பல்லவி
1து3ருஸுகா3 க்ரு2ப ஜூசி ஸந்தத-
(ம)ரோக3 த்3ரு2ட4 ஸ1ரீரமுக3 ஸலுபு நனு
அனுபல்லவி
பரம பாவனி 2க்ரு2பாவனி வினுத
பத3 ஸரோஜ ப்ரண(தா)ர்தி ஹரு ராணீ
3பராகு 4த4ர்ம ஸம்வர்த4னி ப3ஹு
3பரா(க)மல கு3ணா த்ரிபுர ஸுந்த3ரீ (து3ரு)
சரணம்
சரணம் 1
நீ ஸன்னிதி4னி ஜேரி கொ3லிசின
நின்(னெ)புடு3 தலசே ஸுஜன
தா3ஸ ஜன பா4க்3ய(மெ)டு தெலுபுது3னோ
ஓ 5ஸகல பாப ஸ1மனீ வினு
ஓங்காரி 6நியதி எடுலனோ
7நீ ஸா(டெ)வரே ஜக3ம்பு3லனு
8நே நிரதமு நினு கொ3லிசிதி (து3ரு)
ஸ்வர-ஸாஹித்ய
ஸரோஜ நயன நத ஜன பாலினி(வ)னி
வேத3முலு மொர(லி)ட3கா3-
(னி)தரு(லெ)வரு மனவி வினு க்ரு2ப ஸலுப
பராகு ஸலுப ரா(தி3)க நீ(வி)புடு3 (து3ரு)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
து3ருஸுகா3/ க்ரு2ப/ ஜூசி/ ஸந்ததமு/-
விரைவாக/ கிருபை/ கூர்ந்து/ எவ்வமயமும்/
அரோக3/ த்3ரு2ட4/ ஸ1ரீரமுக3/ ஸலுபு/ நனு/
நோயற்ற/ திட/ சரீரத்தினனாக/ ஆக்குவாய்/ என்னை/
அனுபல்லவி
பரம/ பாவனி/ க்ரு2பாவனி/ வினுத/
முற்றிலும்/ தூயவளே/ கிருபையுடையவளே/ போற்றப்பெற்ற/
பத3/ ஸரோஜ/ ப்ரணத-ஆர்தி/ ஹரு/ ராணீ/
திருவடி/ கமலத்தினளே/ பிரணதார்த்தி/ ஹரன்/ ராணியே/
பராகு/ த4ர்ம/ ஸம்வர்த4னி/ ப3ஹு/
பராக்கு/ அறம்/ வளர்த்த நாயகியே/ மிக்கு/
பராகு/-அமல/ கு3ணா/ த்ரிபுர/ ஸுந்த3ரீ/ (து3ரு)
பராக்கு/ களங்கமற்ற/ குணத்தினளே/ திரிபுர/ சுந்தரீ/
சரணம்
சரணம் 1
நீ/ ஸன்னிதி4னி/ ஜேரி/ கொ3லிசின/
உனது/ சன்னிதியினை/ அடைந்து/ (உன்னை) புகழும்/
நின்னு/-எபுடு3/ தலசே/ ஸுஜன/
உன்னை/ எவ்வமயமும்/ நினைக்கும்/ நல்லோர்/
தா3ஸ ஜன/ பா4க்3யமு/-எடு/ தெலுபுது3னோ/
அடியார்கள்/ பேறு/ எத்தகையது என (எப்படி)/ கூறவல்லேனோ (கூறுவேனோ)/
ஓ/ ஸகல/ பாப/ ஸ1மனீ/ வினு/
ஓ/ அனைத்து/ பாவங்களையும்/ தணிப்பவளே/ கேளாய்/
ஓங்காரி/ நியதி/ எடுலனோ/
ஓங்காரீ/ நியதி/ எப்படியோ/
நீ/ ஸாடி/-எவரே/ ஜக3ம்பு3லனு/
உனக்கு/ ஈடு/ எவரே/ உலகத்தினில்/
நே/ நிரதமு/ நினு/ கொ3லிசிதி/ (து3ரு)
நான்/ இடையறாது/ உன்னை/ போற்றி செய்தேன்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - து3ருஸுகா3 - து3ருஸுக3.
4 - த4ர்ம ஸம்வர்த4னி - த4ர்ம ஸம்வர்தி4னி
5 - ஸகல பாப ஸ1மனீ - ஸகல லோக ஜனனீ.
6 - நியதி எடுலனோ - நியதியடுலனோ.
7 - நீ ஸாடெவரே ஜக3ம்பு3லனு - நீ ஸாடெவரு ஈ ஜக3ம்பு3லனு.
8 - நே நிரதமு நினு கொ3லிசிதி - நே நிரதமுனு கொ3லிசிதி.
9 - கலத ஜெந்தி3 - கலக ஜெந்தி3 : 'கலத', 'கலக' ஆகிய இரண்டு சொற்களுக்கும், கிட்டத்தட்ட பொருள் ஒன்றுதான். ஆனால், அடுத்து வரும், 'ஜெந்தி3' (அடைந்து) என்பதனால், 'கலத' என்பதே பொருந்தும்.
Top
10 - செவுலாரக3 வினி - செவுலார வினி.
11 - வேள ப3ஹு நிபுணாவனி - வேள நிபுணாவனி.
13 - த3ர ஹாஸிதா - த3ர ஹஸிதா - த4ர ஹஸிதா : 'த4ர' என்பது தவறாகும்.
14 - வாகீ3ஸ1 வினுதா - வாகீ3ஸ1 நுதா.
15 - ஸ்1யாம க்ரு2ஷ்ண வினுதா - ஸ்1யாம க்ரு2ஷ்ண நுதா.
16 - நா மனவினி வினு - நா மனவினி வினி.
Top
மேற்கோள்கள்
4 - த4ர்ம ஸம்வர்த4னி - அறம் வளர்த்த நாயகி - திருவையாற்றில் அம்மையின் பெயர்.
12 - ஸரஸ கவிதா நிசிதா - இனிய கவிதைகள் நிறையப்பெற்றவள். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக, கவி காளிதாசரின் 'சியாமளா தண்டக'த்தினைக் கூறலாம்.
Top
விளக்கம்
2 - க்ரு2பாவனி - இந்த சொல்லின் வடிவம் விளங்கவில்லை. ஆயினும் இதனை, 'கருணையுடையவள்' என்று மொழிபெயர்க்கப்பட்டது.
3 - பராகு - பொதுவாக, இந்த சொல்லுக்கு 'கவனமின்மை' என்று பொருளாகும். ஆனால், அரசவையில், அரசனின் வருகையை அறிவிக்கும் காவலர்களும், அவையோரின் கவனத்தினை ஈர்க்க, 'பராக்கு பராக்கு' என்று கூறுவது வழக்கம். புத்தகங்களில், இந்தப் பொருளே கொள்ளப்பட்டுள்ளது. அங்ஙனமே, 'கவனிப்பாய்' என்ற பொருளில் இங்கும் ஏற்கப்பட்டது.
Top
பிரணதார்த்தி ஹரன் - பணிந்தோர் துயர் களைவோன் - திருவையாறு சிவனின் பெயர் - தமிழில் ஐயாறப்பன்.
பராக்கு - கவனிப்பாய் என
நியதி - விதி வலிமை
நிபுணி - திறமையுடைத்தவள்
நாமகள் மணாளன் - பிரமன்
முறையிட - 'பறைசாற்ற' என்று பொருளாகும்
Top