பல்லவி
பத3வி நீ 1ஸத்3ப4க்தியு கல்கு3டே
அனுபல்லவி
சதி3வி வேத3 ஸா1ஸ்த்ரோபனிஷத்துல
2ஸத்த தெலிய லேனிதி3 பத3வியா (ப)
சரணம்
சரணம் 1
த4ன தா3ர ஸுதாகா3ர ஸம்பத3லு
த4ரணீஸு1ல செலிமியொக பத3வியா (ப)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
பத3வி/ நீ/ ஸத்3-/ப4க்தியு/ கல்கு3டே/
பதவி/ உனது/ தூய/ பற்று/ உண்டாகுதலே/
அனுபல்லவி
சதி3வி/ வேத3/ ஸா1ஸ்த்ர/-உபநிஷத்துல/
கல்வி கற்று/ மறைகள்/ சாத்திரங்கள்/ உபநிடதங்களின்/
ஸத்த/ தெலிய லேனிதி3/ பத3வியா/ (ப)
உண்மை/ அறியாமை/ பதவியா/
சரணம்
சரணம் 1
த4ன/ தா3ர/ ஸுத/-ஆகா3ர/ ஸம்பத3லு/
செல்வம்/ மனைவி/ மகன் (மக்கள்)/ வீடு/ ஆகிய சம்பத்துக்கள்/
த4ரணீ/-ஈஸு1ல/ செலிமி/-ஒக/ பத3வியா/ (ப)
புவி/ ஆள்வோரின்/ நட்பு/ - ஒரு/ பதவியா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
3 - ஜப தபாதி3 - யம, நியம, ஆஸன, ப்ராணாயாம, ப்ரத்யாஹார, தா4ரண, த்4யான, ஸமாதி4 எனப்படும் அஷ்டாங்க (எட்டு) யோக நிலைகளின் அங்கங்கள். பதஞ்சலி யோக சூத்திரங்கள் - அத்தியாயம் 2 - 'பழகு முறைகள்' நோக்கவும்.
4 - அணிமாதி3 ஸித்3து4ல - சித்திகள் - அணிமா, லகி3மா, ப்ராப்தி, ப்ராகாம்ய, மஹிமா, ஈஸி1த, வஸி1த, காமாவஸ்1யதா - என வடமொழி அகராதியிலும், அணிமா, கரிமா, லகிமா, ப்ராப்தி, ப்ராகாம்ய, ஈஸித, வஸித - என்று தமிழ் 'பிங்கள நிகண்டி'லும் கொடுக்கப்பட்டுள்ளது.
உத்தவ கீதை எனப்படும் பாகவத புராணம், புத்தகம் 11, அத்தியாயம் 15-ல் 8 முக்கிய சித்திகளும், 10 சில்லரை சித்திகளும் விவரிக்கப்பட்டுள்ளன.
பதஞ்சலி யோக சூத்திரங்கள் - அத்தியாயம் 3 - 'சக்திகள்' நோக்கவும்.
Top
விளக்கம்
1 - ஸத்3ப4க்தியு - 'யு' என்ற விகுதிக்கு 'உடன்' என்று பொருளாகும். அதாவது 'தூய பற்றும் உண்டாகுதலே' என. ஆயின், சரணம் 1-ல் மட்டுமே இத்தகைய பொருள் பொருந்தும் - அதவாது, 'இல்லறத்திலுள்ளவன் இறைப்பற்றும் கொண்டிருத்தல்'. அனுபல்லவியிலும் மற்ற சரணங்களிலும் கொடுக்கப்பட்டவைகள் இறைப்பற்றுக்கு முரண்பாடானது. எனவே, 'தூய பற்று உண்டாகுதலே' என்று மொழிபெயர்க்கப்பட்டது.
2 - ஸத்த - இச்சொல் வடமொழிச் சொல் 'ஸத்' என்பதன் தெலுங்கு திரிபாகும். இது மறை பகரும் 'ஏகம் ஸத்' - அதாவது 'சச்சிதானந்தம்' (சத்-சித்-ஆனந்தம்) எனப்படும் பரம்பொருளின் இலக்கணத்தில், 'சத்'தினைக் குறிக்கும். பொதுவாக இதனை 'உண்மை'யென மொழி பெயர்க்கப்படும். ஆனால் கடைசி சரணத்தினில் தியாகராஜர் குறிப்படும் 'ராமனின் தத்துவம்' இந்த 'சத்'தினைத்தான் சுட்டும். கீழ்க்கண்ட விளக்கத்தினையும் நோக்கவும்.
5 - ஸ்ரீ ராமுனி தத்வமு - தியாகராஜர் ராமனை பரம்பொருளாக வழிபட்டார். ஆனால் அவர் மனதுக்குகந்த பரம்பொருளின் வடிவம் - இஷ்ட தெய்வம் - ராமனாகும். அவருடைய 'ஸ்1யாம ஸுந்தராங்க1' மற்றும் 'எவரனி நிர்ணயிஞ்சிரிரா' என்ற கிருதிகளை நோக்கவும்.
Top