பல்லவி
முன்னு ராவண பா3த4னோர்வக
விபீ4ஷணுடு3 மொர பெட்டக3 ராமசந்த்3ர
அனுபல்லவி
1மன்னிந்துனனுசு 2குல பி3ருது3லனு பொக3டி3ன
மாடல மரசிதிவோ ஸ்ரீ ராமசந்த்3ர (மு)
சரணம்
சரணம் 1
முனு 3வஜ்ர பா3த4லனோர்வ ஜாலகனு
இனஜுண்டு3 நினு ராமசந்த்3ர
கொனியாட3 பரிதாபமுனு ஜூசி
வானி மதி3 கொத3வ தீர்சின ராமசந்த்3ர (மு)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
முன்னு/ ராவண/ பா3த4னு/-ஓர்வக/
முன்னம்/ இராவணின்/ தொல்லையை/ தாளாது/
விபீ4ஷணுடு3/ மொர பெட்டக3/ ராமசந்த்3ர/
விபீடணன்/ முறையிட/ இராமசந்திரா/
அனுபல்லவி
மன்னிந்துனு/-அனுசு/ குல/ பி3ருது3லனு/ பொக3டி3ன/
(அவனை) மதிப்பேன்/ என/ (உனது) குல/ விருதுகளை/ புகழ்ந்த/
மாடல/ மரசிதிவோ/ ஸ்ரீ ராமசந்த்3ர/ (மு)
சொற்களை/ மறந்தனையோ/ ஸ்ரீ ராமசந்திரா/
சரணம்
சரணம் 1
முனு/ வஜ்ர/ பா3த4லனு/-ஓர்வ/ ஜாலகனு/
முன்னம்/ வாலியின்/ தொல்லைகளை/ தாள/ இயலாது/
இனஜுண்டு3/ நினு/ ராமசந்த்3ர/
பரிதி/ மைந்தன்/ உன்னை/ இராமசந்திரா/
கொனியாட3/ பரிதாபமுனு/ ஜூசி/
கொண்டாட/ (அவனது) பரிதாபத்தினை/ கண்டு/
வானி/ மதி3/ கொத3வ/ தீர்சின/ ராமசந்த்3ர/ (மு)
அவனது/ மன/ குறையினை/ தீர்த்த/ இராமசந்திரா/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
6 - வந்தி3த ராமசந்த்3ர - 6வந்தி3த ஸ்ரீ ராமசந்த்3ர.
Top
மேற்கோள்கள்
2 - குல பி3ருது3லனு பொக3டி3ன - குல விருதுகளைப் புகழ்ந்த. விபீடணனுக்கு அடைக்கலம் அளிக்கையில், இராமன், 'கண்வ ரிஷி'யின் புதல்வரான 'கண்டு ரிஷி'யின், கீழ்க்கண்ட சொற்களை, மேற்கோள் காட்டி, அதுதான் தனது குலத்தின் கோட்பாடு என்று உரைத்தான். வால்மீகி ராமாயணம் யுத்த காண்டம் (18-வது அத்தியாயம், செய்யுட்கள் 27-32) நோக்கவும்.
Top
விளக்கம்
பல்லவிக்கு, தனிப்பட, பொருள் கொள்ள இயலாது; அனுபல்லவியுடன் இணைத்தே பொருள் கொள்ள இயலும். எனவே, பல்லவி, அனுபல்லவி என தனித்தனியாகக் கொடுக்கப்பட்டிருப்பது தவறென்று நான் கருதுகின்றேன்.
1 - மன்னிந்துனு - இந்த தெலுங்கு சொல்லுக்கு 'மன்னித்தல்', 'மதித்தல்' என்று பொருள்களுண்டு. பொதுவாக, இச்சொல் 'மன்னித்தல்' என்ற பொருளிலேயே வழங்கும். ஆனால், இவ்விடத்தில் அத்தகைய பொருள் பொருந்தாது. ஏனென்றால், விபீடணனை, இராமன் மன்னிக்குமளவுக்கு, அவன் தவறு ஏதும் இழைக்கவில்லை. எனவே, இச்சொல்லுக்கு 'மதிப்பேன்' என்று பொருள் கொள்ளப்பட்டது.
Top
3 - வஜ்ர - இவ்விடத்தில், இச்சொல், 'வாலி'யைக் குறிக்கும். ஆனால், இச்சொல்லுக்கு அத்தகைய பொருளேதும் இல்லை. இந்திரனின் ஆயுதமாகக் கருதப்படும் 'இடி', 'வஜ்ரம்' எனப்படும். இச்சொல்லுக்கு, 'பிளக்கமுடியாத அளவுக்குக் கடினமானது' என்றும் பொருளுண்டு. வாலியின் மார்பு, பிளக்கமுடியாதது எனப்படும். எனவே, அத்தகைய பொருளில், தியாகராஜர் இச்சொல்லினைப் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது கீர்த்தனையில் தவறு ஏதும் இருக்கலாம்.
4 - முர ஹரி - 'ஹரி' என்ற சொல், அரியினைக் குறிக்கும். அரி (கண்ணன்), 'முரன்' என்னும் அரக்கனை வதைத்ததனால் 'முரஹர' என்றும், 'முராரி' என்றும் அழைக்கப்படுவான். ஆனால், 'முர ஹரி' என்று கொடுக்கப்பட்டிருப்பதனால், 'ஹரி' என்ற சொல்லுக்கு, இவ்விடத்தில், (முரனை) 'வதைத்தவன்' என்று பொருளாகும்.
குல விருதுகள் - குலத்தின் கோட்பாடுகள்
பரிதி மைந்தன் - சுக்கிரீவன்
முரனை வதைத்தவன் - அரி
Top