பல்லவி
ஸ்ரீ ராம ஜய ராம ஸ்1ரு2ங்கா3ர ராம
சரணம்
சரணம் 1
கா3ரவமுன ப்3ரோவு கருணா ஸமுத்3ர (ஸ்ரீ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸ்ரீ ராம/ ஜய/ ராம/ ஸ்1ரு2ங்கா3ர/ ராம/
ஸ்ரீ ராமா/ பல்லாண்டு/ இராமா/ எழிலான/ இராமா/
சரணம்
சரணம் 1
கா3ரவமுன/ ப்3ரோவு/ கருணா/ ஸமுத்3ர/ (ஸ்ரீ)
அன்புடன்/ காப்பாய்/ கருணை/ கடலே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மாடாடு3னதெ3புடு3 - மாடாடே3தெ3புடு3
3 - குங்கும - குங்குமமு
5 - ஸக3மாயெனே - ஸக3மாயெனோ : 'ஸக3மாயெனே' - சரியாகும்
Top
மேற்கோள்கள்
விளக்கம்
இப்பாடல் பிரகலாத பக்தி விஜயம் என்ற நாடகத்தில் பிரகலாதன் பாடுவதாக அமைந்துள்ளது.
2 - ஜபமேமோ தபமேமோ அபராத4மேமோ - ஜெபமென்னவோ? தவமென்னவோ? - இவை அறியேன் என - மிகவும் சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ள இந்த சரணத்திற்கு, சரியான பொருள் கூறுதல் கடினம். என் சிற்றறிவுக்கு எட்டியவரை இதற்கு பொருள் எழுதியுள்ளேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.
3 - குங்கும - எனது குங்குமம் - சுமங்கலியின் சின்னம் - இப்பாடல் நாயகி பாவத்தில் (இறைவன் நாயகனாக) அமைந்துள்ளது. ஒரு சுமங்கலிப் பெண்ணுக்கு, குங்குமம் மிகவும் முக்கியமான ஆபரணப் பொருளாகும்.
4 - தோஷிம்பகென்னாள்ளு தோசுனே - மகிழ்விக்க எப்போது தோன்றும் - இதற்குப்பின் வரும் 15-வது சரணத்தில் பிரகலாதன் (தியாகராஜர்) இறைவனைத் தன்னுடன் இணைய வேண்டுகின்றார். 12-வது சரணத்தில் உலக இன்பங்களை எனது மனம் விரும்பாது என்கின்றார். இவையிரண்டினையும் இணைத்து நோக்குகையில், இறைவன் தன்னை மகிழ்விக்க பிரகலாதன் (தியாகராஜர்) விழைவது தெரிகின்றது. அதன்படி பொருள் கொள்ளப்பட்டது.
எல்லா புத்தகங்களிலும் 'தோசுனே' (தோன்றுமோ) என்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சொல் (தோசுனே) 'தோத்ஸுனே' என்றும் எழுதப்படும். இந்தச் சொல்லினின்றும் சிறிது வேறுபட்ட, 'தோஸ்துனே' என்ற சொல்லுக்கு, (நாளைத்) 'தள்ளுதல்', (காலத்தைப்) 'போக்குதல்' என்று பொருளாகும். அங்ஙனம், சொற்பிழை ஏற்பட்டிருக்குமேயாகில், இந்த சரணத்திற்கு, '(உன்னை) மகிழ்விக்காது எத்தனை நாள் தள்ளுவேனே' என்று பொருள் கொள்ளலாம்.
Top