பல்லவி
வினயமுனனு கௌஸி1குனி வெண்ட
சனினாங்க்4ருலனு ஜூசுனதெ3ன்னடிகோ அந்து3
வெனுக ராதினி நாதி ஜேஸின
சரணமுலனு ஜூசுனதெ3ன்னடிகோ (வி)
சரணம்
சரணம் 1
க4னமைன 1ஸி1வுனி சாபமு த்3ருஞ்சின
பாத3முனு ஜூசுனதெ3ன்னடிகோ 2ஆ
ஜனக ராஜு 3பால கடி3கி3னயா
காள்ளனு ஜூசுனதெ3ன்னடிகோ (வி)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வினயமுனனு/ கௌஸி1குனி/ வெண்ட/
பணிவுடன்/ கௌசிகரின்/ பின்/
சனின/-அங்க்4ருலனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ அந்து3/
சென்ற/ திருவடிகளை/ காண்பது/ என்றைக்கோ/ அதன்/
வெனுக/ ராதினி/ நாதி/ ஜேஸின/
பின்னர்/ கல்லை/ பெண்/ ஆக்கிய/
சரணமுலனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ (வி)
சரணங்களை/ காண்பது/ என்றைக்கோ/
சரணம்
சரணம் 1
க4னமைன/ ஸி1வுனி/ சாபமு/ த்3ருஞ்சின/
பெருத்த/ சிவனின்/ வில்லை/ முறித்த/
பாத3முனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ ஆ/
பாதங்களை/ காண்பது/ என்றைக்கோ/ அந்த/
ஜனக/ ராஜு/ பால/ கடி3கி3ன/-ஆ/
சனக/ மன்னன்/ பாலினால்/ கழுவிய/ அந்த/
காள்ளனு/ ஜூசுனதி3/-என்னடிகோ/ (வி)
கால்களை/ காண்பது/ என்றைக்கோ/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
பல்லவி மற்றும் முதல் 9 சரணங்கள் - ஜூசுனதெ3ன்னடிகோ - ஜூசேதெ3ன்னடிகோ.
10 மற்றும் 11-வது சரணங்கள் - ஜூசுனதெ3ன்னடோ3 - ஜூசேதெ3ன்னடோ3.
1 - சாபமு - சாபமுனு.
2 - ஆ ஜனக - ஜனக.
5 - பா3ஹுவு - பா3ஹுனு.
8 - வனதி4 - வன நிதி4.
10 - தி3னமுனு - அனு தி3னமு.
11 - சே பட்டுகொனி - செயி பட்டுகொனி - சை பட்டுகொனி : 'சை' என்பது சரியென்று தோன்றவில்லை.
12 - கனக - கனகபு.
13 - வர முனுலு - வன முனுலு : இவ்விடத்தில் 'வர' என்பதே பொருந்தும்.
15 - ஜல நிதி4னி - ஜலதி4னி.
16 - த்யாக3ராஜாதி3 தே3வதலு - த்யாக3ராஜாதி4 தே3வதலு : 'த்யாக3ராஜாதி3 தே3வதலு' என்பதே பொருந்தும் என்று கருதுகின்றேன்.
Top
மேற்கோள்கள்
1 - ஸி1வுனி சாபமு த்3ருஞ்சின பாத3முனு - வால்மீகி ராமாயணத்தின்படி (பால காண்டம், 67-வது அத்தியாயம்), ராமன், வில்லின் நடுப்பகுதியைப் பிடித்து, நாணேற்றி, வில்லை வளைக்க, அது நடுவில் முறிந்தது. நாணேற்றுவதற்கும், வில்லை வளைப்பதற்கும், காலினால் அதனை அழுத்துதல் முறை என்று நினைக்கின்றேன். எனவேதான், தியாகராஜர், 'வில்லை முறித்த கால்' என்று குறிப்பிடுகின்றார். அங்ஙனமே, 'ஸ்ரீ ராம ரகு4ராம' என்ற யதுகுல காம்போஜி கீர்த்தனையிலும், 'ராமனின் திருவடிகளைத் தொட, சிவனின் வில் என்ன தவம் செய்ததோ?' என்று கேட்கின்றார்.
