தியாகராஜரின் பொன்மொழிகள்
பிரகலாதன் இறைவனை வேண்டுதல் -
ராம ப்ரபோ4!
- நீவு அனேக அண்ட3 கோட்லன், விதீ4ந்த்3ராதி3 தே3வாஸுர, ஸ்தூ2ல, ஸூக்ஷ்மம்பு3ல, புட்டிஞ்சி, காபாடி3, நஷ்டம்பு3 ஸேயன்,
- ஸதா3, மூடு3 ரூபம்பு3லும் தா3ல்சி, லோகேஸு1டை3, விஷ்ணுவை, ருத்3ருடை3, சால லீலா வினோத3ம்பு3லன் ஸேய,
- மர்த்யுல், ஸதா3, ஷண்-மதம்பை3ன கூபம்பு3லோ புட்டி,
- காமாதி3, ஷட்3-வர்க3 க்ரு2த்யம்பு3லுன் ஸல்பி,
- க3ர்வ அசல ஆரூடு4லை, மூடு4லை,
- சால, தா3ர, அர்ப4க, ஆகா3ர, கோ3, ப3ந்து3, லோகம்பு3லம் ஜூசுசு, உப்பொங்கு3சும்,
- குக்ஷி பூர்ணம்பு3 ஸேயங்க3 லேக, எப்புடு3ன், து3:க2 வாராஸி1லோ, மக்3னு(ல)ய்யெத3ரு;
- ஸ்ரீ ராமுனி ஜேரு ஆ ராஜ மார்க3ம்பு3லன், ஸ்வப்னமந்தை3ன, ஸாதி4ம்ப லேரய்ய;
- நே நம்மினானய்ய, நாயொக்க பா4க்3யம்பு3 நீவஞ்சுனு உன்னானு.
ராம பிரபுவே!
- நீ, அனேக கோடி அண்டங்களை - பிரமன், இந்திரன், தேவர்கள், அசுரர்கள், தூலம், சூக்குமங்களை படைத்து, காத்து, அழித்தல் செய்ய,
- எவ்வமயமும், (மும்மூர்த்திகளின்) மூன்று உருவங்களைப் புனைந்து, உலகத்தலைவனாகி, விஷ்ணுவாகி, ருத்திரனாகி, மிக்கு வினோதமான திருவிளையாடல்களை நடத்த,
- மாந்தர்கள், எவ்வமயமும், அறுமதங்களெனும் கிணற்றினில் பிறந்து,
- காமம் முதலான, உட்பகை ஆறின் காரியங்கள் இயற்றி,
- செருக்கெனும் மலையினில் ஏறி, மூடர்களாகி,
- மிக்கு, மனைவி, மக்கள், இல்லம், பசுக்கள், சுற்றம் ஆகியயோரை (ஆகியவற்றினை) கண்டு, பெருமிதமுற்று,
- வயிறு நிரப்ப இயலாது, எப்போதும், துயரக் கடலினில் ஆழ்ந்தோராயினர்;
- ஸ்ரீ ராமனை அடையும், அந்த, அரச பாட்டைகளைக் கனவிலும் பின்பற்றிலரய்யா;
- நான் நம்பியுள்ளேனய்யா, எனதொரு பேறு நீயென்றுள்ளேன்.
(prahlAda bhakti vijayam - Part 2)
Top
வருணன், பிரகலாதனுக்கு அறிவுரை கூறுதல்
- சித்தமௌ ப3ங்கா3ரு ஸிம்ஹாஸனமுனன், உத்தமோத்தமுனு உஞ்சி,
- ஊர்ஜிதம்பை3ன, த்4யானமௌ பன்னீடி தா4ரசே, ஹரிகி ஸ்னானம்பு3 கா3விஞ்சி, ஸந்தஸில்லுசுனு,
- அபி4மானமனு வஸ்த்ரமு அமரங்க3 கட்டி,
- விபு4னிபை, சனுவனு விந்த ரத்னமுல க4ன பூ4ஷணமுலிடி3,
- கனி கரம்பு3க3னு, நீது3 புண்யமுலனு நிர்மலம்பை3ன ஸ்வாத்3வன்னமுலனு பெட்டி,
- ஸ்வானந்தமுனனு ஆனந்த3மனு விடெ3ம்பு3 அமரகா3னொஸகி3,
- மனஸார ஜூசுசு, தனுவுனு மரசி,
- அனிஸ1ம்பு3னேகமை, ஆனந்த3மந்தி3,
- த்ரி-ஜக3ம்பு3லனு நீவு த்ரு2ணமுகா3னெஞ்சி,
- விஜயம்பு3 சேகொன்ன வீருடை3னாவு;
- ஆக3ம ஸஞ்சாருன், அகி2ல லோகேஸு1ன், கனுலார ஸேவிம்ப காங்க்ஷிஞ்சினாவு;
- வினுதுலு ஸேயவே, விஸ்1வாஸமுக3னு.
- சித்தமெனும் பொற் சிங்காதனத்தினில், உத்தமரிலும் உத்தமனை இருத்தி,
- திண்ணமான தியானமெனும் பன்னீர் அருவியினால், அரிக்கு குளியல் செய்வித்து, மகிழ்வுற்று,
- அபிமானமெனும் உடை நன்றாகக் கட்டி,
- மேலோன் மீது, காதலெனும் அரிய ரத்தினங்களினால், உயர் ஆபரணங்கள் அணிவித்து,
- கனிவுடன், உனது புண்ணியங்களெனும், தூய சுவையான அன்னமிட்டு,
- தனது உள்ளத்தினில் ஆனந்தமெனும் வீடிகை நன்றாக அளித்து,
- மனதாரக் கண்டுகொண்டு, மெய்ம்மறந்து,
- இடையறாது, அவனுடன் ஒன்றி, ஆனந்தமடைந்து,
- மூவுலகையும், நீ புல்லென எண்ணி,
- வெற்றி பெற்ற வீரனாகினாய்;
- ஆகமங்களில் உறைவோனை, அனைத்துலக ஈசனை, கண்ணார சேவிக்க விழைந்துள்ளாய்;
- போற்றிகள் செய்வாயய்யா, விசுவாசத்துடன்.
(prahlAda bhakti vijayam - Part 1)
Top
க3க3ன, பவன, தபன, பு4வனாதி்3 அவனிலோ, நக3 த4ர, அஜ, ஸி1வ, இந்த்3ராதி3 ஸுருலலோ, ப4க3வத்3-ப4க்த வர அக்3ரேஸருலலோ, பா3க3 ரமிஞ்சே, சைதன்யமா! ஸர்வ ஸாக்ஷி!
- த்3வைதமு ஸுக2மா? அத்3வைதமு ஸுக2மா?
- விஸ்தாரமுகா3னு தெல்புமு நாதோ.
ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், புவி ஆகியவற்றிலும், அரி, பிரமன், அரன், இந்திரன் முதலான வானோரிலும், கடவுள் பக்தர்களில் தலைசிறந்தோரிலும், நன்கு திருவிளையாடல் புரியும், சைதன்யமே! யாவற்றிற்கும் சாட்சியே!
- துவைதம் சுகமா, அன்றி அத்துவைதம் சுகமா?
- விவரமாகத் தெரிவிப்பாயெனக்கு.
(dvaitamu sukhamA - rIti gauLa)
Top
ஸீதா ராமா!
- நீயெட3 ப்ரேம ரஹிதுலகு, நாம ருசி தெலுஸுனா?
- காமினி வேஷ தா4ரிகி, ஸாத்4வீ நட3தலு ஏமைன தெலுஸுனா?
- தன ஸௌக்2யமு, தானு எருக3க, ஒருலகு, தகு3 போ3த4ன ஸுக2மா?
- க4னமகு3 புலி, கோ3 ரூபமைதே, ஸி1ஸு1வுகு பாலு கல்கு3னா?
ஓ சீதாராமா!
- உன்னிடம் காதலற்றோருக்கு (உனது) நாமச் சுவை தெரியுமா?
- பெண் வேடமணிவோனுக்குக் கற்பரசியின் நடத்தைகள் ஏதாகிலும் தெரியுமா?
- தனது சுகத்தினைத் தானே யுணராது, மற்றோருக்கு தக்க போதனை சுகமளிக்குமா?
- கொடிய புலி பசு உருக்கொண்டால், கன்றுக்கு பாலும் சுரக்குமா?
(rAma nIyeDa - kharahara priya)
Top
- த4ர்ம, அர்த2, காம, மோக்ஷ தா3னமேலனே?
- மர்மமெருக3 லேனி இந்த்3ர ஸ1ர்மமேலனே?
- அறம், பொருள், இன்பம், வீடெனும் பாகுபாடுகளேனோ?
- உட்பொருளறியா இந்திரப் பட்டமுமேனோ?
(pAhi rAmayanucu - kharahara priya)
Top
ஸீதம்ம, ஸௌமித்ரி!
- ராமுனிகி, மீரிரு பக்கல நிலப3டி3, கொலிசே முச்சட, நெனருஞ்சி, த்யாக3ராஜுனிதோ, பா3க3 தெல்ப ராதா3?
- தனுவுசே, வந்த3னமொனரிஞ்சுசுன்னாரா?
- சனுவுன, நாம கீர்தன ஸேயுசுன்னாரா?
- மனஸுன தலசி, மை மரசியுன்னாரா?
- ஹரி ஹரி!
சீதம்மா! இலக்குவா!
- இராமனுக்கு இரு பக்கத்திலும், நீங்கள் நின்று, சேவை செய்யும் அழகினை, கனிவு கூர்ந்த்து, தியாகராசனுக்கு, விரிவாகத் தெரிவிக்கலாகாதா!
- உடலினால் வந்தனம் செய்கின்றீர்களா? (அல்லது)
- அன்புடன் நாம கீர்த்தனை செய்கின்றீர்களா? (அல்லது)
- உள்ளத்தில் நினைந்து மெய் மறந்துள்ளீர்களா?
- (கேட்பதற்கு) மன்னிப்பீராக!
(pakkala nilabaDi - kharahara priya)
Top
- புட3மி ஸுத ஸஹாயுடை3 செலங்கே3 பூர்ணுனி, ஆத்மாராமுனி, கூடி3யாட3, நட3சி, நட3சி ஜூசேரு அயோத்4யா நக3ரமு, கானரே.
- அட்டே கன்னுலு கூர்சி, தெரசி, ஸூத்ரமு பட்டி, வெலிகி வேஷ தா4ருலை, புட்டு, சாவு லேனி தாவு தெலியக, பொக3டெ3த3ரு.
- புவி மகள் உடனுறையாக விளங்கும் பூரணனை, ஆன்மாராமனை, கூடியிருப்பதற்கு, நடந்து, நடந்து நோக்கினர் அயோத்தி நகரத்திற்கு, (ஆயின்) காணரே!
- அப்படியே, கண்களைக் கோர்த்து, (பகுதி) திறந்து, செபமாலை பற்றி, வெளியில் வேடமணிந்து, பிறப்பு, இறப்பற்ற இடத்தினை யறியாது, புகழ்ந்தனர்.
(naDaci naDaci - kharahara priya)
Top
ஓ மனஸா!
- ஸ்ரீ ஸாகேத ராமுனி ப4க்தியனே சக்கனி, ராஜ மார்க3முலு உண்ட3க3, ஸந்து3ல தூ3ரனேல?
- சிக்கனி பாலு, மீக3ட3 உண்ட3க3, 'சீ2'யனு க3ங்கா3-ஸாக3ரமேலே?
ஓ மனமே!
- சாகேதராமனின் பக்தியெனும், மேலான அரச பாட்டைகளிருக்க, சந்துகளில் நுழைவதேனோ?
- கெட்டியான பாலும், ஏடுமிருக்க, 'சீ' யெனும் கள்ளேனோ?
(cakkani rAja - kharahara priya)
Top
ரே மனஸா!
- ஸ்வாது3 ப2ல ப்ரத3, ஸப்த ஸ்வர, ராக3 நிசய ஸஹித, நாத3 லோலுடை3, ப்3ரஹ்மானந்த3மு அந்த3வே;
- ஹரி, ஹர, ஆத்ம-பூ4, ஸுர பதி, ஸ1ர ஜன்ம, க3ணேஸா1தி3, வர மௌனுலு உபாஸிஞ்ச,
- த4ர, த்யாக3ராஜு தெலியு.
ஏ மனமே!
- சுவையான பயன்களையருளும், ஏழ் பதப் பண்களுடன் கூடிய, தியாகராசன் அறியும், நாதத்தில் திளைப்போனாகி, புவியில் பரமானந்த மெய்துவாய்;
- அரி, அரன், தான்தோன்றி, இந்திரன், முருகன், கணபதி முதலானோரும், உயர் முனிவர்கள், மற்றோரும் நாதத்தினை வழிபடுவர்.
(nAda lOluDai - kalyANa vasanta)
Top
ராம!
- கனுலு தாகனி பர காந்தல மனஸெடுலோ?
- கோ4ர, பூ4த பதினி ஜூசி, தா3ருகாரண்ய ஸதுலு, மேர மீரி, பு4வினி, அபதூ3ரு கல்க3 ஜேஸிரே.
- நன போ3ணுலபை நேரமன நோரேமி?
இராமா!
- கண் படாத பிற பெண்டிரின் மனமெவ்விதமோ?
- (பிச்சாடனர் வேடத்தில் வந்த) சிவனைக் கண்டு, தாருகா வனப் பெண்டிர், வரை மீறி, புவியில் அவதூறுண்டாகச் செய்தனரன்றோ?
- இளங்கன்னியரின் மீது தவறு காண, வாயென்ன?
(kanulu tAkani - kalyANa vasanta)
Top
காமித ப2ல தா3யக!
- நா தலனு, சக்கனி வ்ராத, கலிகி3யுண்டே கதா3, கல்கு3னு?
- பா4க3வத அக்3ரேஸருலகு3, நாரத3, ப்ரஹ்லாத3, பராஸ1ர, ராம தா3ஸுலு, பா3கு3க3, ஸ்ரீ ரகு4ராமுனி பத3முல, ப4க்தி ஜேஸின ரீதி த்யாக3ராஜுனிகி, இபுடு3, கலிகி3யுண்டே கதா3, கல்கு3னு?
- கலினி இங்கி3தமெருக3க நின்னாடு3கொண்டி.
விரும்பிய பயன்களை யளிப்போனே!
- எனது தலையில், நல்லெழுத்து உண்டாயிருந்தாலன்றோ (விரும்பியது) கிடைக்கும்?
- தலைசிறந்த பாகவதர்களாகிய நாரதர், பிரகலாதன், பராசரர், இராமதாசர் முதலானோர், நன்கு, இரகுராமனின் திருவடிகளைப் பத்தி செய்த முறை, தியாகராசனுக்கிப் போழ்து உண்டாயிருந்தாலன்றோ (விரும்பியது) கிடைக்கும்?
- கலியின் இங்கிதமறியாது உன்னைக் குறைசொன்னேன்.
(kaligiyuNTE kadA - kIravANi)
Top
ஸாமஜ வர க3மன!
- ஸாம நிக3மஜ, ஸுதா4 மய, கா3ன விசக்ஷண!
- வேத3 ஸி1ரோ மாத்ரு2ஜ, ஸப்த-ஸ்வர, நாதா3சல தீ3ப!
- ஸ்வீக்ரு2த யாத3வ குல, முரளீ வாத3ன!
களிற்றின் சிறந்த நடையோனே!
- சாம வேதத்துதித்த அமிழ்த மயமான இசை வல்லுநனே!
- மறைமுடியின் அன்னை (நாதோங்காரம்) ஈன்ற, ஏழ் பதமெனும், நாதக்குன்றின் (மேலிட்ட) விளக்கே!
- குழலிசைக்கும், யாதவ குலத் தோன்றலே!
(sAmaja vara gamama - hindOLaM)
Top
ஸாக்ஷாத்கார!
- மோக்ஷமு க3லதா3 -
- பு4விலோ ஜீவன்முக்துலு கானி வாரலகு?
- நீ ஸத்3ப4க்தி, ஸங்கீ3த ஞான விஹீனுலகு?
- ப்ராண, அனல ஸம்யோக3மு வல்ல, ப்ரணவ நாத3மு, ஸப்த-ஸ்வரமுலை பரக3,
- வீணா வாத3ன லோலுடௌ3, ஸி1வ மனோ-வித4மெருக3ரு.
சாட்சாத்காரமே!
- முத்தி உண்டாமோ -
- புவியில் சீவன் முத்தர் ஆகாதவர்களுக்கு?
- உனது தூய பத்தி (கலந்த) இசை அறிவற்றோருக்கு?
- (உயிர்)மூச்சு மற்றும் (உடல்) வெம்மையின் சேர்க்கையினால், பிரணவ நாதம் ஏழ் பதங்களாகித் திகழ,
- வீணையிசையில் திளைக்கும் சிவனின் உள்ளப் பாங்கினையறியார்;
(mOkshamu galadA - sAramati)
Top
கமலானன!
- க்ஷம கல்கு3, பூ4-தனய, லக்ஷ்மணாதி3 மஹாத்முலகே கானி, அன்யுலகு, ஸமுகா2ன நில்வ கல்கு3னா?
கமல வதனத்தோனே!
- பொறுமையுடை, நிலமகள், இலக்குவன் முதலான மேலோருக்கேயன்றி, பிறருக்கு, உனது முன்னிலையில் நிற்கக் கிடைக்குமா?
(samukhAna nilva - kOkila varALi)
Top
த்யாக3ராஜ நுத!
- ஸந்ததம்பு3, ஸ்ரீ காந்த ஸ்வாந்த ஸித்3தா4ந்தமைன மார்க3 சிந்த லேனி வாரு,
- எந்த நேர்சின, எந்த ஜூசின, எந்த வாரலைன, காந்த தா3ஸுலே;
- பர ஹிம்ஸ, பர பா4ம, அன்ய த4ன, பர மானவ அபவாத3, பர ஜீவனாது3லகு அன்ரு2தமே பா4ஷிஞ்சேரய்ய.
தியாகராசனால் போற்றப்பெற்றோனே!
- எவ்வமயமும், மாமணாளன் உள்ளுறை சித்தாந்தமாகிய நெறியின் எண்ணமற்றவர்,
- எத்தனை கற்றாலும், எத்தனை கண்டாலும், எத்தகையவராயினும், பெண்டிர்க்கடிமைகளே;
- பிறரைத் துன்புறுத்தல், பிறன் மனை, பிறர் பொருள், பிற மனிதரைப் பழித்தல், பிறரால் பிழைத்தல் ஆகியவற்றிற்கு மெய்யல்லாதவற்றையே பகர்வராயினரய்யா.
(enta nErcina - Suddha dhanyAsi)
Top
ராம!
- ஸர்வாந்தர்யாமி நீவனே ஸாம்ராஜ்யமு நிஜமே?
- நிர்வாஹமு லேனியீ ஜனுல கனி நிர்மலாத்முலெடு ஸைரிஞ்சிரோ கானி!
- தா3ரி தெலிய லேரு கொந்த3ரு;
- த3ரித்3ருலைனாரு;
- ஸு-து3ரஹங்காருலை பரம நிக்ரு2ஷ்ட மதாசாருலைனாரு;
- ஜாருலைனாரு; அதி3 கா3க,
- தாரு மாரு பனுல ஜேஸெத3ரு;
- ஸம்ஸாருலைனாரு;
- கபடமேமோ தெலிய!
இராமா!
- யாவரிலும் உள்ளியங்குவோன் நீயெனும் (உனது) பேராட்சி உண்மையா?
- கட்டுப்பாடற்ற இம்மக்களைக்கண்டு, தூயவுள்ளத்தோர் எங்ஙனம் பொறுத்தனரோ?
- நன்னெறி யறிந்திலர் சிலர்;
- வறியோராயினர்;
- தீய அகந்தையுற்று, மிக்கு இழிந்த கொள்கைகளைக் கடைபிடிப்பவராயினர்;
- பிறர்மனை நயப்பவராயினர்;
- முரண்பாடான பணிகளைச் செய்தனர்;
- இல்வாழ்வில் உழல்பவராயினர்.
- இந்தக் கபடமென்னவோ அறியேன்!
- (எல்லா உயிர்களிலும் இறைவன் உள்ளியக்கமாக உள்ளான் என்றால், ஏன் இத்தனை முரண்பாடுகள் உள்ளன என்று இறைவனைக் கேட்கிறார்)
(sarvAntaryAmi - bhairavi)
Top
இன குலோத்தம!
- தனயுனி ப்3ரோவ ஜனனி வச்சுனோ? தல்லி வத்3த3 பா3லுடு3 போனோ?
- வத்ஸமு வெண்ட தே4னுவு சனுனோ?
- வாரித3முனு கனி பைருலு சனுனோ?
- மத்ஸ்ய கண்டிகி விடுடு3 வெட3லுனோ?
- ஈ ரஹஸ்யமுனு எரிகி3ம்புமு.
பரிதி குலோத்தமா!
- மகனைக் காக்க, ஈன்றவள் வருவாளோ (அன்றி) தாயிடம் சிறுவன் செல்வானோ?
- கன்றின் பின் பசு செல்லுமோ?
- முகில் தேடி பயிர்கள் செல்லுமோ?
- கயற்கண்ணியிடம் காதலன் செல்வானோ?
- இந்த இரகசியத்தினை விளக்குவாய்.
(tanayuni brOva - bhairavi)
Top
மனஸா!
- மேலு மேலு ராம நாம ஸுக2மு, ஈ த4ரலோ.
- நிண்டு3 தா3ஹமு கொன்ன மனுஜுலகு, நீரு த்ராகி3ன ஸுக2ம்பு3 கண்டே,
- சண்ட3 தா3ரித்3ர மனுஜுலகு, த4ன பா4ண்ட3மு அப்3பி3ன ஸுக2ம்பு3 கண்டே,
- தாபமு ஸைரிஞ்சனி ஜனுலகு, அம்ரு2த வாபி அப்3பி3ன ஸுக2ம்பு3 கண்டே,
- த3ரி, தா3பு லேக, ப4யமந்து3 வேளல, தை4ர்யமு கல்கு3 ஸுக2ம்பு3 கண்டே,
- ஆகலி வேளல, பஞ்ச ப4க்ஷ்ய, பரமான்னமு அப்3பி3ன ஸுக2ம்பு3 கண்டே,
- ஸ்ரீ ராமுனி, மனஸுன சிந்திஞ்சு ஸுக2ம்பு3 கண்டே,
- ஸார ஹீனமௌ, க்ரோத4 ஸமயமுன, ஸா1ந்தமு கல்கு3 ஸுக2ம்பு3 கண்டே,
- நேரனி மூடு4லகு, ஸகல வித்3யா பாரமு தெலியு ஸுக2ம்பு3 கண்டே,
- ராமுனிபை, நிஜ ப4க்தி கலிகி3, கா3ன ரஸமு தெலிஸின ஸுக2ம்பு3 கண்டே,
- பாமர செலிமி ஸேயனி வாரி, பா4வமு லோனி ஸுக2ம்பு3 கண்டே,
- சேய தகு3, வேதா3ந்த விசாரண, சேயக3 கல்கு3 ஸுக2ம்பு3 கண்டே,
- பா3யக, நிர்கு3ண பா4வமு க3ல, பரப்3ரஹ்ம அனுப4வ ஸுக2ம்பு3 கண்டே,
- ராஜஸ, தாமஸ கு3ணமு லேனி பூஜலு கல்கு3 ஸுக2ம்பு3 கண்டே,
- ராஜ ஸி1கா2 மணியைன, த்யாக3ராஜுகு ஒஸங்கு3 ஸுக2ம்பு3 கண்டே,
- மேலு மேலு ராம நாம ஸுக2மு, ஈ த4ரலோ.
மனமே!
- மேலாம் மேலாம், இராம நாம சுகம், இப்புவியில்.
- மிக்கு நீர் வேட்கை கொண்ட மனிதர்களுக்கு நீரருந்தின சுகத்தினை விட,
- மிக்கு வறிய மனிதர்களுக்கு, செல்வப் பெட்டகம் கிடைத்த சுகத்தினை விட,
- (முவ்)வெம்மை தாங்காத மக்களுக்கு அமிழ்தக் குளம் கிடைத்த சுகத்தினை விட,
- போக்கு, புகலின்றி அச்சமுறுவமயம், துணிவுண்டாகும் சுகத்தினை விட,
- பசி வேளையில், ஐவகை உண்டியும், பாயசமும் கிடைத்த சுகத்தினை விட,
- நலனருளும், இராமனை மனத்தினில் சிந்திக்கும் சுகத்தினை விட,
- சாரமற்ற சீற்ற சமயத்தில் சாந்தம் உண்டாகும் சுகத்தினை விட,
- கல்லாத மூடர்களுக்கு, அனைத்து வித்தைகளிலும் கரைகாணத் தெரியும் சுகத்தினை விட,
- இராமனிடம் உண்மையான பக்தி உண்டாகி, இசை ரசனையும் தெரியும் சுகத்தினை விட,
- பாமரர்களின் இணக்கம் கொள்ளாதவரின் இயல்பினிலுள்ள சுகத்தினை விட,
- செயத்தகு வேதாந்த விசாரணை செய்வதினால் உண்டாகும் சுகத்தினை விட,
- இடையறாது, நிர்க்குண இயல்புள்ள, பரம்பொருளின் அனுபவ சுகத்தினை விட,
- இராசத, தாமத குணங்களற்ற வழிபாடு ஏற்படும் சுகத்தினை விட,
- பிறையணிவோனாகிய தியாகராசனுக்கு (இராமன்) வழங்கும் சுகத்தினை விட,
- மேலாம் மேலாம், இராம நாம சுகம், இப்புவியில்.
(mElu mElu rAma nAma - saurAshTraM)
Top
ஓ மனஸா!
- எடுல ஓர்துனே? நா மனவி சேகொனவே.
- தி3ன-கர குல பூ4ஷணுனி, தீ3னுட3வை, ப4ஜன ஜேஸி, தி3னமு க3டு3புமு அனின, நீவு வினவு, அதி3 ஏல?
- கலிலோ, ராஜஸ, தாமஸ கு3ணமுலு கல வாரி செலிமி, கலஸி, மெலஸி திருகு3சு, மரி, காலமு க3ட3பகனே, ஸுலப4முகா3 கட3 தேரனு, ஸூசனலனு தெலிய ஜேயு, த்யாக3ராஜு மாட வினவு, அதி3 ஏல?
ஓ மனமே!
- எப்படிப் பொறுப்பேன்? எனது வேண்டுகோளை ஏற்பாய்.
- பகலவன் குல அணிகலனை, பணிவுடையோனாகி, பஜனை செய்து, நாளைக் கழிப்பாயென்றால், நீ கேளாயஃதேன்?
- கலியில், இராசத, தாமத குணங்கள் உடையோரின் நட்பினில், கூடிக்கலந்து, திரிந்துகொண்டு, மேலும் பொழுதை வீணாக்காது, எளிதாக, கடைத்தேறுதற்குக் குறிப்புகளைத் தெரியப்படுத்தும், இங்கு, தியாகராசனின் சொல்லைக் கேளாயஃதேன்?
(manasA eTulOrtunE - malaya mArutaM)
Top
- து4ரீணுடௌ3, த்யாக3ராஜ நுதுடு3, எந்த முத்3தோ3! எந்த ஸொக3ஸோ!
- எவரி வல்ல வர்ணிம்ப தகு3னே!
- எந்த வாரலைன கானி, காம சிந்த ஆக்ராந்துலு ஐனாரு;
- அத்த மீத3 கனுலு, ஆஸகு தா3ஸுலை;
- ஸத்த பா4க3வத வேஸுலைரி;
- து3த்த, பால ருசி தெலியு ஸாம்யமே!
- உலக பாரஞ் சுமப்போனாம், தியாகராசன் போற்றுவோன், எவ்வளவு கவர்ச்சியோ! எவ்வளவு ஒயிலோ!
- எவரால் வருணிக்க இயலுமோ!
- எப்படிப்பட்டவராயினும், காம எண்ணங்களால் பீடிக்கப் பட்டோராயினர்.
- அத்தை மீது கண்கள், ஆசைக்கடிமைகளாகி;
- (ஆயின்) தூய பாகவதர் வேடமணிந்தனர்.
- பாண்டம், பாலின் சுவையறிதல் போன்றதே!
(enta muddO - bindu mAlini)
Top
ஓ பராத்பர!
- கதா2ம்ரு2தமு சே, ப3ஹு காலமு, ஆகலி தீரியுன்னானு;
- து3ராத்முலகு3, பூ4-கிராதகுல சேர ராது3 அனுசு, நீ பராயணுல செலிமி ரா கோரு, த்யாக3ராஜ நுத!
ஓ பராபரமே!
- பல காலம், (உனது) சரிதை (எனும்) அமிழ்துண்டு, பசியாறியுள்ளேன்;
- தீய உள்ளத்தோராகிய, புவியின் இழிந்தோரைச் சேரலாகாதென, உனது தொண்டு பூண்டோரின் இணக்கம் பெறக் கோருகின்றேன்.
(sudhA mAdhurya - sindhu rAmakriya)
Top
அய்யா!
- ஸம்ஸாருலைதே ஏமி, ஸி1கி2 பிஞ்சா2வதம்ஸுடு3 எது3டனு உண்ட3க3?
- ஹிம்ஸ ஆது3லு எல்ல ரோஸி,
- ஹம்ஸாது3ல கூடி3, ப்ரஸ1ம்ஸ ஜேயுசுனு,
- ஏ ப்ரொத்3து3 கம்ஸாரினி நம்முவாரு,
- ஞான, வைராக்3யமுலு ஹீனமு ஐன, அட்டி ப4வ கானனமுன திருகு3 மானவுலு,
- ஸதா3, த்4யான, யோக3 யுதுலை,
- நீ நாமமு பல்குசு,
- நானா கர்ம ப2லமு தா3னமு ஸேயுவாரு,
- க்ரூரபு யோசனலு தூ3ரு ஜேஸி,
- தன தா3ர, புத்ருல பரிசாரகுல ஜேஸி,
- ஸார ரூபுனி பாத3 ஸாரஸ யுக3முல, ஸாரெ-ஸாரெகு மனஸார பூஜிஞ்சுவாரு,
- பா4க3வதுல கூடி3,
- போ4க3முலு எல்ல ஹரிகே காவிம்புசுனு,
- வீணா கா3னமுலதோ, ஆக3ம சருனி, ஸ்ரீ ராக3முன பாடு3சு,
- த்யாக3ராஜ நுதுனி பா3கு3க3 நம்முவாரு,
- ஸம்ஸாருலைதே ஏமி?
