கீதம்
கீதம் 1
ஸார(ஸா)க்ஷி ஸதா3 பாஹி மாம்
குமார ஜனனி ஸரஸ ஹ்ரு2த3யே
1பரா ஸ1க்தி பா3லே ஸு-ஸீ1லே
2அபார மஹிமா ஸ்பூ2ர்தே 3ஸி1வே
பதம் பிரித்தல் - பொருள்
கீதம்
கீதம் 1
ஸாரஸ/-அக்ஷி/ ஸதா3/ பாஹி/ மாம்/
கமல/ கண்ணீ/ எவ்வமயமும்/ காப்பய்/ என்னை/
குமார/ ஜனனி/ ஸரஸ/ ஹ்ரு2த3யே/
முருகனை/ யீன்றவளே/ கனிந்த/ இதயத்தினளே/
பரா/ ஸ1க்தி/ பா3லே/ ஸு-ஸீ1லே/
பரா/ சக்தீ/ பாலையே/ நற்பண்பினளே/
அபார/ மஹிமா/ ஸ்பூ2ர்தே/ ஸி1வே/
அளவற்ற/ மகிமை/ சொரியும்/ சிவையே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - அபார மஹிமா - அபார மஹிம.
6 - கடி த்4ரு2த - கடீ த்4ரு2த.
7 - ஸ-லீலே - ஸலிலே : இவ்விடத்தில், 'ஸலிலே' என்பது பொருந்தாது. புத்தகங்களில், 'திருவிளையாடல் புரிபவள்' என்று பொருள் கொள்ளப்பட்டிருப்பதனால், 'ஸ-லீலே' என்பதே பொருந்தும்.
Top
மேற்கோள்கள்
1 - பரா ஸ1க்தி - பரா சக்தி - லலிதா ஸஹஸ்ர நாமத்தினில், அம்மைக்கு, 'பரா', 'பஸ்1யந்தீ', 'மத்4யமா', 'வைக2ரீ' என்று நான்கு பெயர்களுண்டு. 'பரா' என்பது சொல்லின் (ஓசையின் அல்லது நாதத்தின்) யாவுங் கடந்த நிலையினைக் குறிக்கும். 'வைக2ரீ' என்பது வெளிப்படையான (கேள்விப்படும்) சொல்லாகும். 'பஸ்1யந்தீ' என்பதுவும் 'மத்4யமா' என்பதுவும், சொல்லின் இடைப்பட்ட நிலைகளைக் குறிக்கும். இது குறித்து காஞ்சி மாமுனிவரின் 'ஸௌந்தர்ய லஹரி உரை' (பக்கம் 30) நோக்கவும்.
3 - ஸி1வே - சிவனின் இல்லாள். ஆனால், லலிதா ஸஹஸ்ர நாமத்தில், அம்மைக்கு 'ஸி1வா' என்றோர் பெயருண்டு (53)
Top
4 - த்ரி-கோண நிலயே - முக்கோணத்தில் - ஸ்ரீ சக்கிரத்தினைக் குறிக்கும். 'ஸ்ரீ சக்கிரம்'
6 - கடி த்4ரு2த காஞ்சே - மணிமேகலை திகழும் இடுப்பினள் - காஞ்சி மாமுனிவரின் 'ஸௌந்தர்ய லஹரி உரை' (21) நோக்கவும்.
8 - ஸ்ரீ காம கோடி பீட2 ஸத3னே - காம கோடி பீடத்தினில் உறைபவள்.
Top
விளக்கம்
5 - கனக ஸத்3ரு2ஸே1 - பொன்னிறத்தினளே - இது பங்காரு காமாட்சியினைக் குறிக்கும்.
7 - ஸ-லீலே - திருவிளையாடல்கள் புரிபவள். இது, அம்மை, தீயோரை வென்று, நல்லோரைக் காத்த நிகழ்ச்சிகளையோ, அல்லது, 'மாயை' என்ற பெயரால் அழைக்கப்படும் அம்மையின் திருவிளையாடல்களையோ குறிக்கும்.
சாம கானம் - சாம வேதம் ஓதல்
Top