4 - சாப ப3லமந்து3கொன்ன - வால்மீகி ராமாயணம் (பால காண்டம், 76-வது அத்தியாயம்) நோக்கவும். பரசுராமனின் வில், விஷ்ணுவின் வில்லாகும். பத்ம புராணத்தில் கூறப்பட்டபடி -
"தேவி, இங்ஙனம் கூறி, விஷ்ணுவின் சக்தியுினை, பணிவுடனும், விளையாட்டாகவும், விஷ்ணுவின் வில்லுடன் பறித்துக்கொண்டான்."
பரசுராமனின் வில்லினைப் பறித்தல்
Top
7 - ரத2முல பொடி3 சேஸின - தேர்களைப் பொடி செய்த - வால்மீகி ராமாயணம், ஆரண்ய காண்டம், 26-30 அத்தியாயங்கள் நோக்கவும்.
8 - வனதி4 மத3 க3ர்வமு - கடலரசனின் மத செருக்கு - பரசுராமனைத் தோற்கடித்தபின், ராமன், அந்த விஷ்ணு வில்லினை, கடலரசனிடம், பாதுகாப்பதற்காக, ஒப்படைத்தான். எனவே, கடலரசனுக்கு, ராமனின் வல்லமை என்னவென்று தெரியும். ஆயினும், கடல்மீது பாலம் அமைக்க, கடலரசனின் உதவியினை ராமன் வேண்டியும், அவன் கண்டுகொள்ளாமல் இருந்ததனால், ராமன், கோபம் கொண்டு, கடலரசன் மீது பிரமாத்திரத்தினை ஏவினான். அதன் பின்னரே, கடலரசன் ராமனிடம் சரணடைந்து, பாலம் கட்டுவதற்கு உதவ இசைந்தான். வால்மீகி ராமாயாணம், யுத்த காண்டம், 21, 22-வது அத்தியாயங்கள் நோக்கவும்.
9 - பேத3 கபுலு லேவ ஜூசு - ஏழைக் குரங்குகள் உயிர்த்தெழக் காணும். ராமனின் வேண்டுகோளுக்கிணங்கி, இந்திரன், போரில் கொல்லப்பட்ட, காயமடைந்த குரங்குகளை, உயிர்த்தெழச் செய்தான். வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம், 120-வது அத்தியாயம் நோக்கவும்.
வால்மீகி ராமாயணம் - மொழிபெயர்ப்பு
Top
விளக்கம்
3 - பால கடி3கி3ன - பாலினால் கழுவிய - வால்மீகி ராமாயணத்தில் இப்படி ஏதும் கூறப்படவில்லை. ஆயினும், திருமணத்தின்போது, பாணிக்கிரகணத்திற்கு முன், 'வர பூஜை' எனப்படும் சடங்கில் மணமகனின் கால்களை, பெண்ணின் தந்தை, பாலினால் கழுவி அழைத்துச் செல்வார். அதனை, தியாகராஜர் குறிப்பிடுகின்றார்.
6 - தனகு தானே காகாஸுருனி காசின - தனக்குத் தானே காக்கை அசுரனைக் காத்த. சீதையின் தனங்களைக் கொத்திய காக்கை அசுரன் மீது, ராமன் பிரமாத்திரம் தொடுத்தான். காக்கையசுரன், மூவுலகங்களிலும், தன்னைக் காப்பவர் யாருமில்லை எனத் தெரிந்து, ராமனிடமே சரணடைந்தான். ராமன், அவனைக் கொல்லாது. அந்த அத்திரம், அவனுடைய ஒரு கண்ணை மட்டும் பறிக்கச் செய்தான்.
14 - ராக ஜூசுனதி3 - வருகையைக் காண்பது - இதனை, ராமன் 'வருவதனைக் காண்பது' என்றோ, 'வருகையினை எதிர்நோக்குவது' என்றோ பொருள் கொள்ளலாம். பிற்கூறியதே, அதிகம் பொருந்தும்.
16 - த்யாக3ராஜ - இவ்விடத்தில் சிவனைக் குறிக்கும்.
Top
கௌசிகர் - விசுவாமித்திரர்
பெண்ணாக்கிய - அகலிகையைக் குறிக்கும்
பிருகு மைந்தன் - பரசுராமன்
சாயகம் - அம்பு
குரங்குகளெழ - குரங்குகள் உயிர்த்தெழ
வானரர் தலைவன் - சுக்கிரீவன்
புட்பகம் - விமானம்
தியாகராசன் - இங்கு (திருவாரூர்) சிவனைக் குறிக்கும்
Top