Notation Scheme

ஓ ராம ராம ஸர்வோன்னத - ராகம் நாக3 கா3ந்தா4ரி - O rAma rAma sarvOnnata - rAga nAga gAndhAri

English Version
Language Version

பல்லவி
ஓ ராம ராம ஸர்வோன்னத நீகிபுடோ3ர-
வஞ்சனயேலரா க்4ரு2ணா-கர

சரணம்
சரணம் 1
1வேத3 ஸி1முலெல்லனாத3ரணதோ
நீவே தை3வமனி நம்மக3 நம்மிதி (ஓ)

சரணம் 2
2பெத்33லைன வாரியொத்33னே ஸத்யமு
கத்33னி நம்மிதினி ஸம்மதினி (ஓ)

சரணம் 3
3ந்து4 ரத்னமா த3யா ஸிந்து4 நீவனி ஸத்ய-
ஸந்து43வனுகொண்டினி ரம்மண்டினி (ஓ)

சரணம் 4
4ரது சர்ய 3ஸஹ சருனிதோ நிண்டா3
கரகு3சு பலிகிதிவே காசிதிவே (ஓ)

சரணம் 5
ஸதி மாடலு ஸதா3 4கபிஜுசே வினி
ஸம்மதினி கௌகி3லிஞ்சின ஸு1பா4னன (ஓ)

சரணம் 6
முனு ப4க்த கோடுலு கொனியாட3 நீவு
வாரல ப்3ரோசினதி3 லேதா3 மரியாதா3 (ஓ)

சரணம் 7
ஈ ஜக3தினி 5த்யாக3ராஜுனி ப்3ரோசுடகீ
ஜாலமிக தாளனுனீ வேளனு (ஓ)


பொருள் - சுருக்கம்
ஓ ராமா! யாவரிலுமுயர்ந்தோனே! கருணாகரா! தலை சிறந்த சுற்றமே! மங்கல வதனத்தோனே!

  • உனக்கு, இவ்வமயம், ஓரவஞ்சனை யேனய்யா?
  • உபநிடதங்கள் யாவும், பணிவுடனே, நீயே கடவுளென நம்ப, (நானும்) நம்பினேன்;
  • சான்றோரிடமே மெய்ம்மை உண்டென, முழுமனதுடன் நம்பினேன்;
  • கருணைக்கடல் நீயென, சொல் தவறாதவனெனக் கொண்டேன்; உன்னையழைத்தேன்;
  • பரதனின் நடத்தையினை, உனதுடனுறையிடம், நிரம்ப மனம்) உருகிப் பகர்ந்தாய்; அவனைக் காத்தாய்;
  • மனைவியின் சொற்களை, அனுமனிடம் கேட்டு, நிறைமனதுடன் (அவனை) அணைத்துக்கொண்டாய்;
  • முன்பு, உயர் தொண்டர்களுன்னைப் புகழ, நீ அவரைக் காத்தனை; இப்போது, நீ என்னைக் காவாதிருத்தல் முறையன்று
  • இவ்வுலகத்தினில், தியாகராசனைக் காப்பதில், இந்த தாமதத்தினை யினியும் தாளேன், இவ்வேளை.

  • பதம் பிரித்தல் - பொருள்
    பல்லவி
    ஓ/ ராம/ ராம/ ஸர்வ/-உன்னத/ நீகு/-இபுடு3/-
    ஓ/ ராமா/ ராமா/ யாவரிலும்/ உயர்ந்தோனே/ உனக்கு/ இவ்வமயம்/

    ஓர-வஞ்சன/-ஏலரா/ க்4ரு2ணா-கர/
    ஓரவஞ்சனை/ ஏனய்யா/ கருணாகரனே/


    சரணம்
    சரணம் 1
    வேத3/ ஸி1ரமுலு/-எல்ல/-ஆத3ரணதோ/
    மறை/ முடிகள்/ யாவும்/ பணிவுடனே/

    நீவே/ தை3வமு/-அனி/ நம்மக3/ நம்மிதி/
    நீயே/ கடவுள்/ என/ நம்ப/ (நானும்) நம்பினேன்/


    சரணம் 2
    பெத்33லைன வாரி-ஒத்33னே/ ஸத்யமு/
    சான்றோரிடமே/ மெய்ம்மை/

    கத்3து3/-அனி/ நம்மிதினி/ ஸம்மதினி/
    உண்டு/ என/ நம்பினேன்/ முழுமனதுடன்/
    சரணம் 3
    3ந்து4/ ரத்னமா/ த3யா/ ஸிந்து4/ நீவு/-அனி/
    சுற்றமே/ தலை சிறந்த/ கருணை/ கடல்/ நீ/ என/