அய்யா!
- இல்லறத்தினர் ஆனால் என்ன, மயிற்பீலி யணிவோன் எதிரிலிருக்க?
- இம்சை ஆகிய யாவும் வெறுத்து,
- முற்றுமுணர்ந்தோரைக் கூடி,
- (இறைவனின்) புகழ் பாடிக்கொண்டு,
- எவ்வமயமும், கஞ்சனை வதைத்தோனை நம்புவோர்,
- ஞானம், வைராக்கியம் ஆகியவை யற்ற அத்தகைய, பிறவிக் காட்டினில் திரியும் மனிதர்கள்,
- எவ்வமயமும், தியானம், யோகம் உடையோராய்,
- உனது பெயர் உரைத்துக்கொண்டு,
- பற்பல கருமங்களின் பயன்களை (இறைவனுக்கு) அர்ப்பணிப்போர்,
- கொடிய எண்ணங்களைத் துறந்து,
- தனது மனைவி, மக்களை (இறைவனின்) சேவையில் ஈடுபடுத்தி,
- சார உருவத்தோனின் திருவடிக் கமல இணையினை, எவ்வமயமும், மனதார வழிபடுவோர்,
- பாகவதர்களைக் கூடி,
- (உலக) இன்பங்களை யெல்லாம் அரிக்கே அர்ப்பணித்துக்கொண்டு,
- வீணை இசையுடன், ஆகமங்களில் உறைவோனை, சிறந்த இராகங்களில் பாடிக்கொண்டு,
- தியாகராசன் போற்றுவோனை, முழுதும் நம்புவோர்,
- இல்லறத்தினர் ஆனால் என்ன?
(saMsArulaitE - sAvEri)
Top
மனஸா!
- நா மாட வினி, ஸாரெகு, முக்தி கனுமீ; மஞ்சிதி3 அனுமீ;
- பலு வித4, கர்மம்பு3லயந்து3, மர்மமு தெலுஸுகோ; ஹரினி கலுஸுகோ;
- லோகுலு, தம த்ரோவ ஏகமு அந்து3ரு; ஒப்புகோகவே; மோஸ போகவே;
- மாடி மாடிகி, நூனெ ரோடி எத்3து3லு திருகு3; தா4டி ரா; மதமு ஏ பாடிரா?
- ஆ மதமுல அந்து3, நேமமு, ஸத்யமு ஏமர போகு;
- க3தி அந்தரமு லேது3; ப்ரத்யேகமுன ஜூடு3, நித்யுனி;
- தொலி, ப4வ நாடகமுல, ஜேயு பாபமு தொலகு3னு; ஸுக2மு கலுகு3னு.
மனமே!
- என் சொல்லைக் கேட்டு, எவ்வமயமும், முத்தி காணேன்; 'நல்லது' என்று சொல்லேன்;
- பலவிதமான (வேத) கருமங்களில் உட்பொருள் அறிந்துகொள்; அரியைக் கலந்து கொள்;
- உலகோர் தமது நெறியொன்றே (உண்டு) என்பர்; ஒப்புக்கொள்ளாதே; மோசம் போகாதே;
- திரும்பத்திரும்ப செக்கு மாடுகள்தான் சுற்றும்; கடந்து வா; அந்நெறிகளினால் என்ன பயன்?
- அந்நெறிகளில் (சென்று) கட்டுப்பாட்டினையும், உண்மையினையும் மறந்து போகாதே;
- போக்கு வேறில்லை; ஒவ்வொன்றிலும், காண்பாய் அழிவற்றோனை, யாவற்றையும் சாதித்தவனை;
- (அங்ஙனம் கண்டால்) முன்னர், பிறவிக்கடலெனும் நாடகத்தில் செய்த பாவங்கள் தொலையும்; சுகம் உண்டாகும்;
(SrI rAma rAmASritulamu - sAvEri)
Top
- மேனு ப3லமு குலமு ஏல?
- ராம ப4க்தி காரணமு, வெலயு ஸகல ஸித்3து4லு எல்ல வெண்ட வச்சு கானி.
- நீட, காகி, மீனு முனுக3, நிரதமு உத3ய ஸ்நானமா?
- தேட கனுலு, கொங்க3 கூர்ச, த்4யானமா?
- பத்ரமுலனு மேயு மேக, ப3லமைன உபாஸமா?
- சித்ர பக்ஷுலு எக3ய, ஸூர்ய, சந்த்3ருலகு ஸாம்யமா?
- கு3ஹல, வேஷ கோடுலு உண்டே, கு3ணமு கல்கு3 மௌனுலா?
- க3ஹனமுனனு, கோதுலு உண்டே, க4னமௌ வன வாஸமா?
- ஜங்க3முலு, பலுகக உண்டே, ஸங்க3திகா3 மௌனுலா?
- அங்க3மு முய்யனி பா3லுலு, அபுடு3, தி3க3ம்ப3ருலா?
- வலசு, த்யாக3ராஜ வரது3 வர ப4க்துலு ஸேயு ப4க்தி, செலகு3, ஸகல ஜனுலகு எல்ல, செல்லின காஸு ஔனுகா3!
- உடல் வலிமையும் குலமும் ஏன்?
- இராமனின் பக்தி காரணமாக திகழும் அனைத்து சித்திகள் யாவும் பின் தொடருமன்றோ?
- நீரில் காகமும் மீனும் மூழ்க, என்றும் காலைக் குளியலா?
- தூய கண்களைக் கொக்கு குவிக்க, (அது) தியானமா?
- இலைகளை மேயும் ஆடு, முழுப் பட்டினியா?
- பல்வகைப் பறைவைகள் பறக்க, சூரிய சந்திரர்களுக்கு நிகரா?
- குகையில் வேடமணிந்த கும்பலிருந்தால், குணமுடை முனிவர்களா?
- காடுகளில் குரங்குகளிருந்தால், பெரும் வன வாசமா?
- சங்கமர்கள் பேசாதிருந்தால், மொத்தமாக முனிவர்களா?
- உடல் மூடாத சிறுவர்கள் அப்படியானால், திகம்பரர்களா?
- காதலுடன், தியாகராசனுக்கருள்வோனின் உயர் தொண்டர்கள் செய்யும் பக்தி, திகழும் அனைத்து மக்கள் யாவர்க்கும் செல்லும் காசாகுமன்றோ!
(balamu kulamu - sAvEri)
Top
நனு கன்ன தல்லி!
- எல்ல வாரி த4னமுலு, அஸ்1வமுலு, மரி, எக்குவைன க3ட்டி மித்3தெ3லு, அன்னியு கல்ல கானி, கன்ன வாருலு காஞ்சு ஸுக2மு, ஸுன்ன அனுசுனு, உல்லமுனனு பா3க3 தெலுஸுகொண்டினி;
- ஊரகே, த4னிகுல 3ஸம்பா4ஷணமு நேனு ஒல்ல;
- மாயலு அனி தெலிஸி, ரஜ்ஜு பை உரக3 பு3த்3தி4 செந்த3னு ஏல?
- பலுகு மஞ்சி கானி, பா3ந்த4வுலு, மரி, பா3வ, மரது3லு, அக்கலு, அன்ன, தம்முலு, கலிமி ஜூசு வாரு, லேமினி கனுல கான ராரு, அனுசுனு தலசுகொன்ன வெனுக, வாரி மாயல தக3ல ஜாலனு;
- மரு, மரீசிகலனு ஜூசி, நீரு அனி ப்4ரமஸி, கந்து3ரா?
- கனக பூ4ஷணமுல பெட்டி, மரியு, ஸொக3ஸு ஜேஸி, பாலு போஸி, பெஞ்சின தனுவு, ஸதமு காது3, நிர்மல தனமு இஞ்சுக லேது3 அனுசுனு அனுதி3னமு ஒனரிஞ்சு ஸத்-க்ரியல, நீகு அனி பல்கிதி;
- அன்னிட நீவு அனி எரிகி3, வேல்புல வேரு அனி எஞ்சுது3ரா?
என்னை ஈன்ற தாயே!
- எல்லோருடைய செல்வம், குதிரைகள், மற்றும் மிக்கு கெட்டியான மெத்தை வீடுகள் - இவை யாவும் பொய்யே யன்றி, (இவற்றை) உடையவர்கள் பெறும் சுகம் வெற்றென, உள்ளத்தில் நன்கு தெரிந்துகொண்டேன்;
- வீணாக, செல்வந்தரின் கூற்றுக்களை நான் வெறுக்கவில்லை;
- (இவை) மாயையென்றறிந்து, 'பழுதையில் பாம்பு' நோக்கு கொள்வதேனம்மா?
- மொழி நல்லதல்லாத உறவினர்கள், மற்றும் மைத்துனர்கள், மைத்துனிகள், தமக்கையர், அண்ணன், தம்பியர் (ஆகியோர்), செல்வத்தை நோக்குவோர், வறுமையினைக் கண்ணால் காணமாட்டாரென நினைத்துக்கொண்ட பின்னர், அவர்தம் மாயையில் அகப்பட இயலேனம்மா!
- மறையும், கானலைக் கண்டு நீரெனத்திகைத்து (உண்மையில்) (நீரினைக்) காண்பரோ?
- தங்க நகைகள் அணிவித்து, மேலும் அலங்காரம் செய்து, பாலூற்றி வளர்த்த இவ்வுடல் நிலையற்றது, (இதனில்) தூயத் தன்மை சிறிதும் இல்லையென, அனுதினமும் (நான்) செய்யும் நற்பணிகளை உனக்கென உரைத்தேன்.
- யாவற்றிலும் நீயென்றறிந்து, (பிற) கடவுளரை உன்னின்றும் வேறென எண்ணுவரா?
(kanna talli - sAvEri)
Top
- க்3ரஹ ப3லமேமி?
- தேஜோ-மய, விக்3ரஹமுனு த்4யானிஞ்சு வாரிகி, நவ க்3ரஹ ப3லமேமி?
- க்3ரஹ பீட3ல, பஞ்ச பாபமுலனு, ஆக்3ரஹமுலு க3ல, காம ஆதி3 ரிபுல, நிக்3ரஹமு ஜேயு, ஹரினி ப4ஜிஞ்சு த்யாக3ராஜுனிகி ரஸிக அக்3ரேஸருலகு க்3ரஹ ப3லமேமி?
- ஸ்ரீ ராம அனுக்3ரஹ ப3லமே ப3லமு.
- கோள்களின் வலிமையெம்மாத்திரம்?
- ஒளிமயமான (இராமனின்) திருவுருவத்தைத் தியானிப்போருக்கு, ஒன்பது கோள்களின் வலிமையெம்மாத்திரம்?
- கோள்களின் பீடைகளை, ஐம்பாதகங்களை, விட்டகலாத, இச்சை முதலான உட்பகைவரை அழியச் செய்யும், அரியினைத் தொழும், இத்தியாகராசனுக்கும், ரசிகரில் தலைசிறந்தோருக்கும் கோள்களின் வலிமையெம்மாத்திரம்?
- இராமனின் அருள் வலிமையே வலிமை.
(graha balamEmi - rEvagupti)
Top
மனஸா!
- ஸோ1பி4ல்லு ஸப்த ஸ்வர ஸுந்த3ருல ப4ஜிம்பவே.
- நாபி4, ஹ்ரு2த், கண்ட2, ரஸன, நாஸ,ஆது3லயந்து3 ஸோ1பி4ல்லு ஸப்த ஸ்வர ஸுந்த3ருல ப4ஜிம்பவே.
- த4ர ரு2க், ஸாம ஆது3லலோ,
- வர கா3யத்ரீ ஹ்ரு2த3யமுன,
- ஸுர, பூ4-ஸுர மானஸமுன,
- ஸு1ப4 த்யாக3ராஜுனியெட3
- ஸோ1பி4ல்லு ஸப்த ஸ்வர ஸுந்த3ருல ப4ஜிம்பவே.
மனமே!
- திகழும் ஏழு சுரங்களெனும் சுந்தரர்களை வழிபடுவாய்.
- கொப்பூழ், இதயம், தொண்டை, நாக்கு, மூக்கு ஆகியவற்றினில் திகழும் ஏழு சுரங்களெனும் சுந்தரர்களை வழிபடுவாய்.
- ஆதாரமான, ருக், சாம ஆகிய மறைகளிலும்,
- புனித காயத்திரி (மந்திரத்தின்) இதயத்திலும்,
- வானோர், மற்றும் அந்தணர் உள்ளங்களிலும்,
- மங்களம் நிறை இத்தியாகராசனிடமும்
- திகழும் ஏழு சுரங்களெனும் சுந்தரர்களை வழிபடுவாய்.
(SObhillu sapta svara - jaganmOhini)
Top
மனஸா!
- வினவே! மோஸ போகு; ஸத்-ஸஹவாஸமு விட3வகே.
- ஸ்ரீ ராமுனி தெலியக, தலசக, மோஸ போகு.
- அல்ப ஆஸ்1ரயமுன கல்கு3 வெஸனமுலு, கல்பாந்தரமைன போது3;
- ஸே1ஷ தல்ப ஸ1யனுனி நெர நம்மிதே, ஸங்கல்பமெல்லனு ஈடே3ருனு.
- த4ன தருணுலகு ஆஸி1ஞ்சுடெல்ல, வெனுக, தனுவுகு அலஸடே;
- மனஸு சேத ஸேவ்யுனி தலசிதே, ஸு-மன ஸத்வமுனொஸகு3னே.
- கௌ3ரவ ஹீன த4னிகுல காசுடயு, நேரமுலகு எட3மௌனு.
- கா3ரவிஞ்சு த்யாக3ராஜ ஹ்ரு2த3ய ஆகா3ருனி.
மனமே!
- கேளாயடி! மோசம் போகாதே; நல்லிணக்கத்தை விடாதேயடி!
- இராமனை தெரிந்துகொள்ளாது, நினையாது மோசம் போகாதே.
- அற்பப் புகலினால் உண்டாகும் துன்பங்கள் கற்பங்கள் பலவானாலும் தொலையாது;
- அரவு அணையில் துயில்வோனை முழுதும் நம்பினால், நினைத்தவையெல்லாம் ஈடேறும்;
- செல்வம், மற்றும் பெண்டிருக்கு ஆசைப்படுவதெல்லாம், பின்னர் உடலுக்கு இளைப்பே;
- உள்ளத்தினால், வணங்கத்தக்கோனை நினைத்தால், உள்ளத் தூய்மையினை வழங்கிடுவானே.
- கௌரவமற்ற செல்வந்தரிடம் காத்துக்கிடத்தல், தவறுகளுக்கு இடமாகும்.
- தியாகராசனின் இதயத்தில் குடிகொண்டோனைக் காதலிப்பாய்;
(mOsa pOku - gauLipantu)
Top
மனஸா!
- நிஜ ஸுக2மனுப4விஞ்சுடகு, நீகு இதி3 ஸமயமு; ஏமரகே.
- அந்தரங்க3முன கலுகு3 ப4யமுன,
- ஆந்தரிக ப4க்தி மார்க3மு தெலிஸி,
- ஸ்ரீ த்யாக3ராஜ ஸன்னுதுனி ஜூட3 ஸமயமு; ஏமரகே.
மனமே!
- மெய்யறிஞர்களாகிய மனிதர்களுடன் இணங்கி,
- உண்மையான சுகத்தினை அனுபவிப்பதற்கு, உனக்கிதுவே தருணம்; ஏமாறாதே.
- உள்ளத்தினில் உண்டாகும் அச்சத்துடன்,
- உட்புற பக்தி நெறியினைத் தெரிந்து,
- தியாகராசன் மிக்கு போற்றுவோனை தரிசிக்க, தருணம் இதுவே; ஏமாறாதே.
(samayamu EmarakE - kalgaDa)
Top
ஓ மனஸா!
- மன ஸாமர்த்2யமு ஏமி?
- ஸாகேத ராஜு, விஸ்1வமனே ரத2முன எக்கி, தன ஸாமர்த்2யமுசே, தானே நடி3பிஞ்செனே!
ஒ மனமே!
- நமது திறமையென்ன?
- சாகேத மன்னன் பேரண்டமெனும் தேரேறி, தனது திறமையினால், தானே (தேரை) நடத்துகின்றானே!
(manasA mana - vardhani)
Top
ராம!
- தெலிய லேரு, ப4க்தி மார்க3முனு.
- இலனந்தட திருகு3சுனு, கலுவரிஞ்சேரு.
- வேக3 லேசி, நீட முனிகி3, பூ4தி பூஸி, வேள்ளனெஞ்சி,
- வெலிகி ஸ்1லாக4னீயுலை,
- பா3க3 பைகமு ஆர்ஜன லோலுலு ஐரே கானி,
- தெலிய லேரு, ப4க்தி மார்க3முனு.
இராமா!
- தெரிந்திலரே, பக்தி நெறியினை.
- புவியெங்கும் திரிந்துகொண்டு, பிதற்றினர்.
- விடியற்காலை யெழுந்து, நீரில் மூழ்கி (யெழுந்து), நீறு பூசி, விரல்களை யெண்ணி,
- வெளிப் பார்வைக்கு, போற்றத் தக்கோராகி,
- நன்றாக பணம் ஈட்டும் ஆசைகொண்டவராகினரே யன்றி,
- தெரிந்திலரே, பக்தி நெறியினை.
(teliya lEru rAma - dhEnuka)
Top
ராம!
- எவரு தெலியனு பொய்யெத3ரு?
- விவரமு லேனி பூஜலு ஜேஸெத3ரு.
- முத3முன, பருல ரூகலகு, பர ஸுத3துலகு ஆஸி1ஞ்சி,
- தா கூடு3டகு, உத3ரமு நிம்புட கொரகு,
- சால, ஊரனூர திரிகெ3த3ரு ஆவரகு.
- கொன்ன தொத்துல மாட மீர லேக,
- அன்ன, தம்முல, தல்லி, தண்ட்3ருல, நேரமு என்னுடே பனி கானி,
- ஸாரமைன நீ பத3மு நம்மெத3ரா?
- ஆலு, பி3ட்3ட3லனு நம்மெத3ரு;
- வாரிகி ஆஸி1ஞ்சி, பருல கொம்பலு முஞ்செத3ரு;
- காலுனி வல்ல, நிண்டா3ரு கஷ்டமு ஜெந்தி3, பு4வினி புட்டெத3ரு.
- பெத்3த3லதோ கல்லலாடி3,
- பு3த்3தி4 லேனி த4னிகுல தா வேடி3,
- வத்3து3 அன வாரிதோ மோடி3,
- இட்லு ப்ரொத்3து3 போவுட கானி, பதிதுல கூடி3.
- ஈஸுன மரியாத3 லேது3;
- நிண்டு3 காஸு கல்கி3ன வானிகி அன்னிட வாது3;
- ஆஸ நீயெட3 கல்க3 போது3;
- நிஜ தா3ஸுலு எவரோ கன சேத காது3.
- பன்னுக3, மனகே ஸ1க்தியனி,
- அன்னி கல்லலு அனுசுனு, தொ3ங்க3 ப4க்தி;
- இதி3 ஏடி விரக்தி?
- இதி3யா பேத3 யுக்தி?
- யோகு3லு மேனு எருக3 லேக,
- தமகே க3தியனி த்4யானிந்துரு.
இராமா!
- எவர் அறியலாயினர்?
- விவரமற்ற வழிபாடுகள் செய்தனர்.
- களிப்புடன், பிறர் பணத்திற்கு, பிற பெண்டிருக்கு ஆசைப்பட்டு,
- தான் (அவற்றை) அடையவும், வயிறு நிரப்புவதற்கும்,
- மிக்கு ஊரூராகத் திரிந்தனர், அதுவரை;
- கொண்ட மனைவியரின் சொல் மீர இயலாது,
- அண்ணன், தம்பியர், தாய், தந்தையரின் குற்றம் காண்பதுவே பணியன்றி,
- சாரமான உனது திருவடியினை நம்பினரா?
- இல்லாள், மக்களை நம்பினர்;
- அவருக்கு ஆசைப்பட்டு, பிறர் குடும்பங்களைக் குலைத்தனர்;
- நமனால் நிறைய துன்பமடைந்து, (பின்னர்) புவியில் பிறந்தனர்;
- பெரியோர்களிடம் பொய் கூறி,
- அறிவற்ற செல்வந்தர்களை தாம் இரந்து,
- (அப்படி) வேண்டாம் என்றவரிடம் சினந்து,
- இப்படியாக, வீழ்ந்தோருடன் கூடி, பொழுது போகுமேயன்றி;
- பொறாமையினால் மரியாதை இல்லை;
- மிக்கு செல்வம் படைத்தோனுக்கு, எதனிலும் வாது;
- அன்பு உன்னிடம் தோன்றாது;
- உண்மையான தொண்டவர்கள் எவரோ, காணக் கையாலாகாது;
- தமக்கே மிக்கு வல்லமையென,
- 'யாவும் பொய்'யென, கள்ள பக்தியுடன்,
- ஈதென்ன பற்றின்மை?
- இஃதா இவ்வேழையின் வழிமுறை?
- யோகியர்கள் உடல் நினைவின்றி,
- தமக்கே கதியென்று தியானிப்பர்.
(evaru teliyanu poyyedaru - punnAgavarALi)
Top
ஸ்ரீ ராம!
- இந்த பா4க்3யமனி நிர்ணயிம்ப, ப்3ரஹ்மா, இந்த்3ராது3ல தரமா?
- மதி ஹீனுலைன,
- நெம்மதி லேனி வாரைன,
- அதி பாப க்ரு2துலைன,
- என்னடிகி ஸத்3க3தி ரானி வாரைன,
- ஸாரெகு, மாயா ஸம்ஸாரமந்து3, சால தூ3ரின வாரைன,
- காம ஆது3ல பூரித மதுலைன,
- நீது3 மர்மமு தெலியனி, கர்ம மார்கு3லைன,
- த4ர்ம ரஹிதுலைன,
- நினு மதி3 சிந்திஞ்சு ஸு-ஜனுல 2பூஜிஞ்சின வாரிகி,
- ப்ரதி லேனி, நினு ஸன்னுதி ஸேயு ப4க்துல ஜத கூடி3ன வாரிகி,
- நின்னு மனஸார நம்மின ஸுதா4 பூர சித்துல ஸேவ கோரின வாரிகி,
- லோகமுலு நிர்மிஞ்சின, நீது3 ஸ1ர்மமு ஸ்மரியிஞ்சு, நிர்மல மதுல, ஸ1ர்மமு எஞ்சின வாரிகி,
- இந்த பா4க்3யமனி நிர்ணயிம்ப, ப்3ரஹ்மா, இந்த்3ராது3ல தரமா?
இராமா!
- இத்தனைப் பேறென நிர்ணயிக்க பிரமன், இந்திராதியருக்கும் தரமா?
- அறிவிலிகளாயினும்,
- நிம்மதியற்றவர்களாயினும்,
- மிக்கு பாவம் செய்தோராயினும்,
- என்றுமே நற்பேறு வாராதவராயினும்,
- எந்நேரமும், மாயமான, சமுசாரத்தினில் மிகவும் நுழைந்தோராயினும்,
- இச்சைகள் முதலானவை நிறை உள்ளத்தினராயினும்,
- உனது மருமம் அறியாத கரும நெறியினராயினும்,
- அறமற்றோராயினும்,
- உன்னை மனதில் சிந்திக்கும், நன்மக்களை வழிபடுவோருக்கு,
- மாற்றில்லா உன்னை நற்போற்றி செய்யும் தொண்டர்களின் இணக்கம் கொண்டோருக்கு,
- உன்னை மனதார நம்பின, அமிழ்து நிறை சித்தத்தோரின் தொண்டு விழைவோருக்கு,
- உலகங்களைப் படைத்த, உனது பெயரினை நினைந்திருக்கும், களங்கமற்ற உள்ளத்தோரின் மகிழ்ச்சியினைக் கருதுவோருக்கு,
- இத்தனைப் பேறென நிர்ணயிக்க பிரமன், இந்திராதியருக்கும் தரமா?
(inta bhAgyamani - punnAgavarALi)
Top
மனஸா!
- ஸங்கீ3த ஞானமு, ப4க்தி வினா, ஸன்-மார்க3மு கலதே3.
- ப்4ரு2ங்கி3, நடேஸ1, ஸமீரஜ, க4டஜ, மதங்க3, நாரத3 ஆது3லு உபாஸிஞ்சே ஸங்கீ3த ஞானமு, ப4க்தி வினா, ஸன்-மார்க3மு கலதே3.
- ந்யாய அந்யாயமு தெலுஸுனு;
- ஜக3முலு மாயா-மயமு அனி தெலுஸுனு;
- து3ர்-கு3ண, காயஜ ஆதி3, ஷட்3-ரிபுல, ஜயிஞ்சு கார்யமு 3தெலுஸுனு.
மனமே!
- இசையறிவு, பக்தியின்றி, நன்னெறி சேர்க்காதே.
- பிருங்கி முனி, நடேசன், வாயு மைந்தன், குடமுனி, மதங்கர், நாரதர் ஆகியோர் வழிபடும் இசையின் அறிவு, பக்தியின்றி, நன்னெறி சேர்க்காதே.
- நியாயம், அந்நியாயம் தெரியும்,
- உலகங்கள் மாயை மயமெனத் தெரியும்,
- தீய குண காமம் முதலான ஆறு (உட்)பகைவரை வெல்லும் வகை தெரியும்.
(sangIta jnAnamu - dhanyAsi)
Top
ராம!
- க3ட்டு கான ரானி கு3ண்ட; பட்டுக தா3ட நீ பேரு தெப்பண்ட;
- காமாதி3 நக்ர பா3த4 தீர்ப, நீ சேதி சக்ரமு லேதா3?
- சல சித்தமு அனு அலலகு, செலகு3 நீ வாம ஹஸ்தமு வைரியகு3னு;
- மத3 மத்ஸரமுலு அனு க3ஜமுலகு, நீ பத3 கமல அங்குஸ1 ரேக2 அங்குஸ1மு;
- ஸோ1காது3லு அனு பர்வதமுலகு, நீ கர அங்கித வஜ்ர ரேக2 வஜ்ரமு;
- அஹம் அனு ஜட3த்வம் அணசி ப்3ரோவ, ஸஹஜமௌ நீ சேதி ஸ1ரமுலு லேவா?
- து3ஷ்-கர்மமு அனு கொண்ட3லெக3ய ஸேய, நிஷ்-கல்மஷ பவனஜுடு3ண்டு3;
- ஜனன, மரணமு அனு ஸுடி3னி நில்ப, க4னமைன நீ ஆக்3ஞ காத3னு வடி3னி?
- ஜாதிகி ஒகரு கூடி3னாரமு; ப்ரீதி சேத தெலுஸுகொண்டிமி நாம ஸாரமு;
- பன்னுக3 ப4வமு அதி கோ4ரமு; நின்னு வினா அன்ய தை3வமுலனு கோரமு.
இராமா!
- கரை காணமுடியாத கடல்; பற்றிக்கொண்டு தாண்டுவதற்கு, உனது பெயர் தெப்பமாம்!
- இச்சை முதலான முதலைகளின் தொல்லைகளைத் தீர்க்க, உனது கை ஆழியுண்டன்றோ!
- நிலையற்ற மனமெனும் அலைகளுக்கு, ஒளிரும், உனது இடது கை எதிரியாகும்;
- செருக்கு, பொறாமையெனும் யானைகளுக்கு உனது கமலத் திருவடியின் வளைந்த கோடுகள் அங்குசமாகும்;
- துயரங்கள் ஆகியவை எனும் மலைகளுக்கு, உனது கைகளிலுள்ள ஆழ்ந்த கோடுகள் குலிசமாகும்;
- 'நான்' எனும் அறிவீனத்தையடக்கி, (என்னைக்) காக்க, இயற்கையான உனது கையம்புகளுண்டன்றோ!
- தீவினைகளெனும் மலைகளைப் பறக்கடிக்க, களங்கமற்ற, வாயு மைந்தன் உண்டு;
- பிறப்பு இறப்பெனும் சுழலை நிறுத்த, வல்லமைமிகு உனது ஆட்சியன்றோ, காலத்தின் மீது!
- சாதிக்கொருவர் கூடினோம்; காதலுடன், தெரிந்துகொண்டோம் (உனது) பெயரின் சாரத்தினை;
- நேர்த்தியான பிறவிக்கடல் மிக்கு கோரமானது; உன்னைத் தவிர மற்ற கடவுளரை வேண்டோம்.
(SrI rAma dAsa - dhanyAsi)
Top
ஸ்ரீ ராம!
- கு3ருவு சில்ல கி3ஞ்ஜ,
- கு3ருவே ப்4ரமரமு,
- கு3ருடே3 பா4ஸ்கருடு3,
- கு3ருடே3 ப4த்3ருடு3,
- கு3ருடே3 உத்தம க3தி,
- கு3ருவு நீவு அனுகொண்டி.
இராமா!
- குரு தேற்றாக்கொட்டை;
- குருவே குளவி;
- குருவே பகலவன்;
- குருவே மங்களமானவன்;
- குருவே உத்தமமான புகல்;
- குரு நீயெனக் கருதினேன்.
(nI cittamu niScalamu - dhanyAsi)
Top
மனஸா!
- த்4யானமே வரமைன க3ங்கா3 ஸ்நானமே.
- வான நீட முனுக3 முனுக3, லோனி வஞ்சன த்3ரோஹமனு கர போனா?
- பர த4ன, நாரீமணுலனு தூ3ரி, பர நிந்த3ல, பர ஹிம்ஸல மீரி, த4ரனு வெலயு, ஸ்ரீ ராமுனி கோரி,
- த்யாக3ராஜு தெலுஸுகொன்ன ராம த்4யானமே வரமைன க3ங்கா3 ஸ்நானமே.
மனமே!
- தியானமே புனித கங்கை நீராடலாகுமே.
- மழை நீரில் நனைய நனைய, உள்ள, வஞ்சனை, துரோகமெனும் கறைகள் போமோ?
