Notation Scheme

க்ஷீணமை - ராகம் முகா2ரி - kshINamai - rAga mukhAri

English Version
Language Version

பல்லவி
1க்ஷீணமை திருக3 ஜன்மிஞ்சே
2ஸித்3தி4 மானுரா ஓ மனஸா

அனுபல்லவி
3கீ3ர்வாண 4நாடகாலங்கார வேத3
புராண யக்3ஞ ஜப தபாது352லமுலு

சரணம்
6எதி3 ஜேஸின ஜக3ன்னாது2டு3 ஸி1ரமுன
ஹ்ரு23யமுன
7வஹிஞ்சி
பதி3லமைன ஸத்பத3முனொஸங்கே3
பா3ட த்யாக3ராஜ வினுதுனி ப4ஜனரா (க்ஷீண)


பொருள் - சுருக்கம்
ஓ மனமே!

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
க்ஷீணமை/ திருக3/ ஜன்மிஞ்சே/
தளர்ந்து/ மீண்டும்/ பிறப்பிக்கும்/

ஸித்3தி4/ மானுரா/ ஓ மனஸா/
சித்திகளை/ தவிர்ப்பாய்/ ஓ மனமே/


அனுபல்லவி
கீ3ர்/-வாண/ நாடக/-அலங்கார/ வேத3/
இயல்/ இசை/ நாடகம்/ அணியிலக்கணம்/ மறைகள்/

புராண/ யக்3ஞ/ ஜப/ தப/-ஆது3ல/ ப2லமுலு/ (க்ஷீண)
புராணம்/ வேள்வி/ செபம்/ தவம்/ ஆகியவற்றின்/ பயன்கள்/ தளர்ந்து...


சரணம்
எதி3/ ஜேஸின/ ஜக3ந்/-நாது2டு3/ ஸி1ரமுன/
என்ன/ செயினும்/ உலக/ நாயகன்/ தலையிலும்/

ஹ்ரு23யமுன/ வஹிஞ்சி/
உள்ளத்திலும்/ வகித்து/

பதி3லமைன/ ஸத்பத3முனு/-ஒஸங்கே3/
நிலையான/ நற்பதம்/ அளிக்கும்/

பா3ட/ த்யாக3ராஜ/ வினுதுனி/ ப4ஜனரா/ (க்ஷீண)
நெறி/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனின்/ பஜனையடா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
2 - ஸித்3தி4 - சித்திகள் - அணிமா முதலான எண்சித்திகள் - பாகவத புராணம், புத்தகம் 11, அத்தியாயம் 15 உத்தவ கீதையினை நோக்கவும்.

பதஞ்சலி யோக சூத்திரங்கள் - அத்தியாயம் 3 - சக்திகள் - நோக்கவும்.

2 - ஸித்3தி4 மானுரா - மேற்கூறிய பாகவதபுராணத்தில், கண்ணன் உத்தவனுக்குக் கூறவதாவது -
"(மேற்கூறிய) சித்திகள் யாவும் என்னை, யோக முறையில், மனத்தினையொருமித்து, வழிபடும் முனிவனிடம் காத்து நிற்கின்றன."
"இந்த சித்தகள் யாவுமே, என்னையடையும் தலை சிறந்த நெறியினுக்குத் தடங்கல்களென்றும், அங்ஙனம், அவற்றினை விழைவோனுக்கு, அவை (சித்திகள்) கால விரயமும் ஆகும் என்று தொண்டு முறைகளைக் கற்றறிந்த வல்லுநர்கள் கூறுவர்." (ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)

4 - அலங்கார - அணியிலக்கணம் - சுருக்கம்
Top

விளக்கம்
1 - க்ஷீணமை - தளர்ந்து - பல்லவியில், இதற்கு 'உடல் தளர்ந்து' அல்லது 'சித்திகள் தளர்ந்து' என்று பொருள் கொள்ளப்படும். அனுபல்லவியில், 'பயன்கள்' என்ற சொல்லினை பல்லவியில் இணைக்கும்போது, 'இயல், இசை, நாடகம்.....ஆகியவற்றின் பயன்கள் தளர்ந்து' என்று பொருள் கொள்ளப்படும். சரணத்தில், 'வகித்து' என்ற சொல்லினை பல்லவியுடன் இணைக்கும்போது, 'தளர்ந்து' (உடல் அல்லது சித்திகள்) என்று பொருள் கொள்ளப்படும்.

3 - கீ3ர்வாண - எல்லா புத்தகங்களிலும் 'கீ3ர்' - bracket-களில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம், இந்த சொல், இதற்கு முந்தைய தாள ஆவர்த்தியினைச் சேர்ந்தது என சங்கீதம் அறிந்தவர் கூறுகின்றனர்.

சில புத்தகங்களில் இதற்கு 'சம்ஸ்கிருதம்' என்றும் மற்றவற்றில் 'இலக்கியம்', 'கவிதை' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

'கீ3ர்வாண' என்ற சொல்லுக்குப் பொதுவாக 'வானோர்' என்று பொருள். அந்த பொருள் இங்கு பொருந்தாது. 'கீ3ர்' என்ற சொல்லுக்கு 'சொல்', 'பேச்சு' என்று பொருள். 'வாண' என்ற சொல்லுக்கு 'இசை' என்று பொருளுண்டு. இதற்கடுத்து வரும் 'நாடகம்' என்ற சொல்லினை இணைக்கும்போது இதற்கு 'இயல்', 'இசை', 'நாடகம்' (முத்தமிழ்) என்று பொருள் கொள்ளலாம்.

5 - 2லமுலு - பயன்கள் - சில புத்தகங்களில் இதற்கு (அனுபல்லவியில் கூறிய) 'இயல், இசை, நாடகம், அணியிலக்கணம் ....ஆகியவற்றின் பயன்கள் தளர்ந்து மீண்டும் பிறப்பிக்கின்றன' என பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இவற்றின் பயன்கள் தானாகத் தளர்வதில்லை; சித்திகள்தான் இவற்றின் பயன்களைத் தளர்வுறச் செய்வதாகப் பொருள் கொள்ளவேண்டும்.

Top
6 - எதி3 ஜேஸின ஜக3ன்னாது2டு3 ஸி1ரமுன ஹ்ரு23யமுன வஹிஞ்சி - உலக நாயகன் என்செயினும், தலையிலும், உள்ளத்திலும் வகித்து -
மேற்கூறிய, பாகவத புராண மேற்கோளின்படியும், திருமூலரின் திருமந்திரத்தின்படியும், இந்த சித்திகளுக்கு ஆசைப்பட்டால் இறைவனை அடையும் நோக்கம் நிறைவேறாது. எனவே, தியாகராஜர் தன்னுடைய மனத்திற்கு - அதன் மூலமாக உலகோருக்கு - உரைப்பது 'இந்த சித்திகளைத் தவிர்த்து, நடப்பது நடக்கட்டும் என்று இறைவனின் நினைவினில் இரு' என.

திருமூலரின் திருமந்திரம், செய்யுட்கள் 631 மற்றும் 669 - 672 நோக்குக.

தியாகராஜரின் 'க்ரு2பாலவால' என்ற 'நாதவராங்கிணி' கீர்த்தனையின் குறிப்புகளில் இதுபற்றி மேலும் விளக்கங்கள் காணவும்.

7 - வஹிஞ்சி - வகித்து - இது 'தலையில்' மற்றும் 'உள்ளத்தில்' - இரண்டுக்குமே பொதுவான சொல்.
Top