பல்லவி
பராமுக(மே)(ன)ம்மா பார்வதி(ய)ம்மா
அனுபல்லவி
1பராத்பரீ பரம பாவனீ பவானீ அம்பா
பாரில் நான் உன்னையே நம்பினேன் (பரா)
சரணம்
சரணம் 1
2அகில(மெ)ங்கும் நிறைந்த ஜோதியே அம்பிகையே
அன்னையே இனி நான் தாளே(னெ)னச்-சொன்னேன் (பரா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பராமுகம்-ஏன்-அம்மா பார்வதி-அம்மா
அனுபல்லவி
பராத்பரீ/ பரம/ பாவனீ/ பவானீ/ அம்பா/
பராபரீ/ முற்றிலும்/ தூயவளே/ பவானீ/ அம்பையே/
பாரில் நான் உன்னையே நம்பினேன் (பரா)
சரணம்
அகிலம்-எங்கும் நிறைந்த ஜோதியே அம்பிகையே
அன்னையே இனி நான் தாளேன்-என-சொன்னேன் (பரா)
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - ஸ்1யாம க்ரு2ஷ்ண சோதரீ - ஸ்1யாம க்ரு2ஷ்ணன் சோதரீ.
Top
மேற்கோள்கள்
1 - பராத்பரீ - பராபரீ - பரத்திற்கும் அப்பாற்பட்டவள். கீழ்க்காணும், 'ஜோதி' பற்றிய குறிப்பினை நோக்கவும்.
2 - அகிலமெங்கும் நிறைந்த ஜோதியே - கீதையில், கண்ணன், பரம்பொருளினைப் பற்றி கூறுவது -
"ஒளிகளுக்கெல்லாம் அஃது ஒளியாம் - இருட்டினுக்கும் அப்பாற்பட்டதெனப்படும்". (13.17)
இருட்டினுக்கப்பாற்பட்டது - ஏனெனில் அது நிழலுமற்றது. 'பரம்பொருள்'.
Top
விளக்கம்