Notation Scheme

மரியாத3 காது3ரா - ராகம் ஸ1ங்கராப4ரணம் - mariyAda kAdurA - rAga SankarAbharaNaM

English Version
Language Version

பல்லவி
மரியாத3 காது3ரா

அனுபல்லவி
கருணாகர வாரினி வீரினி
ஸரி ஜேஸி சூசுசுண்டு3னதி3 (ம)

சரணம்
ராக3மு தாளமு ரக்தி ப4க்தி ஞான
யோக3மு 1மரியனுராக3மு லேனி
2பா43வதுலுத3ர ஸ1யனுலே கானி
த்யாக3ராஜார்சித தாரக சரித (ம)


பொருள் - சுருக்கம்
கருணாகரா! தியாகராசன் தொழும், கடத்துவிக்கும் சரிதத்தோனே!

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மரியாத3/ காது3ரா/
மரியாதை/ அன்றய்யா/


அனுபல்லவி
கருணாகர/ வாரினி/ வீரினி/
கருணாகரா/ அவர்களையும்/ இவர்களையும்/

ஸரி/ ஜேஸி/ சூசுசு/-உண்டு3னதி3/ (ம)
சரி/ செய்து/ நோக்கிக்கொண்டு/-இருத்தல்/ மரியாதை...


சரணம்
ராக3மு/ தாளமு/ ரக்தி/ ப4க்தி/ ஞான/
இராகம்/ தாளம்/ கனிந்த/ பக்தி (கூடிய)/ ஞான/

யோக3மு/ மரி/-அனுராக3மு/ லேனி/
யோகம்/ மேலும்/ அனுராகம்/ (இவை) அற்ற/

பா43வதுலு/-உத3ர/ ஸ1யனுலே/ கானி/
பாகவதர்கள்/ உதரத்தினில்/ உறங்குபவர்களே/ அன்றோ/

த்யாக3ராஜ/-அர்சித/ தாரக/ சரித/ (ம)
தியாகராசன்/ தொழும்/ கடத்துவிக்கும்/ சரிதத்தோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்

விளக்கம்
1 - அனுராக3மு - அனுராகம் - இறைவனிடம் இச்சைகளற்ற ஆழ்ந்த காதல். தியாகராஜர் தனது 'அனுராக3மு லேனி மனஸு' என்ற கீர்த்தனையில், இறைவனிடம் அனுராகம் ஏற்படாவிட்டால், மெய்யறிவு பெற முடியாது, என்கிறார்.

2 - உத3ர ஸ1யனுலே - உதரத்தினில் உறங்குதல் - மறுபடியும் தாய் வயிற்றினில் பிறத்தல். ஆதி சங்கரர் இயற்றிய 'ப4ஜ கோ3விந்த3ம்' என்ற பக்தி நூலில் 'புனரபி ஜனனம்' என்ற செய்யுளை நோக்கவும் -

மறுபடியும் பிறப்பு; மறுபடியும் இறப்பு;
மறுபடியும் தாயின் வயிற்றல் உறக்கம்;
இச்சமுசாரம் கடப்பதற்கு மிக்கரியது;
ஓ முராரி! அளவற்ற உனது கிருபையினால் காப்பாய் (என்னை).

ஞான யோகம் - கண்ணன் கீதையில் பகன்ற, இறைவனை அடையும், அறிவு நெறி
கடத்துவிக்கும் - பிறவிக்கடலைக் கடத்துவித்தல்
Top