- பிறர் பொருள், பெண்மணிகளை வெறுத்து, பிறரைத் தூற்றல், பிறரை துன்புறுத்தலை மீறி, புவியில் ஒளிரும் இராமனை வேண்டி,
- தியாகராசன் தெரிந்துகொண்ட இராம தியானமே புனித கங்கை நீராடலாகுமே.
(dhyAnamE - dhanyAsi)
Top
- எட்ல கனுகொ3ந்து3னோ ஸ்ரீ ஹரினி, நேனு?
- த4ரலோ கலுகு3 ஸம்பத3ல ரோஸி, தனுவுனு மரசி, ஹரினி கூடு3 மஹாராஜுலகு கா3க, எட்ல கனுகொ3ந்து3னோ ஸ்ரீ ஹரினி?
- மலயனி மத3முன தெலியகுண்டினி;
- ஈ ஜன்மமு, ஈ பா4க்3யமு, ஈ ஸொம்முலு எல்ல ப்ரயோஜனமா?
- எப்படிக் கண்டுகொள்வேனோ அரியை, நான்?
- புவியிலுள்ள செல்வங்களை வெறுத்து, உடலினை மறந்து, அரியைக் கூடும் பெருந்தகைகளுக்கன்றி, எப்படிக் கண்டுகொள்வேனோ அரியை?
- விட்டகலாத செருக்கினால் அறியாதிருந்தேன்;
- இப்பிறவி, இப்பேறு, இந்த சொத்துக்கள் யாவும் பயன் படுமோ?
(eTla kanugondunO - ghaNTA)
Top
ஓ மனஸா!
- ஸமயமு தெலிஸி, புண்யமுலு ஆர்ஜிஞ்சனி குமதி, உண்டியேமி, போயியேமி?
- ஸாரமௌ, கவிதல வினிஸ வெர்ரிவாடு3 ஸந்தோஷபடி3 ஏமி, பட3க ஏமி?
- சேரெடே3ஸி, கு3ட்3டி3 கன்னுலு, பா3கு3க3 தெரசி ஏமி, தெரவகுண்டி3ன ஏமி?
- துரக வீதி2லோ, விப்ருனிகி பானக பூஜ, நெரய ஜேஸி ஏமி, ஸேயகுண்டி3 ஏமி?
- த4ரனு ஈனி த4ன கோட்லகு யஜமானுடு3, தா ப்3ரதிகி ஏமி, த3ய்யமைனன ஏமி?
- பத3மு, த்யாக3ராஜ நுதுனிபை கானிதி3, பாடி3 ஏமி, பாட3குண்டி3ன ஏமி?
- ஏத3னு, ஸ்ரீ ராம ப4க்தியு லேனி நர ஜன்மமு எத்தி ஏமி, எத்தகுண்டி3ன ஏமி?
ஓ மனமே!
- சமயமறிந்து, நல்வினையீட்டாத அறிவிலி இருந்தென்ன, போயென்ன?
- சாரமான கவிதைகளைக் கேட்டு, பித்தன் களிப்பு உற்றாலென்ன, உறாவிடிலென்ன?
- அகன்ற, பார்வையற்ற கண்கள், நன்கு திறந்தென்ன, திறவாதிருந்தென்ன?
- துலுக்கர் வீதியினில், அந்தணனுக்கு, பானக பூசை நிறையச் செய்தென்ன, செய்யாதிருந்தென்ன?
- புவியினில், ஈயாத செல்வம் கோடிகளுக்கு உரியவன், தான் பிழைத்தாலென்ன, பேயானாலென்ன?
- பாடல், தியாகராசன் போற்றுவோன் மீது அல்லாதாகில், பாடியென்ன, பாடாதிருந்தென்ன?
- என்னவாகிலும், இராமனின் பக்தியற்ற மனிதப் பிறவி எடுத்தென்ன, எடுக்காதிருந்தாலென்ன?
(samayamu telisi - asAvEri)
Top
த்யாக3ராஜார்சித பத3 யுக3!
- நம்மக நே மோஸ போது3னு, அடரா?
- து3ர்விஷயம்முலு, மனஸுன, தூ3ரக சேஸே நினு,
- த4ன, தனய, களத்ர ஆது3லு, தமத3னி பு3த்3தி4 ஈயனி நினு,
- இந்த்3ரியம்முலகு ஆஹ்லாத3மு இச்சே ரூபமு க3ல நினு,
- பொ3ம்ம இண்ட்3லு கானி, நெர நம்மகு ப4வமுனு, அனு நினு,
- நெம்மதி3 லேனி ஜனன மரணம்முல தொலகி3ஞ்சே நினு,
- நெர நம்மக நே மோஸ போது3னு, அடரா?
தியாகராசன் தொழும் திருவடி இணையோனே!
- உன்னை நம்பாது நான் மோசம் போவேன், அப்படித்தானே, ஐயா?
- தீய விடயங்கள் மனதினில் நுழையாது செய்யும் உன்னை,
- செல்வம், மக்கள், மனைவி ஆகியவற்றினை தமதெனும் எண்ணம் தராத உன்னை,
- புலன்களுக்குக் களிப்பு ஊட்டும் உருவமுடைய உன்னை,
- பொம்மை வீடேயன்றி, சிறிதும் நம்பாதே உலக வாழ்க்கையை யெனும் உன்னை,
- நிம்மதியற்ற பிறப்பு, இறப்புகளினை யொழிக்கும் உன்னை,
- முழுதும் நம்பாது நான் மோசம் போவேன், அப்படித்தானே, ஐயா?
(nammaka nE mOsa - asAvEri)
Top
- ஹரி அனுவாரி ஸரி எவ்வரே?
- பலு வித4முல தலபுல ரோஸி,
- நிலவரமகு3 ப4க்தியு ஜேஸி,
- மலயனி மத பே4த3மு கோஸி,
- கரகு3சு மதி3லோ காமிஞ்சி,
- ஹரி சரணமுலனு ஹ்ரு2த3யமுன உஞ்சி,
- வர ஸு1க முக2 த4னமனி எஞ்சி,
- ஹரி அனுவாரி ஸரி எவ்வரே?
- ஈ ஸுக2மு எருக3னி ஜன செலிமி, வாஸுகி விஸமே, மரி, கொலிமி,
- நிஜ தா3ஸுல ஸம்பா4ஷண ப3லிமி.
- ஹரி அனுவாரி ஸரி எவ்வரே?
- 'அரி' யென்பவருக்கீடு எவரே?
- பல விதமான எண்ணங்களை வெறுத்து,
- நிலையான பக்தி செய்து,
- வளையாத மத வேறுபாடுகளை யறுத்து,
- உருகிக்கொண்டு உள்ளத்தினில் காதலித்து,
- அரியின் திருவடிகளை இதயத்தினிலிருத்தி,
- உயர் சுகரின் சொற்செல்வமென்று எண்ணி,
- 'அரி' யென்பவருக்கீடு எவரே?
- இந்த சுகத்தினை யுணராத மக்களின் நட்பு வாசுகி நஞ்சேயென, மேலும் சூளையென,
- உண்மையான தொண்டர்களுடன் உரையாடல் வலிமையென (எண்ணி),
- 'அரி' யென்பவருக்கீடு எவரே?
(hariyanuvAri - tODi)
Top
ஓ மனஸா!
- ரூகலு பதி3 வேலு உன்ன, சேரெடு3 நூகலு க3தி கானி;
- கோகலு வெய்யி உன்ன, கட்டுகொனுடகு ஒகடி கானி;
- ஊரு ஏலின, தா பண்டு3ட, மூடு3 மூர தாவு கானி;
- நூரு ப4க்ஷணமுலு அப்3பி3ன, எந்தோ நோடிகி அந்த கானி;
- ஏரு நிண்டு3க3 பாரின, பாத்ரகு தகு3 நீரு வச்சு கானி;
- ஹரினி, த்யாக3ராஜ ஸன்னுதுனி மரவகே.
ஓ மனமே!
- பணம் பத்தாயிரம் இருந்தாலும், கையளவு நொய்யே கதியன்றோ?
- ஆடைகள் ஆயிரம் இருந்தாலும், உடுத்துக்கொள்வதற்கு ஒன்றேயன்றோ?
- ஊராண்டாலும், தான் படுத்தல் மூன்று முழ இடமேயன்றோ?
- நூறு உண்டிகள் கிடைத்தாலும், எத்தனையோ வாய்க்கு அத்தனையேயன்றோ?
- ஆறு நிரம்பிப் பாய்ந்தாலும், பாத்திரத்தளவே நீர் கொள்ளுமன்றோ?
- அரியினை, தியாகராசன் போற்றுவோனை மறவாதே.
(rUkalu padi vElu - dESiya tODi)
Top
ஓ மனஸா!
- ப்ரொத்3து3 பொய்யெனு;
- ஸ்ரீ ராமுனி பூனி ப4ஜிம்பவே.
- நித்3து3ர சேத கொன்னாள்ளு;
- விஷய பு3த்3து4ல சேத கொன்னாள்ளு;
- ப்ரொத்3து3ன லேசி, த்ரி-தாபமுலனு நருல பொக3டி3 பொக3டி3 கொன்னாள்ளு;
- பட்டி எத்3து3 ரீதி, கன்ன தாவுல பு4ஜியிஞ்சி, ஏமி தெலியக கொன்னாள்ளு;
- முத்3து3க3 தோசு, ப4வ ஸாக3ரமுன, முனிகி3, தேலுசு கொன்னாள்ளு;
- பத்3து3 மாலின, பாமர ஜனுலதோ, வெர்ரி பலுகுலாடு3சு கொன்னாள்ளு;
- முத3முன, த4ன, தனய, ஆகா3ரமுலு ஜூசி, மத3மு சேத கொன்னாள்ளு;
- அந்து3, செத3ரின, அந்த ஸோ1க அர்ணவ க3துடை3, ஜாலி ஜெந்து3டயு கொன்னாள்ளு;
- எத3டி பச்ச ஜூசி, தாள லேக, தானு இலனு திருகு3ட கொன்னாள்ளு;
- முதி3, மதி3 தப்பின, வ்ரு2த்3த4 தனமுசே, முந்து3, வெனுக தெலியகயே கொன்னாள்ளு;
- யாகா3தி3 கர்மமு ஸேயவலெனு அனு அலஸட சேத கொன்னாள்ளு;
- அந்து3, ராக3, லோப4முலதோனு, அபராத4முல ஜேஸி, ராஜஸமுன கொன்னாள்ளு;
- பா3கு3க3, நாம கீர்தனமுலு ஸேயுடே, பா4க்3யமு அனக கொன்னாள்ளு;
- த்யாக3ராஜ நுதுடை3ன, ஸ்ரீ ராமுனி தத்வமு தெலியகயே கொன்னாள்ளு.
- ப்ரொத்3து3 பொய்யெனு;
- ஸ்ரீ ராமுனி பூனி ப4ஜிம்பவே.
ஓ மனமே!
- பொழுது போனது;
- இராமனை விரதம் பூண்டுத் தொழுவாய்.
- உறக்கத்துடன் சில நாள்;
- விடய எண்ணங்களுடன் சில நாள்;
- காலையெழுந்து, மூவாசையினால் மனிதர்களைப் புகழ்ந்து புகழ்ந்துச் சில நாள்;
- பட்டி மாடு போன்று, கண்ட இடங்களில் உண்டு, ஏதுமறியாது சில நாள்;
- அழகாகத் தோன்றும் பிறவிக் கடலினில் மூழ்கி, மிதந்துச் சில நாள்;
- முறை தவறிய தீய மக்களுடன், மூடத்தனமான உரைகளாடிச் சில நாள்;
- களிப்புடன், செல்வம், மக்கள், வீடுகளை நோக்கி, செருக்குடன் சில நாள்;
- அதனில் சிந்திய அத்தனைத் துயரக்கடலில் உழல்வோனாகி, துன்பமடைதல் சில நாள்;
- எதிர்ப் பச்சையினை கண்டு, பொறுக்க மாட்டாது, தான் உலகினில் திரிதல் சில நாள்;
- முடிவில், அறிவு தவறிய முதுமையுடன் முன்பின் தெரியாமலே சில நாள்;
- வேள்வி முதலிய கருமங்கள் இயற்ற வேணுமெனும் அலைச்சல்களுடன் சில நாள்;
- அதனில், பற்று, பேராசைகளுடன் குற்றங்களிழைத்து, இராசத குணத்துடன் சிலநாள்;
- சிறக்க, (இறைவனின்) நாம கீர்த்தனை செய்தலே பேறெனாது சில நாள்;
- தியாகராசன் போற்றுவோனாகிய, இராமனின் தத்துவம் அறியாமலே சில நாள்;
- பொழுது போனது;
- இராமனை விரதம் பூண்டுத் தொழுவாய்.
(proddu poyyenu - tODi)
Top
தா3ஸ1ரதீ2!
- ஆஸ1 தீர, தூ3ர தே3ஸ1முலனு ப்ரகாஸி1ம்ப ஜேஸின, ரஸிக ஸி1ரோமணி!
- ப4க்தி லேனி, கவி ஜால வரேண்யுலு, பா4வமெருக3 லேரு அனி, கலிலோன ஜனி, பு4க்தி, முக்தி கல்கு3னு அனி, கீர்தனமுல போ3தி4ஞ்சின, த்யாக3ராஜ கரார்சித!
- நீ ரு2ணமு தீ3ர்ப நா தரமா?
தாசரதீ!
- ஆசை தீர, தூர தேசங்களில் ஒளிரச் செய்த, இரசிகரின் முடிமணியே!
- பக்தியற்ற, புலமைத்திறனில் சிறந்தோர், உள்ளப் பாங்கினை அறியமாட்டாரென, கலியினில் பிறந்து, உலக இன்பமும், முக்தியும் உண்டாகுமென, கீர்த்தனங்களைப் புகட்டிய, தியாகராசனின் கரங்களினால் தொழப் பெற்ற, தாசரதீ!
- உனது கடனைத் தீர்க்க என்னால் இயலுமா?
(dASarathI nI RNamu - tODi)
Top
ராம!
- தப்பி, ப்3ரதிகி, போவ தரமா, கலிலோ?
- முப்புன, விஷய தடாகமுன முனுக3க, த்3ரு2ட4 மனஸை, தப்பி, ப்3ரதிகி, போவ தரமா?
- கஞ்சு மொத3லு, லோஹ த4ன, கனகமுலனு ஜூசி, விஷமு அஞ்சு, மரியு, பெஞ்சிக அனுசு எஞ்சி, அண்டனி மனஸை, தப்பி, ப்3ரதிகி, போவ தரமா?
- நங்க3 நாசுல மானகு3, அங்க3 வஸ்த்ரமுல பா3க3கு3, முங்க3ருலனு கனி, அந்தரங்க3முனனு ஆஸி1ஞ்சக, தப்பி, ப்3ரதிகி, போவ தரமா?
- ஜாஜி, மல்லெ, மந்தா3ர, ஸரோஜமுலனு, மனஸார, ராஜ பத2முசே, த்யாக3ராஜ நுதுனி பூஜிஞ்சக, தப்பி, ப்3ரதிகி, போவ தரமா?
இராமா!
- தப்பிப் பிழைத்துப் போகத் தரமா, கலியினில்?
- முதுமையில், விடயங்களெனும் தடாகத்தினில் மூழ்காது, திடமான மனத்தினனாகி, தப்பிப் பிழைத்துப் போகத் தரமா? (அல்லது)
- கொடிய, விடயங்களெனும் தடாகத்தினில் மூழ்காது, திடமான மனத்தினனாகி, தப்பிப் பிழைத்துப் போகத் தரமா?
- வெண்கலம் முதலாக, உலோகச் செல்வமாகிய பொன் ஆகியவற்றைக் கண்டு, நஞ்சு எனவும், மேலும், கலவோடெனவும் எண்ணி, தீண்டாத மனத்தினனாகி தப்பிப் பிழைத்துப் போகத் தரமா?
- பாசாங்கு செய்வோரின் இனிமையிலும், (பெண்களின்) அங்க, ஆடை ஒயிலிலும், மயிர்ச் சுருளல்களையும் கண்டு, உள்ளத்திலும் ஆசைப்படாது, தப்பிப் பிழைத்துப் போகத் தரமா?
- சாதி மல்லி, மல்லிகை, மந்தாரம், தாமரை மலர்களினால் உளமார, உயர் பக்தி நெறியினில், தியாகராசன் போற்றுவோனை வழிபடாது (நமனிடம்) தப்பிப் பிழைத்துப் போகத் தரமா?
(tappi bratiki - tODi)
Top
ஓ மனஸா!
- கோடி நது3லு, த4னுஷ்கோடிலோன உண்ட3க3, ஏடிகி திரிகெ3த3வே!
- ஸூடிக3, ஸ்1யாம ஸுந்த3ர மூர்தினி, மாடி மாடிகி ஜூசே மஹாராஜுலகு, கோடி நது3லு, த4னுஷ்கோடிலோன உண்ட3க3, ஏடிகி திரிகெ3த3வே!
- க3ங்க3 நூபுரம்பு3னனு ஜனிஞ்செனு.
- ரங்க3னி காவேரி கனி ராஜில்லெனு.
ஓ மனமே!
- கோடி நதிகள் (ராமனின்) வில் நுனியிலிருக்க, ஆறுகளுக்குத் திரிகின்றாயே!
- நேரிடையாக, கார்முகில் வண்ண எழிலுருவத்தோனை, அவ்வப்போது காணும் சான்றோருக்கு, கோடி நதிகள் (ராமனின்) வில் நுனியிலிருக்க, ஆறுகளுக்குத் திரிகின்றாயே!
- கங்கை (அவன்) திருவடியில் பிறந்தாள்.
- அரங்கனை, காவேரி கண்டு, புகழ்பெற்றாள்.
(kOTi nadulu - tODi)
Top
த்யாக3ராஜ ஸன்னுத!
- கத்3த3னு வாரிகி, கத்3து3 கத்3த3னி மொரலனிடு3, பெத்3த3ல மாடலு, நேடு3 அப3த்3த4மௌனோ?
- நித்3து3ர நிராகரிஞ்சி, முத்3து3க3 தம்பு3ர பட்டி, ஸு1த்3த4மைன மனஸுசே, ஸு-ஸ்வரமுதோ, பத்3து3 தப்பக ப4ஜியிஞ்சு, ப4க்த பாலனமு ஸேயு, தத்3த3ய-ஸா1லிவி நீவு.
தியாகராசன் போற்றுவோனே!
- உண்டென்போருக்கு, உண்டுண்டென முறையிடும், பெரியோரின் சொற்கள் இன்று பொய்யாகுமோ?
- உறக்கத்தினைப் புறக்கணித்து, அழகாக தம்புரா பிடித்து, தூய உள்ளத்துடனும், இனிய சுரத்துடனும், நியமம் தவறாது, பஜனை செய்யும் தொண்டர்களைப் பேணும் அக் கருணையுள்ளத்தோன் நீ.
(kaddanu vAriki - tODi)
Top
மனஸ!
- த்யாக3ராஜு மாட வினி, கட3 தேர ராதா3?
- எட3 லேக, ப4ஜன ஜேஸி, நீயெட3 கல்கு3, நிஜ, த3ப்3ப3ரல தெலிஸி, கட3 தேர ராதா3?
- க2ல சித்த, 2லௌகிகமு அனே, ஸ்1ரு2ங்க2லமந்து3 த3க3லகனே, உலூக2ல ப3த்3து4னிகி நிஜ தா3ஸுடை3, வெலஸில்லு.
மனமே!
- தியாகராசனின் சொல்லினைக் கேட்டு கடைத்தேறலாகாதா?
- இடைவிடாது பஜனை செய்து, உன்னிடம் உள்ள உண்மை, பொய்களினைத் தெரிந்து, கடைத்தேறலாகாதா?
- இழிந்த எண்ண, உலகியல் எனும் சங்கிலியினில் சிக்காது, உரலில் கட்டுண்டவனின் உண்மைத் தொண்டனாகித் திகழ்வாய்.
(kaDa tEra - tODi)
Top
- ஸ்ரீ ராம ஸ்வாமி கருண லேனி வாரு, இலலோ, ஏமி ஜேஸிதேனேமி?
- காம, மோஹ தா3ஸுலை, ஸ்ரீ ராமுனி கட்டு தெலிய லேனி வாரு, இலலோ, ஏமி ஜேஸிதேனேமி?
- ஸவமு ஜேஸிதேனேமி?
- கலிமினி, புத்ரோத்ஸவமு கலிகி3தேனேமி?
- பு4விலோ அன்ய பீ3ஜ ஜனிதுனி கொனியேமி?
- மேட3 கட்டிதேனேமி?
- அந்து3ன லாந்த3ரு ஜோடு3 கட்டிதேனேமி?
- சேடி3யலனு மெப்பிஞ்ச தெலிஸிதேனேமி?
- இம்மு கலிகி3தேனேமி?
- இல்லாலிகி ஸொம்மு பெட்டிதேனேமி?
- கம்ம வில்து கேளினி தெலிஸியேமி?
- ராஜ்யமேலிதேனேமி?
- ப3ஹு ஜனுலலோ பூஜ்யுலைதேனேமி?
- ஆஜ்ய ப்ரவாஹமுதோ அன்னமிடி3தேனேமி?
- கு3ருவு தானைதேனேமி?
- கண்டிகி மேனு கு3ருவை தோசிதேனேமி?
- வர மந்த்ரமு அன்யுலகு உபதே3ஸி1ஞ்சிதேனேமி?
- வர த்யாக3ராஜ நுத, ராமுனி த3ய லேனி வாரு, இலலோ, ஏமி ஜேஸிதேனேமி?
- இராம சுவாமியின் கருணையற்றோர், புவியினில், என்ன செய்தாலென்ன?
- காம, மோகத்திற்கு அடிமைகளாகி, இராமனின் கட்டினை அறியாதவர், புவியினில், என்ன செய்தாலென்ன?
- வேள்விகள் இயற்றினாலென்ன?
- சொத்துக்கு மக்கட் செல்வம் உண்டானாலென்ன?
- புவியில் பிறருக்குப் பிறந்தவனை தத்து எடுத்தாலென்ன?
- மேடை கட்டினாலென்ன?
- அதனில் லாந்தர் ஜோடு கட்டினாலென்ன?
- வனிதையரை மெச்சத் தெரிந்தாலென்ன?
- உலக இன்பங்கள் உண்டானாலென்ன?
- இல்லாளுக்கு நகைகள் இட்டாலென்ன?
- கரும்பு வில்லோன் கேளிக்கைகள் தெரிந்தாலென்ன?
- அரசாண்டாலென்ன?
- வெகு மக்களிடை வணங்குதற்குரியோன் ஆனாலென்ன?
- நெய் வழிந்தோட அன்னமிட்டாலென்ன?
- தான் ஆசான் ஆகினாலென்ன?
- கண்ணுக்குத் (தனது) மேனி செழிப்பாகத் தோன்றினாலென்ன?
- உயர் மந்திரங்களை மற்றவருக்கு உபதேசித்தாலென்ன?
- உயர் தியாகராசன் போற்றும், இராமனின் தயையற்றோர், புவியினில், என்ன செய்தாலென்ன?
(Emi jEsitE - tODi)
Top
ஓ மனஸ!
- எந்து3கு சபலமு? வினவே நா மனவினி.
- முந்த3டி வலெ, ப4க்துல போஷிஞ்சுடகு, எந்து3 தா3கி3னாடோ3! ஈட3கு ரானு, என்னடு3 த3ய வச்சுனோ!
- அல நாடு3, கனக கஸி1பு, நிண்டா3ரு சலமு ஜேஸி, ஸுதுனி, ஸகல பா3த4ல பெட்டக3, மதி3னி தாளக, நிஸ்1சலுடை3ன, ப்ரஹ்லாது3 கொரகு, கம்ப3மு லோபல உண்ட3க3 லேதா3?
- முனு, வாரி வாஹ வாஹன தனயுடு3, மத3முன, ரவிஜுனி சால கொட்டுட ஜூசி, மனஸு தாள ஜால லேக, ப்ரேமமுன, பாலனமு ஸேய, தாள தருவு மருகு3ன நில்வக3 லேதா3?
- ஆ ரீதி, நேடு, எந்து3 தா3கி3னாடோ3! ஈட3கு ரானு, என்னடு3 த3ய வச்சுனோ!
- தொலி ஜன்மமுல நாடு3 ஜேஸின து3ஷ்கர்மமுலனு அணக3னு ஸேய,
- ஆரு ஸ1த்ருலனு பட்டி, பொடி3 ஸேய, அதி3யு கா3க,
- இலனு, சஞ்சல விரஹித நிஜ ப4க்த ஜனுலனு, த்யாக3ராஜுனி ரக்ஷிம்ப,
- நேடு, எந்து3 தா3கி3னாடோ3! ஈட3கு ரானு, என்னடு3 த3ய வச்சுனோ!
ஓ மனமே!
- ஏன் தடுமாற்றம்? கேள், எனது வேண்டுகோளினை.
- முன்னாள் போன்று, தொண்டர்களைப் பேணுவதற்கு எங்கு ஒளிந்துள்ளானோ! இங்கு வர என்று தயை வருமோ!
- அன்று, இரணியகசிபு, நிறைய சூழ்ச்சிகள் செய்து, (தனது) மகனுக்கு அனைத்து தொல்லைகளும் இழைக்க, உள்ளத்தினில் பொறுக்காது, உறுதியான பிரகலாதனுக்காக, கம்பத்தின் உள்ளே யிருக்கவில்லையா?
- முன்னம், முகில் வாகனன் மைந்தன், செருக்கோடு, பரிதி மைந்தனை மிக்குப் புடைக்கக் கண்டு, மனது பொறுக்க இயலாது, கனிவுடன் காப்பதற்கென, பனை மரத்தின் மறைவினில் நிற்கவில்லையா?
- அவ்வகையில், இன்று எங்கு ஒளிந்துள்ளானோ! இங்கு வர என்று தயை வருமோ!
- முற்பிறவிகளின் போது செய்த தீய செயல்களை அடக்கவும்,
- ஆறு உட்பகைவரைப் பற்றித் தூளாக்கவும், அஃதன்றி,
- இவ்வுலகில் சஞ்சலமற்ற, உண்மையான தொண்டர்களையும், தியாகராசனையும் காக்கவும்,
- இன்று எங்கு ஒளிந்துள்ளானோ! இங்கு வர என்று தயை வருமோ!
(endu dAginADO - tODi)
Top
நாராயண!
- நஸ்1வரமைன, த4ன, அஸ்1வமுலனு, நே விஸ்1வஸிஞ்ச; ஹரி ஹரி.
- கோடீஸு1ல கனி, ஸாடி லேனி, பல்கு போ3டினி ஒஸகி3, மும்மாடிகி, வேட3னு.
- ஆஸ1 பிஸா1ச ஆவேஸ1மு கலுகு3, த4னேஸு1ல காசெடு3 தே3ஸ1மு ஏலனு?
- தூ3ரெடு3 பனுலகு தூ3ரெத3ரு; கட3 தேரெடு3 பனுலனு தேரே மனஸுகு.
- தொலி தா ஜேஸின ப2லமே கலத3னி, இலனு எஞ்சனி மர்த்யுல செலிமி எந்து3கு?
- நோரு எப்புடு3, நீ பேரே பலுகனி; வேரே எவருன்னாரே?
- மித்ர குலேஸ1 சரித்ர (ராமாயண) ரஸிக ஜன மித்ரமு கோருது3.
- நா ஜூபுலு, மீ நாஜூகு தனமுனே ஜூட3னி.
நாராயணா!
- நிலையற்ற, செல்வம், வாகனங்களை நான் ஒரு நாளும் நம்பமாட்டேன்.
- கோடீசுவரர்களைக் கண்டு, ஒப்பற்ற நாமகளினை யளித்து, உறுதியாக வேண்ட மாட்டேன்.
- ஆசைப் பிசாசுகளின் ஆவேசம் கொண்ட செல்வந்தர்களைப் பேணும் நாடு (எனக்கு) எதற்கு?
- வெறுக்கத் தக்கப் பணிகளில் ஈடுபடுவர்; கடைத் தேறும் பணிகளைக் கொண்டுவாராரே உள்ளத்திற்கு.
- முன்னம் தான் செய்வினையின் பயனே கிடைக்குமென இங்கு எண்ணாத மனிதரின் நேசமெதற்கு?
- (எனது) நாவெப்போழ்தும் உனது பெயரினையே உரைக்கட்டும்; வேறே எவருளரே?
- பரிதி குலத் தலைவனின் சரிதத்தினை (ராமாயணத்தினை) விரும்புவோரின் நட்பு கோருவேன்.
- எனது பார்வை உமது நேர்த்தியினையே காணட்டும்.
(nArAyaNa hari - yamunA kalyANi)
Top
- ப4ஜரே ரகு4வீரம்;
- அன்னியு பனிகொதி3கெ3னா? இடு அடு 2 திரிகி3ன தெலிஸெனா?
- நீவு து3ராஸல ரோஸி, பர நிந்த3னலு எல்லனு பா3ஸி,
- பஞ்சேந்த்3ரியமுலனு அணசு; ப்ரபஞ்ச ஸுக2மு விஸமு அனுசு,
- வேரு பனுலகு போக, கோ3-முக2 வ்யாக்4ரமு சந்த3மு காக,
- தப்பு தண்டலனு மானி, ப4வ தரணமுனனு மதி3 பூனி,
- கர்மமு ஹரிகி ஒஸங்கி3, ஸத்-கார்யமுலந்து3 உப்பொங்கி3,
- ப4க்தி மார்க3முனு தெலிஸி, நிஜ பா4க3வதுல ஜத கலஸி,
- மாயா ரஹிதுனி கொலிசி, நீ மனஸுன ராமுனி தலசி,
- காமாது3லனு ஏகிஞ்சி, நீ கார்யமுலனு ஸாதி4ஞ்சி,
- ராஜ அதி4புகா3 வெலஸி, த்யாக3ராஜ வரது3ட3னி தெலிஸி,
- ப4ஜரே ரகு4வீரம்.
- பஜிப்பாயடா, இரகுவீரனை;
- அனைத்துமே பணிக்குதவுமா?
- இங்கும் அங்கும் திரிந்தும் தெரிந்ததா?
