பல்லவி
ஸ்ரீ ராம ராம ராம ஸ்ரீ மானஸாப்3தி4 ஸோம
1நாராயணாப்த காம நளினாக்ஷ பவ்வளிஞ்சு
சரணம்
சரணம் 1
2பல்லவாத4ர வரேண்ய பாபேப4 ஸிம்ஹ த4ன்ய
மல்லிகா தல்பமந்து3 மா-த4வ பவ்வளிஞ்சு (ஸ்ரீ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ராம/ ராம/ ராம/ ஸ்ரீ/ மானஸ/-அப்3தி4/ ஸோம/
ஸ்ரீ ராமா/ இராமா/ இராமா/ இலக்குமி/உள்ள/ கடலின்/ மதியே/
நாராயண/-ஆப்த/ காம/ நளின/-அக்ஷ/ பவ்வளிஞ்சு/
நாராயணா/ அடைவோனே/ எண்ணியவை/ கமல/ கண்ணா/ பள்ளிகொள்வாய்/
சரணம்
சரணம் 1
பல்லவ/-அத4ர/ வரேண்ய/ பாப/-இப4/ ஸிம்ஹ/ த4ன்ய/
மொட்டு/ இதழ்களோனே/ தலைசிறந்தோனே/ பாவ/ கரிக்கு/ சிங்கமே/ மங்களமானவனே/
மல்லிகா/ தல்பமு-அந்து3/ மா-த4வ/ பவ்வளிஞ்சு/ (ஸ்ரீ)
மல்லிகை/ படுக்கையினில்/ மாதவா/ பள்ளிகொள்வாய்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில், ராகத்தின் பெயர் 'கோ3பிகா வஸந்தம்' என்று கொடுக்கப்பட்டுள்ளது.
3 - ஸீதா - ஸீத.
4 - ஆஸ1தோ - ஆஸதோ : எதுகை-மோனையினை நோக்குகையில் 'ஆஸ1தோ' என்பதே பொருந்தும் எனக் கருதுகின்றேன்.
5 - அர்சிஞ்ச - அர்சிஞ்சு.
Top
மேற்கோள்கள்
1 - ஆப்த காம - எண்ணியவை அடைவோனே - இறைவன் எண்ணியவை அடையப்பெறும். விஷ்ணு ஸஹஸ்ரநாமம் - 'காமீ' (653) மற்றும் 'ஸித்3த4 ஸங்கல்ப' (253) என்ற போற்றிகளின் பொருள் நோக்கவும்.
Top
விளக்கம்
2 - பல்லவாத4ர வரேண்ய - 'மொட்டிதழ்களோனே', 'தலைசிறந்தோனே' என இரண்டு போற்றிகளாகவோ அல்லது 'மொட்டிதழோரால் (பெண்டிரால்) வேண்டப்படுவோன்' என்று ஒரு போற்றியாகவோ பொருள் கொள்ளலாம். ஆனால், பின் கொடுக்கப்பட்டுள்ள போற்றி, இந்த கீர்த்தனையில் பொருந்தாது என்பதனாலும், பரம்பரையாக, (புத்தகங்களில் உள்ளபடி) முன்னர் கூறிய இரண்டு போற்றிகளே பொருளாக ஏற்கப்பட்டுள்ளமையால், அங்ஙனமே பொருள் கொள்ளப்பட்டது.
பாவக் கரிக்கு சிங்கமே - பாவமெனும் கரிகளை வெல்லும் சிங்கம.
தாரையரசன் - மதி
காற்றுண்போன் - அரவு - சேடன்
Top