பல்லவி
1ரமா ரமண ராரா ஓ (ரமா)
சரணம்
சரணம் 1
ஸமானமெவரு வினுமா நா மனவினி
2தமாஸு பொக3ட3 தரமாஹி பதிகினி (ரமா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ரமா/ ரமண/ ராரா/ ஓ/ (ரமா)
இரமை/ மணாளா/ வாராய்/ ஓ/
சரணம்
சரணம் 1
ஸமானமு/-எவரு/ வினுமா/ நா/ மனவினி/
நிகர்/ யார் (உனக்கு)/ கேளாய்/ எனது/ விண்ணப்பத்தினை/
தம/-ஆஸு/ பொக3ட3/ தரமா/-அஹி/ பதிகினி/ (ரமா)
தமது/ பெருமையை/ புகழ/ தரமா/ அரவு/ அரசனுக்கும்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் சரணங்கள் 3, 4 மற்றும் 5 - மாற்றி 4, 5 மற்றும் 3 என்று கொடுக்கப்பட்டுள்ளன.
1 - ரமா ரமண ராரா ஓ - ரமா ரமண ராரா ஓ ரமா ரமண ராரா.
2 - தமாஸு - தமாமு : 'தமாமு' என்ற சொல்லுக்கு இவ்விடத்தில் பொருளேதுமில்லை. 'தமாஸு' என்ற சொல்லைத் 'தம+ஆஸு' என்று பிரிக்கலாம். இச்சொல்லுக்கு, புத்தகங்களில் 'தமது பெருமை' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. தெலுங்கு சொல், 'அஸமு', ஸம்ஸ்கிருத சொல் 'யஸ1ஸ்' என்ற சொல்லின் திரிபாகும். இச்சொல்லுக்கு, 'புகழ்', 'பெருமை' என்று பொருள். ஆனால், அங்ஙனம் பொருள் கொள்ள, 'தம அஸமு' (தமாஸமு) என்றிருக்கவேண்டும். ஆனால், கொடுக்கப்பட்டிருப்பதோ 'தம ஆஸு' (தமாஸூ) என. 'தம அஸமு' என்ற சொல் 'தம ஆஸு' என்று திரியாது. எனவே இச்சொல் 'தமாஸமு' (தம அஸமு) என இருக்கலாம்.
5 - கலார்த2 - கலார்த4 : 'கலார்த4' என்ற சொல்லுக்கு, இவ்விடத்தில் பொருளேதுமில்லை. 'கலார்த2' என்ற சொல்லினை 'கலா அர்த2' என்று பிரிக்கலாம். ஆயினும் இச்சொல்லின் சரியான பொருள் என்ன என்பது விளங்கவில்லை.
6 - ஸம்ஹார - ஸம்ஹர.
7 - த்வச்சரணம் - ஆத்ம சரணம். இவ்விடத்தில் த்வச்சரணம் சரியான சொல்லாகும்.
Top
மேற்கோள்கள்
4 - ஸும ரதா2ர்ஹ - மலர்த் தேருக்குத் தக்கோன் - ராமாயணத்தின் உத்தர காண்டத்தினில் (அத்தியாயம் 41) குபேரன், இராமன் பொருட்டு, புட்பக விமானத்தினை அனுப்பி வைக்கின்றான். ஆனால், இராமன், அந்த விமானத்திற்கு வணக்கம் செலுத்திவிட்டு, 'தான் வேண்டும் போழ்து வந்தால் போதும்' என்று குபேரனுக்குத் திரும்ப அனுப்பிவிடுகின்றான்.
9 - து3ர்முகா2ஸுர - இராவணன் படையில் ஒர் அரக்கன்.
ராமன் 'மஹி ராவணன்' எனப்படும் 'மயில் ராவணனை' வதைத்த கதை.
Top
விளக்கம்
3 - மனோ-ரத2ம்பொ3ஸகு3 - விரும்பியதை அளிக்கும் - இதனை 'புட்பக விமானத்தின்' அடைமொழியாகவோ, அல்லது இராமனின் அடைமொழியாகவோ கொள்ளலாம்.
8 - ஸ1த முகா2ரி - நூறு தலையனின் எதிரி. தியாகராஜர் தன்னுடைய 'தே3ஹி தவ பத3' என்ற ஸ1ஹான ராகப் பாடலில், சீதையினை, 'ஸ1த முக2 மத3 த3மனே' என்று அழைக்கின்றார். இதற்கு, 'ராவணனின் செருக்கினை அழித்தவள்' என்று பொருளாகும். அதனைக் கருத்திற் கொண்டு, இங்கும், இச்சொல் 'இராவணன்' என்று மொழி பெயர்க்கப்பட்டது.
சில புத்தகங்களில், 'ஸ1த முக2' என்ற சொல்லுக்கு 'மஹி ராவணன்' எனப்படும் நூறு தலையுடைய 'மயில் ராவணனை'க் குறிப்பதாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. மயில் ராவணனையும் ராமனே கொன்றான்.
Top
இரமை - இலக்குமி
அரவரசன் - சேடன்
மலர்த் தேர் - புட்பக விமானம்.
கலை, செல்வம் - 'கலைகளும் அதன் பொருட்களும்' என்றும் கொள்ளலாம்.
முயலுடையோன் - மதி
முயலுடையோன் பிறையணிவோன் - சிவன்
பன்முகத்தோன் - இராவணன்
மலையரசன் - மந்தர மலை
Top