- நீ தீய ஆசைகளைத் துறந்து,
- பிறரைப் பழித்தல் யாவற்றினையும் விடுத்து,
- ஐம்புலன்களை யடக்கு;
- பிரபஞ்ச சுகம் நஞ்சென (எண்ணி),
- வேறு பணிகளுக்குச் செல்லாது,
- பசு-முகப் புலி போன்றாகாது,
- தப்பு தண்டல்களை விடுத்து,
- பிறவிக் கடல் கடத்தலை உள்ளத்தில் விரதம் பூண்டு,
- கருமங்களை அரிக்கு அர்ப்பித்து,
- நற்பணிகளில் பெருமிதமுற்று,
- பக்தி நெறியினைத் தெரிந்து,
- நிசமான பாகவதர்களுடன் இணக்கம் கொண்டு,
- மாயையினுக்கு அப்பாற்பட்டோனைத் தொழுது,
- உனது மனத்தினில் இராமனை நினைந்து,
- காமம் ஆகியவற்றினைப் பழித்து,
- உனது காரியங்களினை நிறைவேற்றி,
- மன்னாதி மன்னனாக விளங்கியவனே தியாகராசனுக்கருள்வோனெனத் தெரிந்து,
- பஜிப்பாயடா, இரகுவீரனை.
(bhajarE raghuvIraM - kalyANi)
Top
மனஸா!
- அஜ, ருத்3ராது3லகு, பூ4-ஸுராது3லகு, அருதை3ன, ராம ப4ஜன ஸேயவே, பரம ப4க்திதோ;
- நாத3 ப்ரணவ ஸப்த ஸ்வர, வேத3, வர்ண, ஸா1ஸ்த்ர, புராணாதி3 சதுஷ்-ஷஷ்டி களல பே4த3மு கலிகே3, மோத3கர ஸ1ரீரமெத்தி, முக்தி மார்க3முனு தெலியனி, வாத3 தர்கமேல?
மனமே!
- பிரமன், உருத்திராதியருக்கு, அந்தணர் ஆகியோருக்கும் அரிதான, இராம பஜனை செய்வாயடி, பரம பக்தியுடன்;
- நாதோங்கார ஏழ் சுரம், மறை, மொழி, சாத்திரம், புராணம் ஆகிய அறுபத்து நான்கு கலைகள் மலரும், மகிழ்வூட்டும், (மனித) உடலெடுத்து, முத்தி நெறி தெரியாத வாத, தருக்கமேன்?
(bhajana sEyavE - kalyANi)
Top
மனஸா!
- நிஜமுக3 பல்கு -
- நிதி4 சால ஸுக2மா? ராமுனி ஸன்னிதி4 ஸேவ ஸுக2மா?
- த3தி4 நவனீத க்ஷீரமுலு ருசியோ? தா3ஸ1ரதி2 த்4யான ப4ஜன ஸுதா4 ரஸமு ருசியோ?
- த3ம ஸ1மமு அனு க3ங்கா3 ஸ்நானமு ஸுக2மா? கர்த3ம து3ர்விஷய கூப ஸ்நானமு ஸுக2மா?
- மமத ப3ந்த4ன யுத நர ஸ்துதி ஸுக2மா? ஸுமதி, த்யாக3ராஜ நுதுனி கீர்தன ஸுக2மா?
மனமே!
- உண்மையாகச் சொல்வாய் -
- செல்வம் மிக்கு சுகமாமோ அன்றி இராமனின் சன்னிதி சேவை சுகமாமோ?
- தயிர், வெண்ணெய், பால் ஆகியவை சுவையாமோ? தாசரதியின் தியானம், பஜனையெனும் அமுதச் சாறு சுவையாமோ?
- மனவொடுக்கம், மனவமைதியெனும் கங்கை நீராடல் சுகமாமோ? அருவருப்பான, தீய விடயங்களெனும் கிணற்று நீராடல் சுகமாமோ?
- அகந்தைக் கட்டுண்ட மனிதர்களின் புகழ்ச்சி சுகமாமோ? நல்லுள்ள, தியாகராசன் போற்றுவோனின் கீர்த்தனை சுகமாமோ?
(nidhi cAla - kalyANi)
Top
ராம!
- ஏ வரமடு3கு3து3ரா நின்னு?
- ஈ ஜக3தினி கல ஸுக2 ராஜினி, மரி, நிர்ஜர ராஜ பத3ம்பு3ல, நேனு ஈ ஜன்மமுன அடு3க3னு;
- த்யாக3ராஜுனி மதி3கெப்புடு3, ராஜ பத2முலைதே ஜயமௌ கானி.
இராமா!
- என்ன வரம் வேண்டுவேனய்யா, உன்னிடம்?
- இப்புவியினிலுள்ள இன்பங்களையோ, அன்றி, இந்திர பதவியையோ, நானிந்தப் பிறவியினில் வேண்டேன்;
- தியாகாராசனின் உள்ளத்திற்கெப்போழ்தும், (பக்தியெனும்) அரச பாட்டையானால் மட்டுமே, வெற்றி நண்ணும்.
(E varamaDugudu - kalyANi)
Top
த்யாக3ராஜ நுத!
- அனுராக3மு லேனி மனஸுன ஸு-ஞானமு ராது3;
- க4னுலைன அந்தர்-ஞானுலகெருகே கானி;
- வக3 வக3கா3 பு4ஜியிஞ்சே வாரிகி த்ரு2ப்தியௌ ரீதி, ஸ-கு3ண த்4யானமு பைனி ஸௌக்2யமு.
தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
- அனுராகமற்ற மனத்தினில் மெய்ஞ்ஞானம் வாராது;
- சான்றோராகிய உள்நோக்கு ஞானியருக்கே தெரியும்;
- வகை வகையாக புசிப்போருக்கு நிறைவுண்டாவது போன்று, சகுணத் தியானத்தினில் சௌக்கியமும்.
(anurAgamu lEni - sarasvati)
Top
ராம!
- துண்ட விண்டி வானி மொத3லைன, மதா3து3ல 3கொட்டி, நேல கூல ஜேயு, நிஜ ப3ண்டு ரீதி கொலுவு, த்யாக3ராஜுனிகே, இய்யவய்ய.
- ரோமாஞ்சமனு க4ன கஞ்சுகமு,
- ராம ப4க்துட3னு முத்3ர பி3ள்ளயு,
- ராம நாமமனு வர க2ட்3க3மு -
- இவி ராஜில்லுனய்ய
இராமா!
- இச்சை, செருக்கு ஆகியவற்றைப் புடைத்து, மண் கவ்வச் செய்யும், உண்மையான (அரச) சேவகனாக, தியாகராசனுக்கு சேவையருளுமய்யா
- மெய்ப் புல்லரிப்பெனும் கனமான கவசம்,
- இராமனின் தொண்டனெனும் முத்திரை வில்லை,
- இராம நாமமெனும் உயரிய வாள் -
- இவை திகழுமய்யா (தியாகராசனின் மீது)
(baNTu rIti - haMsa nAdaM)
Top
த4ர்மாத்மக!
- த4ன, தா4ன்ய தை3வமு நீவையுண்ட3க3, து3ர்மார்க3 சர அத4முலனு, தொ3ர நீவன ஜாலரா.
- பலுகு போ3டினி, ஸப4லோன, பதித மானவுலகொஸகு3 க2லுலனு எச்சட பொக3ட3னி, த்யாக3ராஜ வினுத!
அறவுருவே!
- செல்வம், உணவுப் பொருட்கள் வழங்குவோன் நீயாகவிருக்க,
- கலைமகளினை, அவையினில், (அறத்தினின்றும்) வீழ்ந்த மானவருக்களிக்கும் கடையரை எங்கும் புகழாத நான்,
தீய நெறி செல்லும் இழிந்தோரை 'துரை நீ'யென மாட்டேனய்யா
(durmArga cara - ranjani)
Top
க3ருட3 க3மன!
- ஞானமொஸக3 ராதா3?
- நீ நாமமு சே, நா மதி3 நிர்மலமைனதி3;
- பரமாத்முடு3, ஜீவாத்முடு3, பது3-நாலுகு3 லோகமுலு, நர, கின்னர, கிம்புருஷுலு, நாரதா3தி3 முனுலு, வாரமு, தானனே ஞானமொஸக3 ராதா3?
கருடன் ஏறுவோனே!
- மெய்யறிவு அருளலாகாதா?
- உனது நாம பஜனை செய்து, எனதுள்ளம் மாசற்றதாகியது;
- பரமான்மா, சீவான்மா, பதினான்கு உலகங்கள், மனிதர், கின்னர, கிம்புருடர்கள், நாரதர் முதலான முனிவர்கள், எவ்வமயமும் தானேயெனும் மெய்யறிவு அருளலாகாதா?
(jnAnamosaga - pUri kalyANi)
Top
மனஸா!
- ஸ்ரீ ராம ப4ஜன, பர லோக ஸாத4னமே;
- ஸ்மர, லோப4, மோஹ ஆதி3 பாபுலனு, ஸ்மரியிஞ்சகே;
- ஜனன ஆதி3 ரோக3, ப4யாது3லசே,
- ஜக3மந்து3 கல்கு3, து3ராஸலசே,
- தனய ஆதி3 பா3ந்த4வுல ப்4ரமசே, தக3லனு ஈது3.
மனமே!
- இராமனின் பஜனை, மறுமைக்குச் சாதனமடி;
- காமம், பேராசை, மயக்கம் ஆகிய பாவிகளை நினையாதேயடி;
- பிறவி முதலாக, நோய்களெனும் பேரச்சங்களிலும்,
- உலகினில் ஏற்படும் தீய ஆசைகளிலும்,
- (மனைவி) மக்கள் முதலாக, சுற்றமெனும் திகைப்பினிலும் சிக்கவிடாது;
(para lOka sAdhanamE - pUri kalyANi)
Top
ராமய்ய!
- ஸந்தே3ஹமுனு தீர்புமய்ய;
- நந்த3 அர்சித, பத3 யுக3முலு மேலோ?
- நாக3ரீகமகு3 பாது3கா யுக3ம்பு3லு மேலோ?
- வர மௌனுலெல்ல சரணம்பு3லனு ஸ்மரியிம்ப, நீது3 பத3மு ஒஸங்கெ3னே;
- ப4ரத அர்சன சே, பாது3கலு, த4ர, நின்னு ஒஸங்கே3.
இராமய்யா!
- ஐயத்தினைத் தீர்ப்பீரய்யா;
- நந்தர் தொழுத (உனது) திருவடி இணை மேலோ?
- நாகரீகமான (உனது) பாதுகை இணை மேலோ?
- உயர் முனிவர்கள் யாவரும் (உனது) திருவடிகளினை சிந்திக்க, உனது பதத்தினை யளித்தனவே;
- பரதன் தொழுத பாதுகைகளோ, அணிவோன் உன்னை யளித்தனவே.
(உனது பதம் - வைகுண்டம்)
(sandEhamunu - rAmapriya)
Top
த்யாக3ராஜ வினுத!
- கடு3பு கொரகே, அரவை நாலுகு3 களல நேர்சினா, முனு ஜேஸினதி3 கா3க, ஏமி?
- கலிமி லேமுலகு காரணம்பு3 நீவே;
- கோரி, நூவுல கொண்ட3 தீஸி, ஸிங்க3ரி, முனி கூர்மி பு4ஜிஞ்செனா?
- வைரி தம்முடு3, ஸாரமைன ரங்க3னி, இல்லு ஜேர்செனா?
தியாகராசனால் போற்ற பெற்றோனே!
- வயிற்றுக்காக, அறுபத்து நான்கு கலைகள் கற்றாலும், முன்பு செய்தவை யன்றி மற்றென்ன?
- செல்வத்திற்கும் வறுமைக்கும் காரணம் நீயே.
- கோரி எள் மலையைப் பெற்று, சிங்கரி முனி, விரும்பியருந்தினானா?
- (உனது) பகைவனின் தம்பி, அருமையான அரங்கனை வீடு சேர்த்தானா?
(பகைவனின் தம்பி - விபீடணன்)
(kaLala nErcinA - dIpakaM)
Top
த்யாக3ராஜ நுத!
- பர லோக ப4யமு லேக, ப4வ பாஸ1 ப3த்3து4லையேரு;
- கரி, வாஜி, ஸ்1ரு2ங்கா3ர ஆராம, ஸி1பி3க ஆது3லெல்ல,
- மனகே கலிகெ3னனி, பர லோக ப4யமு லேக, ப4வ பாஸ1 ப3த்3து4லையேரு;
- கொன்ன காந்தலனு, கன்ன பி3ட்3ட3லனு, வன்னெ சீரலனு, வான கு3டி3ஸெலனு,
- தின்னகா3 கனி, தை3வ லோகமனி,
- தன்னுகொள்ளலோ, பர லோக ப4யமு லேக, ப4வ பாஸ1 ப3த்3து4லையேரு.
தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
- மறுமையின் அச்சமின்றி, உலக வாழ்க்கைச் சுருக்குக் கயிற்றினில் கட்டுண்டனர்
- கரி, பரி, சிங்கார வனங்கள், சிவிகை, ஆகியவை யாவும்
- தமக்கேயுண்டானவையென்று, மறுமையின் அச்சமின்றி, உலக வாழ்க்கைச் சுருக்கு கயிற்றினில் கட்டுண்டனர்
- கொண்ட மனைவியரையும், ஈன்ற மக்களையும், வண்ணச் சேலைகளையும், மழைக் குடில்களையும்
- திண்ணமெனக் கண்டு, (இதனையே) வானுலக மென்றெண்ணி,
- இழுபறிகளிலே, மறுமையின் அச்சமின்றி, உலக வாழ்க்கைச் சுருக்குக் கயிற்றினில் கட்டுண்டனர்
(para lOka bhayamu - mandAri)
Top
ஓ மனஸா!
- ஸாரமே கானி, அன்ய மார்க3 விசாரமு ஏடிகே?
- வாரு வீரு, தெலிய லேக பல்கு வார்தலு, வினனேலே?
- ராம நாமமு ஸாரமே கானி, அன்ய மார்க3 விசாரமு ஏடிகே?
- ரகு4 வீருனி நாம ஸுதா4 ரஸமுனனு, ஸாரெகு பானமு ஜேஸி,
- 'நாராயண நாராயண' அனுசுனு, வாரமு,
- ஸ்ரீ நாரத3 முனி, வல்மீக ஜாதுனிகி, கூரிமினி, உபதே3ஸி1ஞ்ச லேதா3?
- ஸீதா வருனி நாம ஸுதா4 ரஸ பானமு, நிரதமுனனு ஜேஸி,
- 'ஹரி ஹரி ஹரி' அனுசு ஸந்ததம்பு3னு
- ஸு1க ப்3ரஹ்ம, பரீக்ஷித்துகு ஒஸக3 லேதா3?
- அதி நேமமுதோ, நாமாம்ரு2த பானமு, ஏமரகனு ஜேஸி,
- 'ராம ராம ராம' அனுசு ஸததமு,
- ஸி1வுடு, கௌ3ரிகி, ஆ மஹிமலனு, ஆ ரஹஸ்யமுலு, அதி ப்ரேமனு உபதே3ஸி1ஞ்ச லேதா3?
ஓ மனமே!
- சாரமேயற்ற பிற நெறிகளின் எண்ணம் எதற்கடி?
- அவரும், இவரும், அறியாது பேசும் சொற்களைக் கேட்பதேனடி?
- இராம நாமமே சாரமேயன்றி, பிற நெறிகளின் எண்ணம் எதற்கடி?
- இரகு வீரனின் நாம அமிழ்துச் சாற்றினை, எவ்வமயமும் பருகி,
- 'நாராயண, நாராயண'வென்று (செபித்துக்கொண்டு) நாளும்,
- உயர் நாரத முனி, (இராம நாமத்தினை) புற்றிலுதித்தோனுக்குக் கனிவுடன் உபதேசிக்கவில்லையா?
- சீதை மணாளனின், நாம அமிழ்துச் சாற்றினை இடையறாது பருகி,
- 'அரி, அரி, அரி'யென்று (செபித்து), எவ்வமயமும்,
- சுகப்பிரும்மம் (அரி நாமத்தினை) பரீட்சித்துக்கு அளிக்கவில்லையா?
- மிக்கு நியமத்துடன், (இராம) நாம அமிழ்தினை மறவாது பருகி,
- 'இராமா, இராமா, இராமா'யென (செபித்து), எவ்வமயமும்,
- சிவன், கௌரிக்கு, அம்மகிமைகளினையும், அம்மருமங்களினையும், மிக்கு அன்புடன் உபதேசிக்கவில்லையா?
(sAramE kAni - pantuvarALi)
Top
ஓரி!
- ஸி1வ ஸி1வ ஸி1வயன ராதா3?
- ப4வ ப4ய பா3த4லனணசுகோ ராதா3?
- காமாது3ல தெக3 கோஸி,
- பர பா4மல, பருல த4னமுல ரோஸி,
- பாமரத்வமுனு எட3பா3ஸி,
- அதி நேமமுதோ, பி3ல்வ அர்சன ஜேஸி,
- ஸி1வ ஸி1வ ஸி1வயன ராதா3?
- ஸஜ்ஜன க3ணமுல காஞ்சி,
- முஜ்-ஜக3தீ3ஸ்1வருலு அனி மதினெஞ்சி,
- லஜ்ஜா ஆது3ல தொலகி3ஞ்சி,
- தன ஹ்ரு2ஜ்-ஜலஜமுனனு தா பூஜிஞ்சி,
- ஸி1வ ஸி1வ ஸி1வயன ராதா3?
- ஆக3மமுல நுதியிஞ்சி,
- ப3ஹு பா3கு3 லேனி பா4ஷலு சாலிஞ்சி,
- பா4க3வதுலதோ போஷிஞ்சி,
- வர த்யாக3ராஜ ஸன்னுதுட3னி எஞ்சி,
- ஸி1வ ஸி1வ ஸி1வயன ராதா3?
அன்பர்காள்!
- 'சிவ சிவ சிவ' யெனலாகாதா?
- (அதனால்) பிறவி அச்சமெனும் தொல்லைகளை அடக்கலாகாதா?
- இச்சை ஆகியவற்றினை அற வீழ்த்தி,
- பிற மாதர், பிறர் செல்வத்தினை வெறுத்தொதுக்கி,
- அறிவீனத்தினை யொழித்து,
- மிக்கு நியமத்துடன் வில்வ அருச்சனை செய்து,
- 'சிவ சிவ சிவ' யெனலாகாதா?
- நன்மக்களின் இணக்கம் கொண்டு,
- (சிவன்) மூவுலகங்களின் ஈசனென மனத்தினிலெண்ணி,
- நாணம் முதலானவற்றை விடுத்து,
- தனது இதயக் கமலத்தினில் தான் (அவனைத்) தொழுது,
- 'சிவ சிவ சிவ' யெனலாகாதா?
- ஆகமங்களைப் போற்றி,
- முற்றிலும் பயனற்ற சொற்கள் போதுமென்று,
- பாகவதர்களுடன் (கூடி) (இறைவனை) கொண்டாடி,
- தியாகராசன் சிறக்கப் போற்றும் மேலோனெனக் கருதி,
- 'சிவ சிவ சிவ' யெனலாகாதா?
(Siva Siva - pantuvarALi)
Top
மனஸா!
- வாடே3ரா தை3வமு;
- ஆடி3ன மாடலு தப்படு3 அனுசுனு, ஆ-சந்த்3ர-அர்கமுக3 கீர்தி கலிகி3ன, வாடே3ரா தை3வமு;
- த3ண்டி3 ரக்கஸுல மத3மு அணசனு,
- ஆக2ண்ட3ல ஆதி3 ஸுர கோட்லனு, பூ4 மண்ட3ல ஸுஜனுல பாலிம்பனு,
- கோத3ண்ட3 பாணி ரூபமுதோ வெலஸின, வாடே3ரா தை3வமு;
- தா3ரி தெலிய லேனி அக்3ஞுலகு, ப4வ நீரதி4 தா3டி, மோக்ஷமு அந்து3டகு,
- நீரஜ அரி த4ருடு3பதே3ஸி1ஞ்சே,
- தாரக நாமமுதோனு, வெலஸின வாடே3ரா தை3வமு;
- தா4த்ரு2 வினுதுடை3ன,
- த்யாக3ராஜுனி சேத பூஜலு அந்தி3,
- பா3கு3க3, ப்ரத்3யோதனான்வயமுனனு ஜனிஞ்சி,
- ஸீதா பதியனி பேரு கலிகி3ன, வாடே3ரா தை3வமு.
மனமே!
- அவனே தெய்வமடா;
- சொன்ன சொல் தவறானென, சந்திர சூரியர் தோன்றிய நாள் முதலாக புகழ் படைத்த அவனே தெய்வமடா;
- எண்ணற்ற அரக்கர்களின் செருக்கினையொடுக்கவும்,
- இந்திரன் முதலாக வானோர் சமூகத்தினையும், புவி மண்டலத்திலுள்ள நன்மக்களையும் பேணுதற்கும்,
- கோதண்டபாணி உருவத்துடன் திகழும் அவனே தெய்வமடா;
- நெறி தெரியாத அறிவிலிகளுக்கு, பிறவிக் கடலினைக் கடந்து மோக்கமுறுதற்கு,
- கமலப் பகையினை அணிவோன் உபதேசிக்கும்,
- (ராம எனும்) தாரக நாமத்துடன் திகழும் அவனே தெய்வமடா
- பிரமனால் போற்றப் பெற்றோனாகிய,
- தியாகராசனின் கைகளினால் வழிபாட்டினைப் பெற்று,
- சிறக்க பரிதி குலத்தில் பிறந்து,
- 'சீதாபதி' யென பெயர் படைத்த அவனே தெய்வமடா.
(vADErA daivamu - pantuvarALi)
Top
ரகு4 வர!
- தல்லி தண்ட்3ருலு, அன்ன தம்முலு உன்னா, பொலதிகி ஒகடு3 புருஷுண்டு3 ஔனா?
- பர தை3வமுலு, பா3கு3 ஸொம்முலு, மங்க3ள ஸூத்ரமுலு ஔனா?
- மனஸுன நீகே மருலு-கொன்னானு.
இரகுவரா!
- பெற்றோரும், உடன் பிறந்தோரும் இருந்தாலும், பெண்ணுக்கு ஒருவன் கணவனாவானா?
- பிற தெய்வங்களும், சிறந்த நகைகளும், தாலிக் கயிறாகுமா?
- உள்ளத்தினில், உன்மீதே காதல் கொண்டேன்.
(raghu vara nannu - pantuvarALi)
Top
ஓ ராம!
- வேத3, ஸா1ஸ்த்ர, புராண வித்3யலசே, பே4த3 வாத3முலு தீரக, ப்4ரமயு வாரல ஜூசி...
- போ4க3முல கொரகு, பு4விலோ, ராஜஸம்முன யாகா3து3லு ஒனரிஞ்சி அலயு வாரல ஜூசி...
- ஈ ஜன்மமுன, நின்னு ராஜி ஜேஸுகொன லேக, ராஜில்லரனி...
- அன்னி கல்லலு அனுசு...
- ஆடி3 பாடி3 வேடி3, நே, சின்ன தனமு நாடே3, நின்னே நெர நம்மினானுரா.
ஓ இராமா!
- மறைகள், சாத்திரங்கள், புராணங்களின் ஏட்டறிவினால், பேத வாதங்கள் தீராது திகைப்போரைக் கண்டு...
- இன்பங்களுக்காக, புவியில், இராசதத்துடன் வேள்விகள் முதலானவை இயற்றி அலைவோரைக் கண்டு...
- இப்பிறவியில், உன்னை ஒப்புக்கொள்ளச் செய்யாது, (மனிதர்) திகழாரென...
- (மற்று) அனைத்தும் உண்மையல்லவென்று...
- ஆடிப் பாடி, வேண்டி, நான் சிறு வயது முதலே, உன்னையே மிக்கு நம்பினேனய்யா.
(ninnE nera - pantuvarALi)
Top
- ராஜில்லின, ஸ்ரீ த்யாக3ராஜ ஸகு2னி மர்மமுலனு, ஈ ஜக3தினி, வின்னவாரிகே, ஜயமு ஜயமு ஜயமனி, நாரத3 முனி வெட3லின ஸு-கு3ணாதிஸ1யமு வினரே!
- ஒளிரும், தியாகராசனுக்கு இனியோனின் (அரியின்) மருமங்களினைச் செவிமடுத்தோருக்கு, இவ்வுலகத்தினில் வெற்றி, வெற்றி, வெற்றியென்று முழங்கி, நாரத முனிவர் எழுந்தருளிய பெருஞ்சிறப்பினைக் கேளீரே!
(nArada muni - pantuvarALi)
Top
- மாயப்ப, ராம ப4க்தி எந்தோ கொ3ப்பரா!
- த்ரிப்படலனு தீர்சி, கண்டி ரெப்ப வலெனு காசு, மாயப்ப, ராம ப4க்தி எந்தோ கொ3ப்பரா!
- லக்ஷ்மி தே3வி வலசுனா?
- லக்ஷ்மணுண்டு3 கொலுசுனா?
- ஸூக்ஷ்ம பு3த்3தி4 க3ல ப4ரதுடு3 ஜூசி ஜூசி ஸொலஸுனா?
- ஸ1ப3ரி எங்கி3லி இச்சுனா?
- சந்த்3ர த4ருடு3 மெச்சுனா?
- அப3ல ஸ்வயம்ப்ரப4கு, தை3வமு, அசல பத3வினி இச்சுனா?
- கபி வாரிதி4 தா3டுனா?
- கலிகி ரோட கட்டுனா?
- அபராதி4 த்யாக3ராஜுகு, ஆனந்த3மு ஹெச்சுனா?
- எமதப்பன் இராமனின் பக்தி எவ்வளவோ உயர்ந்ததடா!
- (மனத்தின்) திரிதல்களைத் தீர்த்து, கண்ணிமைபோல் காக்கும், எமதப்பன் இராமனின் பக்தி, எவ்வளவோ உயர்ந்ததடா!
- அன்றேல்,
- இலக்குமி தேவி மருவுவாளா?
- இலக்குவன் சேவைபுரிவானா?
- நுண்ணறிவுடை பரதன், கண்டு கண்டு மயங்குவானா?
- சபரி எச்சில் கொடுப்பாளா?
- பிறையணிவோன் மெச்சுவானா?
- அபலை சுயம்பிரபையினுக்கு, தெய்வம் நிலையான பதவியளிக்குமா?
- குரங்கு கடலினைத் தாண்டுமா?
- பெண்ணொருத்தி உரலில் கட்டுவாளா?
- குற்றவாளி தியாகராசனுக்கு, ஆனந்தமும் பெருகுமா?
(appa rAma - pantuvarALi)
Top
பரமாத்ம!
- பாலுமாலின பாமருலனொல்ல, ஈ லோகமுலனு, நீ லீலகா3னு ஜூசு, கு3ண ஸீ1லுல, நா பால கல்க3 ஜேஸி, பாலிம்புமய்ய;
- நர, கின்னர, கிம்புருஷ, அஸுர, நிர்ஜர ராஜ, ஸி1வ, ஆதி3 ரமா பதுல, தரு, பூ4-த4ர, அனேக அண்ட3முல, நீ லீலகா3னு ஜூசு, கு3ண ஸீ1லுல, நா பால கல்க3 ஜேஸி, பாலிம்புமய்ய.
பரம்பொருளே!
- சோம்பித்திரியும் மூடர்களை யொறுக்க, இவ்வுலகங்களினை (உனது) திருவிளையாடலாக நோக்கும் நற்பண்பினரை என் பங்கில் உண்டாகச் செய்து, பேணுவாயய்யா;
- மனிதர், கின்னரர், கிம்புருடர், அசுரர், மூப்பற்றோர் அரசன், சிவன், இரமை மணாளன் முதலானோர், மரங்கள், மலைகள், பற்பல அண்டங்களையும், உனது திருவிளையாடலாக நோக்கும் நற்பண்பினரை என் பங்கில் உண்டாகச் செய்து, பேணுவாயய்யா
(lIlagAnu jUcu - divyamaNi)
Top
ஓ ராம!
- தாமராகு நீரு வித4மு ப்ரபஞ்சமு; தத்வமு காது3;
- க3ஜ்ஜ முண்ட்3ல மீத3 தகு3லுகொன்ன ப3ட்ட, க்3ரக்குன தீய வஸ1மா?
- அச்சுக3, ப4வமுன தகு3லுகொன்ன மதி3, வச்சுனா, நீ வத்3த3கு?
ஓ ராமா!
- தாமரை இலை (மீது) நீர் போன்றது உலகம் - உண்மையன்று;
- கழங்கு முட்களின் மீது சிக்கிக்கொண்ட துணி, உடனே எடுக்கவியலுமா?
- அப்படியே, பிறவிக்கடலில் சிக்கிக்கொண்ட மனது, வருமா உனதருகினில் (எளிதினில்)?
(SrI rAma jaya rAma - varALi)
Top
ராம சந்த்3ர!
- நீ நாமமந்து3, நிஜ ப்ரேம லேனி ப்3ரதுகு ஏமி?
- ஸந்ததம்பு3, தன அந்தரம்பு3ன, நீ சிந்த லேனி வாடு3 எந்த?
- தொ3ரக ரானி, நீ சரண ப4க்தி, ஏமரின மானவுடு3 அஸுருடே3.
இராம சந்திரா!
- உனது நாமத்தினில் உண்மையான காதலற்ற பிழைப்பென்ன?
- எவ்வமயமும் தனதுள்ளத்தினில் உனது நினைவற்றவன் எம்மாத்திரம்?
- கிடைத்தற்கரிய, உனதுத் திருவடிப் பற்றினைத் தவறவிட்ட மனிதன் அரக்கனே.
(pAhi paramAtma - varALi)
Top
ஸ்ரீ ராம!
- நோரேமி நின்னாட3?
- ஸாரெ ஸாரெகுனு, பாப கர்மமுலு ஸல்புசுனுண்டு3 நாவண்டி வானிகி, நோரேமி நின்னாட3?
- பாபுலு ஆருகு3ரு, வஸ்1யுலு கா3க, பண்ட்3லு இகி3லிஞ்சுசு தருணுலகை, நிஜ ப4க்தியு தெலியனி, த்யாக3ராஜுனிகி, ஒருலகைன, நோரேமி நின்னாட3?
