Notation Scheme

இபுடை3ன நனு - ராகம் ஆரபி4 - ipuDaina nanu - rAgta Arabhi

English Version
Language Version

பல்லவி
1இபுடை3ன நனு தலசினாரா ஸ்வாமி
2க்ரு2பகு பாத்ருட3னனி கீர்திஞ்சினாரா

சரணம்
சரணம் 1
3ய சேஸி நா மாடலெல்ல நா
தல்லிதோ பலிகின கொல்ல
நயமுக3 விண்டி 3மீ வல்ல நேடு3
நா மனஸுனனெந்தோ சல்லனாயெ (இ)


சரணம் 2
உன்னத த3யகாஸகொண்டி நேனு
3ன்னமுலகு பாலையுண்டி
கன்னுலார மிமு கண்டி நேடு3
கர்ணாம்ரு2தபு மாட விண்டி 4ஸ்வாமி (இ)
சரணம் 3
5பலு ரூபமுலு தானு பூ3னி நன்னு
பா3தி4ஞ்சி வேட்3க ஜூசின
பலுமாரு நன்னு 6ஏசின 7புண்ய
பாபமு ஹரி செந்த
கானியேமந்து3 (இ)
சரணம் 4
பூ4மினி புட்டக3 லேனு பூ4யோ
பூ4யோ ஹரினி நம்மினானு
தாமஸமுனு தாள லேனு வர
த்யாக3ராஜாப்துடு3 8மதி3 லோனு (இ)


பொருள் - சுருக்கம்
(நாரதரை நோக்கி பிரகலாதன் பகரும் சொற்கள்)


பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இபுடை3ன/ நனு/ தலசினாரா/ ஸ்வாமி/
இப்போதாவது/ என்னை/ நினைத்தாரா/ சுவாமி/

க்ரு2பகு/ பாத்ருட3னு/-அனி/ கீர்திஞ்சினாரா/
அருளுக்கு/ தகுந்தவன்/ என/ போற்றினாரா/


சரணம்
சரணம் 1
3ய/ சேஸி/ நா/ மாடலு/-எல்ல/ நா/
தயை/ செய்து/ என்னைப் பற்றிய/ சொற்களை/ எல்லாம்/ எனது/

தல்லிதோ/ பலிகின/ கொல்ல/
தாயிடம்/ (அரி) பகர்ந்த/ கொள்ளையை/

நயமுக3/ விண்டி/ மீ வல்ல/ நேடு3/
நன்றாக/ கேட்டேன்/ உம்மால்/ இன்று/

நா/ மனஸுனனு/-எந்தோ/ சல்ல/-ஆயெ/ (இ)
எனது/ உள்ளத்தினில்/ மிக்கு/ குளுமை/ ஆகியது/


சரணம் 2
உன்னத/ த3யகு/-ஆஸகொண்டி/ நேனு/
உன்னதமான/ கருணைக்கு/ ஆசைகொண்டேன்/ நான்/

3ன்னமுலகு/ பாலை/-உண்டி/
இடறுகளுக்கு/ உள்ளாகி/ இருந்தேன்/

கன்னுலார/ மிமு/ கண்டி/ நேடு3/
கண்ணார/ உம்மை/ கண்டேன்/ இன்று/

கர்ண/-அம்ரு2தபு/ மாட/ விண்டி/ ஸ்வாமி/ (இ)
செவிக்கு/ அமிழ்தான/ சொற்களை/ கேட்டேன்/ சுவாமி/ இப்போதாவது...
சரணம் 3
பலு/ ரூபமுலு/ தானு/ பூ3னி/ நன்னு/
பல/ உருவங்களை/ தான்/ பூண்டு/ என்னை/

பா3தி4ஞ்சி/ வேட்3க/ ஜூசின/
துன்புறுத்தி/ வேடிக்கை/ பார்த்தாலும்/

பலுமாரு/ நன்னு/ ஏசின/ புண்ய/
பலமுறை/ என்னை/ தொல்லைப்படுத்தினாலும்/ புண்ணிய/

பாபமு/ ஹரி செந்த/ கானி/-ஏமந்து3/ (இ)
பாவங்கள்/ அரியிடமே/ அன்றி/ (வேறு) என்ன/ சொல்வேன்/
சரணம் 4
பூ4மினி/ புட்டக3/ லேனு/ பூ4யோ/
புவியில்/ பிறக்க/ இயலேன்/ மீண்டும்/

