பல்லவி
1லாலி லாலய்ய லாலி
அனுபல்லவி
லாலி கு3ண ஸா1லி 2வன மாலி ஸு-ஹ்ரு2த3யன
லாலி ம்ரு2து3-தர 3ஹம்ஸ தூலிகா ஸ1யன (லாலி)
சரணம்
சரணம் 1
இன வம்ஸ1மந்து3 ஜனியிஞ்சின க4னாப4
கனக மய சேல தி3னகர கோடி ஸோ1ப4
வனஜ 4நயனாக்ரூர வரதா3ப்3ஜ நாப4
ஸனகாதி3 நுத ஸகல ஸத்3ப4க்த ஸுலப4 (லாலி)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
லாலி/ லாலய்ய/ லாலி/
தாலேலோ/ கண்ணுறங்கய்யா/ தாலேலோ/
அனுபல்லவி
லாலி/ கு3ண-ஸா1லி/ வன-மாலி/ ஸு-ஹ்ரு2த3யன/
தாலேலோ/ நற்பண்புகளோனே/ வனமாலி/ நல்லிதயத்தோனே/
லாலி/ ம்ரு2து3-தர/ ஹம்ஸ/ தூலிகா/ ஸ1யன/ (லாலி)
தாலேலோ/ மென்மையான/ அன்ன/ தூவியில்/ பள்ளிகொள்வோனே/
சரணம்
சரணம் 1
இன/ வம்ஸ1மு-அந்து3/ ஜனியிஞ்சின/ க4ன/-ஆப4/
பரிதி/ குலத்தினில்/ பிறந்த/ முகில்/ வண்ணா/
கனக/ மய/ சேல/ தி3னகர/ கோடி/ ஸோ1ப4/
பொன்/ மயமான/ ஆடைகளோனே/ பரிதி/ கோடி/ ஒளியோனே/
வனஜ/ நயன/-அக்ரூர/ வரத3/-அப்3ஜ/ நாப4/
கமல/ கண்ணா/ அக்குரூரருக்கு/ அருள்வோனே/ கமல/ உந்தியோனே/
ஸனக-ஆதி3/ நுத/ ஸகல/ ஸத்3-ப4க்த/ ஸுலப4/ (லாலி)
சனகாதியரால்/ போற்றப்பெற்றோனே/ அனைத்து/ நற்றொண்டருக்கு/ எளியோனே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - லாலி லாலய்ய லாலி - லாலி லாலய்ய லாலி (ராமய்ய)
6 - புட3மி வருட3 - புட3மி வரத3 : 'புட3மி வருட3' சரியாகும்.
8 - நீகதி3 - நீகிதி3
9 - பரிசினானு - பரிசானு : 'பரிசினானு' சரியாகும்
14 - மரவனு பொய்யெத3வு - மரவக பொய்யேவு : 'மரவனு பொய்யெத3வு' என்பதற்கு 'என்னை மறக்கப் போகின்றாய்!' என்று பொருள் - அதாவது 'என்னை மறந்துவிடாதே' என. 'மரவக பொய்யேவு' என்பதற்கு அதற்கு எதிரான பொருளாகும். எனவே 'மரவக பொய்யேவு' தவறாகும்
Top
மேற்கோள்கள்
2 - வன மாலி - விஷ்ணு அணியும் துளசி, மல்லிகை, மந்தாரை, பாரிஜாதம் மற்றும் தாமரை மலர்களால் தொடுக்கப்பட்ட 'வைஜயந்தி மாலை' வனமாலை எனப்படும்.
4 - அக்ரூர வரத - அக்குரூரர் - கண்ணனை மதுரைக்கழைத்துச் சென்றவர் - பாகவத புராணம், 10-வது புத்தகம், அத்தியாயம் 40 நோக்கவும்.
Top
5 - க2ர ஸி1ரோ-ஹரண - கரன் - சூர்ப்பணகையின் சோதரன் - வால்மீகி ராமாயணம், ஆரண்ய காண்டம், அத்தியாயம் 30 நோக்கவும்.
11 - அஸமான கி3ரி மத்4ய குஸுமமுலு - நிகரற்ற மலை - மேரு மலை - நிகரற்ற மலை நடு மலர் - பாரிஜாத மலர் - பாரிஜாத மரம் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றியது. தேவி பாகவதம், புத்தகம் 12, அத்தியாயம் 10-ல் இம்மரம், 'மணித்3வீபம்' எனும் தீவின் நடுவிலிருப்பதாக கூறப்படுகின்றது.
பிரமாண்ட புராணம், லலிதோபாக்யானத்தின்படி , ஸ்ரீபுரம், மேரு மலையின் நடுவிலிருப்பதாகவும், பாரிஜாத மரம், ஸ்ரீபுரத்தின் 7-வது கோட்டையில் இருப்பதாகவும் கூறப்படும்.
Top
விளக்கம்
3 - ஹம்ஸ தூலிகா - அன்னத்தூவி - அன்னப்பறவையின் இறகுகளாலான மெத்தை - இலவம் பஞ்சினாலான மெத்தையினையும் 'ஹம்ஸ தூலிகா' என்று கூறுவதுண்டு.
7 - கட3 கண்டி சூபு - கடைக்கண் பார்வை. இறைவனின் கடைக்கண் பார்வை 'அருள் செய்தல்' எனப்படும். தியாகராஜர், 'ராம ராம ராமசந்த்3ர' என்ற 'க4ண்டா' ராக கிருதியில், 'எல்லோர் முன்னிலையிலும் உன்னைக் கைப்பிடித்த பின்னர், கடைக்கண்ணால் கண்டால் என்னவுள்ளது தரம்?' என்கின்றார். அதாவது, அவர், கடைக்கண் பார்வையினாலும் நி்றைவுறவில்லை. இறைவன், தன்னை நேருக்கு நேர் காண வேண்டுகின்றார்.
Top
10 - பாத3 யுக3மு பட்டெத3னு - உறங்குமுன் பாதங்களைப் பிடித்துவிடுவதல் ஆயுர்வேத வைத்திய முறையினில் 'பத3ப்4யங்க3ம்' எனப்படும்.
12 - ப்3ரு2ந்த3 கோடி - கோடி - 100 லட்சங்களாகும் (10^7); 'ப்3ரு2ந்த3' அல்லது 'வ்ரு2ந்த3' - 1000 கோடிகள் (அல்லது 10 கோடிகள்) எனப்படும் (10^11 அல்லது 10^9); எனவே 'ப்3ரு2ந்த3 கோடி' - 10^18 அல்லது 10^16 - ஆகும்.
13 - ஸேவலோ ப3ட3லியுன்னாவு - பாகவதர்களின் சேவையினில் - இறைவன் தொண்டர்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டதனால் களைத்ததாக
சனகாதியர் - சனகர், சனந்தனர் முதலிய பிரமனின் புதல்வர்கள்
ஈடற்ற - இறைவனைக் குறிக்கும்
Top