பல்லவி
ராம ராம ராம நாபை நீ த3ய
ராகயுண்ட3வச்சுனா ஓ ராம
சரணம்
சரணம் 1
தனயுனி ஏ 1ஜாதியைன ப்3ரோவனி
தல்லியு பு4வினி கலதா3 ஓ ராம (ராம)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ராம/ ராம/ ராம/ நாபை/ நீ/ த3ய/
இராமா/ இராமா/ இராமா/ என்மீது/ உனது/ தயை/
ராக/-உண்ட3வச்சுனா/ ஓ ராம/
வாராது/ இருக்கலாகுமா/ ஓ இராமா/
சரணம்
சரணம் 1
தனயுனி/ ஏ/ ஜாதியைன/ ப்3ரோவனி/
மகவை/ எந்த/ இனமாகிலும்/ காவாத/
தல்லியு/ பு4வினி/ கலதா3/ ஓ ராம/ (ராம)
தாய்/ புவியினில்/ உண்டா/ ஓ இராமா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - கலடா3 - க3லதா3.
5 - அனுப4விம்பகனு - அனுப4விஞ்சகனு.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - ஜாதி - இவ்விடத்தில் இச்சொல் இனத்தினைக் குறிக்கும்.
2 - தனகு தானு வஞ்சன - தனக்குத் தானே வஞ்சனை - 'ராமா, நான் உன்னவன்; என்னை நீ காவாதிருத்தல், உன்னை, நீயே வஞ்சனை செய்துகொள்வது போலாகும்' என்கிறார் தியாகராஜர்.
4 - ப்3ரஹ்ம நிஷ்டு2டை3ன - பிரமத்தில் நிலைத்திருப்போனாகிய - பிரமத்தினில் நிலைத்திருப்போனுக்கு, எத்தகைய மயக்கமும் இருப்பதற்கில்லை. அதனால், அவனுக்கு, ஏதும் வஞ்சனைகளும் கிடையாது. ஆனால், உலக ரீதியில், அவனுக்கு இடைஞ்சல்கள், அல்லல்கள் ஏற்படலாம். அவற்றினை, அவன் பொருட்படுத்தமாட்டான். எனவே, தியாகராஜர், 'ப்ரப3ல' (பெரும்) என்ற சொல்லினை இணைத்துள்ளார் என்று நான் கருதுகின்றேன். ஆயினும், தியாகராஜர், யாரை 'பிரமத்தில் நிலைத்திருப்போன்' என்று கூறுகின்றார்? மேலும், அவனுடைய நிலையினை, எங்ஙனம் இறைவனின் கருணையினைக் கோருதலுடன் இணைப்பது, என்று விளங்கவில்லை. 'பிரமத்தில் நிலைப்போன்' என்று தன்னைத் தானே கூறிக்கொள்கின்றாரா?
Top
6 - கனக தருணுலாஸ கலலைனனு லேனி - பொன், பெண்ணாசை கனவிலும் இல்லாத - இந்த சொற்களுக்கு, இரண்டுவிதமாகப் பொருள் கொள்ளலாம். 'பொன், பெண்ணாசை கனவிலும் இல்லாதவன் உண்டா?' என்றும், 'பொன், பெண்ணாசை இல்லாதவன் கனவிலும் உண்டா?' என்றும். இச்சொல் உள்ள இடத்தினைக் கருத்தினில் கொண்டு, இரண்டாவதாகக் கூறப்பட்டதே பொருந்தும்.
தியாகராஜர், தான் 'விழிப்பு நிலை'யில் யாவற்றினையும் துறந்தாலும், கனவினில், 'வாசனை'கள் எனப்படும் சுவையுணர்ச்சியினால் அத்தகைய ஆசைகள் ஏற்படுவதனைத் தவிர்க்க இயலாது என்று கூறுவதாகப் பொருள் கொள்ளலாம்.
மாறாக, 'தானும் ஒரு சமுசாரியே, தனக்கும் அத்தகைய ஆசைகள் உண்டு' என்று கூறுவதாகப் பொருள் கொள்ளலாம். ஆயினும், தியாகராஜர் பல கீர்த்தனைகளில், தனக்கு உலகத்தினில், எந்த ஆசைகளும் இல்லை என்று திட்டவட்டமாகக் கூறுகின்றார். 'வத்3த3னேவாரு' என்ற ஷண்முகப்ரியா ராக கீர்த்தனையினை நோக்கவும்.
Top
தியாகராஜரின் கீர்த்தனைகள் பெரும்பாலானவை, அவர், ராமனுடன் நடத்தும், ஒருதலை உரையாடலேயாகும் (monologue). இத்தகைய உரையாடலை அவர் தன் வாழ்நாள் முழுதும் நடத்தியிருப்பதாக அவருடைய கீர்த்தனைகளினின்று விளங்குகின்றது. எனவே, இந்த கீர்த்தனை அவருடைய வாழக்கையின் ஒர் படியாக (evolutionary step) கொள்ளலாம்.
மாறாக, பக்தி நெறியில், 'தன்னைத் தானே இகழ்தல்' (ஆத்ம க3ர்ஹண) என்ற முறையும் உண்டு. அதன்படி, தொண்டன், தன்னைத் தானே இழிவாக உணர்ந்து, இறைவன் தன்னைக் கைத்தூக்கி விடுவோனாகக் கருதி, வேண்டுதல் வழக்கம். அந்த முறையினைச் சேர்ந்ததாகவும் கொள்ளலாம்.
Top
ஆதி சங்கரர், தமது சிவானந்த லஹரியில் (20-வது செய்யுள்) கூறுவது -
"எவ்வமயும், மையலெனும் அடவியினில், கன்னியரின் முலை முகடுகளில் உலவும்,
ஆசையெனும் கிளைகளினில் தாவிக் கொண்டும், அங்குமிங்கும் திரிந்துகொண்டும்,
மிக்கு சபலமுடைத்த, எனது இதயமெனும் குரங்கினை, ஏ கபாலி! இரந்துண்போனே!
உறுதியாக, பக்தியினால் கட்டி, ஓ சிவனே! உன்னுடைய ஆளுகையில் கொணர்வாய்."
(ஸ்வாமி தபஸ்யானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
Top
ஆதி சங்கரர், இந்த கீர்த்தனையில் கூறப்பட்ட, 'பிரமத்தினில் நிலைத்திருப்பவர்'. அவருக்கு இத்தகைய மையல் இருப்பதற்கில்லை. ஆயினும், அத்தகைய பெரியோர், தமது தொண்டர்கள் மற்றும் பாமர மக்களின் மன நிலையினை உணர்ந்து, அவர்களுக்காக, தம்மை அந்நி்லைகளில் இருத்தி, இத்தகைய தோத்திரங்களை இயற்றியுள்ளனர். எனவே, 'பொன், பெண்ணாசை' என்ற இந்த கீர்த்தனைச் சொற்களையும் அந்த வகையினில் கொள்ளலாம்.
தப்புவோர் - தள்ளுவோர் எனவும் கொள்ளலாம்
சமுசாரி - உலகோர்
Top