இராமா!
- வாயென்ன, உன்னைக் குறை சொல்ல?
- எவ்வமயமும் பாவச் செயல்களை இயற்றிக்கொண்டிருக்கும் என்போன்றவனுக்கு, வாயென்ன, உன்னைக் குறை சொல்ல?
- பாவிகள் அறுவர் (தன்) வயப்படாது, பல்லிளித்துக் கொண்டு, வனிதையருக்காக, உண்மையான பக்தியினை அறியாத, தியாகராசனுக்கு, மற்றவருக்காகிலும், வாயென்ன, உன்னைக் குறை சொல்ல?
(nOrEmi SrI rAma - varALi)
Top
கல்யாண ஸுந்த3ர ராம!
- கருண ஏலாக3ண்டே, ஈ வித4மே;
- பரமாத்முடு3, ஜீவாத்முடு3 ஒகடை3 பரகு3சுண்டு3, ப4க்த பராதீ4னுனி கருண ஏலாக3ண்டே, ஈ வித4மே;
- அன்ரு2தம்பு3 ஆட3டு3;
- அல்புல வேட3டு3;
- ஸு-ந்ரு2புல கொலுவடு3;
- ஸூர்யுனி மரவடு3;
- மாம்ஸமு முட்டடு3;
- மது4வுனு த்ராக3டு3;
- பர-ஹிம்ஸல ஸேயடு3;
- எருகனு மரவடு3;
- மூடு3 ஈஷணமுல வாட3டு3;
- ஜீவன்-முக்துடை3 திருகு3 முத3முனு ஜூபடு3;
- வஞ்சன ஸேயடு3;
- வருலதோ பொ3ங்கடு3;
- சஞ்சல சித்துடை3 ஸௌக்2யமு விடு3வடு3;
- ஸாக்ஷியனி தெலிஸி, அந்து3 லக்ஷ்யமு விடு3வடு3;
கலியாண சுந்தரராமா!
- கருணை எங்ஙனமென்றால், இவ்விதமே;
- பரமான்மா, சீவான்மா ஒருவனாகி யொளிரும் தொண்டரைப் பேணுவதில் ஈடுபட்டவனின், கருணை எங்ஙனமென்றால், இவ்விதமே;
- மெய்யல்லாதது பேசான்;
- அற்பர்களை வேண்டான்;
- நன்மன்னரிடமும் சேவை செய்யான்;
- சூரியனை மறவான்;
- இறைச்சியைத் தொடான்;
- கள்ளருந்தான்;
- பிறருக்குத் தீங்கிழையான்;
- கற்றதனை மறவான்;
- மூவாசைகளை பயன்படுத்தான்;
- சீவன் முத்தனாகித் திரியும் களிப்பினை வெளிப்படுத்தான்;
- வஞ்சனை செய்யான்;
- சான்றோரிடம் பொய் பேசான்;
- அலையும் மனத்தினனாகி, (தனது) சுகத்தினை வீடான்;
- சாட்சியெனத் தெரிந்து, எட்டவேண்டிய இலக்கினை வீடான்.
(karuNayElAgaNTE - varALi)
Top
- ஈ மேனு கலிகி3னந்து3கு, ஸீதா ராம நாமமே பல்க வலெனு;
- காம ஆதி3 து3ர்-கு3ண ஸ்தோம பூரிதமைன, பாமரத்வமே கானி, நேமமு லேனி அட்டி, ஈ மேனு கலிகி3னந்து3கு, ஸீதா ராம நாமமே பல்க வலெனு;
- ஸம்ஸாரமுனு ப்3ரோவ, தா3ரினி பர-ஹிம்ஸ ஜெந்து3 கிராதுடு3, ஹம்ஸ ரூபுல க3தினி அடு3க3, ராம நாம ப்ரஸ1ம்ஸ ஜேஸி, உபதே3ஸி1ஞ்ச, த4ன்யுடு3 காதா3?
- தாபஸி ஸா1பமிட3கா3, ஜலோரக3 ரூபமு கொனி உண்ட3க3, தாபமு ஸைரிஞ்சக தல்லடி3ல்லக3, ஸ1ர சாப த4ருனி நாம ஸ்1ரவணமு, ப்3ரோவ லேதா3?
- கரி ராஜு, தெலிய லேக, ப3லுடை3ன மகரி சேத, கா3ஸி ஜெந்த3கா3, அர லேக, நிஜமுன ஆதி3 மூலமனக3, வரது3டு3, வேக3மே வச்சி, ப்3ரோவக3 லேதா3?
- ஆக3ம, வேத3முலனு, தா3னவுடு3 கொம்போவகா3, சதுர ஆனனுடு3, த்யாக3ராஜ நுத, தாரக நாமயனி, பா3கு3க3 நுதிம்ப, ப4யமு தீர்பக3 லேதா3?
- ஈ மேனு கலிகி3னந்து3கு, ஸீதா ராம நாமமே பல்க வலெனு.
- இவ்வுடல் உண்டானதற்கு, சீதாராமனின் நாமத்தினையே உரைக்கவேண்டும்
- காமம் முதலான தீய குணங்கள் நிரம்பிய, இழிவே யல்லாது, கட்டுப்பாடற்றதாகிய, இவ்வுடல் உண்டானதற்கு சீதாராமனின் நாமத்தினையே உரைக்கவேண்டும்
- வாழ்க்கையை நடத்த, வழிப்போக்கர்களுக்கு (வழிப்பறி செய்து) தீங்கிழைக்கும் வேடன், முற்றுமுணர்ந்தோர் கதியினை வேண்ட, இராம நாமத்தினை பரிந்துரைத்து, (நாரதர்) உபதேசிக்க, பேறுடைத்தோனல்லவா?
- தவசி சாபமிட, நீர்வாழ் பிராணியின் உருவம் கொண்டிருக்க, துயர் தாளாது தத்தளிக்க, வில்லம்பு ஏந்துவோனின் நாமத்தின் கேள்வி உய்விக்கவில்லையா?
- கரியரசன், அறியாது, வலியோனாகிய முதலையினிடம் துயருற, கூச்சலெழுப்பி, 'உண்மையான ஆதி மூலமே' யென, வரதன் விரைந்து வந்து காக்கவில்லையா?
- ஆகமங்கள், மறைகளை, அசுரன் கொண்டுபோக, நான்முகன் 'தியாகராசன் போற்றும், தாரக நாமத்தோனே' என்று நன்கு போற்ற, (அவனது) அச்சத்தினைப் போக்கவில்லையா?
- எனவே, இவ்வுடல் உண்டானதற்கு சீதாராமனின் நாமத்தினையே உரைக்கவேண்டும்
(I mEnu kaligina - varALi)
Top
ஸீதா நாத2!
- ஸ்நான ஆதி3 ஜப, தப, யோக3, த்4யான, ஸமாதி4, ஸுக2 ப்ரத3 நின்னே, ப4ஜன ஸேயு வாட3னு.
சீதை மணாளா!
- (புனித) நீராடல் முதலாக, செபம், தவம், யோகம், தியானம், சமாதி ஆகியவற்றின் சுகத்தினையருளும் உன்னையே பஜனை செய்பவன் (நான்)
(ninnE bhajana - nATa)
Top
- பரமாத்முடு3 வெலிகே3 முச்சட, பா3க3 தெலுஸுகோரே;
- ஹரியட, ஹருட3ட, ஸுருலட, நருலட, அகி2லாண்ட3 கோடுலட -
- அந்த3ரிலோ, பரமாத்முடு3 வெலிகே3 முச்சட, பா3க3 தெலுஸுகோரே;
- க3க3ன, அனில, தேஜோ-ஜல, பூ4-மயமகு3 ம்ரு2க3, க2க3, நக3, தரு கோடுலலோ,
- ஸ-கு3ணமுலோ, வி-கு3ணமுலோ,
- ஸாது4, த்யாக3ராஜாதி3 ஆஸ்1ரிதுலலோ,
- ஸததமு, பரமாத்முடு3 வெலிகே3 முச்சட, பா3க3 தெலுஸுகோரே.
- பரமான்மா ஒளிரும் சிறப்பினை நன்கு தெரிந்துகொள்வாய்;
- அரியாம், அரனாம், வானோராம், மனிதராம், அனைத்தண்ட கோடிகளாம் -
- யாவற்றிலும் பரமான்மா ஒளிரும் சிறப்பினை நன்கு தெரிந்துகொள்வாய்;
- விண், காற்று, நெருப்பு, நீர், புவி - (ஐம்பூதங்கள்) மயமான மிருகம், பறவை, மலை, மரம் கோடிகளிலும்,
- குணங்களிலும், குணங்களற்றும்,
- சாது தியாகராசன் ஆகிய (அவனை) புகலடைந்தோரிலும்,
- எவ்வமயமும், பரமான்மா ஒளிரும் சிறப்பினை நன்கு தெரிந்துகொள்வாய்.
(paramAtmuDu - vAgadhISvari)
Top
- ஸு1ப4 லக்ஷணமுலு-க3ல ராமுனிகி, ப்ரத3க்ஷிணமு ஒனரிந்துமு, ராரே;
- குக்ஷினி, ப்3ரஹ்மாண்ட3ம்பு3லுன்னவட;
- விசக்ஷுணுட3ட;
- தீ3க்ஷா கு3ருட3ட;
- லக்ஷண லக்ஷ்யமு-க3ல ஸ்1ருதுலகு ப்ரத்யக்ஷம்பௌ3னட;
- ஸி1க்ஷ-படி3, ஸப4னு மெப்பிஞ்சு ப4க்த ரக்ஷகுண்டௌ3னட;
- அக்ஷரஸ்து2லைன, ப4ஜன பருலகே அந்தரங்கு3டௌ3னட;
- ஸாக்ஷியை வெலயு, த்யாக3ராஜ பக்ஷகுடௌ3னட;
- முப்பதி3 ரெண்டு3 ஸு1ப4 லக்ஷணமுலு-க3ல ராமுனிகி ப்ரத3க்ஷிணமு ஒனரிந்துமு ராரே.
- நல்லிலக்கணங்களுடைய இராமனை வலம் வருவோம் வாரீர்
- வயிற்றினில் பிரமாண்டங்களுள்ளனவாம்;
- பகுத்தறிவோனாம்;
- தீக்கையருள் ஆசானாம்;
- இலக்கண-இலக்குடைத்த மறைஞருக்குக் காணப்படுவானாம்;
- கற்றறிந்து, அவையினை மேம்படுத்தும் தொண்டரைக் காப்பானாம்;
- அழியா இறையில் நிலைத்து, பஜனையில் ஈடுபட்டோருக்கே உள்ளுறைவானாம்;
- சாட்சியாகி விளங்கும் (அவன்), தியாகாராசனின் பக்கமிருப்பானாம்;
- முப்பத்தியிரண்டு இலக்கணங்களுடைய இராமனை வலம் வருவோம் வாரீர்
(lakshaNamulu - Suddha sAvEri)
Top
ஓ ராம!
- இந்தகன்ன ஆனந்த3மேமி?
- ஸந்த ஜனுலகெல்ல 3ஸம்மதியையுண்டு3 கானி; இந்தகன்ன ஆனந்த3மேமி?
- ஆடு3சு, நாத3முன பாடு3சு, எது3ட ரா வேடு3சு, மனஸுன 4கூடி3யுண்டு3ட சாலு; இந்தகன்ன ஆனந்த3மேமி?
- ஸ்ரீ ஹரி கீர்தனசே, தே3ஹாதி3 இந்த்3ரிய ஸமூஹமுல மரசி, 5ஸோஹம் ஐனதே3 சாலு; இந்தகன்ன ஆனந்த3மேமி?
- நீ ஜபமுலு வேளனு ஈ ஜக3முலு நீவை ராஜில்லுனய; இந்தகன்ன ஆனந்த3மேமி?
ஓ இராமா!
- இத்தனைக்கு மேலான ஆனந்தமென்ன?
- சான்றோர் யாவருக்கும் ஒப்புதல் இருக்குமன்றோ!
- ஆடிக்கொண்டு, நாதத்துடன் பாடிக்கொண்டு, எதிரில் வர வேண்டிக்கொண்டு, உள்ளத்தினில் கூடியிருத்தலே போதும்; இத்தனைக்கு மேலான ஆனந்தமென்ன?
- அரியின் கீர்த்தனையுடன், உடல் முதலாக புலன்கள் அனைத்தினையும் மறந்து, நான் அவனானதே போதும்; இத்தனைக்கு மேலான ஆனந்தமென்ன?
- உனது செபம் இயற்றும் வேளை, இவ்வுலகங்கள் நீயாகி ஒளிருமய்யா; இத்தனைக்கு மேலான ஆனந்தமென்ன?
(intakannAnanda - bilahari)
Top
மனஸா!
- ஸீதா ராம ப4க்துனி சாரித்ரமு வினவே;
- (ஆ)ஸக்தி லேக, தா கோருசு, ஜீவன்முக்துடை3, ஆனந்த3முனொந்து3 ஸீதா ராம ப4க்துனி சாரித்ரமு வினவே;
- ஜப தபமுல தா ஜேஸிதினி அன ராது3;
- கபடாத்முடு3 மனமை, பல்க ராது3;
- உபம தனகு லேக உண்ட3வலெனனி, ஊரயூர திருக3க3 ராது3;
- சபல சித்துடை3 ஆலு ஸுதுலபை ஸாரெகு ப்4ரம காராது3;
- ப4வ விப4வமு நிஜமனி எஞ்சக3 ராது3;
- ஸி1வ மாத4வ பே4த3மு ஜேயக3 ராது3;
- பு4வனமந்து3 தானே யோக்3யுட3னு அனி பொ3ங்கி, பொட்ட ஸாகக3 ராது3;
- பவனாத்மஜ த்4ரு2தமௌ, ஸீதா பதி பாத3முலனு ஏமர ராது3;
- ராஜஸ, தாமஸ கு3ணமுலு காராது3;
- அவ்யாஜமுனனு ராலேது3 அன காராது3;
- ராஜ யோக3 மார்க3மு நீ சித்தமு ரா ஜூசுட விட3வக3 ராது3;
- ராஜ ஸி1கா2 மணியைன, த்யாக3ராஜ ஸகு2னி மரவ ராது3 -
- அனே ஹரி ப4க்துனி சாரித்ரமு வினவே.
மனமே!
- சீதாராமனின் தொண்டனின் நடத்தையினைக் கேளாய்;
- (உலக) பற்றின்றி, தானே வேண்டி, சீவன்-முத்தனாகிக் களிப்பெய்தும் தொண்டனின் நடத்தையினைக் கேளாய்;
- செபம், தவங்களைத் தான் இயற்றினேனென்று கூறலாகாது;
- வஞ்சக உள்ளத்தோன் நாமாகி, பேசலாகாது;
- உவமை தனக்கு இல்லாமல் இருக்கவேண்டுமென, (திறமைகளைக் காட்டிக்கொண்டு) ஊரூராகத் திரியலாகாது;
- அலையும் உள்ளத்தினனாகி, மனைவி மக்கள் மீது, எவ்வமயமும், மயக்கம் கூடாது;
- உலக வைபவத்தினை நிசமென்று எண்ணலாகாது;
- சிவ, மாதவ வேறுபாடு செய்யலாகாது;
- புவியினில் தானே திறமையுடையவனெனப் பொய் சொல்லி, வயிறு வளர்க்கலாகாது;
- வாயு மைந்தன் பற்றியுள்ள சீதா பதியின் திருவடிகளை மறக்கலாகாது;
- இராசத, தாமத குணங்கள் கூடாது;
- காரணமின்றி, (இறைவனின் கருணை) வரவில்லை யெனலாகாது;
- இராச யோக நெறியினை, உனதுள்ளம் அடையப் பெறுதலை விடலாகாது;
- அரசர்களின் முடிமணியாகிய, தியாகராசனின் நண்பனை மறக்கலாகாது -
- எனும், அரியின் தொண்டனின் நடத்தையினைக் கேளாய்.
(bhaktuni cAritramu - bEgaDA)
Top
ஓ மனஸா!
- நாத3 உபாஸனசே, ஸ1ங்கர, நாராயண, விது4லு வெலஸிரி
- வேத3 உத்3தா4ருலு,
- வேத3 அதீதுலு,
- விஸ்1வமு எல்ல நிண்டி3யுண்டே3 வாரலு,
- நாத3 உபாஸனசே, ஸ1ங்கர, நாராயண, விது4லு வெலஸிரி;
- மந்த்ர ஆத்முலு, யந்த்ர, தந்த்ர ஆத்முலு, மரி,
- மன்வந்தரமுலு என்னோ கல வாரலு,
- தந்த்ரீ, லய, ஸ்வர, ராக3 விலோலுலு,
- த்யாக3ராஜ வந்த்3யுலு,
- ஸ்வதந்த்ருலு,
- நாத3 உபாஸனசே, ஸ1ங்கர, நாராயண, விது4லு வெலஸிரி
ஓ மனமே!
- நாத வழிபாட்டினால் (மும்மூர்த்திகள்) சங்கரன், நாராயணன் மற்றும் நான்முகன் ஒளிர்ந்தனர்;
- மறைகளைக் காத்தோர்,
- மறைகளைக் கடந்தோர்,
- உலகனைத்தும் நிறைந்திருப்போராக
- நாத வழிபாட்டினால் (மும்மூர்த்திகள்) சங்கரன், நாராயணன் மற்றும் நான்முகன் ஒளிர்ந்தனர்;
- மந்திர, இயந்திர, தந்திரங்களின் ஆன்மாவானோர்,
- மன்வந்தரங்களெத்தனையோ உடையோர், அன்றி
- நரம்பு, தோற்கருவிகள், சுரம் மற்றும் ராகத்தினில் வல்லுனர்கள்,
- தியாகராசன் வணங்குவோர், மற்றும்
- தன்னிச்சையாக இருப்போராக
- நாத வழிபாட்டினால் (மும்மூர்த்திகள்) சங்கரன், நாராயணன் மற்றும் நான்முகன் ஒளிர்ந்தனர்.
(nAdOpAsana - bEgaDa)
Top
ஓ மனஸா!
- தெலிஸி, ராம சிந்தனதோ, நாமமு ஸேயவே;
- தலபுலு அன்னி நிலிபி, நிமிஷமைன, தாரக ரூபுனி நிஜ தத்வமுலனு தெலிஸி, ராம சிந்தனதோ நாமமு ஸேயவே;
- ராமாயன சபல அக்ஷுல பேரு; காமாது3ல போரு வாரு வீரு;
- ராமாயன ப்3ரஹ்மமுனகு பேரு; ஆ மானவ ஜனன ஆர்துலு தீரு;
- அர்கமு அனுசு ஜில்லெடு3 தரு பேரு; மர்கட பு3த்3து4லு எட்டு தீரு?
- அர்குடு3 அனுசு பா4ஸ்கருனிகி பேரு; கு-தர்கமனே அந்த4காரமு தீரு;
- அஜமு அனுசு மேஷமுனகு பேரு; நிஜ கோரிகலு ஏலாகு3 ஈடே3ரு?
- அஜுடு3 அனி வாகீ3ஸ்1வருனிகி பேரு; விஜயமு கல்கு3னு;
- த்யாக3ராஜ நுதுனி தெலிஸி, ராம சிந்தனதோ, நாமமு ஸேயவே;
ஓ மனமே!
- தெரிந்து, இராமனின் சிந்தனையுடன் (அவன்) நாமத்தினை செபிப்பாய்;
- நினைப்புகளனைத்தினையும் நிறுத்தி, (ஒரு) நிமிடமாவது தாரக உருவத்தோனின் உண்மையான தத்துவங்களைத் தெரிந்து, இராமனின் சிந்தனையுடன் (அவன்) நாமத்தினை செபிப்பாய்;
- 'ராமா'யென, அலையும் கண்களுடையோரின் பெயராகும்; காமம் முதலானவற்றுடன் போராடுவர் இவ்விதம் எண்ணுவோர்;
- 'ராமா'யென பரம்பொருளுக்கும் பெயராகும்; இவ்விதம் எண்ணும் அம்மானவர்களின் பிறவித்துயர்கள் தீரும்;
- 'அர்க்க'மென எருக்கஞ்செடிக்குப் பெயராகும்; இவ்விதம் எண்ண, குரங்குத் தன்மை எப்படி தீரும்?
- 'அர்க்க'னெனப் பகலவனுக்கும் பெயராகும்; இவ்விதம் எண்ண, குதர்க்கமெனும் இருள் நீங்கும்;
- 'அஜம்' என ஆட்டுக்கடாவிற்குப் பெயராகும்; இவ்விதம் எண்ண, நிசமான கோரிக்கைகள் எங்ஙனம் ஈடேறும்?
- 'அஜன்' எனக் கலைமகள் கேள்வனுக்கும் பெயராகும்; இவ்விதம் எண்ண, வெற்றியுண்டாகும்;
- தியாகராசன் போற்றுவோனைத் தெரிந்து, இராமனின் சிந்தனையுடன் (அவன்) நாமத்தினை செபிப்பாய்.
(telisi rAma - pUrNa candrika)
Top
ராம!
- நீகே த3ய ராக, நே ஜேயு பனுலெல்ல நெரவேருனா?
- ஏகோபிஞ்சக, 'நேனு நீவ'னு ஞானிகி ஏலாகு3 ஸுக2மிச்சுனே?
- மனஸு நில்வனி வாரு, மாயா ஜாலமு ஜேஸி, மரி, முக்தி கொனனௌனே;
- கனு ஸம்ஞகு ரானி காந்தனு, ப3லிமினி கரமிட3, வஸ1மௌனே;
- வாடி3க லேனி வித்3யல சேத, ஸப4லோன வாதி3ஞ்ச, போனௌனே;
- சாடி3 வின்ன மாட, மதி3னி நில்வ லேனி, ஸரஸுனி விதமௌனே;
- மெப்புலகை, ப3ஹு த4ர்மமு ஜேஸிதே, மிகு3ல ப்3ரோவ தகு3னே;
இராமா!
- உனக்கே தயை வாராது நான் செய்யும் பணிகளெல்லாம் நிறைவேறுமா?
- ஏகோபிக்காது, 'நான் நீ' யெனும் ஞானிக்கு எங்ஙனம் சுகம் தருமே?
- மனது நில்லாதவர்கள் செப்பிடுவித்தைகள் செய்து எப்படியும் முத்தி பெறுதலாகுமே;
- கண் சைகையினுக்கு வாராத பெண்ணை, வலுவில் கரமிட வயப்படலாகுமே;
- பழக்கமற்ற வித்தைகளுடன், அவையில் வாதிக்க, செல்லத்தகுமே;
- கோள் கேட்ட சொற்கள், உள்ளத்தினில் நில்லாத பண்புடைத்தோன் விதமாகுமே;
- (பிறர்) மெச்சுதற்காக மிக்கு கொடையளித்தால் (இறைவன்) மிக்கு காக்கத் தகுமே;
(nIkE daya rAka - nIlAmbari)
Top
- என்னக3 மனஸுகு ரானி, பன்னக3 ஸா1யி ஸொக3ஸு, பன்னுக3 கனுகொனனி கன்னுலேலே? கன்னுலேலே? கண்டி மின்னுலேலே?
- மோஹமுதோ, நீல வாரி வாஹ காந்தினி கேரின, ஸ்ரீ ஹரினி கட்டுகொனனி தே3ஹமேலே? தே3ஹமேலே? ஈ கே3ஹமேலே?
- ஸரஸிஜ, மல்லெ, துளஸி, விருவாஜி, பாரிஜாதபு விருலசே பூஜிஞ்சனி கரமுலேலே? கரமுலேலே? ஈ காபுரமுலேலே?
- மாலிமிதோ, த்யாக3ராஜுனு ஏலின ராம மூர்தினி லாலிஞ்சி பொக3ட3னி நாலிகேலே? நாலிகேலே? ஸூத்ர மாலிகேலே?
- எண்ணுதற்கு மனதிற்கெட்டாத, அரவணையோனின் ஒயிலினை நன்கு கண்டுகொள்ளாத கண்களெதற்கோ? கண்களெதற்கோ? கண்களின் ஒளியெதற்கோ?
- பேருவகையுடன், நீல முகிலின் மிளிர்ச்சியினைப் பழிக்கும் அரியினை, அணைத்துக்கொள்ளாத மேனியெதற்கோ? மேனியெதற்கோ? இவ்வில்லமெதற்கோ?
- தாமரை, மல்லிகை, துளசி, இருவாட்சி, பவளமல்லி ஆகிய மலர்கொடு தொழாத கரங்களெதற்கோ? கரங்களெதற்கோ? இக்குடும்பமெதற்கோ?
- கனிவுடன், தியாகராசனை ஆண்ட இராம மூர்த்தியினை ஏத்திப் புகழாத நாவெதற்கோ? நாவெதற்கோ? செபமாலையெதற்கோ?
(இப்பாடல், பிரகலாதன், இறைவனின் அண்மையில்லாமை குறித்து தன்னையே நொந்துகொள்வதாக அமைந்துள்ளது.)
(ennaga manasuku-nIlAmbari)
Top
- ஆகாஸ1 ஸ1ரீரமு ப்3ரஹ்மமனே, ஆத்மா ராமுனி, தா ஸரி ஜூசுசு,
- லோகாது3லு சின்மயமனு,
- ஸுஸ்வர லோலுடௌ3, த்யாக3ராஜ ஸன்னுத, ஸீதா வர!
- கீ3தா ஆதி3 அகி2ல உபநிஷத்-ஸார பூ4த ஜீவன்முக்துடு3 அகு3டகு,
- ஸங்கீ3த ஞானமு, தா4த 1வ்ராயவலெரா;
- (வெட்ட) வெளி மெய், பிரமமெனும், ஆன்மா ராமனை, தான் சரிகண்டுகொண்டு,
- உலகங்கள் சின்மயமெனும்,
- இனிய சுரங்களில் திளைக்கும், தியாகராசனால் சிறக்கப் போற்றப் பெற்ற, சீதை மணாளா!
- கீதை முதலாக, அனைத்து உபநிடத சாரமாகிய, பூத சீவன் முத்தனாகுதற்கு,
- இசையறிவு, தாதை எழுதவேண்டுமய்யா;
(sItA vara-dEvagAndhAri)
Top
மனஸா!
- மரவகரா, நவ மன்மத2 ரூபுனி;
- ஆ-ஜன்மமு, ஹ்ரு2த்3ராஜீவமுதோ பூஜிந்துர த்யாக3ராஜ நுதுனி.
ஏ மனமே!
- மறக்காதேயடா, இள மன்மத உருவத்தோனை;
- வாழ்நாள் முழுதும், இதயக் கமலம்கொடு வழிபடுவேன், தியாகராசனால் போற்றப் பெற்றோனை.
(maravakarA - dEva gAndhAri)
Top
- தன லோனே த்4யானிஞ்சி, தன்மயமே காவலெரா;
- தன கு3ஹலோ, தானு உண்டெ3டு3 தாவுனு தெலியக3 வலெரா;
- நீ மர்மமு, ஆ க்ஷணமே, நிஸ்1சயமை தெலுஸுனுரா;
- 'ஏனு' அனு மாய, ஆ வேளனு, ஏ வங்கோ தெலியது3ரா;
- தொலி கர்மமே, ப3லமு தோய கூட3து3, விதி4கி;
- ப்ரக்ரு2தி ஸ்வபா4வமுலு, ப்ரஜ்வலிஞ்சுசுனு உண்டு3;
- லக்ஷ்யமு ஜேயரு, மதி3லோ, லக்ஷ அந்தரமுலகைன;
- ம்ரிங்கி3ன கள்ளகு, ருசுல மேலு கனே வாரு எவரு;
- பூ4தமுலு ஐது3னு, நீவு, பொரல ஜேயுசுன்னாவு;
- நிரவதி4 ஸ1ய்யபை, நீவு, நித்ய ஆனந்த3முன உன்னாவு;
- ஸ்ரீ த்யாக3ராஜுனி சே பட்டி ரக்ஷிஞ்செத3வு;
- தன்னுள்ளே தியானித்து, தன்மயமேயாக வேண்டுமய்யா;
- தனது குகையினில் தானிருக்குமிடத்தினை அறியவேண்டுமய்யா;
- உனது மருமம், அந்நொடியே உறுதியாகத் தெரியுமய்யா;
- 'நான்' எனும் மாயை, அவ்வேளை, எம்மூலையிலோ, தெரியாதய்யா;
- முன்வினையே (என்னை) வலிய தள்ளக்கூடாது, விதிக்கு;
- இயற்கைத் தன்மைகள் சுடர்விட்டுக்கொண்டிருக்கும்;
- (ஆயினும் தியானத்திலுள்ளோர்) சட்டை செய்யார், மதியினில், இலட்சம் இடைவெளிகளாயினும்;
- விழுங்கிய கண்களுக்கு, சுவைகளின் மேன்மையைக் காண்பவர் யாரே?
- (ஏனெனில்) பூதங்களைந்தினையும் நீ புரளச் செய்கின்றாய்;
- அனந்த அணையின்மீது நீ அழிவற்ற ஆனந்தத்தினிலுள்ளாய்;
- தியாகராசனைக் கைப்பற்றிக் காத்தனை.
(இச்சொற்கள் பிரகலாதன் அரியை நோக்கி உரைப்பதாக)
(tanalOnE dhyAninci - dEva gAndhAri)
Top
ஓ மனஸா!
- த்யாக3ராஜு மனவி வினவே; விவரம்பு3க3 நே தெல்பெத3;
- மனஸெரிங்கி3, கு-மார்க3முன மரி பொரலுசு செட3 வலதே3;
- ஈ நட3தலு பனிகி ராது3; ஈஸ்1வர க்ரு2ப கலுக3 போது3;
- த்4யான ப4ஜன ஸேயவே.
ஓ மனமே!
- தியாகராசனின் வேண்டுகோளினைக் கேளாயடி; விவரமாக நான் தெரிவிக்கின்றேன்;
- மனதறிந்து, தவறான வழியில் மறுபடியும் புரண்டு, கெடக்கூடாதடி;
- இந்நடத்தைகள் உதவா; ஈசனின் கிருபை யுண்டாகாது;
- தியானம், பஜனை செய்வாயடி.
