பல்லவி
த3ய ஸேயவய்யா ஸத3ய ராம சந்த்3ர
அனுபல்லவி
த3யனு கொஞ்செமைன நாடு3 தலசுசுன்ன ஸீதா ஸுக2மு (த3ய)
சரணம்
சரணம் 1
க்ஷிதி நாது2ல ராகயு ஸம்மதி லேக ஸ்ரீ ஸாகேத
பதி ராடே3யன வச்சுனனின ஸதிகி கல்கி3னயானந்த3மு (த3ய)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
த3ய ஸேயவய்யா/ ஸத3ய/ ராம சந்த்3ர/
அருளுமய்யா/ தயாளா/ இராம சந்திரா/
அனுபல்லவி
த3யனு/ கொஞ்செமைன/ நாடு3/ தலசுசு/-உன்ன/ ஸீதா/ ஸுக2மு/ (த3ய)
(உனது) தயையினை/ சிறிதாகிலும்/ அன்று/ எதிர்பார்த்து/ இருந்த/ சீதை/ (பெற்ற) சுகத்தினை/ (எனக்கு) அருளுமய்யா...
சரணம்
சரணம் 1
க்ஷிதி/ நாது2ல/ ராகயு/ ஸம்மதி/ லேக/ ஸ்ரீ ஸாகேத/
(மற்ற) புவி/ ஆள்வோரின்/ வருகை/ சம்மதம்/ இல்லாது/ 'ஸ்ரீ சாகேத/
பதி/ ராடே3/-அன/ வச்சுனு/-அனின/ ஸதிகி/ கல்கி3ன/-ஆனந்த3மு/ (த3ய)
பதி/ வாரானோ'/ என (சீதை வினவ)/, 'வருவான்'/ என்று (கேட்ட)/, சதிக்கு/ உண்டான/ ஆனந்தத்தினை/ அருளுமய்யா...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
மேற்கோள்கள்
விளக்கம்
1 - ம்ரொக்குகொனி ப்3ரோவு வேள - இச்சொற்கள் 'கும்பிட்டு வேண்டும் போழ்து' என்று மொழிபெயர்க்கப்பட்டாலும், இவ்விடத்தில், 'ப்3ரோவு' என்ற சொல்லின் பொருள் சரிவர விளங்கவில்லை.
இப்பாடலில், தியாகராஜர் குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சிகள் - (1) ஸ்வயம்வரத்திற்கு (மணாளனை மணப்பெண் தேர்ந்தெடுத்தல்) முன்னமே, சீதை ராமனின் வரவினை எதிர்நோக்குதல்; (2) ராமன் வருவானோ, மாட்டானோ என்று சீதை ஐயப்படுதல்; (3) ராமன் வில்லை வளைக்க முடியுமோ, முடியாதோ என கவலையுறுதல்; - இவை எதுவுமே வால்மீகி ராமாயணத்தில் கிடையாது. வால்மீகி ராமாயணம், பால காண்டம், அத்தியாயங்கள் 66 மற்றும் 67 நோக்கவும்.
கம்பராமாயணத்தில் கூட, கம்பர், ராமன், இலக்குவன் மற்றும் விசுவாமித்திர முனிவருடன், மிதிலை நகருள் புகுந்தறுவாயில், சீதை தன்னுடைய தோழிகளுடன், உப்பரிகையில் நின்றிருந்ததாகவும், அவ்வமயம், இருவருடைய கண்களும் சந்தித்ததனை. 'அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்' என்று, எதிர்பாராத விதமான சந்திப்பாக விவரிக்கின்றார்.
எனவே இங்கு கூறப்பட்டவை யாவும் தியாகராஜருடைய கற்பனையாகவே கொள்ளவேண்டும்.
Top
இந்த பாடல், 'பிரகலாத பக்தி விஜயம்' என்னும் நாட்டிய நாடகத்தினில், பிரகலாதன், தனக்கும், சீதைக்குக் கிடைத்த இன்பம் கிட்டவேண்டுமென, வேண்டுவதாக உள்ளது. ராமாயணம் பிரகலாதனுடைய சரிதத்திற்குப் பின்பட்டது என்பது ஒருபுறமிருக்க, இப்பாடல், தியாகராஜர், தன்னை பிரகலாதனுடைய பாத்திரத்தினில் இருத்திப் பாடுவதைவிட, பிரகலாதன், தியாகராஜரின் மனப்பாங்கினை வெளிப்படுத்துவதாக உள்ளது. இப்படிப்பட்ட மனோ நிலையை, இந்த நாட்டிய நாடகத்தின் பல கீர்த்தனைகளில் காணலாம்.
சாகேத பதி - இராமன்
சதி - மனைவி
மேனி பெருக்கி - வல்லமையை வெளிப்படுத்தல்
Top