பல்லவி
இன்னாள்ளு நன்னேலியெந்து3கீ கே3லி
அனுபல்லவி
பன்னுக3 நாபாலி பா4க்3யமா 1வனமாலி (இன்னாள்ளு)
சரணம்
சரணம் 1
பா3லுடை3ன நா 2பரிதாபமு ஜூசி
தாளு தாளுமனி தை4ர்யமு பலிகி
ஜாலி தீர வேட்3க ஸல்புசு மரி
நீகீலாகு3 3பு3த்4யனி 4க்ரீ கண்ட ஜூசுசு (இன்னாள்ளு)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இன்னாள்ளு/ நன்னு/-ஏலி/-எந்து3கு/-ஈ/ கே3லி/
இத்தனை நாள்/ என்னை/ ஆண்டுகொண்டு/ எதற்கு/ இந்த/ கேலி/
அனுபல்லவி
பன்னுக3/ நாபாலி/ பா4க்3யமா/ வனமாலி/ (இன்னாள்ளு)
சிறப்பாய்/ என்னைக் காக்கும்/ (எனது) பேறே/ வனமாலி/
சரணம்
சரணம் 1
பா3லுடை3ன/ நா/ பரிதாபமு/ ஜூசி/
சிறுவனாகிய/ எனது/ பரிதாபத்தினை/ கண்டு/
தாளு/ தாளுமு/-அனி/ தை4ர்யமு/ பலிகி/
பொறுப்பாய்/ பொறுப்பாய்/ என/ திடம்/ ஊட்டி/
ஜாலி/ தீர/ வேட்3க/ ஸல்புசு/ மரி/
துயர்/ தீர/ வேடிக்கைகள்/ செய்துகொண்டு/ மேலும்/
நீகு/-ஈலாகு3/ பு3த்4/-அனி/ க்ரீ/ கண்ட/ ஜூசுசு/ (இன்னாள்ளு)
'உனக்கு/ இஃது/ உகந்தது/' என்று/ கடை/ கண்ணால்/ நோக்கிக்கொண்டு/ இத்தனை...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - பரிதாபமு - பரிதாபமுல.
3 - பு3த்4யனி (பு3த்4+அனி) - பு3த்3தி4யனி (பு3த்3தி4 +அனி) - இரண்டுக்கும் பொருள் ஒன்றுதான் என்று நான் கருதுகின்றேன்.
5 - லேது3ரா - லேது3கா3.
6 - ப்3ரோசி - ஜூசி : 'ஜூசி' என்ற சொல் அடுத்து வருவதனால், 'ப்3ரோசி' என்பது ஏற்கப்பட்டது.
Top
மேற்கோள்கள்
1 - வனமாலி - 'வைஜயந்தி' எனப்படும் 'வனமாலை' அணியும் திருமால். இம்மாலை துளசி, மல்லிகை, மந்தாரம், பாரிஜாதம் மற்றும் தாமரை மலர்களால் தொடுக்கப்பட்டதெனப்படும். மாலைகளைப் பற்றியும், குறிப்பாக வைஜயந்தி மற்றும் வனமாலையைப் பற்றிய கட்டுரை நோக்கவும்
Top
விளக்கம்
4 - க்ரீ கண்ட - இது 'தாழ்க் கண்' அதாவது 'வெறுப்பு' என்று பொருள்படும். ஆனால், இவ்விடத்தில், அத்தகைய பொருள் ஒத்துவராது. எனவே, 'கடைக்கண்' என்று பொருள் கொள்ளப்பட்டது. தியாகராஜரின் பல பாடல்களில், 'க்ரீ கண்ட' மற்றும் 'க்ரே கண்ட' என்ற சொற்கள், 'தாழ்க்கண்' (வெறுப்பு) அல்லது 'கடைக்கண்' (கருணை) என்ற பொருள்களில் மாற்றி மாற்றிப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
6 - ப்3ரோசி - ஏசி - ஜூசுசு - சில புத்தகங்களில், இதற்கு, 'படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகிய முத்தொழில்களை மும்மூர்த்திகளுக்கு அளித்தாய்' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. அத்தகைய பொருள் கொள்வதற்கான சொற்கள் ஏதும் இந்த சரணத்தில் இல்லை.
Top
6 - ப்3ரோசி - ஏசி - ஜூசுசு - இராமனே, வெவ்வேறு உருவங்களில், தன்னைக் காப்பதும், ஏய்ப்பதும், பார்த்துக்கொண்டிருப்பதும் என்று தியாகராஜர் கூறுகின்றார்.
ஆயிரம் முறை - ஐயத்திற்கிடமின்றி
நம்பிக்கை - 'வல்லமை' அல்லது 'உண்மை' என்றும் கொள்ளலாம்
களங்கமற்ற - இறைவனைக் குறிக்கும்
Top