(vinavE O manasA - vivardhani)
Top
- நருடை3 புட்டினந்து3கு, ராம நாம ஸ்மரணே ஸுக2மு;
- வர ராஜ யோக3 நிஷ்டு2லௌ வாரிகி ஆனந்த3மந்தெ3டு அட்டு, ராம நாம ஸ்மரணே ஸுக2மு;
- ராம நாம ஸ்1ரவணமு வல்ல, நாம ரூபமே ஹ்ரு2த3யமு நிண்டி3, ப்ரேம புட்ட ஸேயக3 லேதா3?
- நிஷ்காம த்யாக3ராஜு ஸேயு ராம நாம ஸ்மரணே ஸுக2மு.
- மனிதனாகப் பிறந்ததற்கு, இராம நாமத்தினை உள்ளுருவேற்றலே சுகமாகும்;
- உயர் இராச யோகத்தினில் நிலைத்திருப்போராகிய அவர்களுக்கு, ஆனந்தம் நண்ணுதல் போன்று, இராம நாமத்தினை உள்ளுருவேற்றலே சுகமாகும்
- இராம நாமத்தினைச் செவி மடுத்ததனால், நாமத்தின் உருவமே இதயத்தினில் நிறைந்து, (இறைவனிடம்) காதல் பிறக்கச் செய்யவில்லையா?
- இச்சைகளற்ற, தியாகராசன் இயற்றும், இராம நாமத்தினை உள்ளுருவேற்றலே சுகமாகும்.
(smaraNE sukhamu - jana ranjani)
Top
ராம ப4க்துடை3ன த்யாக3ராஜ வினுத, ராம!
- 'தத்-த்வம்-அஸி'யனு வாக்யார்த2மு, நீவனு பர தத்வமெருக3 தரமா?
- தாமஸ, ராஜஸ கு3ணமுல தன்னுகோள்ளு போத3யா;
- வேத3, ஸா1ஸ்த்ர தத்வமெருக3 தரமா?
இராமனின் தொண்டனாகிய தியாகராசனால் போற்றப் பெற்றோனே, இராமா!
- 'தத்-த்வம்-அஸி' யெனும் வாக்கியத்தின் கருத்து, நீயெனும் பர தத்துவத்தினை அறியத் தரமா?
- தாமத, இராசத குணங்களின் தொல்லைகள் போகாதய்யா;
- மறைகள், சாத்திரங்களின் தத்துவத்தினை அறியத் தரமா?
(tatvameruga - garuDa dhvani)
Top
பா4விஞ்சி, ராக3, லயாது3ல ப4ஜியிஞ்சே, ஸ்ரீ த்யாக3ராஜ நுத, ராம!
- அகி2ல நைக3ம ஆஸ்1ரித, ஸங்கீ3த ஞானமனு, ப்3ரஹ்மானந்த3 ஸாக3ரமீத3னி தே3ஹமு, பூ4 பா4ரமு;
- பா4விஞ்சி, ராக3, லயாது3ல ப4ஜியிஞ்சே, ஆனந்த3 ஸாக3ரமீத3னி தே3ஹமு, பூ4 பா4ரமு;
- ஸ்ரீ விஸ்1வ நாத2, ஸ்ரீ காந்த, விது4லு, பாவன மூர்துலு உபாஸிஞ்ச லேதா3!
உள்ளத்தினில் உணர்ந்து, ராகம், லயம் ஆகியவற்றினை பஜிக்கும், தியாகராசனால் போற்றப் பெற்ற, இராமா!
- அனைத்து மறைகளும் சார்ந்திருக்கும் இசையின் அறிவெனும் பேரானந்தக் கடலினில் நீந்தாத உடல் புவிக்குச் சுமையே;
- உள்ளத்தினில் உணர்ந்து, ராகம், லயம் ஆகியவற்றினை பஜிக்கும், ஆனந்தக் கடலினில் நீந்தாத உடல் புவிக்குச் சுமையே;
- விசுவநாதன், இலக்குமி மணாளன், பிரமன் ஆகியோரும் (மற்ற) புனித மூர்த்திகளும் (இசையினை) வழிபட்டனரன்றோ!
(Ananda sAgara - garuDadhvani)
Top
ஸீதா ராம!
- நீபை தனகு ப்ரேம போது3.
- மனஸு நீ பத3முலனே ஜேர, கனுலு நீ ரூபமுனே கோர, நீ பேருலகே நோரூர - தனபை இதி3 நீ 4கருணேரா;
- ஜனனீ, ஜனக, ஆப்துலு, அன்யுலு, த4ன, கனக, கு3ரு, வேல்புலு, தி3னமு நீவேயனி மாடலு - இவி நா பூ4ஷணமுலு;
- போ4க3 அனுப4வமுலந்து3, பா3கு3க3, பு3த்3தி4 நீயந்து3;
- த்யாக3ராஜுனி ஹ்ரு2த3யமந்து3 வாகீ3ஸா1னந்த3மு அந்து3.
சீதாராமா!
- உன்மீது தனக்கு காதல் அகலாது;
- மனது உனது திருவடிகளையே நாட, கண்கள் உனதுருவத்தினையே விழைய,உனது பெயர்களுக்கே நாவூர - என்மீது இஃதுனது கருணையே அய்யா;
- தாய், தந்தை, உற்றார் உறவினர், மற்றோர், செல்வம், பொன், குரு, தெய்வம் (ஆகியவை) என்றும் நீயேயெனும் சொற்கள் - இவையேயெனது அணிகலன்களாகும்;
- உலக இன்பங்களைத் துய்க்கும்போதும், நன்கு (எனது) அறிவு உன்னிடமே;
- தியாகராசனின் இதயத்தினில் பேரானந்தம் எய்தும்.
(வாகீ3ஸா1னந்த3மு - ப்3ரஹ்மானந்த3மு)
(rAma nIpai tanaku - kEdAraM)
Top
ராம!
- மரசே வாட3னா, நினு? நீயொக்க மதி3னெஞ்ச வலது3.
- கானி மானவுலு, கருண லேக, நாபை, லேனி நேரமுலெஞ்சின கானி,
- ஸ்ரீ நிஜமுக3, நா செந்த ஜேரின கானி,
- ரானி நீ த3ய மரசே வாட3னா?
இராமா!
- மறப்பவனா, உன்னை (நான்)? உனதொரு மனத்தினில் (அப்படி) எண்ணலாகாது;
- வேண்டாத மனிதர்கள், கருணையின்றி, என்மீது இல்லாத குற்றங்கள் கண்டாலும்,
- செல்வம், உண்மையாகவே, என்னை வந்தடைந்தாலும்,
- வாராத உனது தயையினை, மறப்பவனா, (நான்)?
(வாராத - கிடைத்தற்கரிய)
(maracE vADanA - kEdAraM)
Top
நீரஜாக்ஷ!
- நின்னாட3னேல?
- கன்னவாரி பைனி காக ஸேயனேல?
- கர்மமுனகு தகி3னட்லு, கார்யமுலு நடு3சுனு;
- த4ர்மமுனகு தகி3னட்லு, தை3வமு ப்3ரோசுனு;
- சித்தமுனகு தகி3னட்லு ஸித்3தி4யு கல்கு3னு;
- வித்தமுனகு தகி3னட்லு வேடு3க நடு3சுனு;
- ஸன்னுதி ஜேஸி, தத்வமு தெலிஸின, த்யாக3ராஜுனிகி, நின்னாட3னேல?
கமலக்கண்ணா!
- உன்னை குறை கூறுவானேன்?
- கண்டவர்களின் (அல்லது பெற்றோர்) மீது ஆத்திரப் படலேன்?
- கருமத்திற்கேற்ப, காரியங்கள் நடக்கும்;
- அறத்திற்கேற்ப, தெய்வம் காக்கும்;
- எண்ணத்திற்கேற்ப, வெற்றி கிடைக்கும்;
- காசுக்கேற்ப, கூத்து நடக்கும்;
- உன்னை சிறக்கப் போற்றி, உண்மை யறிந்த தியாகராசனுக்கு, உன்னை குறை கூறுவானேன்?
(ninnADanEla - kannaDa)
Top
ராம!
- இதே3 பா4க்3யமு கா3க, ஏமி உன்னதி3ரா?
- ஸதா3 நீ பத3 பங்கஜமுலனு, ஸம்மதமுக3, பூஜிஞ்சு வாரிகி, இதே3 பா4க்3யமு கா3க, ஏமி உன்னதி3ரா?
- ஹ்ரு2த3ய அரவிந்த3முன நின்னு உஞ்சி,
- தானே ப்3ரஹ்மானந்த3மு அனுப4விஞ்சி,
- இந்து3 த4ரு மொத3லு அந்த3ரினி, ஸுர ப்3ரு2ந்த3, பூ4-ஸுர ப்3ரு2ந்த3முல, தானு எந்து3 கனி,
- ஆனந்த3முன, நீயந்து3 பா4வன ஜெந்து3சு உண்டு3 வாரிகி, இதே3 பா4க்3யமு கா3க, ஏமி உன்னதி3ரா?
- ஆஸ1 பாஸ1முல தெக3 கோஸி,
- அன்னியு மதி3 ரோஸி,
- கர்மமு பா3ஸி,
- நின்னு கருணா வாராஸி1யனி பூஜ ஜேஸி,
- து3ஸ்-ஸங்க3தி ஜேஸி, மேனு கா3ஸி ஜெந்த3க,
- நினு காஸீ1ஸ1 நுதுட3னி, ஆஸ1 நீயெட3,
- கீஸ1 ப4க்தியு ஜேஸின வாரிகி, இதே3 பா4க்3யமு கா3க, ஏமி உன்னதி3ரா?
- நீவே க3தியனி பட்டி,
- ராகா3து3ல தோட3 பூரித ப4வ ஸாக3ரமுனு தா3டி,
- ஸந்ததமுனு, வேத3 ஆக3மாது3ல வேக3 நுதினிடு3, பா4க3வதுட3கு3, த்யாக3ராஜுனிகி, இதே3 பா4க்3யமு கா3க, ஏமி உன்னதி3ரா?
இராமா!
- இதுவே பேறல்லாது (வேறு) என்ன உள்ளதய்யா?
- எவ்வமயமும், உனது திருவடித் தாமரையினை, முழு மனதுடன் தொழுவோருக்கு, இதுவே பேறல்லாது, (வேறு) என்ன உள்ளதய்யா?
- இதயக் கமலத்தினில், உன்னையிருத்தி,
- தானே பரமானந்தத்தினைத் துய்த்து,
- பிறையணிவோன் முதலாக, வானோர்கள், அந்தணர்கள் யாவரிலும், தன்னை எங்கும் கண்டு,
- ஆனந்தமாக, உன்னிடம் உள்ளுணர்வு கொண்டிருப்போருக்கு, இதுவே பேறல்லாது, (வேறு) என்ன உள்ளதய்யா?
- ஆசை, பாசங்களை அற வீழ்த்தி,
- யாவும் மனத்தாலும் துறந்து,
- கருமங்களை விடுத்து,
- உன்னை கருணைக் கடலென தொழுது,
- தீய நட்பு கொண்டு உடல் துயருறாது,
- உன்னை, காசி ஈசனால் போற்றப் பெற்றோனென, உன்னிடம் காதலும்,
- அனுமன் (போன்ற) பக்தியும் செய்வோருக்கு, இதுவே பேறல்லாது, (வேறு) என்ன உள்ளதய்யா?
- நீயே புகலெனப் பற்றி,
- இராகம் ஆகியவற்றின் துணையுடன், நிறை பிறவிக் கடலினைத் தாண்டி,
- மறைகள், ஆகமங்கள் ஆகியவற்றின் ஊக்கத்துடன், எவ்வமயமும் போற்றி செய்யும், பாகவதனாகிய, தியாகராசனுக்கு, இதுவே பேறல்லாது, (வேறு) என்ன உள்ளதய்யா?
(idE bhAgyamu - kannaDa)
Top
ஓ மனஸா!
- ரஞ்ஜிம்ப ஜேஸெடு3 ராக3ம்பு3லு, மஞ்ஜுளமகு3னவதாரமுலெத்தி, மஞ்ஜீரமு க4ல்லனி நடிஞ்சு மஹிம தெலியு த்யாக3ராஜ நுதுட3கு3 ஸ்ரீப ப்ரிய ஸங்கீ3தோபாஸன சேயவே.
ஏ மனமே!
- களிப்பூட்டும் இராகங்கள், எழிலான வடிவங்களெடுத்து, சதங்கைகள் கலீரென, நடமிடும் பெருமை அறியும், தியாகராசனால் போற்றப் பெற்றோனாகிய, மாமணாளனுக்கு விருப்பமான இசை வழிபாட்டினைச் செய்வாய்.
(SrIpa priya - aThANA)
Top
மானஸ!
- ராம ப4ஜன ஸேய ராதா3?
- ப4வ ஸாக3ரமுனனு தரிம்ப, த்யாக3ராஜு மனவினி வினி,
- அஜ ருத்3ராது3லகு ஸததமு ஆத்ம மந்த்ரமைன,
- தாரகமகு3, ராம நாம ப4ஜன ஸேய ராதா3?
- கரகு3 ப3ங்கா3ரு வல்வ கடினெந்தோ மெரயக3, சிரு நவ்வுலு-க3ல முக2முனு சிந்திஞ்சி சிந்திஞ்சி,
- அருண ஆப4 அத4ரமுனு, ஸுருசிர த3ந்த ஆவளினி, மெரயு கபோல யுக3முனு, நிரதமுனனு தலசி தலசி,
- ராம ப4ஜன பா3கு3க3 ஸேய ராதா3?
மனமே!
- இராம பஜனை செய்யலாகாதா?
- பிறவிக் கடலினைக் கடக்க, தியாகராசனின் வேண்டுகோளினை யேற்று,
- பிரமன், உருத்திராதியருக்கு, எவ்வமயமும், தமது மந்திரமான,
- தாரகமாகிய, இராம நாமத்தினை நன்கு பஜனை செய்யலாகாதா?
- உருக்கிய பொன்னாடை இடையில் மிக்கொளிர, புன்சிரிப்பு திகழும் முகத்தினைச் சிந்தித்துச் சிந்தித்து,
- மிளிரும் சிவந்த உதடுகளை, அழகிய பல்வரிசைகளை, பளபளக்கும் கன்ன இணையினை, என்றும் நினைந்து நினைந்து,
- இராம நாமத்தினை நன்கு பஜனை செய்யலாகாதா?
(bhajana sEya rAdA - aThANA)
Top
நாரத3 கா3ன லோல!
- நீவு லேக ஏ தனுவுலு நிரதமுகா3 நடு3சுனு?
- நீவு லேக ஏ தருவுலு நிக்கமுகா3 மொலுசுனு?
- நீவு லேக ஏ வானலு நித்யமுகா3 குரியுனு?
- நீவு லேக த்யாக3ராஜு நீ கு3ணமுலனு எடு பாடு3னு?
நாரதரின் இசை விரும்பியே!
- நீயின்றி எவ்வுடல்கள் என்றும் நடக்கும்?
- நீயின்றி எம்மரங்கள் திண்ணமாக வளரும்?
- நீயின்றி எம்மாரிகள் நிலையாகப் பெய்யும்?
- நீயின்றி தியாகராசன் உனது குணங்களையெங்ஙனம் பாடுவான்?
(nArada gAna - aThANA)
Top
மனஸா!
- செடே3 பு3த்3தி4 மானுரா;
- இடே3 பாத்ரமெவரோ ஜூட3ரா;
- பூ4 வாஸிகி, தகு3 ப2லமு கல்கு3னனி, பு3து4லு பல்க வின லேதா3?
- ஸ்ரீ வாஸுதே3வஸ்ஸர்வமனுசுனு சிந்திஞ்சரா த்யாக3ராஜ வினுதுனி.
மனமே!
- கெட்டுப்போகும் புத்தியினைக் கைவிடடா;
- இங்கு பாத்திரமெவரோ காணடா;
- புவி வாசிக்கு தகுந்த பயனுண்டாகுமென, அறிஞர்கள் சொல்லக் கேட்டிலையோ?
- வாசுதேவனே அனைத்துமென சிந்திப்பாயடா, தியாகராசனால் போற்றப் பெற்றோனை.
(ceDE buddhi - aThANA)
Top
ராமா!
- மட்டு மிதமு லேனட்டி தே3வதா மதமுலலோ ஜொரப3டு3தா3மண்டே, கட்டு ஜேஸினாவு 'ராம ப3ந்து3'.
- மா மதமுலனு லலாடமுன, பிதாமஹுடு3 வ்ராய லேத3னுசுனு, காம மத3முலகு ஹிதவனுசு, நிஷ்காம த்யாக3ராஜுகு, மரி மரி தோசே, கட்டு ஜேஸினாவு 'ராம ப3ந்து3'
இராமா!
- எண்ணிறந்தது போலும், கடவுளரின் மதங்களில் நுழைவோமென்றால், (என்னைக்) கட்டியுள்ளாய், 'இராமனின் அடிமை' யென.
- எமது மதத்தினை நெற்றியில் தாதை எழுதவில்லையாதலால், (மற்ற மதங்கள்) ஆசை, செருக்கு ஆகியவற்றிற்கு உகந்தவையென, பற்றற்ற, தியாகராசனுக்கு, திரும்பத்திரும்பத் தோன்றுகின்றது, (என்னைக்) கட்டியுள்ளாய் 'இராமனின் அடிமை' யென.
(kaTTu jEsinAvu - aThANA)
Top
ஸ்ரீ ராம!
- ஸந்ததமு நின்னே நெர நம்மினானு;
- கன்ன கன்ன வாரினி வேடு3கொன்னானு; ப2லமு லேத3னி, நின்னே நெர நம்மினானு;
- தா3ர, தனயுல, உத3ர பூரணமு ஸேயு கொரகு, தூ3ர தே3ஸ1முலனு ஸஞ்சாரமு ஜேஸி, ஸாரமிந்தைன லேக, வேஸாரி, ஈ ஸம்ஸார பாராவாரமந்து3 கலுகு3 ப2லமு ஈ தா3ரியனி தெலிஸி, நின்னே நெர நம்மினானு;
- ஸஞ்சித கர்மமு தொலகி3ஞ்சி, நன்னு ஏ வேள கருணிஞ்சி, ப்3ரோசு, தை3வமு நீவனுசு யாசிஞ்சி, கொஞ்செபு நருல நுதியிஞ்சனு நா வல்லனு காது3 அஞ்சுனு, து3ஸ்-ஸங்க3தி சாலிஞ்சி ஸந்ததமு, நின்னே நெர நம்மினானு;
- பூ4தலமுன, ஒக்கரி சேதி த4னமபஹரிஞ்சு கா4தகுல, பரலோக பீ4தியு லேனி பாதகுல பட்டி, யம தூ3தலு கொட்டெடி3 வேள, ப்3ரோதுனனி பல்கனு, எவரி சேத காத3னி, நின்னே நெர நம்மினானு.
ஸ்ரீ ராமா!
- எவ்வமயமும் உன்னையே மிக்கு நம்பியுள்ளேன்;
- கண்ட கண்டவர்களை வேண்டிக்கொண்டேன்; பயனில்லையென, நான் உன்னையே மிக்கு நம்பியுள்ளேன்;
- மனைவி மக்களின் வயிற்றினை நிரப்புவதற்காக, தூர தேசங்களில் சஞ்சரித்து, சாரம் சிறிதுமின்றி, துயருற்று, இந்த சமுசாரக் கடலில் கிடைக்கும் பயன் இந்த விதமென உணர்ந்து, உன்னையே மிக்கு நம்பியுள்ளேன்;
- முன்வினையை ஒழித்து, என்னை, எவ்வேளையும், கருணித்துக் காக்கும் தெய்வம் நீயென, இரந்து, அற்ப மனிதரைப் போற்ற என்னாலாகாதென, தீயோரிணக்கம் போதுமென்று, எவ்வமயமும், உன்னையே மிக்கு நம்பியுள்ளேன்;
- புவியில் மற்றவரின் செல்வத்தினைக் கவரும் கொலையாளிகள், மற்றும், பரலோக அச்சமற்ற பாதகர்களைப் பிடித்து, நமனின் தூதர்கள் உதைக்கும்போது, காப்பேனெனப் பகர, எவராலும் இயலாதென, உன்னையே மிக்கு நம்பியுள்ளேன்.
(ninnE nera namminAnu - Arabhi)
Top
மனஸா!
- வேத3, புராண ஆக3ம, ஸா1ஸ்த்ராது3லககு ஆதா4ரமௌ, த்யாக3ராஜு ஸேவிஞ்சு, நாத3 ஸுதா4 ரஸம்பு3, இலனு, நர ஆக்ரு2தியாயே;
- ஸ்வரமுலு ஆருன்னொகடி க4ண்டலு;
- வர ராக3மு கோத3ண்ட3மு;
- து3ர, நய, தே3ஸ்1யமு த்ரி கு3ணமு;
- நிரத க3தி ஸ1ரமுரா;
- ஸரஸ ஸங்க3தி ஸந்த3ர்ப4மு க3ல கி3ரமுலுரா;
- த4ர ப4ஜன பா4க்3யமுரா.
மனமே!
- வேத, புராண, ஆகம, சாத்திரங்கள் ஆகியவற்றிற்கு ஆதாரமான, தியாகராசன் சேவிக்கும், நாதமெனும் அமுதச்சாறு இங்கு (இராமனாக) மனித உருவானதே!
- சுரங்கள் ஆறோடொன்று, மணிகளாக,
- உயர் ராகம், கோதண்டமாக,
- துரம், நயம், தேசியம், (நாணின்) முப்பிரிகளாக,
- நிலையான கதி, அம்புகளடா;
- இனிய சங்கதி, தருணத்திற்கேற்றச் சொற்களடா;
- வில்லேந்துவோனின் பஜனையே பேறாகுமடா.
(nAda sudhA rasam - Arabhi)
Top
ஓ மனஸா!
- ஸ்வர, ராக3 ஸுதா4 ரஸ யுத ப4க்தி, ஸ்வர்கா3பவர்க3முரா;
- பரமானந்த3மனே கமலமுபை, ப3க, பே4கமு செலகி3யேமி?
- மூலாதா4ரஜ நாத3மெருகு3டே முத3மகு3 மோக்ஷமுரா;
- கோலாஹல, ஸப்த ஸ்வர க்3ரு2ஹமுல கு3ருதே மோக்ஷமுரா;
- ப3ஹு ஜன்மமுலகு பைனி, ஞானியை பரகு3ட, மோக்ஷமுரா;
- ஸஹஜ ப4க்திதோ, ராக3, ஞான ஸஹிதுடு3, முக்துடு3ரா;
- மர்த3ல தாள க3துலு தெலியகனே, மர்தி3ஞ்சுட ஸுக2மா? ஸு1த்3த4 மனஸு லேக, பூஜ ஜேயுட ஸூகர வ்ரு2த்திரா;
- ரஜத கி3ரீஸு1டு3, நக3ஜகு தெல்பு, 'ஸ்வரார்ணவ' மர்மமுலு, விஜயமு க3ல த்யாக3ராஜுடெ3ருகே3;
விஸ்1வஸிஞ்சி தெலுஸுகோ.
ஏ மனமே!
- சுர, ராக அமுதச் சாறு கூடின பக்தி வானுலகமும், மோக்கமுமாகுமடா;
- பேரானந்தமெனும் கமலத்தின் மீது கொக்கும், தவளையும் திகழ்ந்தென்ன (பயன்)?
- மூலாதாரத்திலெழும் நாதத்தினையறிதலே களிப்புடை மோக்கமடா;
- (உடலில்) கோலாகலமான ஏழு சுரங்களின் இருப்பிடங்களைத் தெரிதலே மோக்கமடா;
- பல பிறவிகளுக்குப் பின்னர் ஞானியாகித் திகழ்தல் மோக்கமடா;
- உடன் பிறந்த பக்தியுடன், ராக ஞானமும் உடையோன் முத்தனடா;
- மத்தளத்தின் தாள நடைகளறியாமலே (மத்தளத்தினை) அடித்தல் சுகமா? (அங்ஙனமே) தூய உள்ளமின்றி வழிபாடு செய்தல் பன்றியொழுக்கமடா;
- பனி மலையீசன் மலைமகளுக்குத் தெரிவிக்கும், சுரக்கடலின் மருமங்கள், வெற்றியுடைத் தியாகராசன் அறிவானே;
நம்பித் தெரிந்துகொள்வாய்.
(svara rAga sudhA - SankarAbharaNaM)
Top
ராம!
- விஷயாலு ஏல ரோயரோ எப்புடு3?
- ராயா ஈ தே3ஹமு?
ராமா!
- விடயங்களை (மனிதர்கள்) ஏனோ வெறுக்கமாட்டார், எவ்வமயமும்?
- கல்லோ இவ்வுடல்?
(விடயங்கள் - புலன் நுகர்ச்சி)
(rAma sItA rAma - SankarAbharaNaM)
Top
ராம!
- நீ ப4க்தி ஸதா3 பாலிஞ்சுனு; மோக்ஷமொஸகு3; நீ ஸன்னிதி4னி ப்ரமாணமு ஜேஸி பல்கெத3;
- ஸத்வ கு3ணம்பு3னனு உபாஸனமு ஒனரிஞ்சிரி பெத்3த3லு; தத்வமு தெலிஸெனு இக ப4வ தரணோபாயமு நீவனி;
- லோகுலு நிஜ தா3ஸுல கனி, லோபடு3 து3ரஸூயலதோ, நினு தூ3ஷிஞ்சின, செடி3 போலேரு கானி.
இராமா!
- உனது பற்று எவ்வமயமும் பாதுகாக்கும்; வீடருளும்; (இதை) உனது புனித முன்னிலையில் ஆணையிட்டுச் சொன்னேன்;
- சத்துவ குணத்துடன் (உன்னை) வழிபாடு செய்தனர், சான்றோர்; தத்துவம் தெரிந்தது - இனி பிறவிக்கடலைத் தாண்டுவிக்கும் சாதனம் நீயென;
- உலகோர், உண்மையான தொண்டர்களைக் கண்டு, உட்படும் தீய பொறாமையினால், உன்னைத் தூற்றினாலும், கேடுறாரன்றோ;
(rAma ninu vinA - SankarAbharaNaM)
Top
த்யாக3ராஜ அர்சித!
- ராக3மு, தாளமு, ரக்தி ப4க்தி ஞான யோக3மு, அனுராக3மு லேனி பா4க3வதுலு உத3ர ஸ1யனுலே கானி
தியாகராசனால் தொழப்பெற்றோனே!
- இராகம், தாளம், கனிந்த பக்தி (கூடிய) ஞான யோகம், அனுராகம் (இவை) அற்ற பாகவதர்கள் உதரத்தினில் உறங்குபவர்களேயன்றோ?
(உத3ர ஸ1யன - மறுபடியும் தாய் வயிற்றினில் பிறத்தல்.)
(mariyAda kAdurA - SankarAbharaNaM)
Top
த்யாக3ராஜ வினுத!
- மனஸு ஸ்வாதீ4னமைன ஆ க4னுனிகி மரி மந்த்ர தந்த்ரமுலேல?
- தனுவு தானு காத3னி எஞ்சு வானிகி தபஸு சேயனேல?
- அன்னி நீவனுசு எஞ்சின வானிகி ஆஸ்1ரம பே4த3முலேல?
- கன்னு கட்டு மாயலனி எஞ்சு வானிகி காந்தல ப்4ரமலேல?
- ஆஜன்மமு து3ர்விஷய ரஹிதுனிகி க3தாக3தமு இகயேல?
தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
- மனது தன்வயப்பட்ட அச்சான்றோனுக்கு, பின்னர், மந்திர, தந்திரங்களேனோ?
- உடல் தானல்ல என்றெண்ணுவோனுக்கு தவமியற்றலேன்?
- அனைத்தும் நீயென்று எண்ணியவனுக்கு ஆச்சிரம வேறுபாடுகளேனோ?
- கண்கட்டு மாயையென்று எண்ணுவோனுக்குப் பெண்களால் திகைப்பேனோ?
- வாழ்நாள் முழுதும் தீய விடயங்களற்றோனுக்கு போக்கும் வரவும் இனியேனோ?
(விடயங்கள் - புலன் நுகர்ச்சி)
(manasu svAdhIna - SankarAbharaNaM)
Top
ப4க்த த்யாக3ராஜ நுத ராம!
- பா4வுகமகு3 ஸாத்வீக ப4க்தி பி3ச்சமிய்யவே;
- முக்திகி, அகி2ல ஸ1க்திகி, த்ரி-மூர்துலகு, அதி மேல்மி;
- ப்ராணமு லேனி வானிகி, ப3ங்கா3ரு பாக3 சுட்டி, ஆணி வஜ்ர பூ4ஷணமுரமந்து3 பெட்டு ரீதி,
- ஜாணலகு, புராண, ஆக3ம, ஸா1ஸ்த்ர, வேத3, ஜப, ப்ரஸங்க3 த்ராண கல்கி3யேமி?
தொண்டன் தியாகராசனால் போற்றப் பெற்ற இராமா!
- பேறெனத்தகும் சாத்துவிக பக்திப் பிச்சையிடுவாயய்யா;
- முக்திக்கும், அனைத்து சக்திகளுக்கும், மும்மூர்த்திகளுக்கும் மிக்கு மேலானதாகும்;
- உயிரற்றவனுக்கு பொற் பாகைச் சுற்றி, ஆணி வைர நகைககள் மார்பிலணிவித்தல் போலும்,
- கெட்டிக்காரர்களுக்கு புராண, ஆகம, சாத்திர, வேதம் ஓதல், சொற்பொழிவுத் திறனுண்டாகியென்ன (பயன்)?
(bhakti biccam - SankarAbharaNaM)
Top
- பூ4ரி வித்3யல நேர்சின,
- தா4ன்ய த4னமுல சேத த4ர்மமெந்தயு ஜேஸின,
- மானக பா4க3வதாதி3 ராமாயணமுலு சதி3வின,
- யோக3முலப்4யஸிஞ்சின போ4க3முலெந்தோ கலிகி3ன,
- பெத்3த3ல 1ஸுத்3து3லு வினக,
- நான்ய சித்த ப4க்துல வாக3ம்ரு2த பானமு ஸேயக,
- மானுஷாவதார சரித மர்மக்3ஞுல ஜத கூட3க,
- த்யாக3ராஜ நுதுடௌ3 ராம தா3ஸுல செலிமி ஸேயக,
பு3த்3தி4 ராது3.
