யோகு3லு ஜூசுடந்து3கா' இவ்விடம் பொருந்தும்.
தியாகராஜரின் 'முத்3து3 மோமு' எனும் சூர்யகாந்த ராகப் பாடலில், 'முனிவர்கள், எழிலான உனது முகத்தினைக் கண்டு, எங்ஙனம் மோகித்தனரோ' என்று வியக்கின்றார்.
2 - ஜூசுடந்து3கா - ஜூசுடகா
3 - ப்3ரோசுடந்து3கா - ப்3ரோசுடகா
4 - வரமொஸகு3டந்து3கா - வரமொஸகு3டகா
Top
மேற்கோள்கள்
விளக்கம்