Notation Scheme

ஸாரமே கானி - ராகம் பந்துவராளி - sAramE kAni - rAga pantuvarALi

English Version
Language Version

பல்லவி
1ஸாரமே கானி அன்ய மார்க3
2விசாரமேடிகே ஓ மனஸா

அனுபல்லவி
வாரு வீரு தெலிய லேக பல்கு
வார்தலு வினனேலே ராம நாமமு (ஸா)

சரணம்
சரணம் 1
மார கோடி லாவண்யுடை3ன ரகு4
வீருனி நாம ஸுதா4 ரஸமுனனு
ஸாரெகு பானமு ஜேஸி ஜக3த்3-
விஹாருடை3 வெலயு நாராயண
நாராயணயனுசுனு வாரமு
31ரத3ம்பு33 நிபு4டௌ3 ஸ்ரீ
நாரத3 முனி 4வல்மீக ஜாதுனிகி
கூரிமினுபதே3ஸி1ஞ்ச லேதா3 (ஸா)


சரணம் 2
பரம பாவனுனி ஸ1ரணாக3த ஜன
பரிபாலன பி3ருதா3ங்குனி ஸீதா
வருனி நாம ஸுதா4 ரஸ பானமு
நிரதமுனனு ஜேஸி ஹரி ஹரி
ஹரியனுசு ஸந்ததம்பு3னு
ஸரியு லேனி கீர்தி காஞ்சி தே3ஹமு
பரவஸ1ம்பு3 ஜெந்தி3 ஸு1க ப்3ரஹ்ம
பரீக்ஷித்துகொஸக3 லேதா3 வாதா3 (ஸா)
சரணம் 3
5ஸாம கா3ன லோலுடௌ3 ரஜத கி3ரி
தா4முடை3ன த்யாக3ராஜ ஸி1வுட3தி
நேமமுதோ நாமாம்ரு2த பானமு
ஏமரகனு ஜேஸி ராம ராம
ராமயனுசு ஸததமு
ஸ்ரீமதா3தி3 கௌ3ரிகி ஸ்1ரு2ங்கா3ரிகி
ஆ மஹிமலனா ரஹஸ்யமுலனதி
ப்ரேமனுபதே3ஸி1ஞ்ச லேதா3 (ஸா)


பொருள் - சுருக்கம்
ஓ மனமே!

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸாரமே/ கானி/ அன்ய/ மார்க3/
சாரமே/ அற்ற/ பிற/ நெறிகளின்/

விசாரமு/-ஏடிகே/ ஓ மனஸா/
எண்ணம்/ எதற்கடி/ ஓ மனமே/


அனுபல்லவி
வாரு/ வீரு/ தெலிய லேக/ பல்கு/
அவரும்/ இவரும்/ அறியாது/ பேசும்/

வார்தலு/ வினனு/-ஏலே/ ராம/ நாமமு/ (ஸா)
சொற்களை/ கேட்பது/ ஏனடி/ இராம/ நாமமே/ சாரமேயன்றி...


சரணம்
சரணம் 1
மார/ கோடி/ லாவண்யுடை3ன/ ரகு4/
மதனர்கள்/ கோடி/ எழிலுடையவனாகிய/ இரகு/

வீருனி/ நாம/ ஸுதா4/ ரஸமுனனு/
வீரனின்/ நாம/ அமிழ்து/ சாற்றினை/

ஸாரெகு/ பானமு ஜேஸி/ ஜக3த்3/-
எவ்வமயமும்/ பருகி/ பல்லுலக/

விஹாருடை3/ வெலயு/ நாராயண/
சஞ்சாரியாக/ விளங்கும்/ 'நாராயண/

நாராயண/-அனுசுனு/ வாரமு/
நாராயண/ என்று/ (செபித்துக்கொண்டு) நாளும்/

1ரத்3/-அம்பு33/ நிபு4டௌ3/ ஸ்ரீ/
இலையுதிர்கால/ முகில்/ நிகரினராகிய/ உயர்/

நாரத3/ முனி/ வல்மீக/ ஜாதுனிகி/
நாரத/ முனி/ (இராம நாமத்தினை) புற்றில்/ உதித்தோனுக்கு/

கூரிமினி/-உபதே3ஸி1ஞ்ச லேதா3/ (ஸா)
கனிவுடன்/ உபதேசிக்கவில்லையா/


சரணம் 2
பரம/ பாவனுனி/ ஸ1ரண/-ஆக3த ஜன/
முற்றிலும்/ தூயோனின்/ சரண்/ அடைந்தோரை/

பரிபாலன/ பி3ருது3/-அங்குனி/ ஸீதா/
பேணும்/ விருது/ ஏந்துவோனின்/ சீதை/

வருனி/ நாம/ ஸுதா4/ ரஸ/ பானமு
மணாளனின்/ நாம/ அமிழ்து/ சாற்றினை/

நிரதமுனனு/ ( பானமு) ஜேஸி/ ஹரி/ ஹரி/
இடையறாது/ பருகி/ 'அரி/ அரி/

ஹரி/-அனுசு/ ஸந்ததம்பு3னு/
அரி/ என்று/ (செபித்து), எவ்வமயமும்/

ஸரியு/ லேனி/ கீர்தி/ காஞ்சி/ தே3ஹமு/
ஈடு/ அற்ற/ புகழ்/ பெற்று/ மெய்/

பரவஸ1ம்பு3/ ஜெந்தி3/ ஸு1க/ ப்3ரஹ்ம/
பரவசம்/ உற்று/ சுக/ பிரும்மம்/ (அரி நாமத்தினை)

