Notation Scheme

ராம ஸமயமு - ராகம் மத்4யமாவதி - rAma samayamu - rAga madhyamAvati

English Version
Language Version

பல்லவி
ராம ஸமயமு ப்3ரோவரா நா பாலி தை3வமா

அனுபல்லவி
ராம த3னுஜ க3ண பீ4ம நவ க4
ஸ்1யாம ஸந்ததமு நாம கீர்தனமு
ஏமரகனு அதி நேமமு
ஜேஸே மஹாத்முலகு காமித ப2லத3 (ரா)

சரணம்
சரணம் 1
தா3ந்த 1ஸம்ரக்ஷணாக3மாந்த சர
பா43வதாந்தரங்க3 சர ஸ்ரீ
காந்த கமனீய 2கு3ணாந்தகாந்தக
ஹிதாந்த ரஹித முனி
சிந்தனீய வேதா3ந்த வேத்3
ஸாமந்த ராஜ நுத
3யாந்த பா4ந்த நிஸா1ந்த
ஸு-கருணா ஸ்வாந்த நீகிதி3 (ரா)


சரணம் 2
ப்3ரு2ந்தா3ரகாதி3 முனி ப்3ரு2ந்தா3ர்சித
4பாதா3ரவிந்த3 5ஸத்34க்த
ஜீவானந்த3 கர ஸூர்ய குல சந்த3னாரி ஹர
6நந்த3காயுத4
ஸனந்த3னாதி3 நுத குந்த3 ரத3ன வர
மந்த3ர த4
கோ3விந்த3 முகுந்த3 ஸந்தே3ஹமு
நீகெந்து3கு நாபை (ரா)
சரணம் 3
ஈ ஜக3தினி நீவவ்யாஜ கருணா மூர்திவனி
பூஜ ஜேஸிதி 73ஜ ராஜ ரக்ஷக த்யாக3-
ராஜ வந்தி3த இப4 ராஜ வந்த3ன ப2ணி
ராஜ ஸ1யன வினரா ஜக3த்பதீ
பூ4ஜா நாயக ராஜித மகுட
4ராஜ ஸன்னுத ஸு-ராஜயிபுடே3 (ரா)


பொருள் - சுருக்கம்
இராமா! என் பங்கிற் தெய்வமே!

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ஸமயமு/ ப்3ரோவரா/ நா/ பாலி/ தை3வமா/
இராமா/ (இது) சமயம்/ காப்பாயய்யா/ என்/ பங்கிற்/ தெய்வமே/


அனுபல்லவி
ராம/ த3னுஜ க3ண/ பீ4ம/ நவ/ க4ன/
இராமா/ அரக்கர்களுக்கு/ அச்சமூட்டுவோனே/ புது/ கார்முகில்/

ஸ்1யாம/ ஸந்ததமு/ நாம/ கீர்தனமு/
நீல வண்ணா/ எவ்வமயமும்/ (உனது) நாம/ கீர்த்தனத்தினை/

ஏமரகனு/ அதி/ நேமமு/
ஏமாறாது/ மிக்கு/ நியமத்துடன்/

ஜேஸே/ மஹாத்முலகு/ காமித/ ப2லத3/ (ரா)
செய்யும்/ சான்றோர்களுக்கு/ வேண்டிய/ பயனளிப்போனே/


சரணம்
சரணம் 1
தா3ந்த/ ஸம்ரக்ஷண/-ஆக3ம-அந்த/ சர/
இருடியரை/ காப்போனே/ ஆகமங்களில்/ உறையே/

பா43வத/-அந்தரங்க3/ சர/
நற்றொண்டர்/ உள்ளத்துள்/ உறையே!

ஸ்ரீ/ காந்த/ கமனீய/ கு3ண/-அந்தக/-அந்தக/
மா/ மணாளா/ கவரும்/ பண்பினனே/ நமனுக்கு/ நமனின்/

ஹித/-அந்த/ ரஹித/ முனி/
நண்பனே/ முடிவு/ அற்றோனே/ முனிவரால்/

சிந்தனீய/ வேதா3ந்த/ வேத்3ய/
தியானிக்கப்படுவோனே/ வேதாந்தத்தினை/ யறிந்தோனே/

ஸாமந்த ராஜ/ நுத/
சிற்றரசரால்/ போற்றப்பெற்றோனே/

யாந்த/ பா4ந்த/ நிஸா1/-அந்த/
ரா/ ம/ (எனும்) இருள்/ நீக்கியே/

ஸு-கருணா/ ஸ்வாந்த/ நீகு/-இதி3/ (ரா)
நற்கருணை/ இதயத்தோனே/ உனக்கு/ இது/ இராமா....


