பல்லவி
க3தி நீவனி நே கோரி வச்சிதி தல்லி பராகா
அனுபல்லவி
மதினியெந்தோ வெதகி
ஸம்மதினி ஸ்ரீ ப்ரவ்ரு2த்3த4
ஸ்ரீ-மதி நீ பத3 யுக3முல நே நெர
நம்மிதினி ப்3ரோவுமிக நிஜ தா3ஸுலகு (க3)
சரணம்
சரணம் 1
பரமௌ ஸ்ரீ 1தபஸ்தீர்த2 நக3ரமந்து3
நெலகொன்ன பரமானந்தீ3 பொக3ட3
தரமா ப்3ரஹ்மகைனனு த4ரலோ நீ
ஸரி கான தல்லி நீவாட3னு கானா
பரிதாபமுலெல்ல தொலக3யா 2ரக
புர நாது2ல ஜத கூடி3யபீ4ஷ்ட
வரமுலிச்சு தை3வமு 3நீவனி மனு
ஸ்தி2ர மதுலை காசினாரு க3னுக (க3)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
க3தி/ நீவு/-அனி/ நே/ கோரி/ வச்சிதி/ தல்லி/ பராகா/
கதி/ நீ/ யென/ நான்/ கோரி/ வந்தேன்/ தாயே/ அசட்டையோ/
அனுபல்லவி
மதினி/-எந்தோ/ வெதகி/
உள்ளத்தினில்/ மிக்கு/ தேடி/
ஸம்மதினி/ ஸ்ரீ/ ப்ரவ்ரு2த்3த4/
முழு மனதுடன்/ சீர்/ செழிப்புடை/
ஸ்ரீ-மதி/ நீ/ பத3/ யுக3முல/ நே/ நெர/
திருமதியே/ உனது/ திருவடி/ இணையினை/ நான்/ மிக்கு/
நம்மிதினி/ ப்3ரோவுமு/-இக/ நிஜ/ தா3ஸுலகு/ (க3)
நம்பினேன்/ காப்பாய்/ இனி/ உண்மையான/ தொண்டர்களுக்கு/ கதி...
சரணம்
சரணம் 1
பரமௌ/ ஸ்ரீ தபஸ்தீர்த2/ நக3ரமு-அந்து3/
உயர்ந்த/ திருத்தவத்துறை/ நகரத்தினில்/
நெலகொன்ன/ பரம-ஆனந்தீ3/ பொக3ட3/
நிலைபெற்ற/ பேரானந்தியே/ (உன்னைப்) புகழ/
தரமா/ ப்3ரஹ்மகு/-ஐனனு/ த4ரலோ/ நீ/
தரமோ/ பிரமனுக்கு/ ஆகிலும்/ புவியினில்/ உனக்கு/
ஸரி/ கான/ தல்லி/ நீவாட3னு/ கானா/
நிகர்/ காணேன்/ தாயே/ (நான்) உன்னவன்/ அன்றோ/
பரிதாபமுலு/-எல்ல/ தொலக3/-ஆ/ ரக/
பரிதாபங்கள்/ யாவும்/ தொலைய/ அந்த/ அழகிய/
புர/ நாது2ல/ ஜத/ கூடி3/-அபீ4ஷ்ட/
நகரத்தின்/ நாயகர்கள்/ ஒன்று/ கூடி/ விரும்பிய/
வரமுலு/-இச்சு/ தை3வமு/ நீவு/-அனி/ மனு/
வரங்கள்/ அருளும்/ தெய்வம்/ நீ/ யென/ மனதினில்/
ஸ்தி2ர மதுலை/ காசினாரு/ க3னுக/ (க3)
உறுதி பூண்டு/ காத்துள்ளனர்/ எனவே/ கதி...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
3 - நீவனி மனு ஸ்தி2ர மதுலை - நீவனுமனு ஸ்தி2ர மதுலை : பின் கொடுக்கப்பட்டுள்ளதனை, 'நீவு அனுமு அனு ஸ்தி2ர மதுலை' என்று பிரிக்கலாம். ஆனால், அதற்கு, இந்த இடத்தில், பொருத்தமான பொருள் ஏதுமில்லை. ஆனால், முதலில் கொடுக்கப்பட்டதில் 'மனு' என்ற சொல் சரியாகப் பொருந்தவில்லை. இது 'மனத்தினில்' என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
5 - ஜூபு ஜூபு - ஜூபு ஜாகு3.
6 - ஸர்வ லோக நாயகி - ஸர்வ லோக நாயிகே.
8 - வின்னவிந்து - வின்னபிந்து
Top
மேற்கோள்கள்
1 - தபஸ்தீர்த2 நக3ரமு - திருத்தவத்துறை - இன்றைய லால்குடி - தல வரலாறு
கோவிலைப் பற்றிய விவரங்கள்
Top
விளக்கம்
2 - ரக புர நாது2ல - (அழகிய நகரத்தின் நாயகர்களின்) - இங்ஙனமே எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இவ்விடத்தில் 'நாது2ல' என்பதற்கு பதிலாக, 'நாது2லு' என்றிருக்க வேண்டும் என்று கருதுகின்றேன். 'நாது2ல' என்பது சரியானால், தியாகராஜர், தம்மையும் அந்நகர நாயகர்களுடன் சேர்த்துக்கொள்வதாகக் கொள்ளலாம். ஆனால், அங்ஙனம் பொருள் கொண்டால், 'காசினாமு' (காத்திருக்கின்றோம்) என்றிருக்க வேண்டும். ஆனால், கொடுக்கப்பட்டுள்ளதோ 'காசினாரு' (காத்துள்ளனர்) என்று. எனவே, இவ்விரண்டு சொற்களின் அமைப்பும், ஒன்றுக்கொன்று முரண்பாடாக உள்ளதாகக் கருதுகின்றேன்.
'ரக புர நாது2ல' என்பதற்கு, சில புத்தகங்களில், 'புவியரசர்கள்' என்றும், மற்ற புத்தகங்களில், 'எண் திசைப் பாலர்கள்' எண்றும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இச்சொல்லுக்கு அத்தகைய பொருளேதும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, 'அழகிய நகரத்தின் நாயகர்கள்' என்று மொழிபெயர்க்கப்பட்டது.
4 - ஸ்ரீ-புர - திருத்தவத்துறைக்கு, 'ஸ்ரீபுரம்' என்றொரு பெயர் இருப்பதாகக் கூறப்படுகின்றது. அல்லது, இதற்கு 'ஸ்ரீ சக்ரம்' என்ற பொருளும் கொள்ளலாம்.
Top
7 - நீகனி த4ன தா4ன்யமுல - உனக்கென பணம் உணவுப்பண்டங்கள் - உனது வழிபாட்டுக்கென என்று பொருள்படும்.
திருமதி - திருத்தவத்துறை நாயகியின் பெயர்
நாளை, மறுநாளெனாதே - தட்டிக்கழிக்காதே என
'கேளாய்' - கடவுளரும் தாயிடம் வேண்டுவதாக
Top