பரீக்ஷித்துகு/-ஒஸக3 லேதா3/ வாதா3/ (ஸா)
பரீட்சித்துக்கு/ அளிக்கவில்லையா/ வாதா/
சரணம் 3
ஸாம/ கா3ன/ லோலுடௌ3/ ரஜத/ கி3ரி/
சாம/ கானத்தினை/ விரும்பும்/ பனி/ மலை/

தா4முடை3ன/ த்யாக3ராஜ/ ஸி1வுடு3/-அதி/
உறைவோனாகிய/ தியாகராசனுக்கு/ நலனருள்வோன்/ மிக்கு/

நேமமுதோ/ நாம/-அம்ரு2த/ பானமு
நியமத்துடன்/ (இராம) நாம/ அமிழ்தினை/

ஏமரகனு/ ( பானமு) ஜேஸி/ ராம/ ராம/
மறவாது/ பருகி/ 'இராமா/ இராமா/

ராம/-அனுசு/ ஸததமு/
இராமா/ என/ (செபித்து), எவ்வமயமும்/

ஸ்ரீமத்/-ஆதி3/ கௌ3ரிகி/ ஸ்1ரு2ங்கா3ரிகி/
உயர்/ ஆதி/ கௌரிக்கு/ சிங்காரிக்கு/

ஆ/ மஹிமலனு/-ஆ/ ரஹஸ்யமுலனு/-அதி/
அந்த/ மகிமைகளினையும்/ அந்த/ மருமங்களினையும்/ மிக்கு/

ப்ரேமனு/-உபதே3ஸி1ஞ்ச லேதா3/ (ஸா)
அன்புடன்/ உபதேசிக்கவில்லையா/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், இப்பாடலின் ராகம் 'காமவர்த்தினி' என்று கொடுக்கப்பட்டுள்ளது.
Top

மேற்கோள்கள்
4 - வல்மீக ஜாதுனிகி - புற்றிலுதித்தோன் - வால்மீகி முனி. 'வால்மீகி', முன்னர், ஒரு வேடனாக, காடுகளில் வழிப்பறி செய்து, வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்ததாகவும், நாரதர், அவருக்கு நல்வழி காட்டி, ராம நாமத்தினை உபதேசித்ததாக பரம்பரைக் கதை (Dhyana, Japa, Mantra, Guru, and Avatar) கூறும். ஆனால், இதற்கு ஆதாரமென்ன என்று தெரியவில்லை. மோனியரின் 'சமஸ்கிருத அகராதி', வால்மீகி, ஒரு அந்தணர் என்றும், அவருக்கு அயோத்தி மன்னர்களுடன் தொடர்பு இருந்ததாகக் கூறும். அந்த அகராதியிலும், இந்த பரம்பரைக் கதையினைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது..

5 - ஸாம கா3ன லோலுடௌ3 - சாம கானத்தினை விரும்புவோன். சிவனைக் குறிக்கும். பார்வதி, விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தினை, பண்டிதர்களால் ஓதக் கேட்க விரும்புவதாக, சிவனிடம் கூற, 'ராம ராம ராம' என்று செபித்தாலே, விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தினை ஓதிய பலன் கிடைக்கும் என, சிவன் பதில் கூறினார். (விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் பயன் படலத்தினை நோக்கவும்.)
Top

விளக்கம்
1 - ஸாரமே கானி - பல்லவியில் இதற்கு 'சாரமேயற்ற' என்றும், அனுபல்லவியின் 'ராம நாமமே' என்ற சொற்களுடன் இணைக்கையில், 'சாரமேயன்றி' என்றும் பொருள்படும்.

2 -ஏடிகே - எதற்கடி - மனத்தினை பெண்பாலில் தியாகராஜர் விளிக்கின்றார்

3 - 1ரத3ம்பு33 - இலையுதிர்கால முகில் - இலையுதிர் காலத்தில் ஆகாயம் மேகங்களின்றி தெளிவாக இருக்கும். அப்படி மேகங்களிருந்தாலும், அவை, மழை கொடுக்காதாகையினால், வெண்ணிறமாக இருக்கும்.
Top

சஞ்சாரி - திரிபவர்
முற்றிலும் தூயோன் - சரணடைந்தோரைப் பேணும் விருதேந்துவோன் - இராமன்
பரீட்சித்து - கலியை வென்ற மன்னன்
சாமகானம் - சாம வேதத்தினை ஓதல்
தியாகராசனுக்கு நலனருள்வோன் - சிவன்
ஆதி கௌரி - பார்வதி
சிங்காரி - பார்வதியைக் குறிக்கும்.
Top