- மிக்கு வித்தைகள் கற்றிடினும்,
- உணவுப்பண்டங்கள், செல்வத்தினால் தருமங்களெத்தனை செய்திடினும்,
- தவறாது, பாகவதம், இராமாயணம் ஆகியவை ஓதிடினும்,
- யோகங்கள் பயின்றிடினும், புவியின்பங்க ளெத்தனையோ உண்டாயினும்,
- சான்றோர் சொற்களைக் கேளாது,
- மற்ற எண்ணங்களற்ற தொண்டர்களின் சொல்லமிழ்து பருகாது,
- மானிட உருவ (இராமனின்) சரித மருமமறிந்தோரின் கூட்டு சேராது,
- தியாகராசன் போற்றும் இராமனின் தொண்டர்களின் நட்பு கொள்ளாது,
அறிவு வாராது.
(அறிவு - இறைவனை உணரும் மெய்யறிவு)
(buddhi rAdu - SankarAbharaNaM)
Top
- மனஸா!
- ராம ப4ஜன பருலகேல த3ண்ட3 பாணி ப4யமு?
- அஜ ருத்3ர 2ஸுரேஸு1லகு ஆயா ஸ்தா2னமொஸங்கு3 ராம ப4ஜன பருலகேல த3ண்ட3 பாணி ப4யமு?
- அண்ட3 கோட்லு நிண்டி3ன, கோத3ண்ட3 பாணி முக2முனு, ஹ்ரு2த்-புண்ட3ரீகமுன ஜூசி, பூஜ ஸல்புசு, நிண்டு3 ப்ரேமதோ கரங்கு3 நிஷ்காமுலகு,
- வர வேத3ண்ட3 பாலு தா3ஸுடை3ன, த்யாக3ராஜு ஸேயு ராம ப4ஜன பருலகு,
- ஏல த3ண்ட3 பாணி ப4யமு?
- மனமே!
- இராமனின் பஜனையில் ஈடுபட்டோருக்கேன் தண்டபாணியின் அச்சம்?
- பிரமன், உருத்திரன், வானோர் தலைவன் ஆகியோருக்கு அந்தந்தப் பதவிகளை வழங்கும் இராமனின் பஜனையில் ஈடுபட்டோருக்கேன் தண்டபாணியின் அச்சம்?
- அண்டங்கள் கோடிகளில் நிறைந்துள்ள கோதண்டபாணியின் முகத்தினை, (தமது) இதயக் கமலத்தினிற் கண்டு, வழிபாடு செய்துகொண்டு, நிறை காதலுடன் உருகும் இச்சைகளற்றோருக்கும்,
- உயர் வேழத்தினைக் காப்போனின் தொண்டனாகிய தியாகராசன் செய்யும் இராமனின் பஜனையில் ஈடுபட்டோருக்கும்
- ஏன் தண்டபாணியின் அச்சம்?
(தண்டபாணி - நமன்
(bhajana parulakEla - suraTi)
Top
- ஓ மனஸா!
- கீ3தார்த2மு, ஸங்கீ3தானந்த3முனு, ஈ தாவுன, ஜூட3ரா;
- ஸீதா பதி சரணாப்3ஜமுலிடு3கொன்ன வாதாத்மஜுனிகி பா3க3 தெலுஸுரா;
- ஹரி, ஹர, பா4ஸ்கர, காலாதி3, கர்மமுலனு மதமுல மர்மமுலனெரிங்கி3ன, ஹரி வர ரூபுடு3, ஸுகி2ரா.
- ஓ மனமே!
- கீதையின் பொருளினையும், சங்கீதத்தின் ஆனந்தத்தினையும் இவ்விடத்தினில் காண்பாயடா;
- சீதாபதியின் திருவடித் தாமரைகளை யேந்தியிருக்கும் வாயு மைந்தனுக்கு நன்கு தெரியுமடா;
- அரி, அரன், பரிதி, சக்தி முதலான கருமங்கள் எனும் மதங்களின் மருமங்களினை யறிந்த, உயர் வானர உருவத்தோன், களிப்பவனடா.
(gItArthamu - suraTi)
Top
- ஸா1ந்தமு லேக ஸௌக்2யமு லேது3
- தா3ந்துனிகைன வேதா3ந்துனிகைன ஸா1ந்தமு லேக ஸௌக்2யமு லேது3
- தா3ர, ஸுதுலு, த4ன, தா4ன்யமுலு உண்டி3ன,
- ஸாரெகு, ஜப, தப, ஸம்பத3 கல்கி3ன,
- ஆக3ம ஸா1ஸ்த்ரமுலு அன்னியு சதி3வின,
- பா4க3வதுலு அனுசு பா3கு3க3 பேரைன,
- யாக3 ஆதி3 கர்மமுலு அன்னியு ஜேஸின,
- பா3கு3க3 ஸகல ஹ்ரு2த்3பா4வமு தெலிஸின,
- ஸா1ந்தமு லேக ஸௌக்2யமு லேது3
- தனகு உபஸா1ந்தமு லேக ஸௌக்2யமு லேது3
- (மன) அமைதியின்றி சௌக்கியமில்லை;
- தவசிக்காகிலும், வேதாந்திக்காகிலும் (மன) அமைதியின்றி சௌக்கியமில்லை;
- மனைவி, மக்கள், செல்வம், தானியங்களுடைத்தாயினும்,
- எவ்வமயமும் செப, தவச் செல்வங்களுண்டாகினாலும்,
- ஆகம சாத்திரங்களனைத்தினையும் கற்றிடினும்,
- பாகவதரெனச் சிறக்க பெயர் பெற்றிடினும்,
- வேள்வி முதலான கருமங்களனைத்தும் இயற்றிடினும்,
- (அவற்றின்) உட்கருத்தினையெல்லாம் நன்கறிந்திடினும்,
- (மன) அமைதியின்றி சௌக்கியமில்லை;
- தனக்கு உபசாந்தமின்றி சௌக்கியமில்லை.
(SAntamu lEka - SAma)
Top
- ஓ மனஸா!
- எடுலைன ப4க்தி வச்சுடகே யத்னமு ஸேயவே;
- மடு-மாய ப4வமுனு மனத3னி எஞ்சக, வட பத்ர ஸ1யனுனி பாத3 யுக3முலந்து3 எடுலைன ப4க்தி வச்சுடகே யத்னமு ஸேயவே;
- வித்3யா க3ர்வமுலேல?
- நீவு அவித்3யா வஸ1மு கானேல?
- க2த்3யோத அன்வய திலகுனி புரமேலு பு3த்3தி4 ஆஸு1க3 தோசதே3ல?
- ராம நாமமு ஸேய ஸிக்3கா3? காராதே3மி? பல்கவு? புண்டி பு3க்3கா3?
- பா4மல கர தா3டகயுண்டே, ஜக்3க3;
- பாமர! மேனு நம்மக; நீடி பு3க்3க3;
- போ4க3 பா4க்3யமுலந்து3, நிஜ பா4க3வதுலகௌ நீ பொந்து3;
- த்யாக3ராஜ வரது3னி நீயந்து3 பா3கு3க3 த்4யானிஞ்சு;
- ப4வ ரோக3 மந்து3.
- ஓ மனமே!
- எப்படியாகிலும் பக்தி வருதற்கே முயற்சிப்பாய்
- கண்கட்டு மாய உலக வாழ்வினை நமதென எண்ணாது, ஆலிலையிற் றுயில்வோனின் திருவடி இணையினில் எப்படியாகிலும் பக்தி வருதற்கே முயற்சிப்பாய்
- கல்விச் செருக்கேனோ? நீ அவித்தையின் வயப்படுவதேனோ?
- பரிதி குலத் திலகத்தின் நகர் செல்லும் எண்ணம் சடுதியில் தோன்றாததேனோ?
- இராம நாம (செபம்) செய்ய நாணமோ? செய்யக் கூடாதோ? பேசமாட்டாயோ? புண் வாயோ?
- பெண்டிர் கரை தாண்டாதிருந்தால், மிக்க நன்று;
- அறிவிலியே! உடலை நம்பாதே; (அது) நீர்க் குமிழி
- இன்பம், பேறு - இவற்றிற்கிடையும், உண்மையான தொண்டர்களுடன் இருக்கட்டும் உனது தொடர்பு;
- தியாகராசனுக் கருள்வோனை உன்னுள் நன்கு தியானிப்பாய்;
- உலக வாழ்வெனும் நோய்க்கு (அதுவே) மருந்து.
(eTulaina bhakti - SAma)
Top
- மனஸா!
- அதி3 காது3 ப4ஜன;
- எத3லோன எஞ்சுட ஒகடி; பய்யெத3 கல்கி3னசோ ஒகடி; அதி3 காது3 ப4ஜன;
- கொ3ப்ப தனமுகை ஆஸ; குத்ஸித விஷய பிபாஸ; மெப்புலகை ப3ஹு வேஸமிடி3 உப்3ப3தில்லெத3ரு; அதி3 காது3 ப4ஜன.
- மனமே!
- அஃதன்று பஜனை;
- உள்ளத்தினில் நினைப்பதொன்று, வெளியில் நடப்பதோ மற்றொன்று; அஃதன்று பஜனை;
- பெரியதனத்திற்கு ஆசை; இழிந்த விடயங்களின் வேட்கை; பெயருக்கென பல வேடங்களிட்டு பெருமிதமுறுவர்; அஃதன்று பஜனை.
(adi kAdu bhajana - yadukula kAmbhOji)
Top
- மாகேலரா விசாரமு, ஸ்ரீ ராம சந்த்3ர?
- ஜத கூர்சி, நாடக ஸூத்ரமுனு, ஜக3மெல்ல மெச்சக3, கரமுனனிடி3, க3தி தப்பக ஆடி3ஞ்செத3வு ஸுமீ!
- இராம சந்திரா! எமக்கேனய்யா கவலை?
- சோடுகட்டி, நாடகக் கயிற்றினை, உலகெல்லாம் மெச்ச, கரத்தினில் பற்றி, கதி தப்பாது, ஆட்டுவிக்கின்றாயன்றோ!
(mAkElarA vicAramu - ravi candrika)
Top
- ஈ தனுவு அஸ்தி2ரமனி, ஈ கலி மானவுலகு, எந்து3கோ, பா3க3 தெலியது3?
- க3ட்டிக3, ராள்ளனு கட்டின, க்3ரு2ஹமுலு,
- மட்டு, மிதமு லேனட்டி, 3பரிஜனுலு,
- சுட்டுகொன்ன, நிஜ சுட்டாலகு, ஒருல பட்டுலகு, அதி2துலகு, பெட்ட லேக, தம பொட்ட ஸாகு-கொன்னட்டி, தே3ஹமுலு,
- ரெட்டு ஸஞ்சுலனு கட்டின, த4னமுல பெட்டெல தோட3னு,
- பெட்டி பொய்யே மட்டு கனுங்கொ3னி, ஈ தனுவு அஸ்தி2ரமனி, ஈ கலி மானவுலகு, எந்து3கோ பா3க3 தெலியது3?
- கல்லலாடி3, கடு3பு பல்லமு நிம்புடகு, எல்லவாரி த4னமெல்ல ஜேர்சுகொனி,
- பல்லவாத4ருலனெல்ல கனி, ஸு1னகபு பில்லல வலெ திரிகி3,
- ஒள்ள ரோக3முலு, கொள்ளகா3 தக3ல,
- தொல்லி பைகமுலு மெல்ல ஜார,
- ஜனுலெல்ல தூ3ர,
- பரமெல்ல பார,
- பு4வி, மள்ளி புட்டு ப2லமெல்ல கனுங்கொ3னி, ஈ தனுவு அஸ்தி2ரமனி, ஈ கலி மானவுலகு, எந்து3கோ பா3க3 தெலியது3?
- வஞ்சகுலனு அனுஸரிஞ்சின அலமட இஞ்சுகைன ஸைரிஞ்ச லேக,
- தம ஸஞ்சித கர்மமுலஞ்சு தெலிஸி,
- வேரெஞ்சு வாரல ஜூசி,
- மஞ்சு வலெ, ப்ரதி-ப2லிஞ்சு ஸம்பத3லஞ்சு, கோரகனு,
- மஞ்சி த்யாக3ராஜு, அஞ்சிதமுக3, பூஜிஞ்சு, நுதிஞ்சு ப்ரபஞ்ச நாது2னி, ப4ஜிஞ்சுதா3மனுசு, எந்து3கோ பா3க3 தெலியது3?
- இவ்வுடல் நிலையற்றதென இக்கலி மானிடர்களுக்கு ஏனோ நன்கு தெரியாது?
- கெட்டியாக கற்களினால் கட்டிய வீடுகளும்,
- மட்டு மிதமற்றதெனும் பரிசனங்களும்,
- சூழ்ந்துள்ள உண்மையான சுற்றத்தினருக்கும், பிறர் மக்களுக்கும், விருந்தினருக்கும் ஈயாது, தமது வயிற்றினை நிரப்பி வளர்த்த அத்தகைய உடலும்,
- சாக்குப் பைகளில் கட்டிய செல்வப் பெட்டகங்களுடனும்,
- விட்டு வைத்து ஏகும் வரையினைக் கண்டுகொண்டும், ஏனோ நன்கு தெரியாது?
- பொய்ப் பகன்று, வயிற்றுக் குழியினை நிரப்புதற்கு, பிறர் சொத்துக்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு,
- மொட்டிதழ் பெண்டிரைக் கண்டு, நாய்க் குட்டிகளைப் போன்று திரிந்து,
- உடலை நோய்கள் கொள்ளையாகப் பீடிக்க,
- முந்தைய சொத்துக்களெல்லாம் மெள்ள கரைய,
- மக்கள் யாவரும் தூற்ற,
- பரமெல்லாம் நழுவ,
- புவியில் மீண்டும் பிறக்கும் பயன்களைக் கண்டுகொண்டும், ஏனோ நன்கு தெரியாது?
- வஞ்சகர்களை அனுசரித்தலின் துன்பத்தினைக் கொஞ்சமும் தாளாது,
- தமது முந்தைய வினைகளெனத் தெரிந்து,
- வேறெண்ணுவோரை நோக்கி,
- பனித்துளி போன்று பிரதிபலிக்கும் சம்பத்துக்கள் என, (அவற்றினை) விழையாது,
- சீரிய தியாகராசன் பணிவுடன் தொழும், போற்றும் உலகத் தலைவனை (நாமும்) வழிபடுவோமென, ஏனோ நன்கு தெரியாது?
(endukO bAga - mOhanaM)
Top
- ஜராதி3 ரோக3 யுத தனுவுசே, நராத4முலு ஏமி ஸாதி4ஞ்சிரி?
- நிரந்தரமு, ஸகல விஷய து3:க2 பரம்பரலசே, சிவுகக3,
- மதி3லோ, து3ரந்த காம மத3முனு பா3தி4ஞ்சக3,
- து3ர்மதுடே3;
- மூப்பினால் விளையும், நோயுற்ற உடலுடன், மனிதரில் இழிந்தோர் என்ன சாதித்தனர்?
- இடைவிடாது, அனைத்து விடய (துய்ப்பின்) துன்பத் தொடரினால் (உடல்) மெலிய,
- மனத்தினில், தீய முடிவுடைய, இச்சை, செருக்கு (ஆகியவை) தாக்க,
- தீயவுள்ளத்தோராகினர்.
(virAja turaga - balahaMsa)
Top
- அத்3வைத ஸாம்ராஜ்யமுலு அப்3பி3னட்டு, ஸத்3-வைராக்3யமுனு; இதி3யு ஸாயுஜ்யமே; ஆக3ம நிக3மமுலகுனு அர்த2மிதி3
- இரண்டன்மை (அத்துவைத) பேரரசினை யடைதல் போன்று, உண்மையான பற்றறுத்தலும்; இஃதும் சாயுச்சியமே; ஆகமங்கள், மறைகளின் பொருளிதுவே.
(rAma sItA rAma - balahaMsa)
Top
- த்யாக3ராஜ ஹ்ரு2த்3-தா4ம! வினு!
- கனுலகு சலுவ, செவுலகம்ரு2தமு, ரஸனகு ருசி, மனஸுகு ஸுக2மு, தனுவுகானந்த3முனு கல்க3 ஜேஸே நினு பா3ஸியெடுலுந்து3ரோ நிர்மலாத்முலௌ ஜனுலு!
- தியாகராசனின் இதயத்துறையே! கேளாய்!
- கண்களுக்குக் குளிர்ச்சியும், செவிகளுக்கு அமிழ்தும், நாவிற்குச் சுவையும், மனதிற்குச் சுகமும், மெய்க்குக் களிப்பினையும் உண்டாகச் செய்யும், உன்னைப் பிரிந்து எப்படியிருப்பரோ, தூய உள்ளம் படைத்த மக்கள்!
(ninu bAsi - balahaMsa)
Top
- மனஸா!
- இக காவலஸினதே3மி? ஸுக2முனனுண்ட3வதே3மி?
- அகி2லாண்ட3 கோடி ப்3ரஹ்மாண்ட3 நாது2டு3 அந்தரங்க3முன நெலகொனியுண்ட3க3...
- முந்த3டி ஜன்மமுலனு ஜேஸின அக4 ப்3ரு2ந்த3 விபினமுலகு, ஆனந்த3 கந்து3டை3ன ஸீதா பதி நந்த3க யுதுடை3யுண்ட3க3...
- காமாதி3 லோப4, மோஹ, மத3, ஸ்தோம தமம்முலகுனு, ஸோம ஸூர்ய நேத்ருடை3ன ஸ்ரீ ராமசந்த்3ருடே3 நீயந்து3ண்ட3க3...
- க்ஷேமாதி3 ஸு1ப4முலனு, த்யாக3ராஜ காமிதார்த2முலனு நேமமுனனிச்சு, த3யா நிதி4, ராமப4த்3ருடு3, நீயந்து3ண்ட3க3...
- இக காவலஸினதே3மி? ஸுக2முனனுண்ட3வதே3மி?
- மனமே!
- இன்னும் வேண்டியதென்ன, சுகமாய் இராயேனோ?
- அனைத்தண்ட கோடி பிரம்மாண்ட நாதன் அந்தரங்கத்தினில் நிலைபெற்றிருக்க...
- முந்தைய பிறவிகளில் செய்த பாவங்களெனும் அடவியையழிக்க, ஆனந்தக் கிழங்கான சீதாபதி, நந்தகத்துடனிருக்க...
- இச்சை, கருமித்தனம், மயக்கம், செருக்கு ஆகிய இருட்டினுக்கு, மதி, பரிதிகளைக் கண்களாயுடைய இராமசந்திரனே உன்னுள்ளிருக்க...
- நிம்மதி ஆகிய நலன்களையும், தியாகராசன் விரும்பியவற்றினையும், தவறாது வழங்கும் கருணைக் கடலான இராம பத்திரன் உன்னுள்ளிருக்க...
- இன்னும் வேண்டியதென்ன? சுகமாய் இராயேனோ?
(ika kAvalasinadEmi - balahaMsa)
Top
- மனஸா!
- ஸ்ரீ த்யாக3ராஜ நுதுனி தலசக, மனஸு விஷய நட விடுலகு ஒஸங்கி3தே, மா ராமுனி க்ரு2ப கலுகு3னோ?
- தன தலுபு ஒகரிண்டிகி தீஸி பெட்டி, தா குக்கலு தோலு ரீதி காதோ3?
- தவிடிகி ரங்காட3 போயி, கூடி தபிலெ, கோதி கொனிபோயினடு காதோ3?
- செவிடிகி உபதே3ஸி1ஞ்சினடு காதோ3?
- மனமே!
- தியாகராசனால் போற்றப் பெற்றோனை நினையாது, மனத்தினை விடய களவொழுக்கத்தினருக்கு அளித்தால், எமது இராமனின் கிருபை யுண்டாகுமோ?
- தன் கதவை பிறர் வீட்டிற்குப் பெயர்த்து வைத்து, தான், நாய்களை விரட்டுதல் போன்றாகாதோ?
- தவிட்டுக்கு வேசியாடச் செல்ல, கூழ்ப் பானையை குரங்கு கொண்டுபோனது போன்றாகாதோ?
- செவிடனுக்கு உபதேசித்தது போன்றாகாதோ?
(manasu vishaya - nATa kuranji)
Top
- முல்லோகமுலு அல்லாடி3ன, இல்லே க3தி கானி
- இலனந்தட கல வானகு, ஜலதே4 க3தி கானி
- கு3ணமுலலோன அணிகி3 உண்டே, கு3ணியே க3தி கானி
- என்னி விதமுலுன்னானு, நின்னே சேரவலெ கானி
- மூவுலகில் அலைந்தாலும் இல்லமே கதியன்றோ!
- புவியெல்லாம் பெய்யும் மழைக்கு கடலே போக்கன்றோ!
- குணங்களிலேயே அடங்கியிருந்தால் குணவானே கதியன்றோ!
- எத்தனை நெறிகள் இருந்தாலும் உன்னையே யடையவேண்டுமன்றோ!
(raghu nandana - kEdAra gauLa)
Top
- நிஜமுக3 நீ மஹிம தெல்ப லேரு;
- ப4ஜன ஸேயுமனி பலிகிரி, கானி, அஜ - க3ஜ, ஸிம்ஹ - ஸ்ரு2கா3ல - அந்தரமனி நிஜமுக3 நீ மஹிம தெல்ப லேரு;
- பு3த்3தி4யனு தல்லினி விஷய விடுலகு ப்ரொத்3து3ன ஒஸகி3 பைகமுலு ஆர்ஜிஞ்சே 'ஸித்3து4லு', ஸுஜனுல ஸப4கு ரா நேரனி 'பெத்3த3லு', நிஜமுக3 நீ மஹிம தெல்ப லேரு;
- நிசமாக உனது மகிமையினைத் தெரிவிக்க மாட்டார்;
- 'பஜனை செய்வீர்' எனப் பகர்ந்தனர்; ஆயின், ஆடு - யானை, சிங்கம் - ஓநாய்களின் வேறுபாடென, நிசமாக உனது மகிமையினைத் தெரிவிக்க மாட்டார்;
- அறிவெனும் தாயினை விடயங்களெனும் காமுகர்களுக்கு காலைமுதல் அளித்து, பணம் தேட்டும் 'சித்தர்கள்', நல்லோரின் அவைக்கு வர நேராத 'பெரியோர்கள்', நிசமாக உனது மகிமையினைத் தெரிவிக்க மாட்டார்.
(nijamuga nI - SahAna)
Top
- ஸாரெகுனு, ஸம்ஸாரமுன ஜொச்சி, ஸாரமனியெஞ்சு வாரி மனஸுன, ஊரகே கல்கு3னா ராமுனி ப4க்தி?
- ஆலு, ஸுதுலு, ஜுட்டாலு, வர ஸத3னாலு, காய ப3லாலு, கனக த4னாலு கல விப4வமுல கனி, அஸ்தி2ரமுலனே பா4க்3ய-ஸா1லுலகு கா3க, ஊரகே கல்கு3னா ராமுனி ப4க்தி?
- மஞ்சி வாரினி பொட3கா3ஞ்சி, ஸந்ததமு ஸேவிஞ்சி, மனவினாலகிஞ்சி, ஆத3ரி ஸாதி4ஞ்சி, ஸர்வமு ஹரியஞ்சு தெலிஸி, பா4விஞ்சி, மதி3னி பூஜிஞ்சு வாரிகி கா3க ஊரகே கல்கு3னா ராமுனி ப4க்தி?
- ராஜஸ கு3ண யுக்த பூஜலனொனரிஞ்சக, த்யாக3ராஜுனி ஜிஹ்வபை ராஜில்லு, வர மந்த்ர ராஜமுனு, ஸதா3 ஜபிஞ்சு, மஹராஜுலகு கா3க, ஊரகே கல்கு3னா ராமுனி ப4க்தி?
- எவ்வமயமும் உலக வாழ்வினிலுழன்று, (அதனை) சாரமென எண்ணுவோரின் மனத்தினில் தானாகவே தோன்றுமோ இராமனின் பக்தி?
- மனைவி, மக்கள், சுற்றம், உயர் மாளிகை, உடல் வலிமை, பொன், செல்வங்களுடைத்த கொண்டாட்டத்தினைக் கண்டு, நிலையற்றவை யெனும் பேறுடைத்தோருக்கன்றி, தானாகவே தோன்றுமோ இராமனின் பக்தி?
- நன்மக்களை தரிசித்து, எவ்வமயமும் சேவித்து, (அவரது) வேண்டுகோளினைச் செவி மடுத்து, பணிவுடன் நிறைவேற்றி, யாவும் அரியென்றறிந்து, உணர்ந்து, மனதில் (இறைவனை) வழிபடுவோருக்கன்றி, தானாகவே தோன்றுமோ இராமனின் பக்தி?
- இராசத குணமுடை பூசைகளை மேற்கொள்ளாது, தியாகராசனின் நாவினில் திகழும், உயர் மந்திரங்களில் தலைசிறந்த (தாரக நாமத்தினை), எவ்வமயமும் செபிக்கும், பெருந்தகைகளுக்கன்றி, தானாகவே தோன்றுமோ இராமனின் பக்தி?
(UrakE kalgunA - SahAna)
Top
- ஸ்வர ஜாதி மூர்ச2ன பே4த3முல், ஸ்வாந்தமந்து3 தெலியகயுண்டி3ன, வர ராக3 லயக்3ஞுலு தாமனுசு வத3ரேரய்ய
- தே3ஹோத்3ப4வம்ப3கு3 நாத3முல் தி3வ்யமௌ ப்ரணவாகாரமனே தா3ஹம்பெ3ருக3னி மானவுல், வர ராக3 லயக்3ஞுலு தாமனுசு ஏசேரு
- ஸ்வர ஜாதி மூர்ச்சன வேறுபாடுகளினை தமதுள்ளத்தில் உணராவிடினும், உயர் ராக, லய, விற்பன்னர் தாமெனப் பிதற்றுவரய்யா
- உடலில் தோன்றும் நாதங்கள் திவ்வியமான பிரணவ வடிவெனும் தாகம் - (இதனை) அறியாத மனிதர்கள் உயர் ராக, லய, விற்பன்னர் தாமென ஏமாற்றுவர்
(vara rAga - cencu kAmbhOji)
Top
- மனஸா!
- ஒக மாட, ஒக பா3ணமு, ஒக பத்னீ வ்ரதுடே3; ஒக சித்தமு-க3லவாடே3
- சிர ஜீவித்வமு, நிர்ஜர வர மோக்ஷமு ஒஸங்கு3னே
- த4ர ப3ரகே3 தே3வுடே3, த்யாக3ராஜ நுதுடு3
- ஒக நாடு3னு மரவகவே
- மனமே!
- இராமன், ஓர் சொல், ஓரம்பு, ஓர்மனை விரதத்தோனடி; ஓர் சித்தமுடையவனடி;
- நீண்டாயுளும், குன்றாத, உயர் வீடும் அளிப்பானடி;
- புவியில் திகழும் தெய்வமடி, தியாகராசனால் போற்றப் பெற்றோன்;
- ஒரு நாளும் மறவாதேடி.
(oka mATa - hari kAmbhOji)
Top
- மனஸா! க4னுடை3ன, ராம சந்த்3ருனி கருணாந்தரங்க3மு தெலிஸின, நா மனவினாலகிஞ்ச ராத3டே; மர்மமெல்ல தெல்பெத3னே
- கர்ம காண்ட3 மதாக்ரு2ஷ்டுலை ப4வ க3ஹன சாருலை கா3ஸி ஜெந்த3க3 கனி மானவாவதாருடை3 கனிபிஞ்சினாடே3 நட3த
- மனமே! மேதகு இராமசந்திரனின் கருணை யுள்ளத்தினை யறிந்த எனது வேண்டுகோளைக் கேளாயோ அடியே? மருமத்தையெல்லாம் தெரிவிக்கின்றேனடி;
- கருமத்துப் பாலின் கோட்பாடுகளினால் ஈர்க்கப்பட்டு, பிறவியெனும் அடவியில் உழன்று, (மக்கள்) துயரடையக் கண்டு, மனித அவதாரமெடுத்து, காண்பித்தானே நடத்தையினை.
(manavinAlakinca - naLina kAnti)
Top
- மனஸா!
- மாயா-மயமைன சான மேனு ஜூசி மோஸ போகவே; லோனி ஜாட3லீலாகு3 காதா3?
- ஹீனமைன, மல, மூத்ர, ரக்தமுலகு இரவஞ்சு;
- கனுலனேடி அம்ப-கோல சேத கு3ச்சி, சனுலனேடி கி3ருல ஸி1ரமுனுஞ்சி, பனுலு சேதுரட;
- த்யாக3ராஜ நுதுனி பா3க3 நீவு ப4ஜன சேஸுகொம்மி.
- மனமே!
- மாயை மயமான பெண்டிர் மேனியைக் கண்டு மோசம் போகாதே; உட்குறிப்புக்கள் இவ்விதமன்றோ?
- ஈனமான, மலம், மூத்திரம், குருதிகளுக்கு, உறுதியான கரையிட்டது;
- கண்களெனும் அம்பினால் துளைத்து, மார்பகங்களெனும் குன்றுகளில் தலைவைத்து, பணிகள் செய்வராம்;
- தியாகராசனால் போற்றப் பெற்றோனை நன்கு நீ வழிபாடு செய்வாயே.
