பல்லவி
கருணா ஜலதி4 1தா3ஸ1ரதி2
2கமனீய ஸுகு3ண நிதி4
அனுபல்லவி
தருணாருண நிப4 சரணாஸுர மத3
ஹர3ணாஸ்1ரித ஜன ஸ1ரணாத்3பு4த கு3ண (கருணா)
சரணம்
சரணம் 1
மனவினி வினக யோசன ஜேஸிதே நே
வினனய்ய ஸ்ரீ ராம ஓ பரம
பாவன தாரக நாம ஸுகு3ண தா4ம
ஜனக தனயாவன சதுர்-முக2
ஜனக ஜனக வசன ஸு-பரி-
பாலனமு ஜேஸின வனஜ லோசன
ஸனக நுத மா த4னமு நீவே (கருணா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கருணா/ ஜலதி4/ தா3ஸ1ரதி2/
கருணை/ கடலே/ தசரதன் மைந்தா/
கமனீய/ ஸுகு3ண/ நிதி4/
விரும்பத்தகு/ நற்குண/ கடலே/
அனுபல்லவி
தருண/-அருண/ நிப4/ சரண/-அஸுர/ மத3/
இளம்/ விடியற்காலை/ நிகர்/ (சிவந்த) திருவடியோனே/ அரக்கர்/ செருக்கினை/
ஹரண/-ஆஸ்1ரித ஜன/ ஸ1ரண/-அத்3பு4த/ கு3ண/ (கருணா)
அழித்தவனே/ சார்ந்தோரின்/ புகலிடமே/ வியத்தகு/ பண்புகளோனே/
சரணம்
சரணம் 1
மனவினி/ வினக/ யோசன/ ஜேஸிதே/ நே/
வேண்டுகோளினை/ கேளாது/ யோசனை/ செய்தால்/ நான்/
வினனு-/அய்ய/ ஸ்ரீ ராம/ ஓ பரம/
ஏற்க மாட்டேன்/ அய்யா/ ஸ்ரீ ராமா/ ஓ முற்றிலும்/
பாவன/ தாரக/ நாம/ ஸுகு3ண/ தா4ம/
தூயோனே/ தாரக/ நாமத்தோனே/ நற்குணங்களின்/ இருப்பிடமே/
ஜனக/ தனய/-அவன/ சதுர்/-முக2/
சனகன்/ மகளை/ காப்போனே/ நான்/ முகனை/
ஜனக/ ஜனக/ வசன/
ஈன்றோனே/ தந்தையின்/ சொல்லினை/
ஸு-பரிபாலனமு ஜேஸின/ வனஜ/ லோசன/
சிறக்க நிறைவேற்றிய/ கமல/ கண்ணா/
ஸனக/ நுத/ மா/ த4னமு/ நீவே/ (கருணா)
சனக (முனிவரால்)/ போற்றப் பெற்றோனே/ எமது/ செல்வம்/ நீயே/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - தா3ஸ1ரதி2 - தா3ஸ1ரதே2
2 - கமனீய ஸுகு3ண நிதி4 - கல்யாண ஸுகு3ண நிதி4
3 - ஆஸ்1ரித ஜன ஸ1ரண - ஆஸ்1ரித ஜன சரண : இவ்விடத்தில் 'சரண' பொருந்தாது எனக் கருதுகின்றேன்.
4 - விதரணமுக3னீ (விதரணமுக3னு+ஈ) - விதரணமொஸக3னு (விதரணமு+ஒஸக3னு) : 'விதரணம்' என்ற சொல்லுக்கு 'தாராளம்' என்று பொருளாகும். 'ஈ' மற்றும் 'ஒஸகனு' என்ற சொற்கள் 'வழங்க' என்ற பொருள்படும். எனவே, 'விதரணமுக3னு+ஈ' என்பதற்கு 'தாராளமாக வழங்க' என்று பொருளாகும். 'விதரணமு+ஒஸக3னு' என்பதற்கு 'தாராளம் வழங்க' என்று பொருளாகும். ஆகவே 'விதரணமு+ஒஸக3னு' என்பது தவறாகும்.
5 - ஜனுலனு - மனுஜுல
Top
மேற்கோள்கள்
6 - த4னத3 - இது, செல்வம் வழங்கும், 'இலக்குமி'யை அல்லது 'குபேர'னைக் குறிக்கும். அடுத்து வரும் 'நுத' (போற்றப்பெற்ற) என்ற சொல்லினால், இது 'இலக்குமி'யைக் குறிக்காது. எனவே, இங்கு, இச்சொல்லுக்கு, 'குபேரன்' என்று பொருள் கொள்ளப்பட்டது. வால்மீகி ராமாயணம், உத்தர காண்டத்தில் (அத்தியாயம் 41), புஷ்பக விமானத்தினை இராமனுக்கே அனுப்பி வைக்கையில், குபேரன், இராமனைப் புகழ்ந்துரைத்தான்.
Top
விளக்கம்
தாரக நாமம் - பிறவிக் கடலைத் தாண்டுவிக்கும் நாமம்.
தேவர்களின் உயர் முனிவர் - வியாழன் (குரு)
தேவர்களின் உயர் முனிவர் - இதனை 'தேவர்கள் மற்றும் உயர் முனிவர்கள்' என்றும் கொள்ளலாம்.
வானரர்கள் தலைவன் - சுக்கிரீவன்
புவியாள்வோனே - இதனை 'புவிமகள் கேள்வா' என்றும் கொள்ளலாம்.
Top