பல்லவி
ராம ராம ராம ராம ராரா ஸீதா ராம
சரணம்
சரணம் 1
ஸந்ததம்பு3 பத3முலனர்சிந்து
ஏகாந்தமுனனு நின்னாராதி4ந்து ஸீதா (ராம)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ராம/ ராம/ ராம/ ராரா/ ஸீதா/ ராம/
இராமா/ இராமா/ இராமா/ இராமா/ வாருமய்யா/ சீதா/ ராமா/
சரணம்
சரணம் 1
ஸந்ததம்பு3/ பத3முலனு/-அர்சிந்து/
எவ்வமயமும்/ திருவடிகளை/ தொழுவேன்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - மனஸுன - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்விடத்தில் 'மனஸுனு' என்ற சொல் பொருந்தும்.
Top
மேற்கோள்கள்
4 - நீவே நேனைன - நீயே நானாகிட - 'சாரூப்பியம்' எனப்படும் இறைவனின் உருப்பெறல் - "கஜேந்திரன் இறைவனால் தொடப்பெற்றமையால், அவ்வமயமே, தான் கட்டுப்பட்டவன் என்ற அறியாமையினின்று விடுபட்டதுடன், இறைவனுடை உருப்பெற்று, இறைவனுடய அங்க இலக்கணங்களாகிய, நான்கு கைகள் மற்றும் பீதாம்பரத்துடன் விளங்கினான்." பாகவத புராணம், 8-வது புத்தகம், 4-வது அத்தியாயம் (6-வது செய்யுள்).
சாலோக்கியம், சாமீப்பியம், சாரூப்பியம், சாயுச்சியம் எனும் முக்தியின் நான்கு நிலைகள் மற்றும் ஸேஷத்வம் மற்றும் தாஸத்வம் எனப்படும் வைணவ கோட்பாடுகளைக் குறித்து அறியவும்.
Top
விளக்கம்
1 - கட3ம - இத்தெலுங்கு சொல்லுக்கு 'தேவை' மற்றும் 'குறை' என்று பொருளாகும். ஆனால், இவ்விடத்தில், அடுத்துவரும் 'தூரத்தில் விட்டுவிடுவேன்' என்ற சொற்களை நோக்குகையில், 'கடமை' என்ற தமிழ்ச்சொல் பொருந்தும் எனத் தோன்றுகின்றது. கண்ணன் கீதையில் (அத்தியாயம் 18, செய்யுள் 66) மொழிந்ததனையும் நோக்கவும் -
"அனைத்து தர்மங்களையும் கைவிட்டு, என் ஒருவனையே புகலடைவாயாக; நான் உன்னை அனைத்து பாவங்களினின்றும் விடுவிக்கின்றேன்; கவலைப்படாதே."
ஆனால், பரம்பரையாக, தெலுங்கு சொல்லுக்குள்ள பொருளே புத்தகங்களில் கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. எனவே அங்ஙனமே இங்கும் மொழிபெயர்க்கப்பட்டது.
3 - தொட3லனனுது - தொட3லனு அனுது - தொடைகளைப் பிடித்துவிடுவேன். புத்தகங்களில் இங்ஙனமே பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஆயின் 'அனுது' என்ற சொல்லுக்கு அத்தகைய பொருள் இருப்பதாகத்தெரியவில்லை. தமிழ்ச்சொல் 'அமுக்கு'-வுக்கு ஈடான 'அணசு' என்ற தெலுங்கு சொல்லின் திரிபாக 'அனுது' இருக்கலாம் என கருதப்படுகின்றது.
5 - தாள ஜால ரட்டு - இழிவினைத் தாளவியாலாது - இதற்கு முன் வரும் சரணத்தில், சாருப்பிய நிலையைப் பற்றிக் கூறிவிட்டு, இந்த சரணத்தில் இங்ஙனம் கூறுவதனை நோக்குகையில், இதற்கு முன் சரணங்களில் கூறிய யாவும், இறைவனிடம் தியாகராஜருடைய வேண்டுகோட்களேயன்றி, அந்தந்த நிலைகளை எய்தியதாகக் கொள்ளவியலாது.
Top
இந்த கிருதி முழுவதும் 'நாரத பக்தி சூத்திர'ங்களில் 'காந்தாஸக்தி' எனப்படும் ஒரு மனைவி தன் கணவனிடம் எப்படிப்பட்ட தொண்டுள்ளம் உடையவளாக இருப்பாளோ அத்தகைய மனப்பாங்கினையே இறைவனிடம் கொண்டுள்ளதை விவரிப்பதாக உள்ளது. 11-வது சரணத்தில், 'எனது கைப்பற்றவாய்' (மணம்புரிவாய்) என்பதனையும் நோக்கவும்.
'இழிந்த புலன் நாட்டங்களை நான் மறப்பேன்' (சரணம் 6), 'விசிறியால் விசிறிக்கொண்டு உன்னை அழைப்பேன்' (சரணம் 7) மற்றும் 'மேனியை அளித்து, உனது தொடைகளைப் பிடித்துவிடுவேன்' (சரணம் 8) - இது குறித்து 'நாரத பக்தி சூத்திர'ங்களில் கூறப்படுவதாவது -
'ப்ரேம பக்தி' எனப்படும் 'இறைவனிடம் கொள்ளும் காதல் நிறைந்த பக்தி' என்பது காம இச்சையின் தன்மையதல்ல; ஏனென்றால், அது துறவு நிலையாகும் (சூத்திரம் 7); கோகுலத்தில், ஆய்ச்சியர் கண்ணனிடன் கொண்ட பக்தி, அத்தகையதே (சூத்திரம் 21); அந்த ஆய்ச்சியர், கண்ணனின் தெய்வீக நிலையை அறியாது, காதல் கொண்டிருந்தால், அத்தகைய காதல், ஒரு பெண், தனது ஆசை நாயகனிடம் கொள்ளும் காம இச்சைக்கே ஈடாகும் (சூத்திரம் 23); ஆசை நாயகனிடம், ஒரு பெண் கொள்ளும் உலகவியற் காதலில், தன்னுடைய இன்பத்தில், ஆசை நாயகனின் இன்பத்தினைப் பற்றிய எண்ணம் இருக்காது (சூத்திரம் 24) - ஸ்வாமி த்யாகீஸானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.
தியாகராஜர், 7-வது சரணத்தில், 'இழிந்த புலன் நாட்டங்களை மறப்பேன்' என்று கூறுகின்றார். எனவே, புலன் நாட்டங்களற்றுவிட்டால், அங்கு காமத்திற்கு இடமேது? அத்தகைய காதலை, உலகோரின் கண்ணோட்டத்தினைக் கொண்டு விவரிக்க இயலாது. ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் 'The Gospel of Sri Ramakrishna' என்ற புத்தகத்தில் (அத்தியாயம் 23) 'தெய்வீகக் காதல்' என்ன என்பதனைப் பற்றிய முழு விவரம் காணலாம்.
வீடிகை - தாம்பூலம்
Top