பல்லவி
ஏ ராமுனி நம்மிதினோ
நேனே பூல பூஜ ஜேஸிதினோ
அனுபல்லவி
வாரமு நிஜ தா3ஸ வருலகு ரிபுலைன
வாரி 1மத3மணசே ஸ்ரீ ராமுடு3 காதோ3 (ஏ)
சரணம்
சரணம் 1
ஏகாந்தமுன ஸீத ஸோகோர்சி ஜோ-கொ3ட்ட
காகாஸுருடு3 சேயு சீகாகு ஸைரிஞ்சுகோக
2மதி3னி த3ய லேக பா3ணமு வேஸி
3ஏகாக்ஷுனி ஜேஸின ஸாகேத பதி காதோ3 (ஏ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஏ/ ராமுனி/ நம்மிதினோ/
எந்த/ இராமனை/ நம்பினேனோ/
நேனு/-ஏ/ பூல/ பூஜ ஜேஸிதினோ/
நான்/ எந்த/ மலர்களினால்/ வழிபட்டேனோ/
அனுபல்லவி
வாரமு/ நிஜ/ தா3ஸ/ வருலகு/ ரிபுலைன/
என்றும்/ உண்மை/ தொண்டரிற்/ சிறந்தோர்/ பகைவரான/
வாரி/ மத3மு/-அணசே/ ஸ்ரீ ராமுடு3/ காதோ3/ (ஏ)
அவர்களின்/ செருக்கினை/ யடக்கும்/ ஸ்ரீ ராமன்/ அல்லவோ/
சரணம்
சரணம் 1
ஏகாந்தமுன/ ஸீத/ ஸோகு/-ஓர்சி/ ஜோ-கொ3ட்ட/
தனிமையில்/ சீதை/ (காக) அசுரனைப்/ பொறுத்து/ தாலாட்ட/
காக/-அஸுருடு3/ சேயு/ சீகாகு/ ஸைரிஞ்சுகோக/
காக/ அசுரன்/ செய்யும்/ தொல்லை/ பொறுத்துக்கொள்ளாது/
மதி3னி/ த3ய/ லேக/ பா3ணமு/ வேஸி/
உள்ளத்தில்/ கருணை/ யின்றி/ அத்திரம்/ எய்து/
ஏக/-அக்ஷுனி/ ஜேஸின/ ஸாகேத/ பதி/ காதோ3/ (ஏ)
ஒர்/ கண்ணனாக/ செய்த/ சாகேத/ மன்னன்/ அல்லவோ/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மத3மணசே - மத3மணசு.
3 - ஏகாக்ஷுனி ஜேஸின - ஏகாக்ஷுனி ஜேயு : இரண்டாவது சரணத்தில் வரும், 'ஸம்ஹாரமு ஜேஸின' என்பதைக் கருதி, 'ஏகாக்ஷுனி ஜேஸின' என்பது ஏற்கப்பட்டது.
Top
மேற்கோள்கள்
2 - மதி3னி த3ய லேக - உள்ளத்தினில் கருணையின்றி. தியாகராஜர், தமது 'பாஹி ரமா ரமண' என்ற வராளி ராக கீர்த்தனையில், இங்ஙனமே, ஆனால் மறைமுகமாக, 'கிளிக்குஞ்சுக்கு பிரமாத்திரம் தகுமா?' என்று கேட்கின்றார். சீதை, காக்கையரக்கன், தனது தனங்களைக் கொத்திக் காயப்படுத்தியும், அந்த வலியினைப் பொறுத்துக்கொண்டு, தனது மடியில் உறங்கும் கணவனுக்குத் தாலாட்டுப் பாடினாள்; ஆனால், இராமனோ, காக்கையரக்கனின் குற்றத்தினைப் பொறுக்காது, பிரமாத்திரம் எய்து, அவனை ஓர்கண்ணனாக்கினான் என்று, இந்த கீர்த்தனையில் சீதையையும் ராமனையும் ஒப்பிடுகின்றார். காக்கையரக்கன் ஓர்கண்ணனானது.
4 - கி3ரி - மலை - ருஷ்யமூகம் எனப்படும் மலையினை சுக்கிரீவன் அடைந்தான்
Top
விளக்கம்
5 - நிர்-தோ3ஷ - குற்றமற்ற - இது, தியாகராஜரையோ, இராமனையோ குறிக்கலாம்.
காயம் பொறுத்து - காகாசுரன் சீதையின் தனங்களைக் கொத்திக் காயப்படுத்தினான்.
தாலாட்ட - தனது மடியில் உறங்கும் கணவனுக்கு
காகாசுரன் - காக்கை வடிவில் அரக்கன்
அத்திரம் - பிரமாத்திரம்.
ஓர் கண்ணனாக - இரண்டு கண்களிலொன்றைப் பறித்து
பரிதி மைந்தன் - சுக்கிரீவன்
தாரா - வாலியின் மனைவி - தாரா நாயகன் - வாலி
சினத்துடன் கூறும் ஏச்சுச் சொற்கள் - இராவணன் விபீடணனை நோக்கிக் கூறயவை.
Top