சரணம் 2
ப்3ரு2ந்தா3ரக/-ஆதி3/ முனி ப்3ரு2ந்த3/-அர்சித/
வானோர்/ ஆகியோர்/ முனிவர்களால்/ தொழப்பெற்ற/

பாத3/-அரவிந்த3/ ஸத்3-ப4க்த/
திருவடி/ தாமரையோனே/ நற்றொண்டரின்/

ஜீவ/-ஆனந்த3/ கர/ ஸூர்ய/ குல/ சந்த3ன/-அரி/ ஹர/
சீவனே/ களிப்பு/ அருள்வோனே/ சூரிய/ குல/ திலகமே/ பகைவரை/ அழிப்போனே/

நந்த3க/-ஆயுத4/
நந்தகமெனும்/ வாளுடையோனே/

ஸனந்த3ன/-ஆதி3/ நுத/ குந்த3/ ரத3ன/ வர/
சனந்தனர்/ முதலானோரால்/ துதிக்கப்பெற்றோனே/ முல்லை/ பற்களோனே/ உயர்/

மந்த3ர/ த4ர/
மந்தரத்தினை/ சுமந்தோனே/

கோ3விந்த3/ முகுந்த3/ ஸந்தே3ஹமு/
கோவிந்தா/ முகுந்தா/ ஐயம்/

நீகு/-எந்து3கு/ நாபை/ (ரா)
உனக்கு/ ஏன்/ என்மீது/
சரணம் 3
ஈ/ ஜக3தினி/ நீவு/-அவ்யாஜ/ கருணா/ மூர்திவி/-அனி/
இந்த/ புவியில்/ நீ/ நோக்கமற்ற/ கருணா/ மூர்த்தி/ யென/

பூஜ ஜேஸிதி/ க3ஜ/ ராஜ/ ரக்ஷக/ த்யாக3ராஜ/
தொழுதேன்/ கரி/ யரசனை/ காத்தோனே/ தியாகராசனால்/

வந்தி3த/ இப4/ ராஜ/ வந்த3ன/
தொழப்பெற்றோனே/ கரி/ யரசனால்/ வணங்கப்பெற்றோனே/

2ணி/ ராஜ/ ஸ1யன/ வினரா/ ஜக3த்/ பதீ/
அரவு/ அரசன்/ (மேல்) துயில்வோனே/ கேளாய்/ உலக/ தலைவா/

பூ4ஜா/ நாயக/ ராஜித/ மகுட/
புவிமகள்/ நாயகா/ ஒளிரும்/ மகுடத்தை/

4ர/-அஜ/ ஸன்னுத/ ஸு-ராஜ/-இபுடே3/ (ரா)
அணிவோனே/ பிரமனால்/ போற்றப் பெற்றோனே/ நல்லரசே/ இப்போழ்தே/ இராமா....


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - பாதா3ரவிந்த3 - பதா3ரவிந்த3
5 - ஸத்34க்த - ஸத்34க்தி : 'ஸத்34க்த' சரியாகும்.
Top

மேற்கோள்கள்
2 - அந்தகாந்தக - நமனுக்கு நமன் - மார்க்கண்டேயனைக் காக்க, யமனை காலால் சிவன் உதைத்த கதை - இச்சம்பவம் திருக்கடையூரில் நடந்ததாக அக்கோயில் தல வரலாறு கூறும் -
6 - நந்த3காயுத4 - திருப்பதி வெங்கடேசப் பெருமானின் தலை சிறந்த தொண்டராகிய 'அன்னமாச்சார்யா' இறைவனின் 'நந்தகம்' எனும் வாளின் அவதாரம் என்று கூறுவர்.
Top

விளக்கம்
1 - ஆக3மாந்த சர - இச்சொல்லுக்கு 'ஆகமங்களில் உள்ளுறைவோன்' என புத்தகங்களில் பொருள் கூறப்பட்டுள்ளது. அது சரியானால், இச்சொல் 'ஆகமாந்தஸ்1சர' என்றிருக்கவேண்டும். ஆயினும் 'அந்த' என்ற சொல்லுக்கு 'உள்ளே' என்று ஒரு பொருளும் உண்டு. எனவே 'ஆகம அந்த சர' சரியாகவும் இருக்கலாம்.
3 - யாந்த பா4ந்த நிஸா1ந்த - 'யாந்த' என்ற சொல் அகராதியில் கிடையாது. இந்த சொற்கள் (செங்கல்பட்டுக்கு அடுத்த) மதுராந்தகத்தில் உள்ள ராமர் கோயிலில் செதுக்கப்பட்டிருப்பதாகவும், நீண்ட நாள் இதற்கு பொருள் தெரியாமல் இருந்ததாகவும், பின்னர் காஞ்சி மாமுனிவரிடம் இதுபற்றி கேட்கப்பட்டதாகவும், அதற்கு அவர் கீழ்க்கண்டவாறு விடையளித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதன்படி -
யாந்த - என்றால் ய-வுக்குப் பின்னர் வரும் 'ர' (ய ர ல வ ...);
பா4ந்த - என்றால் ப4-வுக்குப் பின்னர் வரும் 'ம' (ப ப234 ம);
இரண்டினைடும் சேர்த்து 'ராம' என்று பொருள் கொள்ளவேண்டும் என்று கூறினாராம்.
ஆக இவ்வடைமொழிக்கு 'ராம எனும் இருள் நீக்கி' என்று பொருளாகும்.
7 - 3ஜ ராஜ ரக்ஷக - இப4 ராஜ வந்த3 - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வரும் இந்த இரண்டு அடைமொழிகளும் கஜேந்திரனைக் குறிக்கும்.இவற்றிற்கு வேறு ஏதும் பொருள் இருப்பதாகத் தெரியவில்லை.
Top

சிற்றரசர் - அண்டையரசர் என்றும் கொள்ளலாம்
மந்தரம் - மந்தர மலை
அரவரசன் - சேடன்
புவிமகள் - சீதை
Top