பல்லவி
காஸிச்சேதே3 கொ3ப்பாயெனுரா கலிலோ ராஜுலகு
அனுபல்லவி
1ஹரி தா3ஸுலு ஸேவிம்பரனுசு ப்ரபு4வுலு
த3ய மானிரி பரமெஞ்சக போயிரி (கா)
சரணம்
2ராஜாங்க3மு கொரகு நால்கு3 ஜாதுல ரக்ஷண பர ஸுக2மோ
ராஜஸுலை ஸன்மார்க3மெருக3க பராகு ஸேய க4னமோ
ஆஜன்மமு கொலிசே விப்ர வருலகானந்த3மு க3லதோ3
த்யாக3ராஜ வினுத நீ மாய கானி நீரஜ நயன
ஸுஜனாக4 விமோசன (கா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
காஸு/-இச்சேதே3/ கொ3ப்ப/-ஆயெனுரா/ கலிலோ/ ராஜுலகு/
காசு/ கொடுப்பதே/ பெரிது/ ஆனதய்யா/ கலியில்/ அரசர்களுக்கு/
அனுபல்லவி
ஹரி/ தா3ஸுலு/ ஸேவிம்பரு/-அனுசு/ ப்ரபு4வுலு/
அரியின்/ தொண்டர்கள்/ வணங்கமாட்டார்/ என/ பிரபுக்கள்/
த3ய/ மானிரி/ பரமு/-எஞ்சக/ போயிரி/ (கா)
தயையை/ கைவிட்டனர்/ மறுமையை/ யெண்ணாமற்/ போயினர்/
சரணம்
ராஜாங்க3மு கொரகு/ நால்கு3/ ஜாதுல/ ரக்ஷண/ பர/ ஸுக2மோ/
அரசாங்கத்திற்காக/ நான்கு/ சாதியினரை/ பேணுதல்/ மறுமைக்கு/ சுகமோ/
ராஜஸுலை/ ஸன்-மார்க3மு/-எருக3க/ பராகு/ ஸேய/ க4னமோ/
இராசத நெறியோராகி/ நன்னெறி/ யறியாது/ அசட்டை/ செய்தல்/ மேன்மையோ/
ஆஜன்மமு/ கொலிசே/ விப்ர/ வருலகு/-ஆனந்த3மு/ க3லதோ3/
வாழ்நாள் முழுதும்/ (பிரபுக்களைப்) புகழும்/ அந்தணரிற்/ சிறந்தோருக்கு/ ஆனந்தம்/ உண்டோ/
த்யாக3ராஜ/ வினுத/ நீ/ மாய/ கானி/ நீரஜ/ நயன/
தியாகராசன்/ போற்றுவோனே/ (யாவும்) உன்/ மாயை/ யன்றோ/ கமல/ கண்ணா/
ஸுஜன/-அக4/ விமோசன/ (கா)
நல்லோர்/ பாவம்/ களைவோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
2 - ராஜாங்க3மு கொரகு நால்கு3 ஜாதுல ரக்ஷண பர ஸுக2மோ - அரசாங்கத்திற்காக நான்கு சாதியினரைப் பேணுதல் மறுமைக்குச் சுகமோ? இது குறித்து மனு கூறியது (rAja dharma) நோக்கவும்.
".....அதனால் குடிமக்களை அரசன், தன் குழந்தைகளைப் போன்று மகிழ்விக்கட்டும். மக்களும், அரசன், மந்திரிகள், மற்ற அதிகாரிகளை, தங்களைக் காப்போர் என மதிக்கட்டும். ஏனெனில், உழவர்களும் மற்ற செல்வம் படைப்போருமே அரசனின் உண்மையான வல்லமையாகும். அரசன், அவர்களின் பாதுகாவலன். குடிமக்கள் இல்லையெனில், அவன் யாருக்கு அரசனெனப்படுவான்? மாறாக அரசன் இல்லையேல், யாருடைய குடிமக்கள் எனப்படுவர்? எனவே, ஆள்வோரும், ஆளப்படுவோரும் தத்தம் கடமைகளை இயற்றுவதில் சுதந்திரமாக இருக்கட்டும். ஆனால் எவற்றினில் ஒற்றுமையும், ஒத்துழைப்பும் தேவையோ அவற்றினில் ஒருவருக்கொருவர் பணிந்து நடக்கட்டும். ஆள்வோர், மக்களின் குரலுக்கு எதிராக நடக்காதிருக்கட்டும். மக்களும், மந்திரிகளும் மன்னனின் விருப்பத்திற்கு மாறாக ஏதும் செய்யாதிருக்கட்டும்.....".
அரச தருமத்தினைப் பற்றி வால்மீகி ராமாயணத்தில் (அயோத்தியா காண்டம், 100-வது அத்தியாயம்), ராமன் விரிவாகக் கூறியதனையும் நோக்கவும்.
Top
விளக்கம்
1 - ஹரி - பல புத்தகங்களில் இச்சொல் bracket-களில் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கீர்த்தனயில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் புத்தகங்களில் பல விதமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
பல்லவியிலும், அனுபல்லவியிலும் கூறியவற்றை (காசு கொடுப்பது பெரிதானது - அரியின் தொண்டர்கள் தன்னை வணங்கமாட்டார்) நோக்குகையில், மக்களிடம் தயை காட்டுதல், மன்னனின் கடமையாகும் எனவும், அரசனைப் புகழ்ந்தால்தான், அரசன் அவர்களுக்குக் கொடையளிப்பான் என்பது தவறாகும் என்றும் தியாகராஜர் கருதுகின்றார். பிரதிபலனை எதிர்பார்த்து செய்யப்படுவது கொடையாகாது.
Top
தயை - பயன் கருதாத கொடையும், பேணுதலும்
அரசாங்கத்திற்காக - அரசாங்கத் தேவைகளுக்காக.
இராசத நெறி - இச்சை, புகழுக்காக இயற்றப்படும் செயல்கள்.
நன்னெறி யறியாது - நன்னெறி நிற்காது என.
அந்தணருக்கு - 'கற்றறிந்தோருக்கு' என்றும் கொள்ளலாம்.
Top