பல்லவி
த3ர்ஸ1னமு ஸேய நா தரமா
அனுபல்லவி
பராமர்ஸி1ஞ்சி நீவு நனு மன்னிஞ்சவலெனு ஸி1வ (த3ர்ஸ1)
சரணம்
சரணம் 1
கோ3புரம்பு3லனு 1கடு3 கொ3ப்ப கம்ப3முல 2பூ4-
ஸ்தா2பிதம்ப3கு3 ஸி1லல 3தருணுல ஆடலனு
தீ3பால வருஸலனு தி3வ்ய வாஹனமுலனு
பாப ஹர ஸேவிஞ்சி 4ப3ஹிர்முகு2டை3தி ஸி1வ (த3ர்ஸ1)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
த3ர்ஸ1னமு/ ஸேய/ நா/ தரமா/
தரிசனம்/ செய்ய/ எனக்கு/ கூடுமா/?
அனுபல்லவி
பராமர்ஸி1ஞ்சி/ நீவு/ நனு/ மன்னிஞ்ச/ வலெனு/ ஸி1வ/ (த3ர்ஸ1)
ஆலோசித்து/ நீ/ என்னை/ மன்னிக்க/ வேணும்/ சிவ/ தரிசனம்...
சரணம்
சரணம் 1
கோ3புரம்பு3லனு/ கடு3/ கொ3ப்ப/ கம்ப3முல/ பூ4/-
கோபுரங்களையும்/ மிக்கு/ புனித/ கம்பங்களையும்/ பூமியில்/
ஸ்தா2பிதம்ப3கு3/ ஸி1லல/ தருணுல/ ஆடலனு/
நாட்டப்பட்ட/ சிலைகளையும்/ மகளிர்/ ஆட்டங்களையும்/
தீ3பால/ வருஸலனு/ தி3வ்ய/ வாஹனமுலனு/
தீபங்களின்/ வரிசைகளையும்/ திவ்விய/ வாகனங்களையும்/
பாப/ ஹர/ ஸேவிஞ்சி/ ப3ஹிர்/-முகு2டு3/-ஐதி/ ஸி1வ/ (த3ர்ஸ1)
பாவம்/ களைவோனே/ சேவித்து/ வெளி/ நோக்குடையோன்/ ஆகினேன்/ சிவ/ தரிசனம்...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
சில புத்தகங்களில் அனுபல்லவி, பல்லவியுடன் இணைக்கப்பட்டுள்ளது
6 - த்யாக3ராஜார்சித பாத3 - த்யாக3ராஜார்சித ஸுபாத3
Top
மேற்கோள்கள்
4 - ப3ஹிர்முகு2டை3தி - வெளிநோக்குடையோனாகினேன் -
"மனத்தினை வெளி நாட்டங்கொள்ளாமல் செய்து, உள்ளத்தினில் இருத்துதல், 'உள்நோக்கு' என்றும், அங்ஙனமின்றி, மனத்தினை வெளி நாட்டங்களில் செல்லவிடுதல், 'வெளி நோக்கு' என்றும் கூறப்பட்டும்." ரமண மகரிஷியின் 'நான் யார்' என்னும் உபதேசம்.
லலிதா ஸஹஸ்ர நாமம் (871) ப3ஹிர்-முக2 ஸு-து3ர்லபா4 - எவளுடைய வழிபாடு மனத்தின் நோக்கினை வெளிப்புறம் செலுத்துவோருக்குக் கடினமோ. (ஸ்வாமி தபஸ்யானந்தாவின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.)
Top
விளக்கம்
1 - கடு3 கொ3ப்ப கம்ப3முல - புனித கம்பங்கள் - கொடிக் கம்பம் - கொடிக் கம்பத்தின் தரிசனம் இறைவனின் தரிசனத்திற்குச் சமமாகக் கருதப்படும்
2 - பூ4-ஸ்தா2பிதம்ப3கு3 ஸி1லல - பூமி்யில் நாட்டப்பட்ட சிலைகளை - இதனை, மூன்றாவது சரணத்தில், தியாகராஜர் கூறியுள்ள "அற்புத வடிவினை நான் (உள்ளத்தினில்) நாட்டச் செய்துகொண்டு, இதயக்கமலத்தினில் திரும்பத்திரும்ப கண்டு, மெய்ம்மறந்திருத்தல் விளையாட்டா?" என்பதுடன் சேர்த்து நோக்கினால், கோயிலில், இறைவன், இறை வடிவமாகவோ, அன்றி கல்வடிவமாகவோ தோன்றுதல் ஏனென விளங்கும்.
திருமூலர் திருமந்திரத்தினில் கூறுவது யாதெனில் -
மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தின் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்து பார்-முதற்-பூதமே
பரத்தின் மறைந்தது பார்-முதற்-பூதமே(2290)
(மர யானையில்) மரத்தினைக் கண்டால், யானை இல்லை; யானையைக் கண்டால், மரமில்லை;
ஐம்பூதங்களைக் கண்டால், பரம் இல்லை; பரத்தினை நினைத்தால், ஐம்பூதங்களில்லை.
(Dr. B நடராஜன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்.)
கோயில் வழிபாடு ஏன்? எப்படி? என்பது பற்றிய காஞ்சி மாமுனிவரின் சொற்பொழிவினை நோக்கவும்.
Top
3 - தருணுல ஆடலனு - சில காலத்திற்கு முன்னர் வரை, கோயில்களில் நடமிட நியமிக்கப் பெற்ற 'தேவதாசி'கள் எனப்படும் நடன மங்கையர்.
5 - பதி3யாரு ப்ரத3க்ஷிணமுல - மேற்கூறிய 'கோயில் வழிபாடு ஏன்?, எப்படி?' என்பது பற்றிய காஞ்சி மாமுனிவரின் சொற்பொழிவினை நோக்கவும்.
தரளுதல் - அசைந்தாடுதல்
Top