பல்லவி
எந்த3ரோ மஹானுபா4வுலந்த3ரிகி வந்த3னமு
அனுபல்லவி
1சந்த்3ர வத3னுனியந்த3 சந்த3முனு
ஹ்ரு2த3யாரவிந்த3முன ஜூசி
ப்3ரஹ்மானந்த3மனுப4விஞ்சு வா(ரெந்த3ரோ)
சரணம்
சரணம் 1
ஸாம கா3ன லோல மனஸிஜ லாவண்ய
த4ன்ய மூர்த4ன்யு(லெந்த3ரோ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்த3ரோ/ மஹானுபா4வுலு/-அந்த3ரிகி/ வந்த3னமு/
எத்தனையோ/ பெருந்தகைகள்/ அனைவருக்கும்/ வந்தனம்/
அனுபல்லவி
சந்த்3ர/ வத3னுனி/-அந்த3/ சந்த3முனு/
மதி/ முகத்தோனின்/ எழிலையும்/ ஒயிலையும்/
ஹ்ரு2த3ய/-அரவிந்த3முன/ ஜூசி/
(தமது) இதய/ கமலத்தினிற்/ கண்டு/
ப்3ரஹ்மானந்த3மு/-அனுப4விஞ்சு வாரு/-(எந்த3ரோ)
பேரின்பம்/ துய்ப்போர்/ எத்தனையோ...
சரணம்
சரணம் 1
ஸாம/ கா3ன/ லோல/ மனஸிஜ/ லாவண்ய/
சாம/ கானத்தினில்/ திளைப்போனே/ மன்மதனின்/ எழிலோனே/
த4ன்ய/ மூர்த4ன்யுலு/-(எந்த3ரோ)
பேறுடைத்த/ தலைசிறந்தோர்/ எத்தனையோ...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
பொது - சில புத்தகங்களில் சரணம் 1 முதல் 9 வரை ஸ்வர ஸாஹித்யங்களாகவும், 10-வது சரணம் மட்டும் சரணமாகவும் கொடுக்கப்பட்டுள்ளது
1 - சந்த்3ர வத3னுனி - சந்து3ரு வர்ணுனி - 'சந்து3ரு வர்ண' என்றால் 'மதிபோலும் வெண்ணிறத்தோன்' என்று பொருளாகும். இறைவனின் (விஷ்ணு) நிறம் கருநீலம் எனப்படும். தியாகராஜர், எந்தவொரு பாடலிலும், இறைவனை 'வெண்ணிறத்தோன்' என்று குறிப்பிட்டது கிடையாது. அதனால் 'சந்த்3ர வத3னுனி' (மதி முகத்தோன்) என்பதுதான் சரியாகும்.
2 - ஸலிபி - நிலிபி : 'ஸலிபி' என்றால் 'செய்து' என்றும் 'நிலிபி' என்றால் 'நிறுத்தி' என்றும் பொருள். இரண்டு சொற்களும் ஒன்றுக்கொன்று எதிரானவை. இறைவன், அனைத்து உயிர்களிலும் உறைவதனை 'சரித்தல்' என்று கூறுவர். அதைத்தான் 'மானஸ வன சர' என்ற சொற்களிகனால் 'மனமெனும் வனத்தில் சரிப்போன்' என்று கூறி, அவன் (இறைவன்) 'உடன் சரித்து' எனபதனை 'ஸஞ்சரிஞ்சி' என்றோ 'ஸஞ்சாரமு ஸலிபி' (உடன் சரித்தல் மேற்கொண்டு) என்று பொருள்பட இச்சரணம் இயற்றப்பட்டுள்ளது. இதனை 'மனம் அலைவதனை நிறுத்தி' என்று பொருள்பட 'நிலிபி' என்று சில புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது. அப்படி 'நிலிபி' சரியென்றால் 'வர ஸஞ்சாரமு' என்ற சொற்களில் 'வர' என்ற சொல்லுக்குப் பொருள் கூறவியலாது. 'மன அலைச்சலை நிறுத்தல்' என்பது நம்போன்றோருக்குப் பொருந்துமேயன்றி, பெருந்தகைகளுக்குப் பொருந்தாது. அவர்கள் முன்பே அந்நிலையினைக் கடந்துதான் 'பெருந்தகையினர்' ஆகினர். இப்பாடல் பெருந்தகைகளைப் புகழ்ந்து இயற்றப்பெற்ற பாடல். எனவே 'நிலிபி' என்பது தவறாகும்.
இறைவனுடன் சரித்து, அவனுடைய உருவத்தினை தரிசித்த, பெரியோர்களே 'ஸஞ்சாரம்' என்ற சொல்லின் உட்கருத்தினைப் பகரவல்லர். நான் அதற்குத் தகுதி பெறாமையால், இங்கு கூறப்பட்டவை வெறும் வார்த்தை ஜாலங்களே. அதற்கு மன்னிக்கவும்.
Top
10 - ஸந்தஸம்பு3னனு - ஸந்ததம்பு3னனு : இவ்விடத்தில் 'ஸந்தஸம்பு3னனு' என்பது சரியான சொல்லாகும்.
