பல்லவி
இந்து3காயீ தனுவுனு பெஞ்சினதி3(ந்து3கா)
சரணம்
சரணம் 1
நீ ஸேவகு லேக நீது3 செந்தகு ராக
ஆஸ தா3ஸுடை3 அடுயிடு திருகு3ட(ந்து3கா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
இந்து3கா/-ஈ/ தனுவுனு/ பெஞ்சினதி3/
இதற்கா/ இந்த/ உடம்பை/ வளர்த்தது/
சரணம்
சரணம் 1
நீ/ ஸேவகு/ லேக/ நீது3/ செந்தகு/ ராக/
உனது/ சேவைக்கு/ இல்லாது/ உன்/ அருகில்/ வாராது/
ஆஸ/ தா3ஸுடை3/ அடு/-இடு/ திருகு3டந்து3கா/
ஆசைக்கு/ அடிமையாகி/ அங்கும்/ இங்கும்/ திரிவதற்கா/...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
இப்பாடலின் அனைத்து சரணங்களின் கடைசியாக வரும் (பல்லவியுடன் சேர்க்கும்) சொல், திருவாளர் CR. ராமானுஜாச்சாரியாரின் 'The Spiritual Heritage of Tyagaraja' என்ற புத்தகத்திலிருந்து ஏற்கப்பட்டவையாகும்.
1 - கா3விம்பக3 - கா3விம்பக : 'கா3விம்பக' - எதிர்மறை - இச்சொல் சரியென்றால் 'கரங்களினால் பூசை செய்யாது மறைத்து' என்று மொழி பெயர்க்கப்படும்.
Top
மேற்கோள்கள்
2 - பூ4ரிகி - பூரிதானம் - வேள்விக்குப்பின் வழங்கப்படும் கொடை. விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் 'பூ4ரி த4க்ஷிண' என்றோர் பெயருண்டு. அதன் விளக்கம் அறிய விஷ்ணு ஸஹஸ்ர நாமம் உரை (502) நோக்கவும்.
Top
விளக்கம்
பக்தி நெறியில், தொண்டன் தன்னை இழிவுபடுத்திக் கொண்டு, தன்னுடைய குறைபாடுகளைக் களைய இறைவனை வேண்டுதற்கு 'ஆத்ம க3ர்ஹண' என்று கூறப்படும். ஆனால், உண்மையில் அப்படிப்பட்ட இழிந்த நிலையில் தான் இல்லாத போழ்தும் ஆதி சங்கரரைப் போன்ற மகான்கள் உலகோருக்காக தம்மை அங்ஙனம் இழிவு படுத்திக்கொள்வதுமுண்டு. உதாரணமாக, ஆதி சங்கரர் இயற்றிய 'சிவானந்த லஹரி' என்ற உயர்ந்த பக்தி நூலில் ஒரு செய்யுளின் பொருள் பின்வருமாறு -
"இறைவா..... மிக்கு சபல சித்தமுடைய இந்த மனக்குரங்கு எவ்வமயமும் அறிவீனமெனும் அடவியில் திரிகின்றது; இளம் பெண்டிரின் மலையுச்சி நிகர் தனங்களில் நடமிடுகின்றது; உலக ஆசைகளெனும் மரக்கிளைகளில், பல திசைகளிலும் தன்னிச்சையாகத் திரிகின்றது. என்னுடைய இந்த மனக்குரங்கினை காணிக்கையாக ஏற்றுக்கொண்டு, அதனை பக்தியெனும் கயிற்றினால் கட்டி, உம்முடைய ஆளுகையில் கொண்டுவாரும்." (20) (ஸ்வாமி தபஸ்யானந்தாவின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.)
ஆதி சங்கரர் அத்வைதத்தின் உச்சத்தினைக் கண்டவர். ஜீவன் முக்தரான அவருக்கு இம்மாதிரி அவஸ்தைகள் இருப்பதற்கு ஏது இல்லை. ஆனால், அவர் தன்னை உலகோரின் நிலையில் வைத்து, உலகோர் உய்வதற்காக, இம்மாதிரி பக்தி நூல்களை இயற்றியுள்ளார்.
பூசை செய்வதற்கு மறைத்து - பூசை செய்யாது என
Top