பல்லவி
ஓ ரங்க3 1ஸா1யி 2பிலிசிதே
ஓயனுசு ரா ராதா3
அனுபல்லவி
3ஸாரங்க3 த4ருடு3 4ஜூசி
கைலாஸாதி4புடு3 கா லேதா3 (ஓ)
சரணம்
பூ4-லோக வைகுண்ட2மிதி3யனி
நீ லோன நீவேயுப்பொங்கி3
5ஸ்ரீ லோலுடை3யுண்டே மா
சிந்த தீரேதெ3ன்னடோ3
மேலோர்வ லேனி ஜனுலலோ நே
மிகு3ல நொகி3லி தி3வ்ய ரூபமுனு
முத்யால ஸருலயுரமுனு கான
வச்சிதி த்யாக3ராஜ ஹ்ரு2த்3பூ4ஷண (ஓ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஓ/ ரங்க3/ ஸா1யி/ பிலிசிதே/
ஓ/ திருவரங்கத்தில்/ பள்ளிகொண்டோனே/ அழைத்தால்/
ஓ/-அனுசு/ ரா ராதா3/
'ஓ'/ யென/ வரலாகாதா/
அனுபல்லவி
ஸாரங்க3/ த4ருடு3/ ஜூசி/
சாரங்கம்/ ஏந்துவோன்/ (உன்னைக்) கண்டு/
கைலாஸ/-அதி4புடு3/ கா லேதா3/ (ஓ)
கைலாய/ பதி/ ஆகினானன்றோ/
சரணம்
பூ4-லோக/ வைகுண்ட2மு/-இதி3/-அனி/
பூலோக/ வைகுண்டம்/ இஃது/ என/
நீ லோன/ நீவே/-உப்பொங்கி3/
உன்னுள்/ நீயே/ பெருமிதமுற்று/
ஸ்ரீ/ லோலுடை3/-உண்டே/ மா/
இலக்குமியுடன்/ குலவிக்கொண்டு/ இருந்தால்/ எமது/
சிந்த/ தீரேதி3/-என்னடோ3/
கவலைகள்/ தீருவது/ என்றோ/
மேலு/-ஓர்வ லேனி/ ஜனுலலோ/ நே/
(பிறரின்)மேன்மை/ சகிக்காத/ மனிதர்களிடை/ நான்/
மிகு3ல/ நொகி3லி/ தி3வ்ய/ ரூபமுனு/
மிக்கு/ துயருற்று/ (உனது) திவ்விய/ உருவத்தினை/
முத்யால/ ஸருல/-உரமுனு/ கான/
முத்து/ சரங்கள்/ (விளங்கும்) திருமார்பினை/ காண/
வச்சிதி/ த்யாக3ராஜ/ ஹ்ரு2த்3/-பூ4ஷண/ (ஓ)
வந்தேன்/ தியாகராசனின்/ இதய/ அணிகலனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸா1யி - ஸா1யீ
2 - பிலிசிதே - பிலசிதே
Top
மேற்கோள்கள்
3 - ஸாரங்க3 த4ருடு3 - சாரங்கம் - மான்;
சாரங்கமேந்துவோன் - சிவன் : தாருகாவனத்தில் பி3க்ஷாடனராக (பிச்சைக்காரனாக) சிவன் சென்று, அங்கு, கடவுளை நம்பாத இருடிகளுக்கு பாடம் புகட்டி, அவ்விருடிகள் ஏவிய மான் ஆகியவற்றினை தன்னுடைய அலங்காரப் பொருள்களாக ஏற்றுக்கொண்டான். இதுகுறித்து இந்த web site-களில் காணவும். பிக்ஷாடனர் மற்றும் சிவனின் திருவிளையாடல்கள் - (pdf download)
ஸாரங்கம் (மான்) - 'ஸா1ர்ங்கம்' என விஷ்ணுவின் வில்லுக்கும் பெயராகும். அதனால் 'ஸா1ர்ங்கபாணி' என விஷ்ணுவுக்குப் பெயர்.
திருவரங்கப் பெருமானைப் பற்றிய விவரங்கள் மற்றும் இந்த கீர்த்தனை தியாகராஜர் பாடிய அமயத்தினைக் குறித்தும் அறிய திருவரங்கம் தல புராணம் நோக்கவும்
ஆதி சங்கரரின் ரங்கநாத அஷ்டகம்
Top
விளக்கம்
4 - ஜூசி கைலாஸாதி4புடு3 கா லேதா3 - கண்டு கயிலாய பதி ஆகினானன்றோ - இந்த சம்பவத்தினைக் குறித்த விவரங்கள் தெரியவில்லை.
5 - ஸ்ரீ லோலுடை3யுண்டே - இலக்குமியுடன் குலவிக்கொண்டிருந்தால் - தியாகராஜர், அரங்கநாதன் 'தொண்டர்களைப் பேணும் தொழிலையும் மறந்துள்ளான்' என கேலி செய்கின்றார்.
Top