14 - தலசே - தலசு
Top
மேற்கோள்கள்
11 - ஷண்மதமுல - அறுமதம் - அரன், அரி, சத்தி, கணபதி, முருகன், சூரியன் ஆகியோரின் வழிபாடு
12 - முப்பதி3 முக்கோடி - 12 ஆதித்தியர்கள், 8 வசுக்கள், 11 ருத்திரர்கள், 2 அசுவினியர் - ஆக 33 என்பதனை 33 கோடி என்பர்.
Top
விளக்கம்
3 - ஸரகு3ன - 2 மற்றும் 3-வது சரணங்களைச் சேர்த்தே பொருள் கொள்ளவேண்டும்.
4 - பாத3முலகு ஸமர்பணமு - இறைவனை உள்ளத்தினில் தரிசிப்பதுவும், ஓர் அகந்தைக்குறிய செயலாகும். அங்ஙனம், 'நான் தரிசித்தேன்' என அகந்தை கொள்வதற்கு இடமின்றி, அந்த பேற்றினையும் அவனுடைய திருவடிகளில் சமர்ப்பிப்பதுவே, உண்மைத் தொண்டனின் உள்ளப்பாங்காகும்.
5 - பரமார்த2மகு3 நிஜ மார்க3முதோனு - தியாகராஜர், தனது 'ஸொக3ஸுகா3 ம்ரு2த3ங்க3 தாளமு' என்ற பாடலில் உண்மையான கீர்த்தனத்தின் இலக்கணம் என்னவென்று விவரிக்கின்றார்.
Top
6 - ஹரி கு3ண மணி-மய ஸரமுலு க3ளமுன - 'க3ளமு' என்ற சொல்லுக்கு 'கழுத்து', 'தொண்டை', 'குரல்' என்று என்று பொருளாகும். இங்கு, தியாகராஜர், இறைவனின் 'குணங்களெனும் பட்டியலை' 'மணிமயமான சரங்கள்' என்று கூறி, அவை குரலில் ஒலிப்பதை, 'க3ளமுன' என்று கூறுகின்றார்.
7 - ஸரஸுனி - இச்சொல் 'அழகன்' என்று மொழி பெயர்க்கப்பட்டாலும், சாரத்திற்கும் சாரமான, பரம்பொருளினை 'ஸரஸ' என்றும் கூறலாம்.
8 - பரம பா4க3வத மௌனி வர - இதனை 'பரம பா4க3வத' மற்றும் 'மௌனி வர' என்று இரண்டாகவும் பிரிக்கலாம். ஆனால் இவற்றிற்கு சேர்த்தே பொருள் கூறுவது பொருந்தும் எனக் கருதுகின்றேன்.
Top
9 - து3ர்மதமுலனு கல்ல ஜேஸினட்டி - பக்தி நெறி ஒன்றே சிறந்தது என்பது தியாகராஜரின் கோட்பாடு. மேற்கூறப்பட்ட, அறு மதங்களுக்கும் பக்தி நெறி பொதுவானதாகையால் இங்கு 'து3ர்மத' (தீய கோட்பாடுகள்) என்பது அந்த அறு மதங்களைக் குறிக்காது.
தியாகராஜர், வால்மீகி ராமாயணம், யுத்த காண்டத்தில் (அத்தியாயம் 18), ராமன், விபீடணனுக்குப் புகலளிப்பது குறித்து, பகன்ற சொற்களையும், கீதையில், 18-வது அத்தியாயத்தில், கண்ணன் கூறியதனையும் வற்புறுத்துவதாகத் தோன்றுகின்றது.
ராமன் உரைத்தது
"என்னிடம் ஒரு முறையாகிலும் 'நான் உன்னவன்' என்று புகல் கோரி எவன் வருகின்றானோ அவனுக்கு அனைத்து உயிர்களிடமிருந்தும் பாதுகாப்பு அளிப்பது எனது விரதமாகும்." (33)
கண்ணன் உரைத்தது
"அனைத்து தருமங்களையும் துறந்து, என்னிடம் சரணடைவாயாக; நான் அனைத்து பாவங்களிலிருந்தும் உன்னை மீட்கின்றேன்; வருந்தாதே." (66) (ஸ்வாமி ஸ்வரூபானந்தரின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)
13 - பா4வ ராக3 லய - 'பா4வ' என்ற சொல்லுக்கு 'மனநிலை', 'உணர்ச்சி' என்று பொருளாகும். தியாகராஜரின் கிருதிகளைப் பாடுவோர், அவருடைய அந்த 'பா4வ'-த்தினை உணராது, வெறும் ராகம், லயத்தோடு மட்டும் பாடுவது, திருக்குறளில் கூறியபடி, 'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று'.
Top
சாமகானம் - சாமம் எனும் மறையோதுதல்
மனமெனும் வனத்தில் சரிப்போன் - இறைவன்
சரித்தல் - நடத்தல்
உடன் சரித்தல் - அவனது தியானத்தில் மூழ்குதல்
சமர்ப்பணம் - ஒப்புக்கொடுத்தல்
மணிமயமான சரங்கள் - இறைவனின் குணங்களெனும் பட்டியல்
தொண்டையினில் துலங்கும் - இசையாக ஒலிக்கும்
(இது நாரதர் போன்றோரைக் குறிக்கும்)
கிம்புருடர் - குபேரனைச் சேர்ந்தோர்
இரணியகசிபுவின் மைந்தன் - பிரகலாதன்
தும்புரு - வானோரின் பாணர்
வாயு மைந்தன் - அனுமன்
இளம் பிறையணிவோன் - சிவன்
Top