பல்லவி
தன லோனே த்4யானிஞ்சி 1தன்மயமே காவலெரா
அனுபல்லவி
தன கு3ஹலோ தானுண்டெ3டு3 தாவுனு தெலியக3 வலெரா (த)
சரணம்
சரணம் 1
நீ மர்மமா க்ஷணமே நிஸ்1சயமை தெலுஸுனுரா (த)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
தன/ லோனே/ த்4யானிஞ்சி/ தன்மயமே/ காவலெரா/
தன்/ உள்ளே/ தியானித்து/ தன்மயமேயாக/ வேண்டுமய்யா/
அனுபல்லவி
தன/ கு3ஹலோ/ தானு/-உண்டெ3டு3/ தாவுனு/ தெலியக3/ வலெரா/ (த)
தனது/ குகையினில்/ தான்/ இருக்கும்/ இடத்தினை/ அறிய/ வேண்டுமய்யா/
சரணம்
சரணம் 1
நீ/ மர்மமு/-ஆ/ க்ஷணமே/ நிஸ்1சயமை/ தெலுஸுனுரா/ (த)
உனது/ மருமம்/ அந்த/ நொடியே/ உறுதியாக/ தெரியுமய்யா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
3 - ப்ரக்ரு2தி ஸ்வபா4வமுலு ப்ரஜ்வலிஞ்சுசுனுண்டு3 - இயற்கைத் தன்மைகள் சுடர்விட்டுக்கொண்டிருக்கும் - கீதையில் (18-வது அத்தியாயம், 11-வது செய்யுள்) கண்ணன் கூறியது -
"உடலெடுத்தோனால் கருமங்களை முழுவதுமாகத் துறக்கவியலாது.
ஆனால் கருமங்களின் பலன்களை எவன் துறக்கின்றானோ அவன் 'தியாகி' எனப்படுவான்."
Top
4 - ம்ரிங்கி3ன கள்ளகு - விழுங்கிய கண்களுக்கு - பகுதி மூடிய கண்களுடன் தியானத்தில் மூழ்கியோர் - கீதையில் (6-வது அத்தியாயம், 13-வது செய்யுள்) கண்ணன் கூறுவது -
(தியானம் செய்பவன்)
"உடல், தலை மற்றும் கழுத்தினை நேராக வைத்துக்கொண்டு, அசையாது, நிலையாக இருக்கட்டும்.
கண்களை நாசியின் நுனியில் கோர்த்து, தான் அங்கும் இங்கும் நோக்காதிருக்கட்டும்."
(கண்கள், தியானத்தில், பகுதி மூடி, விழிகள் அசையாதிருந்தால், பார்வை நாசியின் நுனியில் நிலைக்கும்.)
Top
5 - பொரல ஜேயுசுன்னாவு - புரளச் செய்தல் - ஆட்டுவித்தல் - கீதையில் (9-வது அத்தியாயம், 10-வது செய்யுள்) கண்ணன் கூறுவது -
"என்னுடைய அண்மையினால் பிரகிருதி (இயற்கை) சராசரங்களை அசைவிக்கின்றது.
குந்தி மகனே! அந்த காரணத்தினால்தான் இவ்வுலகம் சுழல்கின்றது."
(ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கங்களின் தமிழாக்கம்.)
Top
விளக்கம்
1 - தன்மயமே - தன்மயம் - வழிபடும் உருவத்துடன் ஒன்றுதல்
2 - ஏ வங்கோ தெலியது3ரா - எம்மூலையிலோ தெரியாது - தியானத்தில் ஆழ்ந்தவன், தியானத்தின் இலக்குடன் ஒன்றுவதனால், அவனுடைய அகங்காரம் செயலிழக்கின்றது. ஆனால், தியானம் முடிந்தபின்னர், அகங்காரம் மறுபடியும் எழுகின்றது. இதனை, தியாகராஜர் 'அகங்காரம் எந்த மூலையிலோ' என்று கூறுகின்றார்.
6 - நிரவதி4 ஸ1ய்ய - 'நிரவதி4' என்ற சொல்லுக்கு,'கால வரையற்ற' (அனந்த) என்று பொருளாகும். அதனால், இவ்விடத்தில் 'நிரவதி4' என்ற சொல் 'அனந்த சேடன்' எனும் அணையினைக் குறிக்கும்.
Top
7 - சே பட்டி - கைப் பற்றி - கைப்பற்றுதல் என்பது திருமணத்தினைக் குறிக்கும். இது நாயகி பாவமாகும்.
அனுபல்லவி மற்றும் சரணங்கள் 1 மற்றும் 2-னைச் சேர்த்தாலே, சரியான பொருள் கொள்ளவியலும்.
அங்ஙனமே, சரணங்கள் 4 மற்றும் 5-னை சேர்த்தே பொருள் கொள்ளவியலும். சரணங்கள் 6 மற்றும் 7-ம் அப்படியே.
சரணங்கள் 3 முதல் 6-வரை மிகவும் சுருக்கமாக இயற்றப்பட்டுள்ளன. அதனால், இவற்றின் பொருள் சரிவர கொள்ளப்பட்டுள்ளதா, என ஐயம் உள்ளது. தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.
Top
இப்பாடல், 'பிரகலாத பக்தி விஜயம்' என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும். இப்பாடல், பிரகலாதன், இறைவனை நோக்கிப் பாடுவதாக.
குகை - உடல் எனும் குகை
தானிருக்குமிடத்தினை - உள்ளுறை இறைவன் இருக்குமிடம்.
விதி - பிரமன்
இயற்கை - ஐம்பூதங்கள், மனம் முதலானவை
சுவைகள் - புலன் நுகர்ச்சியின் சுவை
Top