பல்லவி
எவருரா நினு வினா க3தி மாகு
அனுபல்லவி
1ஸவன ரக்ஷக நித்யோத்ஸவ ஸீதா பதி (எவரு)
சரணம்
சரணம் 1
ராதா3 நாது3பை நீ த3ய வின
ராதா3 முர வைரி காதா3 த3ய பல்க
ராதா3யிதி3 மரியாதா3 நாதோ
வாத3மா நே பே4த3மா மாகு (எவரு)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எவருரா/ நினு/ வினா/ க3தி/ மாகு/
யாரய்யா/ உன்னை/ யன்றி/ கதி/ யெமக்கு/
அனுபல்லவி
ஸவன/ ரக்ஷக/ நித்ய/-உத்ஸவ/ ஸீதா/ பதி/ (எவரு)
வேள்வி/ காத்தோனே/ என்றும்/ திருவிழாவே/ சீதை/ கேள்வா/
சரணம்
சரணம் 1
ராதா3/ நாது3பை/ நீ/ த3ய/
வாராதோ/ என்மீது/ உனது/ தயை/
வின ராதா3/ முர/ வைரி/ காதா3/ த3ய/
கேளாயோ/முர/ வைரி/ யன்றோ/ கருணையுடன்/
பல்க ராதா3/-இதி3/ மரியாதா3/ நாதோ/
பகரலாகாதோ/ இது/ மரியாதையோ/ என்னுடன்/
வாத3மா/ நே/ பே4த3மா/ மாகு/ (எவரு)
வாதமோ/ நான்/ வேறோ/ எமக்கு/ யாரய்யா...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - ஸவன - ஸவ : இரண்டு சொற்களுக்கும் பொருளொன்றுதான்.
2 - ராக நன்னேச - ராக நின்னேச : இவ்விடம் 'நன்னேச' என்பதுதான் சரியான சொல்லாகும்.
5 - நா ப்ரகாஸ1மா - நவ காஸ1மா : 'காச' என்பது சமஸ்கிருத அகராதியின்படி 'நாணலை'க் குறிக்கும். தமிழகராதியின்படி 'காச' என்பது 'காய' என்றும் வழங்கும். விஷ்ணுவுக்கு, 'காசாம்பூ (காயாம்பூ) மேனியன்' என்றும் பெயருண்டு.
கம்ப ராமாயணத்தில், கம்பர் ராமனை 'காயாம்பூ நிறத்தவன்' என்று கூறுகின்றார்.
ஈழம், முல்லைத்தீவினில், காயாம்பூவுக்கு, 'முல்லை' என்றும் பெயருண்டு'.
6 - தாள ஜாலரா ராம - தாள ஜாலரா ராஜ.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
3 - அரி க3ண அராதிவி - பகைவரை யழிப்பவன் - உட்பகை அறுவரென்றும் கொள்ளலாம்
உட்பகை அறுவர் - காமம், சினம், கருமித்தனம், மயக்கம், செருக்கு, பொறாமை
4 - ஆபகே3ஸா1ர்சித - நதிகளின் தலைவனால் தொழப்பெற்றவன். பொதுவாக, 'வருணன்' (கடலரசன்) நதிகளின் தலைவனெப்படுவான். ஆனால், திருவையாற்றினில், இறைவனுக்கு (சிவனுக்கு) 'ஐயாறப்பன்' (பஞ்சாபகேசன்) என்று பெயர் உண்டு. அங்ஙனமானால், 'சிவனால் தொழப்பெற்றோனே' என்றும பொருள் கொள்ளலாம்.
திருவிழா - கொண்டாட்டம் - அடியார்க்கு
முரன் - கண்ணனால் கொல்லப்பட்ட அரக்கன்
தாமதம் செய்ய - 'பிடிவாதம் செய்ய' என்றும் கொள்ளலாம்.
வானோர் தரு - விரும்பியதை வழங்கும் கற்ப தரு
Top