பல்லவி
ஸீதா கல்யாண வைபோ4க3மே
ராம கல்யாண வைபோ4க3மே
சரணம்
சரணம் 1
பவனஜ ஸ்துதி பாத்ர பாவன சரித்ர
ரவி ஸோம வர நேத்ர ரமணீய கா3த்ர (ஸீதா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸீதா/ கல்யாண/ வைபோ4க3மே/
சீதையின்/ திருமண/ வைபோகமே/
ராம/ கல்யாண/ வைபோ4க3மே/
இராமனின்/ திருமண/ வைபோகமே/
சரணம்
சரணம் 1
பவனஜ/ ஸ்துதி பாத்ர/ பாவன/ சரித்ர/
வாயு மைந்தன்/ துதிக்கும்/ புனித/ சரிதமுடைய/
ரவி/ ஸோம/ வர/ நேத்ர/ ரமணீய/ கா3த்ர/ (ஸீதா)
பரிதி/ மதிகளை/ உயர்/ கண்களாயுடைய/ இனிய/ உருவமுடைய/ இராமனின்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் இப்பாடலின் ராகம் 'குறஞ்சி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.
2 - ஸமரைக வீர - ஸமரைக தீ4ர : அந்த சரணத்திலேயே, அடுத்த வரியினில், 'தீ4ர' திரும்பவும் வருவதனால், இங்கு 'வீர' ஏற்கப்பட்டது.
3 - க3ர்வ மானவ - க3ர்வ மானஸ : எல்லா புத்தகங்களிலும், 'க3ர்வ மானவ' (செருக்குடைத்த மானவர்) என்ற பொருளே கொள்ளப்பட்டுள்ளதால், 'க3ர்வ மானவ' ஏற்கப்பட்டது.
Top
மேற்கோள்கள்
1 - பரிபூர்ண காம - இச்சித்தது நிறைவுறும். கீதையில், கண்ணன் கூறுவது (3-வது அத்தியாயம், 22-வது செய்யுள்) -
"பார்த்தா! எனக்கு முவ்வுலகத்திலும், இயற்றப்படவேண்டிய கடமைகளோ, நான் அடையாதவையோ, இனி அடையவேண்டியவையோ, சிறிதும் இல்லை. ஆயினும், நான் பணிகளைத் தொடர்ந்து செய்கின்றேன்." (ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)
Top
விளக்கம்
வைபோகம் - பெரும் சீர் சிறப்பு
பொன் மலை - மேரு மலை
மலை சுமந்த - மந்தர மலை
பிறவிக் கடலின் கலம் - பிறவிக் கடலினைக் கடத்துவிக்கும் கலம்
Top