    ஸத்ய-ஸந்து43வு/-அனுகொண்டினி/ ரம்மண்டினி/
    சொல் தவறாதவன்/ எனக்கொண்டேன்/ (உன்னை)யழைத்தேன்/
    சரணம் 4
    4ரது/ சர்ய/ ஸஹ/ சருனிதோ/ நிண்டா3ர/
    பரதனின்/ நடத்தையினை/ (உனது) உடன்/ உறையிடம்/ நிரம்ப/

    கரகு3சு/ பலிகிதிவே/ காசிதிவே/
    (மனம்) உருகி/ பகர்ந்தாயன்றோ/ காத்தாயன்றோ/
    சரணம் 5
    ஸதி/ மாடலு/ ஸதா3/ கபிஜுசே/ வினி/
    மனைவியின்/ சொற்களை/ எவ்வமயமும்/ அனுமனிடம்/ கேட்டு/

    ஸம்மதினி/ கௌகி3லிஞ்சின/ ஸு14/-ஆனன/
    நிறைமனதுடன்/ (அவனை) அணைத்துக்கொண்ட/ மங்கல/ வதனத்தோனே/
    சரணம் 6
    முனு/ ப4க்த/ கோடுலு/ கொனியாட3/ நீவு/
    முன்பு/ தொண்டர்களில்/ உயர்ந்தோர்/ (உன்னை) புகழ/ நீ/

    வாரல/ ப்3ரோசினதி3/ லேதா3/ மரியாதா3/
    அவரை/ காத்தது/ இல்லையா/ (இப்போது நீ செய்வது) முறையாமோ/
    சரணம் 7
    ஈ ஜக3தினி/ த்யாக3ராஜுனி/ ப்3ரோசுடகு/-
    இவ்வுலகத்தினில்/ தியாகராசனை/ காப்பதற்கு/

    ஈ/ ஜாலமு/-இக/ தாளனு/-ஈ வேளனு/
    இந்த/ தாமதத்தினை/ இனியும்/ தாளேன்/ இப்போழ்து/


    குறிப்புக்கள் - (Notes)
    வேறுபாடுகள் - (Pathanthara)
    4கபிஜுசே - கபி ஜூசே : 'கபி ஜூசே' என்பது தவறாகும்

    மேற்கோள்கள்
    1வேத3 ஸி1ரமு - மறை முடி - உபநிடதங்களைக் குறிக்கும். இதுபற்றி காஞ்சி மஹாஸ்வாமிகளின் உரை நோக்கவும்

    4கபிஜு - அனுமன் அஞ்சனைக்கும் கேஸரி என்னும் குரங்குக்கும் பிறந்தவன் - அனுமன் குறித்த சில விவரங்கள் நோக்கவும்
    Top

    விளக்கம்
    இப்பாடல் பிரகலாத பக்தி விஜயம் எனும் நாட்டிய நாடகத்தில் பிரகலாதன் பாடுவதாக.

    2பெத்33லைன வாரி - நாரத முனிவரைக் குறிக்கும். ஏனெனில், பிரகலாதன் தனது தாயின் கர்ப்பத்தினில் இருந்தபோதே அவர் அவனுக்கு உபதேசித்தார்.

    3ஸஹ சருனிதோ - லக்ஷ்மணனைக் குறிக்கும். பரதனைக் குறித்து லக்ஷமணனிடம் ராமன் புகழ்ந்துரைப்பதைப் பற்றி வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம், அத்தியாயம் 97-ல் நோக்கவும்.

    5த்யாக3ராஜுனி - இப்பாடல் பிரகலாதன் பாடுவதானாலும், தியாகராஜரே பிரகலாதனாக மாறி தன்னைக் காக்க வேண்டுவது அவருடைய மனேபாவனையை விளக்குகின்றது. இந்நிலையினைத்தான் பல கீர்த்தனைகளில் 'பா4விஞ்சு' என்று தியாகராஜர் கூறுகின்றார்.

    ஓரவஞ்சனை - ஓரம்பேசல்

    மறை முடிகள் - உபநிடதங்கள்

    சான்றோர் - நாரதரைக் குறிக்கும்

    சான்றோரிடமே - சான்றோர் பகரும் சொற்களில்

    உடனுறை - இலக்குவன்

    காத்தாயன்றோ - பரதனைக்குறிக்கும்

    Top