பல்லவி
ராம ஸமயமு ப்3ரோவரா நா பாலி தை3வமா
அனுபல்லவி
ராம த3னுஜ க3ண பீ4ம நவ க4ன
ஸ்1யாம ஸந்ததமு நாம கீர்தனமு
ஏமரகனு அதி நேமமு
ஜேஸே மஹாத்முலகு காமித ப2லத3 (ரா)
சரணம்
சரணம் 1
தா3ந்த 1ஸம்ரக்ஷணாக3மாந்த சர
பா4க3வதாந்தரங்க3 சர ஸ்ரீ
காந்த கமனீய 2கு3ணாந்தகாந்தக
ஹிதாந்த ரஹித முனி
சிந்தனீய வேதா3ந்த வேத்3ய
ஸாமந்த ராஜ நுத
3யாந்த பா4ந்த நிஸா1ந்த
ஸு-கருணா ஸ்வாந்த நீகிதி3 (ரா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ஸமயமு/ ப்3ரோவரா/ நா/ பாலி/ தை3வமா/
இராமா/ (இது) சமயம்/ காப்பாயய்யா/ என்/ பங்கிற்/ தெய்வமே/
அனுபல்லவி
ராம/ த3னுஜ க3ண/ பீ4ம/ நவ/ க4ன/
இராமா/ அரக்கர்களுக்கு/ அச்சமூட்டுவோனே/ புது/ கார்முகில்/
ஸ்1யாம/ ஸந்ததமு/ நாம/ கீர்தனமு/
நீல வண்ணா/ எவ்வமயமும்/ (உனது) நாம/ கீர்த்தனத்தினை/
ஏமரகனு/ அதி/ நேமமு/
ஏமாறாது/ மிக்கு/ நியமத்துடன்/
ஜேஸே/ மஹாத்முலகு/ காமித/ ப2லத3/ (ரா)
செய்யும்/ சான்றோர்களுக்கு/ வேண்டிய/ பயனளிப்போனே/
சரணம்
சரணம் 1
தா3ந்த/ ஸம்ரக்ஷண/-ஆக3ம-அந்த/ சர/
இருடியரை/ காப்போனே/ ஆகமங்களில்/ உறையே/
பா4க3வத/-அந்தரங்க3/ சர/
நற்றொண்டர்/ உள்ளத்துள்/ உறையே!
ஸ்ரீ/ காந்த/ கமனீய/ கு3ண/-அந்தக/-அந்தக/
மா/ மணாளா/ கவரும்/ பண்பினனே/ நமனுக்கு/ நமனின்/
ஹித/-அந்த/ ரஹித/ முனி/
நண்பனே/ முடிவு/ அற்றோனே/ முனிவரால்/
சிந்தனீய/ வேதா3ந்த/ வேத்3ய/
தியானிக்கப்படுவோனே/ வேதாந்தத்தினை/ யறிந்தோனே/
ஸாமந்த ராஜ/ நுத/
சிற்றரசரால்/ போற்றப்பெற்றோனே/
யாந்த/ பா4ந்த/ நிஸா1/-அந்த/
ரா/ ம/ (எனும்) இருள்/ நீக்கியே/
ஸு-கருணா/ ஸ்வாந்த/ நீகு/-இதி3/ (ரா)
நற்கருணை/ இதயத்தோனே/ உனக்கு/ இது/ இராமா....
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - பாதா3ரவிந்த3 - பதா3ரவிந்த3
5 - ஸத்3ப4க்த - ஸத்3ப4க்தி : 'ஸத்3ப4க்த' சரியாகும்.
Top
மேற்கோள்கள்
2 - அந்தகாந்தக - நமனுக்கு நமன் - மார்க்கண்டேயனைக் காக்க, யமனை காலால் சிவன் உதைத்த கதை - இச்சம்பவம் திருக்கடையூரில் நடந்ததாக அக்கோயில் தல வரலாறு கூறும் -
6 - நந்த3காயுத4 - திருப்பதி வெங்கடேசப் பெருமானின் தலை சிறந்த தொண்டராகிய 'அன்னமாச்சார்யா' இறைவனின் 'நந்தகம்' எனும் வாளின் அவதாரம் என்று கூறுவர்.
Top
விளக்கம்
1 - ஆக3மாந்த சர - இச்சொல்லுக்கு 'ஆகமங்களில் உள்ளுறைவோன்' என புத்தகங்களில் பொருள் கூறப்பட்டுள்ளது. அது சரியானால், இச்சொல் 'ஆகமாந்தஸ்1சர' என்றிருக்கவேண்டும். ஆயினும் 'அந்த' என்ற சொல்லுக்கு 'உள்ளே' என்று ஒரு பொருளும் உண்டு. எனவே 'ஆகம அந்த சர' சரியாகவும் இருக்கலாம்.
3 - யாந்த பா4ந்த நிஸா1ந்த - 'யாந்த' என்ற சொல் அகராதியில் கிடையாது. இந்த சொற்கள் (செங்கல்பட்டுக்கு அடுத்த) மதுராந்தகத்தில் உள்ள ராமர் கோயிலில் செதுக்கப்பட்டிருப்பதாகவும், நீண்ட நாள் இதற்கு பொருள் தெரியாமல் இருந்ததாகவும், பின்னர் காஞ்சி மாமுனிவரிடம் இதுபற்றி கேட்கப்பட்டதாகவும், அதற்கு அவர் கீழ்க்கண்டவாறு விடையளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதன்படி -
யாந்த - என்றால் ய-வுக்குப் பின்னர் வரும் 'ர' (ய ர ல வ ...);
பா4ந்த - என்றால் ப4-வுக்குப் பின்னர் வரும் 'ம' (ப ப2 ப3 ப4 ம);
இரண்டினைடும் சேர்த்து 'ராம' என்று பொருள் கொள்ளவேண்டும் என்று கூறினாராம்.
ஆக இவ்வடைமொழிக்கு 'ராம எனும் இருள் நீக்கி' என்று பொருளாகும்.
7 - க3ஜ ராஜ ரக்ஷக - இப4 ராஜ வந்த3ன - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வரும் இந்த இரண்டு அடைமொழிகளும் கஜேந்திரனைக் குறிக்கும்.இவற்றிற்கு வேறு ஏதும் பொருள் இருப்பதாகத் தெரியவில்லை.
Top
சிற்றரசர் - அண்டையரசர் என்றும் கொள்ளலாம்
மந்தரம் - மந்தர மலை
அரவரசன் - சேடன்
புவிமகள் - சீதை
Top