பூ4யோ/ ஹரினி/ நம்மினானு/
மீண்டும்/ அரியை/ நம்பியுள்ளேன்/

தாமஸமுனு/ தாள/ லேனு/ வர/
தாமதத்தினை/ பொறுக்க/ இயலேன்/ உயர்/

த்யாக3ராஜ/-ஆப்துடு3/ மதி3 லோனு/ (இ)
தியாகராசனுக்கு/ வேண்டியவர்/ (தனது) உள்ளத்தினில்/ இப்போதாவது...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - க்ரு2பகு பாத்ருட3னனி கீர்திஞ்சினாரா - பல்லவியின் இச்சொற்கள் அனுபல்லவியாக சில புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

3 - மீ வல்ல - நீ வல்ல : இரண்டாவது சரணத்தில், பிரகலாதன் நாரதரை, 'மிம்மு கண்டி' - 'உம்மைக் கண்டேன்' என்று மரியாதைப் பன்மையில் கூறுகின்றான். எனவே, இங்கும் மரியாதைப் பன்மையாகிய 'மீ வல்ல' தான் இருக்கவேண்டும்.

4 - ஸ்வாமி - சில புத்தகங்களில், இச்சொல் கொடுக்கப்படவில்லை. இச்சொல் நாரதரைக் குறிப்பதாகவோ அல்லது இறைவனைக் குறிப்பதாகவோ கொள்ளலாம்.
Top

மேற்கோள்கள்
7 - புண்ய பாபமு ஹரி செந்த - புண்ணிய, பாவங்கள் அரியிடமே - அரிக்கே அர்ப்பணம் என. இது, கீதையில், கண்ணன், அர்ச்சுனனுக்கு உபதேசிக்கும் (18-வது அத்தியாயம், 66-வது செய்யுள்) சரணாகதி நெறியினை ஒட்டியுள்ளது. கண்ணன் கூறுவதாவது -

"அனைத்து தர்மங்களையும் கைவிட்டு என் ஒருவனையே சரணடைவாயாக;
நான் உன்னை அனைத்து பாவங்களினின்றும் விடுவிக்கின்றேன்; கவலை கொள்ளாதே."
(ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)
Top

விளக்கம்
1 - இபுடை3ன நனு தலசினாரா - இப்போதாவது என்னை நினைத்தாரா! இப்பாடல், பிரகலாதன், அரியின் செய்தியைக் கொணர்ந்த நாரதரை நோக்கிப் பாடுவதாக அமைந்துள்ளது. எனவே, இது ஒரு கேள்வியல்ல; தன்னுடைய வியப்பினை பிரகலாதன் வெளிப்படுத்துவதாக.

5 - பலு ரூபமுலு - பல உருவங்களைத் தான் பூண்டு - இது, பிரகலாதனின் உள்ளப் பாங்கினை வெளிப்படுத்தவதாக அமைந்துள்ளது. அவனுக்குத் தொல்லைகள் தரும் தந்தையாகிலும், அவனுடை (தந்தையின்)ஆணையை நிறைவேற்றி, பிரகலாதனுக்குத் தொல்லைகள் கொடுக்கும், அவனது (தந்தையின்) ஏவலாளிகளாகிலும், அவர்கள் யாவருமே, அரியின் பல உருவங்களாக பிரகலாதனின் கண்ணுக்குத் தோன்றுகின்றது. இத்தகைய உயர்ந்த உள்ள நிலை பெற அவன் எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

6 - ஏசின - புத்தகங்களில் இச்சொல்லினை 'ஏய்த்தாலும்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இந்த தெலுங்கு சொல்லுக்கு அத்தகைய பொருளில்லை. எனவே தெலுங்கு மொழியின் பொருளான 'தொல்லப் படுத்தினாலும்' என்றே கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும், 'ஏய்த்தாலும்' என்ற பொருளும் இங்கு பொருந்தும்.

8 - மதி3 லோனு - இச்சொல், இங்ஙனமே, எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. எனக்குத் தெரிந்தவரையில், இது, 'மதி3 லோன' என்றிருக்கவேண்டும்.

இந்த கீர்த்தனை பிரகலாத பக்தி விஜயம் என்ற நாட்டிய நாடகத்தின் அங்கமாகும்.

எனது தாய் - இலக்குமியைக் குறிக்கும்
தியாகராசனுக்கு வேண்டியவர் - அரியினைக் குறிக்கும்
Top