பல்லவி
அல்லகல்லோலமாயெனம்ம யமுனா தே3வி
மாயார்துலெல்லனு தீர்பவம்ம
1அனுபல்லவி
2மொல்லலசே பூஜிஞ்சி ம்ரொக்கெத3மு ப்3ரோவுமம்ம (அ)
சரணம்
சரணம் 1
மாரு 3பா3ரிகி தாள லேகயீ ராஜ
குமாருனி தெச்சிதிமிந்தா3க
தாருமாராயெ ப்3ரதுகு 4தத்தளிஞ்சுனதெ3ந்தா3க (அ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அல்லகல்லோலமு/-ஆயெனு/-அம்ம/ யமுனா/ தே3வி/
பெருங்குழப்பம்/ ஆனது/ அம்மா/ யமுனா/ தேவி/
மா/-ஆர்துலு/-எல்லனு/ தீர்பு/-அம்ம/
எமது/ துயரங்களை/ யெல்லாம்/ தீர்ப்பாய்/ அம்மா/
அனுபல்லவி
மொல்லலசே/ பூஜிஞ்சி/ ம்ரொக்கெத3மு/ ப்3ரோவுமு/-அம்ம/ (அ)
முல்லை மலர்களால்/ பூசித்து/ வணங்கினோம்/ காப்பாய்/ அம்மா/
சரணம்
சரணம் 1
மாரு/ பா3ரிகி/ தாள/ லேக/-ஈ/ ராஜ/
மாரனின்/ தொல்லை/ தாள/ இயலாது/ இந்த/ அரச/
குமாருனி/ தெச்சிதிமி/-இந்தா3க/
குமாரனை/ கொணர்ந்தோம்/ இதுவரை/
தாருமாரு/-ஆயெ/ ப்3ரதுகு/ தத்தளிஞ்சுனதி3/-எந்தா3க/ (அ)
தாறுமாறு/ ஆனது/ பிழைப்பு/ தத்தளிப்பது/ எதுவரை/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
இந்த கீர்த்தனையில் வரும், 'அம்ம' என்ற தெலுங்கு சொல், புத்தகங்களில், ஒரே சீராகக் கொடுக்கப்படவில்லை. சில இடங்களில், 'அம்மா' என்றும், சிலவற்றில், 'அம்ம' என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு, எல்லா இடங்களிலும், 'அம்ம' என்றே ஏற்கப்பட்டது.
1 - அனுபல்லவி - சில புத்தகங்களில், அனுபல்லவி, பல்லவியின் கடைசி வரியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
4 - தத்தளிஞ்சுனதெ3ந்தா3க - தத்தளிஞ்சேதெ3ந்தா3க.
5 - ஒஸகெ3த3மம்ம - ஒஸகே3மம்ம.
7 - ராமரோ - பா4மரோ.
Top
மேற்கோள்கள்
2 - மொல்ல - அடுக்கு மல்லி.
Top
விளக்கம்
3 - பா3ரிகி - தெலுங்கில், 'பாரி' என்றும் 'பா3ரி' என்றும் இரண்டு சொற்கள் உள்ளன. 'பாரி' என்பதற்கு 'பருவம்', 'காலம்' என்று பொருளாகும் (மாரு பாரி - வசந்த காலம்). 'பா3ரி' என்பதற்கு, 'தொல்லை' என்று பொருளாகும். இரண்டு பொருள்களுமே இவ்விடத்தில் பொருந்தும். ஆனால், 'தொல்லை' என்ற பொருள் அதிகம் பொருந்துவதனால், புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பொருளே ஏற்கப்பட்டது.
6 - எம்மெ கானி - 'எம்மெ' என்ற சொல்லுக்கு, 'ஒயில்', 'அழகு', 'கேளிக்கை' என்று பொருளாகும். இந்தப் பொருள் ஏதும் இவ்விடத்தில் பொருந்தாது. ஒரு புத்தகத்தினில், இதற்கு (எம்மெ கானி), 'யாராகிலும்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அங்ஙனமே இங்கும் ஏற்கப்பட்டது.
Top
இப்பாடல் 'நௌக சரித்ரம்' (ஓடக்கதை) எனப்படும் நாட்டிய-நாடகத்தின் அங்கமாகும்.
(பாடலின் பின்னணி - ஆய்ச்சியர், யமுனைக் கரையில், கண்ணனைச் சந்தித்து, அவனுடன் படகில் யமுனை நதியில் பயணம் செய்தனர். கண்ணனை சந்தித்த மகிழ்ச்சியில், அவர்கள், கண்ணன், 'தங்களது சொத்து' என்று செருக்குற்றனர். அவர்களுடைய செருக்கினைப் போக்குதற்காக, யமுனையில், புயலையும், மழையையும் உண்டாக்கினான் கண்ணன். அந்தப் புயல் - மழையினால், படகு, நீரில் தத்தளித்தது. ஆய்ச்சியர், யமுனையில் மூழ்கிவிடுவோமோ என்று அஞ்சி, யமுனா தேவியினை வேண்டி இப்பாடல் பாடுகின்றனர்.)
தியாகராசனின் நண்பன் - கண்ணன்
Top