பல்லவி
1வேத3 வாக்யமனியெஞ்சிரியீ
2வெலது3லெல்ல ஸம்மதிஞ்சிரி
சரணம்
சரணம் 1
சீரலன்னியு வத3லிஞ்சிரியெந்தோ
ஸிக்3கு3 சேதனந்து3னுஞ்சிரி (வேத3)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
வேத3/ வாக்யமு/-அனி/-எஞ்சிரி/-ஈ/
மறை/ சொல்/ என/ எண்ணினர்/ இந்த/
வெலது3லு/-எல்ல/ ஸம்மதிஞ்சிரி/
பெண்டிர்/ யாவரும்/ சம்மதித்தனர்/
சரணம்
சரணம் 1
சீரலு/-அன்னியு/ வத3லிஞ்சிரி/-எந்தோ/
சேலைகள்/ யாவற்றினையும்/ அவிழ்த்தனர்/ மிக்கு/
ஸிக்3கு3 சேதனு/-அந்து3ன/-உஞ்சிரி/ (வேத3)
வெட்கத்துடன்/ அங்கு (படகின் ஓட்டையில்)/ இட்டனர்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - வெலது3லெல்ல - பொலதுலெல்ல - 'வெலதி3', 'பொலதி' இரண்டுமே பெண்களைக் குறிக்கும். எதுகை மோனையின்படி, 'வெலது3லெல்ல' சரியெனப் படுகின்றது.
3 - தடு3வனாயெனு - எல்லா புத்தகங்களிலும், 'தட3வனாயெனு' என்று கொடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கில், 'தட3வு' (தமிழ் சொல்லுக்கு ஈடானது), மற்றும் 'தடு3வு' (தடி3யு) (நனைதல்) என இரண்டு சொற்கள் உள்ளன. இவ்விடத்தில், 'நனைதல்' என்ற பொருளுடைய சொல்லே பொருந்தும். எனவே 'தட3வனாயெனு' பொருந்தாது. 'தடு3வனாயெனு' அல்லது 'தடி3யனாயெனு' என்றிருக்கவேண்டும்.
4 - கனுகொந்து3ரோயனி - கனுகொந்து3னோயனி : 'கனுகொந்து3னோயனி' இவ்விடத்தில் பொருந்தாது.
5 - மூய - மூஸிதே
6 - காசுகொந்து3ரோ - ப்3ரோசுகொந்து3ரோ
7 - எண்ட3க3னாயெனு - எண்டனாயெனு
9 - செலுலு - செலுனி : 'செலுனி' பொருந்தாது.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - வேத3 வாக்ய - மறைச் சொல்லென - தட்டமுடியாதது
8 - சிலு சிலுமனி - சிலு சிலுவென - நீர் ஓட்டையினில் புகும் ஒலி
'நௌக சரித்திரம்' (ஓடக்கதை) எனும் நாட்டிய நாடகத்தினில் வரும் பாடல் இது.
பாடலின் பின்னணி - ஆய்ச்சியர்கள் கண்ணனை யமுனை நதிக்கரையில் சந்தித்து, எல்லோருமாக ஓடத்தில் பயணம் செய்கின்றனர். கண்ணனை சந்தித்த களிப்பில், ஆய்ச்சியர் கண்ணனை தமது சொத்தாக நினைத்து செருக்கடைகின்றனர். அவர்களுடைய செருக்கினை யடக்க, கண்ணன் புயலை உண்டாக்குகின்றான். புயலில் படகு தத்தளிக்கின்றது. படகினில் ஓட்டை விழுந்து தண்ணீர் உள்ளே புகுகின்றது. கண்ணன் தனக்கு உடல் நலம் குன்றியதாகப் பாசாங்கு செய்கின்றான். அதனால் தாங்கள் எப்படி கரை சேர்வது, கண்ணனை எங்ஙனம் உயிர்காப்பது என பெருங்கவலை கொள்கின்றனர். அதற்கு, கண்ணன் படகின் ஓட்டையை அடைக்க அவர்கள் யாவருடைய ரவிக்கைகளையும் அவிழ்த்து ஓட்டையில் திணிக்கச்சொல்கின்றான். ஆய்ச்சியர் அங்ஙனமே செய்தும் ரவிக்கைகளெல்லாம் நீரில் அடித்துக்கொண்டு போய்விடுகின்றன. கண்ணன் அவர்களை தங்களுடைய சேலைகளையும் அவிழ்த்து ஓட்டையை அடைக்கும்படி கூறுகின்றான். இதற்குமேல் இந்தப் பாடல்.
கமலக்கண்ணன் - கண்ணன்
தியாகராசனால் போற்றப் பெற்றோன் - கண்ணன்
Top