பல்லவி
கன கன ருசிரா கனக வஸன நின்னு (கன)
அனுபல்லவி
தி3ன தி3னமுனு மனஸுன சனுவுன நின்னு (கன)
சரணம்
சரணம் 1
பாலு காரு மோமுன ஸ்ரீயபார
மஹிம தனரு நின்னு (கன)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
கன/ கன/ ருசிரா/ கனக/ வஸன/ நின்னு/ (கன)
காண/ காண/ சுவையய்யா/ பொன்/ ஆடை அணிவோனே/ உன்னை/
அனுபல்லவி
தி3ன தி3னமுனு/ மனஸுன/ சனுவுன/ நின்னு/ (கன)
தினந்தினமும்/ மனதினில்/ காதலுடன்/ உன்னை/ காண...
சரணம்
சரணம் 1
பாலு/ காரு/ மோமுன/ ஸ்ரீ/-அபார/
பால்/ வடியும்/ முகத்தினில்/ செழிப்பும்/ அளவுகடந்த/
மஹிம/ தனரு/ நின்னு/ (கன)
மகிமையும்/ ஒளிரும்/ உன்னை/ காண...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
ஒரு புத்தகத்தில், 8-வது சரணம் மட்டும், சரணமாகவும், மற்ற முந்தைய 7 சரணங்களும், 'ஸ்வர ஸாஹித்தியங்களாக'வும் கொடுக்கப்பட்டுள்ளது.
சரணங்கள் சில புத்தகங்களில் வரிசை மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.
Top
மேற்கோள்கள்
1 - பவமான ஸுதுடு3 நீது3 மஹிம தெல்ப - அனுமன் உனது மகிமைகளைத் தெரிவிக்க. - வால்மீகி ராமாயணத்தில் (சுந்தர காண்டம், அத்தியாயம் 35) அனுமன் தன்னை ராமனின் தூதன் என சீதையிடம் அறிமுகப்படுத்திக் கொள்கையில், சீதை அவனது சொற்களை உறுதிப்படுத்திக்கொள்ள, ராமனின் அடையாளங்களை விவரிக்கும்படி அனுமனை வேண்டினாள். அங்ஙனமே, அனுமன் விவரிக்க, அச்சொற்களைக் கேட்டு சீதை மிக்கு மகிழ்ந்தாள்.
3 - த்4ரு2த ரதா2ங்க3 - ஆழியேந்துவோன் - இதனை, 'தேருருளையேந்துவோன்' என்றும் கொள்ளலாம். மகாபாரதப் போரில், (9-வது நாள் யுத்தம்)அர்ச்சுனன், பீஷ்மரை வதைக்கத் தயங்கவே, ஆத்திரம் கொண்ட கண்ணன், தேர் உருளையினைக் கையிலேந்தி பீஷ்மரை வதைக்கக் களத்திலிறங்கினான்.
Top
விளக்கம்
2 - வி-தே3ஹ மானஸ - உடலற்றோர் உள்ளத்தில். வி-தே3ஹ என்ற சொல், எனக்குத் தெரிந்தவரை, மூன்று வகையில் பயன்படுத்தப்படும் (1) 'வைதே3ஹி' எனப்படும் சீதையின் தந்தைக்கு 'விதே3ஹ' மன்னன் என்று கூறப்படும் - அது இவ்விடம் பொருந்தாது. (2) உடல் துறந்தபின் (மரணத்திற்குப்பின்) பெறும் முத்தி, 'விதே3ஹ முக்தி' எனப்படும். முத்தியடைவோரின் மனம், இற்றுப் போவதனால், 'அவர்களுடைய மனத்தில் உறைபவன்' என்று கூறுவது சரியாகாது. (3) வானுறை தேவர்களுக்கு, உடலில்லாததனால், 'விதே3ஹ' என்று பெயருண்டு. எனவே 'விதே3ஹ' என்ற சொல்லுக்கு, 'வானோர்' என்று பொருள் கொள்வது பொருந்தும் என்று எண்ணுகின்றேன். அங்ஙனமே, இங்கு மொழிபெயர்க்கப்பட்டது.
4 - த4ரஜ முக்2யுலு - புவியிலுதித்த தலை சிறந்தோர் - 'த4ரஜ' என்பதற்கு, 'சீதை' என்றும் பொருள் கொள்ளலாம். ஏனென்றால், சீதை, 'பூமியின் மகள்' எனப்படும். ஆனால், எப்படி, பார்வதிக்கு, 'நக2ஜா' என்று கொடுக்கப்பட்டுள்ளதோ, அங்ஙனமே, இதுவும், 'த4ரஜா' என்றிருக்கவேண்டும். அப்படி, 'சீதை' என்று பொருள் கொண்டால், 'முக்2யுலு' என்ற சொல் தனித்து நிற்கின்றது. 'த4ரஜாதி3 முக்2யுலு' என்றிருந்தால் சரியாகும். ஆனால், அப்படி இல்லாமையால், 'த4ரஜ' என்பதற்கு, 'சீதை' என்று பொருள் கொள்ளவியலாது.
Top
சுருசி - துருவனின் மாற்றாந்தாய்.
சடாயு - சீதையை மீட்க இராவணனுடன் போரிட்டு மாண்ட கழுகு.
நீர்முகிலுக்குப் புயல் - நீர்முகிலை விரட்டும் புயலென.
உடலற்றோர் - வானோர்.
கற்ப தரு - விரும்பியதருளும் வானோர் தரு.
பண்பு சின்னத்தோன் - பண்புகளெனும் முத்திரை குத்திய.
சிதானந்தன் - பரம்பொருளின் இலக்கணம் - சத்-சித்-ஆனந்தம் - சச்சிதானந்தம்.
பறவை - கருடன்.
கருணை இரசம் - 'நவரசம்' எனப்படும் ஒன்பது இரசங்களிலொன்று.
திருவடிக் கமலங்களைப் பற்றிக்கொண்டிருப்போன் - அனுமன்.
புரந்தரன் - இந்திரன்.
குடக் கடல் - பாற்கடல்.
காதல் - இறைவனிடம் கொள்ளும் 'பிரேமை' எனும் பெருங்காதல்.
Top