(mEnu jUci - sarasAngi)
Top
- கருகைன ஹ்ரு2த்3ரோக3 க3ஹனமுனு கொட்டனு ஸத்3-கு3ரு லேகயெடுவண்டி கு3ணிகி தெலியக3 போது3
- தனுவு ஸுத த4ன தா3ர தா3யாதி3 பா3ந்த4வுலு ஜனியிஞ்சி செத3ரு ஜாலினி கருணதோ மனுஸுனண்டக ஸேயு மந்த3னுசு தத்வ போ3த4ன ஜேஸி காபாடு3 த்யாக3ராஜாப்துட3கு3 கு3ரு லேகயெடுவண்டி கு3ணிகி தெலியக3 போது3
- கூர்மையான, இதய நோயெனும் முட்புதரினை அழிப்பதற்கு, நற்குருவின்றி, எப்படிப்பட்ட குணமுடைத்தோனுக்கும், தெரியவராது
- உடல், மக்கள், செல்வம், மனையாள், பங்காளிகள், முதலான உறவினர்கள் பிறந்து, சிதறும் துயரினை, கருணையுடன், மனத்தினைத் தீண்டாமற் செய்யும் மருந்தென, தத்துவ போதனை செய்து காக்கும், தியாகராசனின் நற்றுணை போலும் குருவின்றி, எப்படிப்பட்ட குணமுடைத்தோனுக்கும், தெரியவராது
(guru lEka - gauri manOhari)
Top
- ஸ்ரீமன்-மானஸ கனக பீட2முன, ஸகல லீலா வினோது3னி, பரமாத்முனி, செலக3 ஜேஸிகொனி,
- நாத3 ஸ்வரமனே, வர நவ ரத்னபு வேதி3கபை,
- வர ஸி1வ ராம நாம குஸுமமுலசே, ஸ்ரீ ராமுனி பாத3முலனு, பூஜிஞ்சே நர ஜன்மமே ஜன்மமு மனஸா
- மனமே!
- சிறந்த, மனமெனும் பொற்பீடத்தினில், அனைத்து திருவிளையாடல்களில் களிப்போனை, பரம்பொருளினை ஒளிரச்செய்து,
- நாதம், சுரமெனும் உயர், நவரத்தின வேதிகையின்மீது,
- புனித, மங்களமான இராம நாமமெனும் மலர்கொடு, இராமனின் திருவடிகளை, வழிபடும் மனிதப் பிறவியே பிறவியாகும்
(nAma kusuma - SrI rAgaM)
Top
- நிக3ம ஸி1ரோர்த2மு கல்கி3ன, நிஜ வாக்குலதோ, ஸ்வர ஸு1த்3த4முதோ,
- யதி, விஸ்1ரம, ஸத்3ப4க்தி, விரதி, த்3ராக்ஷா ரஸ நவ-ரஸ, யுத க்ரு2திசே
- ஸொக3ஸுகா3 ம்ரு2த3ங்க3 தாளமு ஜத கூர்சி நினு ஸொக்க ஜேயு தீ4ருடெ3வ்வடோ3
- மறைமுடியின் பொருளுடைத்த, உண்மையான சொற்களுடனும், சுரத் தூய்மையுடனும்,
- யதி, விஸ்ரமம், தூய பக்தி, (உலகப்) பற்றின்மை, திராட்சைச் சாறு (நிகர்) நவரசம் கூடிய பாடல்களுடன்
- சொகுசாக, மிருதங்க தாளத்தினைச் சோடு கட்டி, உன்னை சொக்கவைக்கும் தீரனெவனோ!
(sogasugA mRdanga - SrI ranjani)
Top
- லீலா ஸ்ரு2ஷ்ட, ஜக3த்ரயமனே கோலாஹல, ராம ப4க்தி ஸாம்ராஜ்யமு ஏ மானவுலகப்3பெ3னோ!
- ஆ மானவுல ஸந்த3ர்ஸ1னமு அத்யந்த ப்3ரஹ்மானந்த3மே;
- ஈலாக3னி விவரிம்ப லேனு சால ஸ்வானுப4வ வேத்3யமே.
- திருவிளையாடலாக, மூவுலகமெனும் பேராரவாரத்தினைப் படைத்த, இராமனின் பக்திப் பேரரசு எம்மானவருக்கு கிடைத்ததோ!
- அம்மானவரை தரிசித்தல் (கூட) மட்டற்றப் பேரானந்தமே!
- இவ்விதமென விவரிக்க இயலேன்; மிக்கு தான் துய்த்து உணர்வதுவே!
(rAma bhakti - Suddha bangALa)
Top
- தனுவுகு லம்பட தப்பக3னே வச்சுனா நீ க்ரு2ப?
- மெப்புலகை கொப்புலு-க3ல மேடி ஜனுல ஜூசி ப4ஜன தப்பக3னே வச்சுனா நீ க்ரு2ப?
- த்யாக3ராஜ நுதுனி ப4ஜன தப்பக3னே வச்சுனா நீ க்ரு2ப?
- உடலுக்கு ஆசையினை விடாமலே, வருமோ உனது கிருபை?
- பெயருக்கென, கொப்புகளுடை மேன்மக்களைக் கண்டு (செய்யப்படும்), வழிபாட்டினை விடாமலே, வருமோ உனது கிருபை?
- தியாகராசனால் போற்றப் பெற்றோனின் வழிபாட்டினை விட்டாலே, வருமோ (உனது) கிருபை?
(tappaganE - Suddha bangALa)
Top
- பத3வி நீ ஸத்3ப4க்தியு கல்கு3டே
- சதி3வி, வேத3 ஸா1ஸ்த்ரோபனிஷத்துல ஸத்த தெலிய லேனிதி3 பத3வியா?
- த4ன தா3ர ஸுதாகா3ர ஸம்பத3லு, த4ரணீஸு1ல செலிமியொக பத3வியா?
- ஜப, தபாதி34யணிமாதி3 ஸித்3து4லசே, ஜக3முலனேசுடயதி3 பத3வியா?
- ராக3 லோப4 யுத யக்3ஞாது3லசே, போ4க3முலப்3பு3டயதி3 பத3வியா?
- த்யாக3ராஜ நுதுடௌ3 ஸ்ரீ ராமுனி தத்வமு தெலியனிதொ3க பத3வியா?
- பதவி உனது தூய பற்றுண்டாகுதலே
- கல்வி கற்று, மறைகள், சாத்திரங்கள், உபநிடதங்களின் உண்மை யறியாமை பதவியா?
- செல்வம், மனைவி, மக்கள், வீடு ஆகிய சம்பத்துக்கள், புவியாள்வோரின் நட்பு பதவியா?
- செபம், தவத்தினால் அணிமாதி சித்திகளுடன் உலகத்தை ஏய்த்தல் பதவியா?
- இச்சை, கருமித்தனம் கூடிய வேள்வி ஆகியவற்றால் (புவி) இன்பங்களைப் பெறுதல் பதவியா?
- தியாகராசனால் போற்றப் பெற்றோனாகிய இராமனின் தத்துவம் அறியாமை யொரு பதவியா?
(padavi nI - sALaka bhairavi)
Top
- கீ3ர்வாண, நாடகாலங்கார, வேத3, புராண, யக்3ஞ, ஜப, தபாது3ல ப2லமுலு க்ஷீணமை, திருக3 ஜன்மிஞ்சே ஸித்3தி4 மானுரா, ஓ மனஸா
- பதி3லமைன, ஸத்-பத3முனொஸங்கே3 பா3ட, த்யாக3ராஜ வினுதுனி ப4ஜனரா
- எதி3 ஜேஸின, ஜக3ன்னாது2டு3 ஸி1ரமுன, ஹ்ரு2த3யமுன வஹிஞ்சி, க்ஷீணமை, திருக3 ஜன்மிஞ்சே ஸித்3தி4 மானுரா
- இயல், இசை, நாடகம், அணியிலக்கணம், மறைகள், புராணம், வேள்வி, செபம், தவம் ஆகியவற்றின் பயன்கள் தளர்ந்து, மீண்டும் பிறப்பிக்கும் சித்திகளைத் தவிர்ப்பாய், ஓ மனமே!
- நிலையான நற்பதமளிக்கும் நெறி தியாகராசனால் போற்றப் பெற்றோனின் பஜனையடா!
- உலக நாயகன் என்செயினும், தலையிலும், உள்ளத்திலும் வகித்து, தளர்ந்து, மீண்டும் பிறப்பிக்கும் சித்திகளைத் தவிர்ப்பாய்.
(kshINamai - mukhAri)
Top
- த்யாக3ராஜு நேர்சின, ஸ்1ரு2ங்கா3ர ரஸாத்3யகி2ல ஸார பூரித, ராம கதா2னந்தா3ப்3தி4 யுத, ஸங்கீ3த ஸா1ஸ்த்ர ஞானமு, ஸாரூப்ய ஸௌக்2யத3மே, மனஸா
- ப்ரேம ப4க்தி, ஸு-ஜன வாத்ஸல்யமு, ஸ்ரீமத்3-ரமா வர கடாக்ஷமு, நேம, நிஷ்ட2, யஸோ1 த4னமொஸங்கு3னே; நேர்பு கல்கு3
- தியாகராசன் கற்றறிந்த, சிங்கார ரசம் முதலான அனைத்து சாரங்களும் நிறைந்த, இராமனின் கதையெனும் ஆனந்தக் கடலுடன் கூடிய, சங்கீத சாத்திரத்தின் அறிவு சாரூப்பிய சௌக்கியத்தினை யருளுமே, மனமே
- காதலுடன் கூடிய (இறைப்) பற்று, நல்லோரின் பரிவு, திருமகள் மணாளனின் கருணை, நியமம், நிட்டை, புகழ் ஆகிய செல்வங்களை வழங்குமே; திறமைகளுண்டாகும்.
(sangIta SAstra - mukhAri)
Top
- ஸந்ததமு ஸுஜனுலெல்ல ஸத்3ப4ஜன ஜேயுட ஜூசி சிந்திஸ்துன்னாடே3 யமுடு3
- வாரிதி4 ஸோ1ஷிம்ப ஜேயு க்ரூர கும்ப4ஜுனி ரீதி கோ4ர நரகாது3லணசு தாரக நாமமுனு தலசி சிந்திஸ்துன்னாடே3 யமுடு3
- தா3ரி தெலிய லேக திருகு3வாரலைன சாலுனண்டே ஸாரமனி த்யாக3ராஜு ஸங்கீர்தனமு பாடே3ரனுசு சிந்திஸ்துன்னாடே3 யமுடு3
- எவ்வமயமும், நல்லோர் யாவரும், உயர் பஜனை செய்தல் கண்டு, கவலைப்படுகின்றானே எமன்!
- கடலை வற்றச் செய்யும் கடும் கும்பமுனி போன்று, கொடிய நரகங்களினை அடக்கும் தாரக நாமத்தினை நினைத்து, கவலைப்படுகின்றானே எமன்!
- வழியறியாது திரிவோராகிலும் போதுமென்றால், (அவரும்) சாரமென தியாகராசனின் சங்கீர்த்தனங்களைப் பாடுகின்றனரென, கவலைப்படுகின்றானே எமன்!
(cintistunnADE - mukhAri)
Top
- நீ ஸேவகு லேக நீது3 செந்தகு ராக ஆஸ தா3ஸுடை3 அடுயிடு திருகு3டந்து3காயீ தனுவுனு பெஞ்சினதி3?
- நிரதமு நீ த்3ரு2ஷ்டி நேனார்ஜிஞ்சக ஒருல பா4மலனு ஓர ஜூபுலு ஜூசுடந்து3காயீ தனுவுனு பெஞ்சினதி3?
- ஸாரெகு நாம ஸ்மரணமு ஸேயக ஊரி மாடலெல்லனூரக வத3ருடந்து3காயீ தனுவுனு பெஞ்சினதி3?
- கரமுலதோ பூஜ கா3விம்பக3 டா3சி த4ரலோன லேனி து3ர்தா3னமுலகு சாசுடந்து3காயீ தனுவுனு பெஞ்சினதி3?
- வாரமு நீ க்ஷேத்ர வரமுல ஜுட்டக பூ4ரிகி முந்து3க3 பாரி பாரி திருகு3டந்து3காயீ தனுவுனு பெஞ்சினதி3?
- நீவாட3னி பேருனிந்து3 வஹிஞ்சக நாவாட3னி யமுடு3 நவ்வுசு பா3தி4ஞ்சுடந்து3காயீ தனுவுனு பெஞ்சினதி3?
- ராவய்ய, நின்னு பா4விஞ்சக ப்ரொத்3து3 பார-கொ3ட்டுகொனந்து3காயீ தனுவுனு பெஞ்சினதி3?
- உனது சேவைக்கில்லாது, உன்னருகில் வாராது, ஆசைக்கடிமையாகி, அங்குமிங்கும் திரிவதற்கா இவ்வுடம்பை வளர்த்தது?
- இடையறாது, உனது கண்ணோட்டத்தினை யீட்டாது, பிறர் மனைவியரை ஓரக்கண்ணால் நோக்குதற்கா இவ்வுடம்பை வளர்த்தது?
- எவ்வமயமும் (உனது) நாமத்தினை நினைவு கூராது, ஊர்க்கதைகளைப் பயனின்றி பிதற்றுதற்கா இவ்வுடம்பை வளர்த்தது?
- கரங்களினால் பூசை செய்வதற்கு மறைத்து, புவியில் இல்லாத தீய கொடைகளுக்கு (கரங்களை) நீட்டுதற்கா இவ்வுடம்பை வளர்த்தது?
- நாளுமுனது புண்ணியத் தலங்களை வலம் வராது, பூரிதானத்திற்கு முன்னால் ஒடியோடித் திரிதற்கா இவ்வுடம்பை வளர்த்தது?
- உன்னவனென பெயரிங்கு வகிக்காது, என்னவனென எமன் நகைத்துக்கொணடு துன்புறத்தற்கா இவ்வுடம்பை வளர்த்தது?
- வாருமைய்யா, உன்னை யெண்ணாது பொழுது வீணாக்குதற்கா இவ்வுடம்பை வளர்த்தது?
(indukAyI tanuvunu - mukhAri)
Top
- தீ3னுடை3ன பந்தா2னுடை3ன வினுமு, த்யாக3ராஜ நுத, ராம நாமம் ப4ஜரே மானஸ
- தொ3ங்க3 ரீதி திருக3ங்க3னேல ஸ்ரீ ரங்க3னி பத3முல கௌகி3லிஞ்சுகொனி (ராம)
- எக்கடை3ன ஹரியொக்கட3னுச மதி3 சக்க தனமு கனி ஸொக்கி ஸந்ததமு (ராம)
- எந்து3 போக ராகேந்து3 முகு2னி தனயந்து3 ஜூசி ப2லமந்து3 கோரி ஸ்ரீ (ராம)
- தே3ஹமெத்தி ஸந்தே3ஹ பட3க வைதே3ஹி பா4க்3யமா தே3ஹி தே3ஹியனி (ராம)
- ஸாது4 ஸஜ்ஜனுல போ3த4 சேத ப4வ பா3த4 மான வலெ ஸாத4கம்பு3தோ (ராம)
- அனுராக3முன மேனொஸங்கி3 ஸ்ரீ (ராம)
- ராக3 ரஹித ஜன பா4க3தே4யுனி வினா க3தியெவ்வரே? (ராம)
- மனமே! எளியோனாயினும், மிக்கு வல்லோனாயினும், கேள்மின்! தியாகராசனால் போற்றப் பெற்ற இராம நாமத்தினை பஜனை செய்வாய்;
- திருடனைப்போன்று திரிவதேன்? திருவரங்கனின் திருவடிகளை யணைத்துக் கொண்டு இராம நாமத்தினை பஜனை செய்வாய்;
- எங்காகிலும், அரி ஒருவனேயென்று, உள்ளத்தினில் தெளிவுறக் கண்டு, சொக்கி, எவ்வமயமும் இராம நாமத்தினை பஜனை செய்வாய்;
- எங்கும் செல்லாது, முழுமதி முகத்தோனை தன்னுள் கண்டு, அங்கு (முத்திப்) பயனை விழைந்து, இராம நாமத்தினை பஜனை செய்வாய்;
- உடலெடுத்து, ஐயப்படாது, 'வைதேகியின் பேறே! அருள்வாய், அருள்வாய்' என இராம நாமத்தினை பஜனை செய்வாய்;
- சாதுக்கள், நல்லோரின் அறிவுறையுடன், பிறவிக்கடலின் தொல்லைகளைப் பொறுக்க வேணும்; விடாமுயற்சியுடன் இராம நாமத்தினை பஜனை செய்வாய்;
- அனுராகத்துடன் (இறைவன் தொண்டுக்கு) உடலையளித்து இராம நாமத்தினை பஜனை செய்வாய்;
- பற்றற்ற மக்களுக்கு உற்றவை யருள்வோனை அன்றி போக் கெவரே? இராம நாமத்தினை பஜனை செய்வாய்.
(rAma nAmaM bhajarE - madhyamAvati)
Top
(evarani nirNayinciri - dEvAMrta varshiNi)
Top
- மனஸு நில்ப ஸ1க்தி லேக போதே மது4ர க4ண்ட விருல பூஜேமி ஜேஸுனு?
- மனதையடக்கத் திறமையின்றேல், இனிய மணி (மற்றும்) மலர்களின் பூசையென்ன செய்யும்?
(manasu nilpa - AbhOji)
Top
- ஸதத யான ஸுத த்4ரு2தமைன ஸீதா பதி பாத3 யுக3முல ஸததமு ஸ்மரியிஞ்சு அதடே3 த4ன்யுடு3
- வெனுக தீக தன மனஸு ரஞ்ஜில்லக3 க4னமைன நாம கீர்தன பருடை3னட்டி அதடே3 த4ன்யுடு3
- தும்பு3ரு வலெ தன தம்பு3ர பட்டி த3யாம்பு3தி4 ஸன்னிதா4னம்பு3ன நடியிஞ்சு அதடே3 த4ன்யுடு3
- ஸாயகு ஸுஜனுல பா3யக தானுநுபாயமுனனு ப்ரொத்3து3 ஹாயிக3 க3டி3பின அதடே3 த4ன்யுடு3
- உல்லபு தாபமு சல்ல ஜேஸி அன்னி கல்லலனியெஞ்சி ஸல்லாபமுனனுண்டு3 அதடே3 த4ன்யுடு3
- கரி வரது3னி தத்வமெருக3னு மரிகி3ஞ்சு அரி ஷட்3வர்க3முலந்து3 பரவ லேக திருகு3 அதடே3 த4ன்யுடு3
- ஆர்தினி மரியு ப்ரவ்ரு2த்தினி தொலகி3ஞ்சே கீர்தி கல்கி3ன ராம மூர்தினி நெர நம்மு அதடே3 த4ன்யுடு3
- கலக3னி நிஜ விப்ர குலமுன ஜன்மிஞ்சி நிலுவரமகு3 முக்தி ப2லமுனு ஜேகொன்ன அதடே3 த4ன்யுடு3
- கர்ம நிஷ்டு2டை3ன த4ர்ம ஸீ1லுடை3ன ஸ1ர்ம ராம நாம மர்மமு தெலிஸின அதடே3 த4ன்யுடு3
- காஸு வீஸமுல கோஸமு ஆஸதோ வேஸமு த4ரிஞ்சி மோஸமு ஜெந்த3னி அதடே3 த4ன்யுடு3
- அந்த3முகா3 நாமமந்த3ரு ஜேஸின ஸுந்த3ர ராமுனியந்து3 லக்ஷ்யமு பெட்டு அதடே3 த4ன்யுடு3
- இன்னி பாடுலகு ஸர்வோன்னதமௌ ஸுக2மு முன்னயனுப4விஞ்சுகொன்ன வாடெ3வடோ3 அதடே3 த4ன்யுடு3
- ராஜஸ ஜனுலதோ தா ஜத கூ3ட3க ராஜில்லு ஸ்ரீ த்யாக3ராஜ நுதினி நம்மு அதடே3 த4ன்யுடு3
- வாயு மைந்தன் பற்றும், சீதைக் கேள்வனின் திருவடிகளையெவ்வமயமும் நினைக்கும் அவனே பேறு பெற்றவனடா!
- பின் வாங்காது, தனது மனது களிக்க, மேலான, நாம கீர்த்தனையிலாழ்ந்தோனாகிய அவனே பேறு பெற்றவனடா!
- தும்புரு போன்று, தனது தம்புரா பிடித்து, கருணைக் கடலின் சன்னிதியில் நடமிடும் அவனே பேறு பெற்றவனடா!
- உதவிக்கு நல்லோரை யகலாது, தானும் விழிப்புடன், பொழுதை கவலையின்றி கழிக்கும் அவனே பேறு பெற்றவனடா!
- உள்ளத்தின் வெம்மையை தணித்து, யாவும் பொய்யென எண்ணி, (இறைவனுடன்) குலவியிருக்கும் அவனே பேறு பெற்றவனடா!
- கரி வரதனின் தத்துவத்தினையறியா வண்ணம் திரையிடும் உட்பகையாறினில் சிக்காமல் வாழும் அவனே பேறு பெற்றவனடா!
- துன்பங்களையும், மறு பிறப்பினையும் களையும் புகழுடை இராமமூர்த்தியினை முழுமையாக நம்பும் அவனே பேறு பெற்றவனடா!
- கிடைத்தற்கரிய உயர் அந்தண குலத்தினில் தோன்றி, நிலைபெறு முத்திப் பயனையுற்ற அவனே பேறு பெற்றவனடா!
- கருமங்களில் ஈடுபட்டோனாகிலும், அறநெறி நிற்போனாகிலும், இராம நாம இன்பத்தின் மருமமறிந்த அவனே பேறு பெற்றவனடா!
- அணா காசுக்கென, ஆசை கொண்டு, வேடமிட்டு, மோசமுறாத அவனே பேறு பெற்றவனடா!
- அழகாக, நாமத்தினை யாவரும் செபித்த, சுந்தரராமனில் இலக்கினை வைக்கும் அவனே பேறு பெற்றவனடா!
- இத்தனை பாடுகளுக்கு, மிக்குயர் சுகத்தினை முன்னம் அனுபவித்தவன் எவனோ அவனே பேறு பெற்றவனடா!
- இராசத மனிதர்களுடன் தான் கூட்டு சேராது, மிளிரும் தியாகராசனால் போற்றப்பெற்றோனை நம்பும் அவனே பேறு பெற்றவனடா!
(ataDE dhanyuDu -kApi)
Top
- தொலி கர்மமு ராக போனா ப4க்தி வெலுகு3சே தீரக போனா?
- முன் வினை வாராமற்போகுமா? (ஆயினும்) பத்தியெனும் வெளிச்சத்தினால் தீராமற்போகுமா?
(ennALLu nI trOva - kApi)
Top
- நீ ப4க்தி பா4க்3ய ஸுதா4 நிதி4னீதே3தே3 ஜன்மமு
- பூ4-பா4ரமு கானி ஸுர பூ4-ஸுருலை ஜனிஞ்சின
- வேதோ3க்தம்பௌ3 கர்மமு வெத க3ல்கு3 க3தாக3தமௌ
- எவ்வமயமும் உனது பத்திப்பேறெனும் அமிழ்தக் கடலினை நீந்துவதே (நிசப்) பிறவியாகும்
- அன்றேல், புவிக்குச் சுமையே, வானோராகவோ அந்தணராகவோ பிறந்தாலும்;
- மறைகள் பகரும் கருமங்கள் துயரளிக்கும் பிறப்பு-இறப்புச் சுழலாகும்
(nI bhakti - jaya manOhari)
Top
- ஜீவாத்ம ஹிம்ஸ க3ல யக்3ஞாது3லு ஸுக2மனுவாரிகி ஸமுலக்3ஞானுலு க3லரா ஓ மனஸா
- ப3ஹு ஜன்மம்பு3ல வாஸன யுதுலை அஹி விஷ ஸம விஷயாக்ரு2ஷ்டுலை ப3ஹிரானனுலை ஸ்ரீ ராமுனி தெலியக யக்3ஞாது3லு....
- பிராணிகளைத் துன்புறுத்தும் வேள்விகள் முதலானவை சுகமளிக்குமென்பவருக்கு ஈடான அறிவிலிகள் உளரோ, ஓ மனமே?
- பல பிறவிகளின் வாசனைகளுடையோராகி, அரவு நச்சுக்கீடான விடயங்களால் ஈர்க்கப்பட்டோராகி, வெளி நோக்குடையோராகி, இராமனையறியாது, வேள்விகள் முதலானவை சுகமளிக்குமென்பவருக்கு ஈடான அறிவிலிகள் உளரோ?
(yajnAdulu - jaya manOhari)
Top
- மத பே4த3மனே ஸெக3னார்சக3 ஸம்மத வாக்குலு பல்குட ஸுக2மா?
- க்ஷிதிலோ ஸத்-ஸங்க3தி ஸௌக்2யமு
- மத வேற்றுமையெனும் தழலினைத் தணிக்காது சம்மதச் சொற்கள் பகர்தல் சுகமா?
- புவியிலே நல்லோரிணக்கம் இனிதன்றோ!
(vinatA suta vAhana - jayanta sEna)
Top
- அபவர்க3 ப2ல காமமுலனு ஜூசி அட்3ட3மை அணிமாதி3 ஸித்3து4ல மோஸ பு3ச்செத3ரய்ய
- முத்திப் பயனின் இச்சைகளைக் கண்டு, குறுக்கிடும் அணிமாதி சித்திகளினால் வஞ்சிக்கப் பெற்றனரய்யா
(kRpAlavAla - nAda varAngiNi)
Top
- தனுவொகசோ மனஸொகசோ தகி3ன வேஷமொகசோனிடி3 ஜனுலனேசு வாரிகி ஜயமௌனே
- உடலோரிடமும், மனமோரிடமுமாக, தகுந்த வேடமோரிடத்திலுமிட்டு, மக்களை ஏய்ப்போருக்கு வெற்றி கிடைக்குமோ?
- (நினைப்பு-சொல்-செயல் இவை மூன்றும் ஒருமித்து, ஒன்றுக்கொன்று முரண்பாடின்றி, இயங்குதலை 'திரிகரண சுத்தி' என்பர்)
(kanugonu - nAyaki)
Top
- யாக3 யோக3 த்யாக3 போ4க3 ப2லமொஸங்கே3 ராக3 ஸுதா4 ரஸ பானமு ஜேஸி ரஞ்ஜில்லவே ஓ மனஸா
- ஸதா3ஸி1வ மயமகு3 நாதோ3ங்கார ஸ்வர விது3லு ஜீவன்முக்துலு
- ஓ மனமே! வேள்வி, யோகம், தியாகம் மற்றும் புவியின்பங்களின் பயனையளிக்கும் இராகமெனும் அமிழ்தச் சாற்றினைப் பருகி, களித்திடுவாய்;
- சதாசிவ மயமான நாதோங்கார சுரத்தில் வல்லோர் சீவன் முத்தராவர்.
(rAga sudhA - AndOLika)
Top
- நளின லோசன நின்னு கா3க அன்யுல நம்மி நர ஜன்மமீடே3ருனா?
- கொங்க3வண்டி த்4யானமு ஜேஸிதே தன கோரிக கொன-ஸாகு3னா?
- தொ3ங்க3 மக3னி ப4க்தி மீர நம்மிதே மஞ்சி த்3ரோவ ஜூப நேர்சுனா?
- க3ங்க3 லோனி ஒட3னு நம்மி ப4வ ஸாக3ரமு தா3ட வச்சுனா?
- நங்க3 நாசுல ஸ1ரணமனுட சேத அனங்கு3டு3 ஞானோபதே3ஸ1மு ஜேஸுனா?
- பரம வந்த்4யகு பாலு பெருகு3 போஸிதே சண்டி பாலு கலுக3 நேர்சுனா?
- நெர த4னமுலு தா3யாது3லகிச்சிதே நெனரு மாட கல்கு3னா?
- எருவு வேஸியூஸர பூ4மி வித்திதேநேமைன ப2லிஞ்சுனா?
- வரமைன பேரு கலுகு3 க3ங்க3-ராவிகி வந்த3னமொனரிஞ்சிதே ப்3ரோவ நேர்சுனா?
- ஸொக3ஸைன பூ3ருகு3லனு பெஞ்சிதே ஸு-ரஸ ப2லமுலிச்சுனா?
- பா4க்3யமு க3ல திருமஞ்ஜன விப4வமு பரிசாரகுலகப்3பு3னா?
- ராக3 லோப4முலதோ தபமு ஜேஸிதே பர க3தி கலுக3 நேர்சுனா?
- உன்னையன்றி மற்றவரை நம்பி மனிதப்பிறவி யீடேறுமா?
- நாரை போன்ற தியானம் செய்தால், தனது கோரிக்கை நிறைவேறுமா?
- கள்ளப் புருடனை மிக்கு பற்றுடன் நம்ப, நல்வழி காட்ட நேருமா?
- கங்கையிலுள்ள ஓடத்தை நம்பி, பிறவிக் கடலைத் தாண்டலாகுமா?
- பாசாங்காக, சரணமென்றவுடன், அனங்கனா ஞானோபதேசம் செய்வான்?
- முற்றும் வந்திக்கு பாலும் தயிரும் ஊட்டினால், தாய்ப்பால் சுரக்க நேருமா?
- மிக்கு செல்வம் பங்காளிகளுக்கு ஈய்ந்தாலும், கனிவான சொல் கிடைக்குமா?
- எருவிட்டு, உவர் நிலத்தில் விதைத்தால், ஏதும் விளையுமா?
- சிறந்த பெயருடைய, பூவரசத்திற்கு வந்தனம் செய்தால், அருள் புரியுமா?
- சொகுசான இலவமரத்தினை வளர்த்தால், சாறு நிறைப் பழங்கள் தருமா?
- பேறு நிறை, திருமஞ்சன விபவம், ஏவலாளிகளுக்கு நண்ணுமா?
- பற்று மற்றும் கஞ்சத்தனங்களுடன் தவமியற்ற, பர கதி கிடைக்க நேருமா?
(naLina lOcana - madhyamAvati)
Top
- ராம கதா2 ஸுதா4 ரஸ பானமொக ராஜ்யமு ஜேஸுனே
- த4ர்மாத்3யகி2ல ப2லத3மே
- தை4ர்யானந்த3 ஸௌக்2ய நிகேதனமே
- கர்ம ப3ந்த4 ஜ்வலனாப்3தி4 நாவமே
- கலி ஹரமே
- இராமனின் காதையெனும் அமிழ்தச் சாற்றினைப் பருகலோர் அரசாட்சியாகுமே!
- அறம் முதலாக அனைத்து பயன்களையுமளிக்குமே;
- தைரியம், ஆனந்தம் மற்றும் சௌக்கியத்தின் இருப்பிடமாகுமே;
- கருமங்களினால் கட்டுண்ட எரிகடலைக் கடக்கும் படகாகுமே;
- கலியினை வெல்லுமே.
(rAma kathA - madhymAvati)
Top