பல்லவி
உன்ன தாவுனனுண்ட3னிய்யது3 வான
உருமுலைதே வெனக திய்யது3
சரணம்
சரணம் 1
1ஸுடி3 கா3லி2யோட3 ஜுட்டி வடி3
வடி3கா3 வானலைதே கொட்டி (உ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
உன்ன/ தாவுன/-உண்ட3னு/-இய்யது3/ வான/
இருக்கும்/ இடத்தில்/ இருக்க/ விடாது/ மழை/
உருமுலு-ஐதே/ வெனக/ திய்யது3/
உறுமலோ/ பின்/ வாங்காது/
சரணம்
சரணம் 1
ஸுடி3/ கா3லி/-ஓட3/ ஜுட்டி/ வடி3/
சுழற்/ காற்று/ படகை/ சுழற்றும்/ பெய்யோ/
வடி3கா3/ வானலு-ஐதே/ கொட்டி/ (உ)
பெய்யென/ மழையோ/ பொழியும்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் முதலாவது சரணம் அனுபல்லவியாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
1 - ஸுடி3 கா3லி - ஸூடி கா3லி : புத்தகங்களில் இச்சொல்லுக்கு, 'சுழற் காற்று' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. தெலுங்கில், 'ஸுடி3 கா3லி' என்பதுதான் அத்தகைய பொருள் பெறும். அங்ஙனமே ஏற்கப்பட்டது.
2 - ஓட3 ஜுட்டி வடி3 வடி3கா3 வானலைதே - ஓட3 ஜுட்டி வடி3கா3 வானலைதே - ஓட3 ஜுட்டி ஜுட்டி வடி3 வானலைதே.
3 - ஸலிகெ3 - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, 'உதவி', 'காப்பு' என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அத்தகைய பொருளுடைய தெலுங்கு சொல், 'ஸலிக3' ஆகும். இது ஹிந்தி மொழியிலிருந்து வந்த சொல் என்று, தெலுங்கு அகராதி கூறும்.
5 - ஜனிரம்மா - போயிரம்மா.
6 - மத3மிந்த வத்3த3ண்டினம்மா - மத3மிம்ப வலத3ண்டினம்மா.
Top
மேற்கோள்கள்
4 - காளிந்தி3 - பலராமன் தனது ஏரினால் உழுது, யமுனையிலிருந்து ஒரு வாய்க்கால் உண்டாக்கினான் என்றும், அதுவே, 'காளிந்தி' என்று பெயர் பெற்றதென்பர்.
Top
விளக்கம்
4 - க3தி காளிந்தி3 - போக்கு காளிந்தி - பொதுவாக, 'க3தி' என்ற சொல்லுக்கு, 'புகல்' என்று பொருளாகும். ஆனால், இப்பாடலில் விவரிக்கப்பட்டுள்ள நிலைமையை நோக்குகையில், இச்சொல்லுக்கு, 'போக்கு' அதாவது, 'இனி காளிந்தியிலேயே நாம் மூழ்கவேண்டியதுதான்' என்ற பொருள்படும்.
இப்பாடல் 'நௌக சரித்ரம்' (ஓடக்கதை) எனப்படும் நாட்டிய-நாடகத்தின் அங்கமாகும்.
(பாடலின் பின்னணி - ஆய்ச்சியர், யமுனைக் கரையில், கண்ணனைச் சந்தித்து, அவனுடன் படகில் யமுனை நதியில் பயணம் செய்தனர். கண்ணனை சந்தித்த மகிழ்ச்சியில், அவர்கள், கண்ணன், 'தங்களது சொத்து' என்று செருக்குற்றனர். அவர்களுடைய செருக்கினைப் போக்குதற்காக, யமுனையில், புயலையும், மழையையும் உண்டாக்கினான் கண்ணன். அந்தப் புயல் - மழையினால், படகு, நீரில் தத்தளித்தது. இப்போது இந்தப் பாடல்.)
காளிந்தி - யமுனை நதி
தியாகராசனின் தோழன் - கண்ணன்
Top